மு க ஸ்டாலின் துனை முதல்வரானார்.



உள்ளாட்சித்துறை அமைச்சரும், தி மு க பொருளாளருமான மு க ஸ்டாலின் துனை முதல்வரானார் என்ற அறிவிப்பை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

இந்த பொறுப்பு அவருக்கு வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்ததே. எப்போது என்பது மட்டுமே கேள்வியாக இருந்துவந்தது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கருணாநிதி பிரச்சாரத்துக்கு போகாத வேலையிலே மு க ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயனம் செய்தார். அவரின் பிரச்சாரமும் தி மு க வின் கணிசமான வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அப்போதே அவருக்கு உரிய பதவி வந்து சேரும் என்றார் கருணாநிதி. இப்போது வந்துவிட்டது.

சில ஆண்டுகள் முன் வரை வாரிசு அரசியலில் அதிகம் வறுத்தெடுக்கப்பட்ட பெயர் மு க ஸ்டாலின்.

கருணாநிதியின் வாரிசு அரசியல் என்பது பல ஆண்டுகாலமாக ஸ்டாலினை முன்வைத்தே நடைப்பெற்றது. வாரிசு அரசியல் என்றதும் ஸ்டாலின் பெயர் தான் அனைவரின் மனதிலும் வந்து போகும் அளவிற்கு நிலை இருந்தது. ஆணால் கடந்த சில ஆண்டுகளாக வாரிசு அரசியல் விமர்சனத்துக்கும் , ஸ்டாலின் என்ற பெயருக்கும் இடை வெளி அதிகரித்துள்ளது தெரிகிறது

மேயராக, அமைச்சராக, கட்சியின் இளைஞரணி செயலாளராக, துனைப்பொது செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளில் அவரின் செயல்பாடு காரணமாக அவர் கட்சியினரிடம் பெற்ற ஆதரவாலோ அல்லது கனிமொழி , அழகிரி, தயாநிதி வருகையாலோ ஸ்டாலினின் மீதிருந்த பார்வை / விமர்சனம் மாறியிருக்கலாம்.

பொதுவானவர்களும் ஸ்டாலின் செயல்பாடுகள் திருப்தி என்றே சொல்ல ஆரம்பித்தனர். சமீப காலமாக கருணாநிதியின் வாரிசு, குடும்ப அரசியல் மீது கடும் விமர்சனம் செய்பவர்கள் கூட மு க ஸ்டாலினை விட கணிமொழி, அழகிரி, தயாநிதி ஆகியோர் பெயரையே தங்கள் விமர்சனத்திற்கு துனை அழைக்கின்றனர் . ஸ்டாலின் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்..

கட்சியில் பெரும்பான்மையானவர்களும் ஸ்டாலினை அடுத்த தலைமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றால் மிகையாகாது.

துனை முதல்வராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறாரா பார்க்கலாம்..

கட்சியினர், விமர்சகர்கள், எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும் வலைப்பூ கருணாநிதி எதிர்ப்பாளர்கள் வாய்க்கு இனி நல்ல அவல்..

LTTE LEAD PRABAKARAN ALIVE - PHOTOGRAPH


அரசியல்வாதியின் பல்டியே மேல் போலிருக்கிறது.. !


டி ஆர் தலைமையில் மேலும் ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்..

ஏறகனவே கலைஞர் தலைமையில் ஒரு அமைப்பு, நெடுமாறன் தலைமையில் ஒரு அமைப்பு.. இந்த இரண்டு அமைப்புகளுமே தங்களுக்கும் அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் இப்போது புதிதாக இன்னும் ஒரு அமைப்பு, நம் விஜய டி ராஜேந்தர் தமிழ் இன பாதுகாப்பு முன்னனி என்ற அமைப்பை துவங்கியுள்ளார்..

டி ஆர் தலைமையில், புலமைபித்தன், மன்சூரலிகான் ஆகியோர் பொறுப்பாளர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுமாம்

என்னத்த சொல்றது... கட்சி / ஓட்டு அரசியலுக்காக, எரியற வீட்டில் புடுங்குற வரை லாபம்னு போட்டி போடுறாங்க நம்ம ஆளுங்க.. ஒற்றுமையே உன் விலை என்னனு கேட்பாங்க போல நம்ம தமிழ் தலைவர்கள் (அப்படி நினைக்கறவஙக்.. சொல்லிக்கறவங்க) .. !

சிரிப்பு வருது - நக்கீரன், விகடன், குமுதம் கவனிக்க..

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் 61வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுதும் அதிமுகவினரால் கோலாகலமாக மொண்டாடப்படுகிறது.

ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர் , போஸ்டர், அம்மா-எம் ஜி ஆர் பாடல்கள், அண்ணதானம் என்று தமிழகம் திருவிழா கோலத்தில் களைகட்டியுள்ளது. அம்மாவிற்கு நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

ஒரு கட்சி தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், இதுவெல்லாம் சகஜம்தானே?? அதிலும் அ தி மு க தலைவியின் பிறந்தநாள் விழாவில் இதெல்லாம் இல்லாது இருந்தால் தானே அதிசயம்.. இதில் என்ன சிரிப்பு என்ற உங்கள் கேள்வி புரிகிறது.

உண்மையில் கொண்டாடங்களை பார்த்து சிரிப்பு வரவில்லை. குறிப்பாக ஒரு ப்ளெக்ஸ் பேனரை பார்த்து தான் சிரிப்போ சிரிப்பு.

கின்டியில் ஜி எஸ் டி சாலையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை கழகத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரின் வாசகம் தான் சிரிப்புக்கு காரணம்.

ஒரு பக்கம் எம் ஜி யார், நடுவில் மிகப்பெரிதாக ஜெயலலிதாவின் ஐந்து முகங்கள் கொண்ட பிரம்மாண்ட பேனரின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இலங்கை தமிழர் நலனுக்காக பாடுபடும் ஒரே தலைவி எங்கள் புரட்சிதலைவி அம்மாவின் 61 வது பிறந்தநாள் ... என்று போகிறது அந்த வாழ்த்து வாசகம்..

இலங்கை தமிழருக்கு ஆதரவாக அம்மா எப்படியெல்லாம் போராடுகிறார் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நன்றாக தெரியும்.

"ஈழத்தமிழர் என்று யாரும் இல்லை", "போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தான் செய்யும்", "இலங்கை ராணுவம் அப்பாவித்தமிழர்களை கொல்வது இல்லை" என்பது போன்ற அம்மாவின் அறிக்கைகள் மிகப்பிரபலம்.

ஆனாலும் இப்படி ஒரு பேனரை வைத்த அந்த தொண்டருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். ஒரு வேளை அவர் அம்மாவை நக்கலடிக்கிறாரோ?

அ தி மு கவினரே இதை படித்தால் சிரிக்கத்தான் செய்வார்கள். ஏன், அம்மாவே இதை படித்தால் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்..

ஜூ வி, குமுதம், நக்கீரன் நிருபர்கள் யாராவது இந்த பேனரை கவர் செய்து தங்கள் அடுத்த இதழில் ஒரு ஸ்டோரி எழுதலாம், அது கவர் ஸ்டோரியாகவும் இருக்கலாம்.. காமெடி ஸ்டோரியாகவும் இருக்கலாம்..

காங்கிரஸ் கர்ஜனை - ஒரே காமெடி

நம் தேசபக்தர்கள் காங்கிரஸ்காரர்கள் மயிலையிலே ஈழத்தமிழர் - காங்கிரஸ் நிலை என்ன என்று விளக்குவதற்கு ஒரு பொதுக்கூட்டம் போட்டார்கள்..

இதையெல்லாம் விளக்க, கூட்டம் எதுக்குனு புரியல.. ஒரே வரிதானே உங்கள் நிலை.. ராஜிவை புலிகள் கொன்ற காரணத்தால் , அந்த புலிகள் தான் ஈழம் பெற்றிட முழு மூச்சாக போரிடுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அனைத்து ஈழத்தமிழனும் செத்து மடியட்டும் , அது தான் நிலை..
இதை சொல்ல ஒரு கூட்டம் வேண்டுமா என்ன?

சரி, அவர்களின் நிலையை எடுத்து சொல்லும் இடத்தில் எவ்வளவு அழகாக புரியும் படி சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்..

நன்றி ஜூனியர் விகடன்

கார்த்தி சிதம்பரம்: ''லெட்டர் பேடு கட்சி கள் காங்கிரஸை விமர்சிக்கின்றன. துப்பாக்கி தூக்குபவனைவிட, குண்டு வீசுபவனைவிட பேச்சுவார்த்தைக்கு வருபவன்தான் உண்மை யான மனிதன். இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதாகச் சொல்லி இங்கே இருக்கும் காங்கிரஸ்காரர்களைத் தாக்குகிறார்கள். இனி காங்கிரஸ்காரன் சைலன்ட்டா இருக்க முடியாது. அவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு பதிலடி தரவேண்டும்!''

வீ எம் - இதை விட தெளிவா யாராலும் ஈழம் பிரச்சனையில் காங்கிரஸ் நிலை பற்றி சொல்லிட முடியுதுங்கண்ணா...

போளூர் வரதன்: ''தீக்குளித்தவர்களின் பிணங்களைத் தூக்கிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர். முத்துக் குமார் எரிந்தபோது அவன் வைத்திருந்த பேப்பர் மட்டும் எப்படி எரியாமல் தப்பித் தது என்பதை இங்கே அமர்ந்திருக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ. மூலமாக விசாரித்தால், உண்மையான குற்ற வாளி யாரென்று தெரிந்துவிடும். இங்கே இருப்பவர்கள் தினமும் தினக்கூலி வாங்கிக் கொண்டு கைக்கூலி வேலை பார்த்து வருகி றார்கள். தலித்களின் மகாத்மா என்று சொல்லிக்கொள்ளும் திருமாவளவனே! இங்கு இருக்கும் சேரி மக்களுக்காக நீ என்ன செய் தாய்? உண்மையானஆம்பளையா இருந்தா, புலிகளை எதிர்க்கும் ஜெயலலிதா வுக்கு எதிரா போராட்டம் பண்ணு பார்க்கலாம்...

வீ எம் - நல்லா கேட்டீங்க போங்க.. உங்க மூளை மட்டும் ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து செஞ்சதா?? புல்லரிக்குது.. கையில் ஒரு பேப்பர் கத்தையை வெச்சுகிட்டு ஒரு வாட்டி தீக்குளிச்சு பாருங்களேன் தெரியும்..
ஆம்பளையா இருந்தா அம்மாவ எதிர்த்து போராட்டம் பன்ன சொல்றீங்க.. அப்போ தைரியமான ஆம்பிளைங்க காங்கிரஸை எதிர்த்து போராடக்கூடாதுன்றீங்க.. என்னனே கட்சிய இப்படி கேவலப்படுத்தறீங்க..


இரா.அன்பரசு: ''இலங்கைப் பிரச்னை தொடர்பாக இரண்டு நாளுக்கு முன்பு சிந்தாதிரிப்பேட்டையில் தி.மு.க. கூட்டம் போட்டது. அதிலும் நான் பேசினேன். அங்கு கூட்டமே இல்லை. இங்கே பாருங்கள்... ஆயிரக்கணக்கில் காங்கிரஸ்காரன் திரண்டு வந்திருக்கான். கள்ளத்தோணி ஸ்பெஷலிஸ்ட், ஆயுதம் தூக்கிக்கொண்டு இலங்கைக்குப் போய் இலங்கை ராணுவத்தினரோடு போராட வேண்டியதானே? போக முடியாது. பணம் வாங்கிக்கொண்டுதான் வரமுடியும். தமிழீழம் அமைந்துவிடுமாம். அதன்பிறகு, அகண்ட தமிழகமாகி விடுமாம்... வைகோ! நாங்க என்ன வாயில பிஸ்கோத்தா வச்சுக்கிட்டிருக்கோம்...''

வீ எம் - அதானே.. தி மு க விற்கு கூடறத விட காங்கிரஸ்க்கு 10 மடங்கு கூட்டம் வருவது இயற்கை தானே.. இது தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் நிலையா அன்பரசு?
அவர் என்ன உங்க வாயில என்ன இருக்குனா கேட்டாரு?? சாப்பாட்டு நேரத்துல மீட்டீங் வேணாம்னு சொன்னா எந்த காங்கிரஸ்காரனாச்சும் கேட்கறானா பாரு..


வாயில பிஸ்கோத்தா, வாழைபழமானு தெரியலா.. ஆனா காங்கிரஸ் காரனுக்கு நாக்குல சனி இருக்கறது மட்டும் நிச்சயம்..


யசோதா: ''நாங்க ஆங்கிலேயரை எதிர்த்தே போராடியவர்கள்... நீங்கள் எல்லாம் எங்களுக்கு பச்சா!''

வீ எம் - இதோ பாருடா.. அவரு பிஸ்கோத்துனா, இவங்க பச்சான்னு சொல்றாங்க.. யசோதாம்மா இங்கே "நாங்க"யாரு?? "நீங்க" யாரு?? எல்லாரைவிடவும் ஆங்கிலேயர்தான் சூப்பர்னு சொல்றீங்களா? ரொம்பத்தால் ஆங்கில மோகம் உங்களுக்கு..

தங்கபாலு: அரசிய லுக்கு வருவதற்கு முன்பே, புலிகளுக்கு ஆதர வாகக் குரல் கொடுத்தவர்கள் நாங்கள். இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும்தான் ஆயுதங்கள் கொடுக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டியதுதானே? தமிழ்நாடு காங்கிரஸ் இருக்கும் வரையில் இந்தியாவை துண்டுபோட அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ்காரன் இருந்தால் நாடு வாழும். இல்லை என்றால் வீழும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஆண்மை இருந்தால் நாளைக்கே வீதிக்கு வா. நானும் வருகிறேன். எங்களை சீண்டிப்பார்க்காதீர்கள்.''

வீ எம் - தலீவரு இது கூட பேசலனா என்ன இருக்கு.. சீனாவையும் பாகிஸ்தானையும் கேட்கனுமா? அப்புறம் என்ன ம.... 40 தொகுதிலயும் ஜெயிக்கவெச்சு மன்மோகன்சிங்கை பிரதமரா உட்கார வெச்சது?? இல்லை.. இந்திய காங்கிரஸ் அரசு ஒன்னுக்கும் உதவாது, சீனா, பாக் கிட்ட பேசி வேலைய முடிங்கனு சொல்றீங்களா?? சோனியா மேல அவ்ளோ கடுப்பா?? ஆண்மை இருந்தால் நாளைக்கே வீதிக்கு வா வா?? அண்ணே, எதிர்த்து வீதிக்கு வந்து 2 மாசம் ஆகுதுங்க தலிவா.. வீதியில்ல.. சத்யமூர்த்திபவனுக்கே வந்தாச்சு.. கமான் கெட் அப்.. யாராச்சும் மூஞ்சில தண்ணி தெளிங்கப்பா..

ப.சிதம்பரம்: ''ராஜீவ் காலத்தில் போடப் பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால், இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்து இருக்கும். முதல்வர்கள் அடுத்தடுத்து உருவாகியிருப்பார்கள். போர்நிறுத்தம் நிரந்தர மாகியிருக்கும். பேச்சுவார்த்தை என்றால் இரண்டு பக்கமும் ஆயுதங்களைக் கீழே போடுவதுதான். ஆனால், நான் ஆயுதத்தோடு வருவேன். நீ காகிதத்தோடு வா என்றால் என்ன அர்த்தம்?''

வீ எம் - என்ன தல, இப்படி இருக்கும் இருக்கும் நு இழுக்குறீங்க.. இன்னும் சொல்லுங்க.. சுதந்திரம் கொடுதப்பவே, ஈழத்தை பிரிச்சு கொடுத்திருந்தா , சன்டையே வராம இருந்திருக்கும், புலி அமைப்பே வராம இருந்திருக்கும், ராஜிவ் ஒப்பந்தத்துக்கே வேலை இல்லாம போயிருக்கும்... ஓ, ஆயுதத்தை போட்டுட்டு வா இல்லை ஒட்டு மொத்த இன அழிப்புனு சொல்றது ராஜபக்ஷேனு இவ்ளோ நாளா நான் தான் தப்பா நெனைச்சுகிட்டு இருந்ததேனா???
இதுக்கு நீங்க பேங்க் திறப்பு, பண வீக்கம், வெர வீக்கம் நு முன்ன மாதிரியே பேசிகிட்டு இருந்திருக்கலாம்... துறை மாத்தியிருக்கவே வேண்டாம்..

-----------

இப்பொ உங்க எல்லோருக்கும் ஈழம் பிரச்சனையில் காங்கிரஸ் நிலை என்னனு புரிஞ்சுதா?? தயவு செஞ்சு என்ன புரிஞ்சுதுனு கருத்துப்பெட்டில சொல்லுங்கள் ப்ளீஸ்..என்னை மாதிரி புரியாதவங்க தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்..

பன்றியை தொட்டு நக்குதல் தரும் பாடம்.

கால்நடை மருத்துவ மாணவர்கள் தங்களின் முதல் உடற்கூறு வகுப்பிற்காக ஒன்றாக குழுமியிருந்தார்கள்.
அவர்கள் முன்னே வெள்ளை துணியில் சுற்றிய இறந்த கொழு கொழு பன்றி ஒன்று இருந்தது. வகுப்பை தொடங்கிய பேராசிரியர் மாணவர்களை பார்த்து
மாணவர்களே, கால்நடை மருத்துவத்தில் சிறந்த மருத்துவராக வளர மிக முக்கியமான இரண்டு விஷயங்களை உங்களுக்கு சொல்லப்போகிறேன், கூர்ந்து கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்..
ஒன்று, கால்நடைகளை கையாளும் போது நமக்கு எந்த வித அருவெறுப்பும் இருந்திட கூடாது. எடுத்துக்காட்டாக, இதோ கவனியுங்கள் என்று சொல்லி பன்றியின் மீது இருந்த வெள்ளை துனியை எடுத்துவிட்டு தன் விரலை பன்றியின் வாயினுல் விட்டு தடவி, பின்னர் விரலை தன் வாயில் வைத்து சுவைத்தார்..

பின்னர் மாணவர்களை பார்த்து, உங்களின் அருவருப்பு போகவேண்டும் என்றால், நீங்களும் இதே போல செய்யுங்கள் என்றார்.

மாணவர்கள், சற்று முகம் கோனி, சிறிது நேரம் தயங்கிய பின்னர், அவர் சொன்னதை போலவே செய்துவிட்டு பேராசியரை பார்த்தார்கள்..

பேராசிரியர் தொடர்ந்தார், நல்லது மாணவர்களே, இப்போது இரண்டாவது முக்கியமான விஷயம். மருத்துவர்களுக்கு கூர்ந்து கவனிக்கும் தன்மை மிக மிக முக்கியம் என்று சொல்லி சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்...

நான் என் நடுவிரலை பன்றியின் வாயில் விட்டுவிட்டு, மோதிர விரலை சப்பினேன்.. ஆனால் நீங்கள்???

சரி, இனிமேலாவது கூர்ந்து கவனித்தல் என்ற இரண்டாவது முக்கிய விஷயத்தை கடைபிடிக்க பழகுங்கள் என்றவாறு தன் வகுப்பை தொடர்ந்தார்..

பாடம் - வாழ்க்கை கடினமானது, அது மேலும் அதீத கடினமாவது நீங்கள் முட்டாளாக இருக்கும் போது..

சோ - ரஜினி / வைகோ - ஜெயலலிதா

யாழ்ப்பானம் போனாலும் ராஜபக்ஷேக்கு ஆதரவாக பேசுவேன் - சோ ராமசாமி

மோடியின் மேடைப்பேச்சு தொகுப்பை, "கல்வியே கற்பகதரு" என்ற தலைப்பில் புத்தகமாக அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை நாரதகான சபாவில் நேற்று நடைப்பெற்றது. அதில் நம் பழம் பெரும் நடிகர் , பத்திரிக்கையாளர் சோ ராமசாமி கலந்துகொண்டு முத்தாய்ப்பாய் உரையாற்றினார்.

புத்தக விழாவில் ராமசாமி இலங்கைப்போர் குறித்தும் பேசினார்.. (சம்பந்தம் இல்லாமல் ஏன் பேசினார் என்று கேட்டுவிட கூடாது, அப்படி கேட்கப்படவேண்டிய ஒரே ஆள் கருணாநிதி மட்டுமே என்பது எழுதப்படாத விதி) அதே போல பழம்பெறும் நடிகரும் பத்திரிக்கையாளுருமான சோ ராமசாமி ரஜினி பற்றியும் சிலேடையாக பேசி புல்லரிக்கவைத்தார்..

ராமசாமியின் பேச்சு - இங்கே ஒருவர் பேசும் போது மோடியை சூப்பர்ஸ்டார் என்றார்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை, நான் சூப்பர் ஸ்டாரை மோடியாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன்.. இது தான் பெட்டராக இருக்கும்..

அட ராமசாமி , என்ன ஆச்சு உங்களுக்கு? ஏதோ ஒரு விழாவுல ரஜினி ஜெ க்கு எதிரா பேசிட்டாரு, அப்புறம் ஒரு தேர்தல்ல அவங்களுக்கு எதிரா அறிக்கை கொடுத்து மக்களை ஜெ க்கு எதிரா வாக்களிக்க சொன்னாரு.. எல்லாம் சரிதான்.. ஆனா அதெல்லாம் த்ப்புனு உணர்ந்து, அம்மாக்கு பொக்கே கொடுத்தார், தைரியலக்ஷ்மி பட்டமெல்லாம் கொடுத்து அம்மாகிட்ட சமாதானமா போயிட்டாரு. ஆனா நீங்க என்ன இன்னும் அவர் அம்மாவை எதிர்த்தார் என்பதை மனசுல வெச்சுகிட்டு ரஜினி மேல இவ்ளோ வஞ்சத்தை வெச்சுகிட்டு இருக்கீங்க?? அவர ஒரு வழி பன்னாம விடமாட்டீங்க போல, பாவம் அவர், விட்டுவிடுங்க ராமசாமி சார்.

அவரே தனக்கு அரசியல் ஒத்துவராது, சரிப்படாதுனு ஒதுங்கியிருக்காரு.. பாவம் , அவரை அவர் வேலையை செய்ய விடுங்க. அவருக்கே விருப்பமில்லாதப்போ நீங்க ரஜினி கடவுள் பக்தி உள்ளவருன்ற ஒரே காரணத்துக்காக அவர் முதல்வரா வரனும், அரசியல்ல வரனும்னு இப்படி பெனாத்திகிட்டு இருக்கீங்களே ராமசாமி. ஒரு வேளை ஜெ டீவி ஸ்டாட்டுக்கு போட்ட பிட்டு மாதிரி ரஜினி தலைமை ரசிகர்மன்ற தலைவர் பதவிக்கு பிட்டு போடுறீங்களா ராமசாமி??

என்னமோ போங்க.. பலருக்கு ரஜினி குழப்பவாதியா இருக்காருனு தோணுது, அவருக்கே தான் என்ன செய்யமுடியும்னு தெரியல. ஆனா உங்க முட்டை ஞான கண்ணுக்கு மட்டும் அவரை வித்தியாசமா தெரியுது.. உம்ம கண்ணே கண்ணு ராமசாமி.

அப்புறம் ஒரு விஷயம் ராமசாமி சார். 30 வருஷமா சன்டை போடுற, உண்ணால ஜெயிக்கமுடியல , தூ.. நீ ஆம்பளையா அப்படினு ராஜபக்ஷே வை கேட்டது வேற யாருமில்லை, நம்ம ரஜினி தான்.. (ஞாபகமிருக்கா?? உமக்கு இருக்காது... ஜெ, ரஜினி , அத்வானி சொல்றது எல்லாம் ஞாபகம் இருக்காது, இதுவே கருணாநிதி, ராமதாஸ், வைகோ சொல்றதுனா மட்டும் கன்னாபின்னானு ஞாபகம் இருக்கும், துக்குளக்ல அட்டைப்படம் வரும்) உங்க செல்லப்பிள்ளை ராஜபக்ஷேக்கு ரஜினி இப்படி சவால் விட்டுட்டாரே, இன்னுமா ரஜினி அரசியல்ல வந்து முதல்வராகனும்னு ஆசைப்படுறீங்க ராமசாமி? உங்க செல்லப்பிள்ளைக்கும் உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனையா??

அப்புறம் இந்த மேடையிலும் ஜெ டீவி ஸ்லாட்டுக்கு உங்க நன்றிக்கடனை செலுத்திட்டீங்க போல.. சந்தோஷம் ராமசாமி,.

மோடி பிஜேபி முதல்வருங்க.... பி ஜே பி நிலையை பத்தியும் விமர்சனம் பன்னீட்டீங்க போல.. மேடைல பி ஜே பி ஆளுங்களை வெச்சுக்கிட்டு, பார்வையாளர்கள் வரிசைல செம எதிர்ப்பாமே.. தமிழ்ல பேச சொன்னா , முடியாதுனு சொல்லிட்டு ஆங்கிலத்துல தான் பேசுனீங்கலாமே ராமசாமி.. பார்த்துக்கோங்க நம்மாளுங்க பல பேருக்கு ஆங்கிலம் தெரியல.. சும்மா ராமசாமி, மோடி, பி ஜே பினு காரணத்துக்காக உங்க கூட்டங்களுக்கு வந்துடுறாங்க.. ராமசாமி பேசினா கைத்தட்டனும் புரியுதோ புரியலயோ கை தட்டிட்டு போறாங்க.. இருந்தாலும் பத்த வெச்சுட்டீயே பரட்டை..(பரட்டையா?? !! ) .. சரி இந்த வாரம் பிஜேபி நிலைப்பற்றி நக்கல் கார்ட்டூன் துக்குளக்ல வருமா?? இல்லை கார்ட்டூன் எல்லாம் தி மு க , காங்கிரஸ், பா ம க , கம்யூனிஸ்டுக்கு மட்டும்தானா ராமசாமி?

தினமலத்துல , தினத்தந்தில கூட ஏதோ தமிழில் பேச சொல்லி மட்டும் கூட்டத்தில் சலசலப்புனு மாதிரி செய்தி போட்டு முடிச்சுட்டாங்க..

மற்றொரு செய்தி நம்ம வைகோ அண்ணாச்சி பற்றி -
விடுதலைப்புலிகளை மட்டும் ஆயுதங்களை கீழே போட சொல்லுவதா , ப சிதம்பரத்துக்கு வைகோ கடும் கண்டனம் என்ற தலைப்பில் நம்ம வைகோ வழக்கம்போல, நரம்பு புடைக்க , உணர்சிக்கொந்தளிக்க ஒரு அறிக்கை கொடுத்துள்ளார்..

அண்ணே, சிதம்பரமாவது பரவாயில்லை, புலிகளை ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர சொன்னார்.. நம்ம அம்மா , அட அதாங்க உங்க அன்பு சகோதரி புலிகளை நசுக்கி ஒழிக்க வேண்டும்னு சொல்லியிருக்காங்க. ஒரு வேளை, புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு பேச்சு வார்த்தைக்கு போயிட்டா. போர் நின்னுடும், புலிகளை நசுக்கி அழிக்கும் வாய்ப்பு போயிடும், உங்க அன்பு சகோதரி ஆசையில் மன்னு விழுந்துடும்ன்ற கோவத்துல, சிதம்பரத்த காய்ச்சி எடுத்துட்டீங்களா??..

அப்படின்னா உங்க அறிக்கை சரிங்க.. விட்டுடலாம்.. இல்லைனு சொல்ல வரீங்களா?? அப்போ ஒன்னு பன்னுங்க.. உங்க அறிக்கைல எங்கெல்லாம் சிதம்பரம்னு வருதோ அங்கே எல்லாஎம் ஜெயலலிதா நு மாத்தி (சரி, பெயர் வேண்டாம் என் அன்புச்சகோதரினு போட்டுக்கோங்க) நாளைக்கு எல்லா பத்திரிக்கைக்கும் உங்கள் அறிக்கையாக அனுப்புங்களேன், மிகச்சரியா பொருந்தும்.. முடியுமா??

முடியாது என்றால்.. ஈழத்துக்கான உங்கள் வெத்துவேட்டு முழக்கத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளுங்கள். மற்றவர்களை குறை சொல்லி நரம்பு புடைக்க கத்த வேண்டாம்..

FAIR and LOVELY

இன்றைய காலகட்டத்தில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. அதிலும் வித்தியாசமான முறையில் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது.
அந்த வகையில், பேர் அன்ட் லவ்லி இன்றைய உலக நடப்புக்கு ஒத்தவாறு ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது... ரசிக்கும்படி உள்ளது. பாருங்களேன் !
வேறு ஏதேனும் கோணத்தில் சிந்தித்துவிடாமல், ஒரு விளம்பரம் என்ற வகையில் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம்..



"சோ"ழியன் குடுமி சும்மா ஆடுமா?


நம் நடுநிலை நாயகர் சோ தன் துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழாவின் போது பல விஷயங்களை பற்றி திருவாய் மலர்ந்தார். குறிப்பாக திருமங்கலம் இடைத்தேர்தல், ஈழ ஆதராவளர்கள் மீதான நடவடிக்கைகளில் கருணாநிதி , ஜெ செயல்படும் விதம் , உண்ணாவிரதம் பற்றிய தன் கருத்து என்று.

கடந்த ஆண்டில் அவர் அம்மாவின் புகழ் பாடியதை விட இந்த ஆண்டு அவர் அடித்த ஜால்ரா செவிப்பறையை கிழிக்கும் வகையில் இருந்தது. சோ ராமசாமி "நடுநிலை நக்கலாளன்" என்ற முறையில் இப்படி மாற்றி மாற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல..

அ தி மு க வை எதிர்த்து த மா க + ரஜினி + தி மு க விற்கு ஜால்ரா தட்டியதும் இதே சோ ராமசாமி தான் என்பது அனைவருக்கும் தெரியும்..

திருமங்கலம பற்றி பேசியவர், கடைசி ஒரு மணி நேரத்தில் 30% வாக்குகள் என்றார்.. அதாவது 4 இருந்து 5 மணிக்குள் என்று ஒரு கதையளந்தார்.. அதாவது தி மு க கடைசி நேரத்தில் புகுந்து ஓட்டுக்களை குத்தியதா, அல்லது ஒரே மணி நேரத்தில் இத்துனை பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்ததா என்று விளக்காமல், கடைசி 1 மணி நேரத்தில் 30% என்றார்..

தேர்தல் ஆணையம் அனைத்து பூத்துகளிலும் கேமரா வைத்து தீவிரமாக கண்காணித்த போது தி மு க வினர் உள்ளே சென்று ஓட்டுக்குத்தியிருக்கமுடியாது. அப்படி நடந்திருந்தாலும் நிச்சயம் அது பத்திரிக்கைகளில் , குறிப்பாக ஜெ டிவியில் ப்ளாஷ் ஓடி இருக்கும். (இந்த பாயின்டை சோ ராமசாமி சொன்ன பிறகு தான் அம்மையாரும், ஜெயா டீவியும் பிடித்து தொங்கியது என்பது குறிப்பிடத்தக்கது) கடைசி ஒரு மணி நேரத்தில் (4 - 5) இத்துனை வாக்குகள் என்று சோ ராமசாமி அள்ளி விட்டதே ஒரு கதை.

பத்திரிக்கை, டீவி செய்திகளில் வந்த தகவல் படி 4 மணி அளவில் வரிசையில் கூட்டத்தை பார்த்து டோக்கன் கொடுக்கப்பட்டு , பல பூத்துகளில் 7.15 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது தெரிகிறது. ஆக, 1 மனி நேரம் இல்லை.. சுமார் 3 மணி நேரத்தில் 30% வாக்குகள் பதிவாகியுள்ளது.. 3 மணி நேரத்தில் 30% சாத்தியம் தான் என்பது ராமசாமிக்கு தெரியாதா? தெரியும் , ஆனாலும் ஏன் "சோ"ழியன் குடுமி ஆடியது?

பணம் கொடுக்கப்பட்டு வந்த வாக்குகள் என்பது உண்மை, இது முழுதுமாக தி மு க அரசின் சாதனைக்கு கிடைத்த ஓட்டு இல்லை என்பது உண்மை.. பணமும் தன் பங்காற்றியுள்ளது. இதற்காக அவர் அழகிரிக்கு சிறந்த மனிதர் பட்டமெல்லாம் தரட்டும்.. ஆனால் அழகிரிக்கு ஒட்டியபடியே அம்மா வருகிறாரே வரிசையில், அவருக்கு என்ன பட்டம் தருவார்? அதை பற்றிய மூச் விடவில்லையே இந்த அரசியல் க்ரிட்டிக்..?

தொகுதியில் இருந்து 1000 கொடுத்த அழகிரிக்கு அதிசய மனிதர் பட்டமென்றார்.. போயஸில் இருந்துக்கொண்டு மதுரைக்கு 700 கொடுத்த அம்மாவிற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் ராமசாமி?

ஒரு குடும்பத்துக்கு 5,000 , ஒரு ஓட்டுக்கும் 1000 என்று செய்தி வந்த பத்திரிக்கைகளில் கூட தெளிவாக வந்த செய்தி : தி மு க, அ தி மு க என இரு கட்சிகளுமே காந்தி நோட்டை வாரி இறைத்தது என்று. என்ன தி மு க 1000 கொடுத்தால் அ தி மு க 700, 800 மட்டுமே கொடுத்தது.. அனைவருமே கொடுத்தனர் என்பது ராமசாமிக்கு தெளிவாக தெரிந்தும், ஒருவரை விட்டு விட்டார் என்றால்.. சோழியன் குடுமி சும்மாவா ஆடியது??

இந்த தேர்தல் பற்றி கேள்வி கேட்கவைத்து பதல் அளித்த ராமசாமி, இதே போல கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் , சென்னை மாநகராட்சி தேர்தல் பற்றியெல்லாம் அப்போதைய தன் துக்குளக் பத்திரிக்கை ஆண்டு விழாவில் என்ன பேசினார் என்று டோண்டுவை தான் கேட்கவேண்டும்.
கருணாநிதி , ராமர் விசயத்தில் பல்டி என்றார்..அரசு ஊழியர் விஷயத்தில் ஜெ ரிவர்ஸ் கியர் பற்றி சொல்லும்போது அவருக்கு பல்டி என்ற வார்த்தை மறந்து போனது.. (அத்வானி போல் இவருக்கும் செலக்டீவ் அம்னீசியாவாக இருக்கலாம்.. ஜெயலலித்தாவிற்கு தான் தெரியும்). இங்கே அழகாக பல்டி என்று சொல்வது தவிர்த்து அது துரதிஷ்டவசமானது என்றார்.
பல்டி என சொல்ல ஏன் மனது வரவில்லை. அம்மாவிடம் மட்டும் இதயம் இனித்து, வாய் புளித்ததா?, இங்கேயும் ஏன் சோழியன் குடுமி ஆடியது?
உண்ணாவிரதம் பற்றியும் ராமசாமி கமென்ட் அடித்தார்.. காலையில் மூக்கு முட்ட சாப்பிட்டு , மாலைவரை ஜீரனம் ஆகாது என்று.. அம்மையார் இருந்த கேரவன் உண்ணாவிரதம் பற்றி தன் 10 வது துக்குளக் ஆண்டு விழாவில் என்ன திருவாய் மலர்ந்தார் என்று படிக்கவேண்டும்.. ரஜினியும் உண்ணாவிரதம் இருந்தார்.. நிச்சயம் அவரின் உண்ணாவிரதத்தை இதே போல கமென்ட் அடித்திருக்க மாட்டார்.. அந்தளவு ஏமாளியா என்ன சோ ராமசாமி??

மொத்தத்தில் இந்த ஆண்டு துக்குளக் பத்திரிக்கை ஆண்டு விழா என்பதை விட அம்மாவின் பிறந்த நாள் விழா துக்குளக் ஆண்டு விழாவில் நடந்தது என்று சொல்லலாம்..

அப்போது விடை தெரியவில்லை இப்போது தான் தெரிகிறது.. ஏன் என்று.. எல்லாம் "எங்கே பிராமணன்" தான் காரணம்..

சோழியன் குடுமி மட்டும் தான் சும்மா ஆடுமா என்ன?? எங்க சோ ராமசாமியின் இல்லாத குடுமி கூட நன்றாவே ஆடும், ஒரு தொலைக்காட்சி ஸ்லாட் கிடைக்குமென்றால்.. நன்றாக ஆடியுள்ளது.. சபாஷ் ராமசாமி. இன்னும் நன்றாக ஆட்டும் குடுமியை.. அடுத்த 2 ஸ்லாட் வேனுமே..

விசுவின் குடுமிக்கு அடுத்து கன ஜோராக ஆடியது ராமசாமியின் குடுமி தான்..
இதே நிலையில் சன் டீவி , தி மு க வினர் என்றிருந்தால், சில பதிவு போட்டிருப்பர், சொம்பாடித்து ஸ்லாட் வாங்கவா என்று.. ஆனால் இங்கே அம்மாவும், சோவும், ஜெயா டீவியும் ஆச்சே, அதான் தன் கேள்வி பதிலில் கூட ஒரு பதிவர் சொன்னார்.. எது எப்படியிருந்தா என்ன நமக்கு ஒரு நல்ல சீரியல் கிடைத்ததே என்று..

எங்கே பிராமணன்.. இதுக்கு மேலயுமா எங்கேனு தேடனும்??

"தல" குழலியும், கும்முதலும்..

தல குழலியும், கும்முதலும்..

என்ன தல இந்த கும்மு கும்மியிருக்கீங்க .. சரி விடுங்க.. கும்முவதுனு முடிவு பன்னியாச்சு, அப்புறம் என்ன நல்லா கும்முறது, கொறச்சி கும்முறதுனு பாகுபாடு.. குனிய வெச்சு நல்லா கும்மு கும்முனு கும்ம வேண்டியது தானே..

மொத்ததுல கொள்கையை பார்த்து அளவுகோல் வெச்சு கும்ம சொல்றீங்க.. அது சரி.. பா ஜ க கொள்கை என்னனு எல்லாருக்கும் தெரியும், அதுக்காக அவங்க ராமர தூக்கி பிடிச்சு பிரச்சனை பன்னா , அட அவங்க கொள்கை அது, தெரிஞ்சது தானேனு கொஞ்சமாவா கும்முறோம்.. நல்லா குனிய வெச்சு கும்முறோம்ல.. அப்புறம் என்ன?

மத்தவங்கள ஏன் கும்மலனு கேட்கறவங்க கூட கலைஞரை கும்மிட்டு வந்து தானே அதை கேட்குறாங்க..

யார் யாருக்கு எந்த அளவுக்கு செய்ய முடியுமோ அதை செஞ்சுட்டு வந்து பேசினா பரவாயில்ல.. அவங்களால எது முடியுமோ அத கூட செய்யாம இப்படி டபுள் ஆக்ட் கொடுக்கறாங்களேனு தானே கும்மறாங்க (கலைஞரையும் சேர்த்து).

ஏன் நம்ம கேப்டனை எடுத்துக்கோங்க.. அவர் தான் கொள்கைனு எதுவும் இல்லைனு ஆரம்பத்துலயே சொல்லிட்டாரு.. அட அவர் என்ன செய்வாரு, அதான் கொள்கையே இல்லைனு சொல்லிடாரேனு விட்டுவிட்டோமா என்ன .. அவரோட எல்லா தவறான செய்கைக்கும் செம கும்மு கும்முனோமா இல்லையா??

சின்ன தவறு , பெரிய தவறுனு பார்த்தா கும்மினோம்? அவர் கொள்கை இல்லைனு சொன்னத வெச்சே கும்மி எடுத்தோமே.. அவர் கட்சி ஆரம்பிச்ச நேரத்துல தான் நாம எல்லாம் ஒன்னா வலைப்பதிவுல பிசியா எழுதிக்கிட்டு இருந்தோம் தல.. அப்போ இருந்த எல்லாருக்கும் தான் நல்லா தெரியுமே.. அளவுகோல் வெச்சு கும்மினோம்னு சொல்ல முடியுமா?

குறிப்பா ஓட்டு கேட்டு திருமா, வைகோ , ராம்தாஸ் பார்த்து மட்டும் தானே இந்த கேள்வி வருது.. ஒரு நெடுமாறனை, சுப வீ , சீமான், குப்பன் சுப்பனை பார்த்து இப்படி யாரும் கேட்கலயே தல..

ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் , எனக்கு கொள்கை கொஞ்சமா இருக்கு, ஒரு குறிபிட்ட வட்டத்துல நான் இருக்கேன் ஆகவே பொதுமக்களே, எனக்கு 2 நாடாளுமன்ற தொகுதியும், 15 சட்டமன்ற தொகுதிலயும் வெற்றிப்பெற அளவுக்கு மட்டும் ஓட்டு போடுங்கனு கேட்டா வராங்க.. அடுத்த முதல்வர் நான்.. நாளை நமதே 40 நமதே, 234 நமதே, முடிஞ்சா பக்கத்து மாநிலத்தையும் சேர்த்து 335 எனதேனு சொல்லிகிட்டு தானே வராங்க.. ஓட்டு மட்டும் அப்படி வேனும், கும்முறது மட்டும் அவங்க கொள்கைய பார்த்து கூட குறச்சு கும்மனும்னு சொல்றது என்ன நியாயம் தல..

சரி பட்டம் தான் இங்கே முக்கியத்தும் படுதானு பார்த்தா.. யார்கிட்ட இல்ல பட்டம்.. தமிழின தலைவர், தமிழன போராளி, தமிழர் தலைவர், தமிழன் முகவரி நு எல்லோருக்கும் பட்டம் இருக்கு.. இந்த பட்டத்துக்கு இந்த அளவு கும்மலாம்னு எழுதிவெச்சுட்டா பட்டத்தை போட்டுகிறாங்க..

தங்களால என்ன முடியுமோ அத கூட செய்யாம சால்ஜாப்பு சொல்றாங்களேனு தானே கும்முறாங்க.. இப்போவே செய்யமாட்டேங்கறாங்க .. நாளை நிறைய செய்யக்கூடிய பதவில வந்தா செய்வாங்களா? இதே சால்ஜாப்ப அப்போவும் தான் சொல்வாங்கனு தானே கும்முறாங்க..

என்ன தல எப்பவும் நல்ல எடுத்துக்காட்டு தருவீங்க இப்போ இவ்ளோ வீக்கா விட்டுடீங்க..

சரியா ஆடலயே, 100 எடுக்கலயேனு சச்சினை கும்முற அதே கும்பல் தான் ஹர்பஜனையும் செம கும்மு கும்முவாங்க.. நீங்க சொல்ற மாதிரி ஏன்டா ரன் எடுக்கலயேனு கேட்டு இல்லை..

அவன் தான் ரன் எடுக்காம விட்டுட்டான்.. நீதான் பக்கா பவுலர்னு டீம்ல வெச்சிருக்கோமே.. உன்னால முடிந்த அளவுக்கு போட்டு 4 விக்கெட் எடுத்திருந்தா ஜெயித்திருக்கலாம்லனு கும்மத்தானே செய்யுறாங்க.. செய்றாங்க இல்லையா??

ஏன், இன்னும் சொல்லப்போனா, கோச்சை கூட கும்மனும்.. அவர் என்ன பீல்ட்ல வந்தா விளையாடினாருனு கேட்டு கும்மாம விட முடியுமா?

சச்சின் பேட்ஸ்மேன், அவருக்கு ரன் எடுக்க வாய்ப்பு இருந்து அவர் விடுறாருனு அவரை மட்டும் கும்மிட்டு போயிட முடியுமா என்ன?? இல்ல அப்படித்தான் போயிடுறாங்களா??

கிரிக்கெட்ல கோச்சிங், பீல்டங் , பவுலிங் கூட அங்கம் தானே.. அது அதுல இருக்கவங்க, அவங்க அளவுக்கு செய்தா தான் ஜெயிக்க முடியும்.. அத விட்டுட்டு இரட்டை வேடம் போட்ட??? சச்சின் உட்பட எல்லோரையும் தான் கும்முவாங்க..

மியான்டாட்க்கு கடைசி பந்துல 6 ரன் கொடுத்த சேத்தன் சர்மாவை கும்மாத கும்மா?? ரன் எடுக்கலனா கும்மினாங்க? உன்னால முடிஞ்ச பவுலிங்ல நீ சரியா பன்னலயேனு தான் கும்மினாங்க தல..

உதாரணத்துக்கு தெரியாத்தனமா கிரிக்கெட் விளையாட்ட எடுத்து கும்மிட்டீங்களே தல..

கிரிக்கெட்ல சரியா, சமமா தான் கும்முறாங்க, சச்சின் ல இருந்து ஹர்பஜன் வரைக்கும்.. அரசியல்ல தான் இப்படி பார்த்து பார்த்து கும்முவாங்க.. சச்சின கும்முற அளவுக்கு ஹர்பஜன கும்மகூடாதுனு அவங்களே ஒரு வரைவு வெச்சிகிட்டு..

இந்த பாயின்ட் மனசுல வந்த உடனே உங்களுக்கு செம கரெக்ட்டுனு பட்டிருக்கும் தல.. எனக்கே தலைப்பை படிச்சு அப்படி தான் இருந்தது.. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.. மெதுவா யோசித்து பார்த்தாதான் புரியுது.. நீங்களும் யோசிங்க தல புரியும்..

சரி பதிவர்களே வாங்க , உங்க பங்குக்கு என்னையோ இல்ல குழலியையோ கும்மிட்டு போங்க.. ஆனா ஒன்னு.. பதிவோட அளவு, எழுத்து நடை எல்லாத்தையும் பார்த்து கூட்டி குறைச்சு கும்மாதீங்க.. ஒரே அளவுல கும்மிட்டு போங்க.. !

ரொம்ப கும்மிட்டேனா தல?? :)

மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமா..கலைஞர்

ஈழ விவகாரத்தில் கலைஞர் மீது கடுமையான விமர்சனம் விழுந்துவருகிறது. ஜெயலலிதாவை கூட நியாயப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

இரு விதமான நபர்கள்.. ஒன்று கருணாநிதி என்றாலே வேப்பங்காய் என கசக்கும் பிரிவு, கலைஞரை ஆதரிக்கும் / கலைஞர் சார்ப்பு என்றிருக்கும் பிரிவு மற்றொன்று (நடுநிலையானவர்கள் என்று யாரும் இல்லை என்பதே உண்மை - சும்மானாச்சும் நான் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளலாம் அவ்வளவே).

இதில் முதல் பிரிவானவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் கருணாநிதியை வறுத்தெடுக்க என்று பார்த்திருந்தவர்கள், கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் வறுத்தெடுத்துவிடுவார்கள் (சில நேரங்களில் தங்களை நடுநிலைவாதி என்று சொல்ல்லிக்கொள்வார்கள் :) )

கலைஞர் ஈழ விசயத்தில் எந்த வித முடிவு எடுத்திருந்தாலும் அவர்களின் விமர்சன முறை மாறி இருக்குமே தவிர கருணாநிதி எதிர்ப்பு எதிர்ப்பாக தான் இருந்திருக்கும்.. ஆக கலைஞர் இவர்கள் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்துவிட்டார் என்று சொல்வது தவறு.

ஆனால் இரண்டாவதாக உள்ள பிரிவினரின் விமர்சனத்திற்கு நிச்சயம் கலைஞரே காரணம். முழுக்க முழுக்க.. !

ஏன் எப்படி எதற்கு என்பதை பற்றி விரிவாக (அள்ள அள்ள குறையாமல் வரும்) அடுத்த பதிவில் பார்க்கலாம்..

இங்கே நம் மற்ற தலைவர்கள் மருத்துவர் அய்யா, திருமா, வைகோ பற்றி பார்க்கவேண்டியுள்ளது.. இவர்கள் மூவருமே ஈழ விசயத்தில் தங்கள் மேல் எந்த விதமான எதிர்வினை விமர்சனங்கள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். நடந்துக்கொண்டார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது, சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அப்படி பெரிதாக விமர்சனம் விழாது பார்த்துக்கொண்டார்கள். மூவருமே எந்த பதவியிலும் இல்லை என்பதே பெரிய ப்ள்ஸாகி போனது..

மருத்துவர் ராமதாஸ் - காங்கிரஸ் முன்னாள் தலைவரின் சம்பந்தி, விடுதலைப்புலிகள் பற்றி வெளிப்படையாக பேசிவந்தார் சில மாதங்களுக்கு முன்.. சீமான் , அமீர் , திருமாவளவன் விஷயத்தில் சிலிர்த்தெழுந்த சிங்கக்குட்டி காங்கிரஸ் தலைகள் எல்லாம் ஏனோ இவர் விஷயத்தில் மட்டும் குட்டிப்போட்ட நாய்குட்டிகள் போல ஈனஸ்வரத்தில் முனக மட்டுமே செய்தார்கள். அங்கேயும் பெரிய எதிர்ப்பு விமர்சனம் இல்லை.

ஈழத்தமிழருக்கு துரோகம் செய்யும் இந்திய அரசே என்று இவர் குரல் கொடுத்தாலும் , தன் மகன் உட்பட இவரது கட்சியினர் அதே இந்திய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் என்பது மட்டும் நியாபகம் வரவே வராது. தப்பித்தவறிக்கூட எங்களின் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய சொல்வேன் என்று வாயிலிருந்து வந்துவிடாது. கலைஞரின் செயல்கள் திருப்தியில்லை திருப்தியில்லை என்று பல்லவி பாடுவார் ஆனால் தி மு க அமைச்சர்கள் பதவி விலகிடவேண்டும் என்று மட்டும் (மனதில் இருந்தாலும்) கேட்டிட மாட்டார் .. மூச்.. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொள்வதா???

இத்தனைக்கும் எப்போது போயஸ் தோட்டத்து கதவுகள் அகல திறக்கும் , அன்னையிடம் விடை பெற்று அம்மாவிடம் அடைக்கலம ஆகலாம் என்று காலம் பார்த்திருக்கிறார்.. போராட்டம் , போராட்டம், அறிக்கை, தமிழிழ ஆதரவு கூட்டம் அனைத்திலும் பங்கேற்றுக்கொள்வது என்ற செய்கைகளை வகுத்துக்கொண்டதன் மூலம் தன் கட்சியினர் மத்திய அமைச்சர் பதவி பற்றி பெரிய எந்த பெரிய விமர்சனமும் வராது பார்த்துக்கொள்கிறார்.. அப்படியே தப்பித்தவறி நிருபர் கேட்டுவிட்டால்.. மத்திய அமைச்சரவையே முடியப்போகிறது இப்பப்போய் என்று இழுத்தடித்து மழுப்பத்தெரியாதா என்ன.. )கலைஞரிடன் கூட்டணியில் இரு முறை இருந்தவர் ஆயிற்றே..!) ஒரு வேளை மன்மோகன் பா ம க விற்கு இன்னுமொரு அமைச்சர் பதவி என்று சொன்னால், இல்லைங்க இருக்கட்டும் ஆட்சி முடியப்போகுதே இப்போ போய் எதுக்கு என்று சொல்வாரென நீங்கள் நினைத்தால்.. அய்யோ பாவம் அப்பாவி சார் நீங்க.. ஒரு பக்கம் அமைச்சர் பதவி , ஒரு பக்கம் அம்மாவின் பார்வைக்கு வெயிட்டிங்.. அம்மா கை விட்டுவிட்டால், உதவும் என்று காங்கிரஸின் கையையும் விடாமல்.. அதே நேரத்தில் ஈழ ஆதரவும் பேசி, மத்திய அரசை எதிர்க்கும் போராட்டங்களில் தலைகாட்டியும், குறிப்பாக காங்கிரஸின் பரம திடீர் எதிரிகள் திருமா, சீமானுடன் கைக்கோர்த்து சாமர்த்தியாக மிகக் குறைந்த அளவு விமர்சனத்துடன் பாலன்ஸ் செய்து ஆட்டம் ஆடி வரும் மருத்துவரை பார்த்தால்... "ஆடாத ஆட்டம் இல்லை, போடாத வேஷம் இல்லை..."

வைகோ - இவருக்கு பதவி தோளில் போடும் துண்டும் அல்ல, இடுப்பில் இருக்கும் வேட்டியும் அல்ல.. அவரின் வீட்டு மொட்டை மாடியில் வத்தல் காயப்போட பயன்படும் ஒரு துணி அவ்வளவே.. எந்த பதவிக்கும் தானோ தன் கட்சிகாரங்களோ வந்தே பல மாமாங்கம் ஆச்சே , வேற வழியில்லை.. வாடாம் காயப்போடற துனி அது இதுனு சொல்லி சமாளிக்கனும்.. ஒரு பக்கம் ஈழத்துக்கு வீர வசனமெல்லாம் பேசி, இந்தியா , இலங்கை , பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ்னு கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி பேசி உணர்ச்சிமயமா தாக்கினாலும் வீட்டுக்கு போனா முதல் வேலையா போன் போடற நம்பர் போயஸ் தோட்டது நம்பரா தான் இருக்கும்..

மக்களை கொல்வது புலிகள்னு போயஸ் தோட்டத்துல இருந்து குரல் வந்தா மட்டும் இவருக்கு காது டமார செவிடாகிடும் பாவம்.. இவர் என்ன பன்னுவார்.. ஜெயிக்கறமோ தோக்கறமோ 2009 தேர்தல்ல நிக்கறதுக்கு 2, 3 சீட்டும், கொஞ்சம் லஷ்மி கடாட்சமும் வேணுமே... வெட்டிகிட்டு வந்து 3 வருஷம் கூட ஆகலயே அதுக்குள்ள போய் அண்ணேனு ஒட்டிக்க தன்மானன் இடம் தராது..

இன்னும் 2 வருஷம் போனா 2011 ல , பாசிச வெறிபிடித்த ஜெயலலிதாவை இந்த நாட்டை விட்டு விரட்டாது ஓயமாட்டேனு , என்னை எட்டி உதைத்தாலும் , ஏறி மிதித்தாலும் என் அண்ணன் அண்ணன் தான், அவர் தம்பி வைகோ தான்.. மதியிழந்தேன் மானம் இழக்கவில்லைனு கண்ணியாகுமரில இருந்து கத்திகிட்டே வந்து கோபாலபுரத்துல தொபுக்கட்டீர்னு விழலாம்.. ஆனா இப்ப 2009 க்கு அம்மா தானே ஆதரவு.. அம்மா என்னா சொன்னாலும் 2 காதுலயும் பஞ்சு அடைச்சுகிட்டு எல்லா ஈழத்தமிழர் கூட்டத்துக்கு (தி மு க தவிர) போயிட்டு நரம்பு புடைக்க, நெஞ்சு துடிக்க நாலு பக்க வசனத்தை வெசனமா பேசிட்டு வந்து தன்மானத்தை காப்பத்திக்கிட்டதால, பெருசா விமர்சனம் வராம பார்த்துகிட்டு வண்டி ஓடுது.. அப்படியே கேட்டாலும், கூட்டணி அமைத்தோம், கொள்கை விடவில்லை.. ஒரு கூட்டில் கழுகும் காகமும் தத்தம் கொள்கை விடாது இருத்தல் தவறானு வீர வசனம் பேசவா சொலித்தரணும்.. 1 வருஷமா , 2 வருஷமா... ஓட்டுமொத்தமா கல்லூரி வாழ்க்கை கணக்கா கலைஞர் கிட்ட பாடம் படிச்ச மாணவர் ஆச்சே , சோரம் போவாரா (பேசுறதுல மட்டும்) வைகோவை பார்த்தால் ஆட்றா ராமா, ஆட்றா ராமா..ஆட்றா ராமா.. என் தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆட்றா ராமா

திருமா - .. பாவம் இவர் பத்தி என்ன சொல்றதுனு தெரியல.. பரிதாபமா இருக்கு. தமிழக காங்கிரஸ் காரனுக்கு வீரம் வந்தது (தன் கட்சியோட கோஷ்டிக்காரன் வேட்டி கிழிப்பை தவிர்த்து) வேற ஒருத்தர் கிட்ட வம்புக்கு போனான்னு சொன்னா அது நம்ம திருமா கிட்ட தான்.. திருமாவும்.. போன் போட்டு போன் போட்டு நாங்க பன்னல, நாங்க பன்னல , எங்க தப்பு இல்லனு சொல்லி சொல்லி அவர் செல்போன் காசும் , பேட்டரி சார்ஜும் போனது தான் மிச்சம்.. அவர் என்ன பன்னுவார் வேற வழி??? காங்கிரஸை ஏதாச்சும் சொல்லப்போய் பெரியவருக்கு கோவம் வந்து போ வெளியே நு அனுப்பிட்டா?? மருத்துவர் தான் இருக்காரேனு நம்பி போயிடமுடியுமா?? .அவருக்கே இன்னும் கதவு திறக்கல.. இவருக்கு போயஸ் தோட்டத்த்கு சந்து கூட திறந்து இருக்குமானு சந்தேகம் தான்..

ஆயிரந்தான் ஈழத்தமிழர் போராட்டம் , உண்ணா விரதம் இருந்தாலும், 2009 இல்லனா கூட 2011 ல நாலு எம் எல் ஏ வாச்சும் வேனுமே... உணர்வுக்கு ஈழத்தமிழர்களா இருந்தாலும் , நாலு எம் எல் ஏ க்கு தமிழனத்தலைவர் தானே.. அவரை திருப்தி படுத்தவாச்சும் அப்படி இப்படி பேசிகிட்டு, கலைஞர் செய்வார், நாளைக்கு செய்வார், நாளை மறுநாள் நிச்சயம் ஏதாச்சும் செய்வார்னு அறிக்கை விட்டு அப்படியே காங்கிரஸ் கிட்ட பவ்யமா போயி காலத்தை ஓட்டனும்.. கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை.. ! திருமாவை நினைத்தால் ... சிரிக்கறேன், சிரிக்கறேன் சிரிப்பு வரல, அழுகுறேன், அழுகுறேன் அழுகை வரல

ஈழமும், காவிரியும் விலைமாதகர்களா?

ஈழத்தை பற்றி யோசித்த போது வந்த வார்த்தைகளி கோர்வை இது.. கவிதையா , வாக்கியமா என்று தெரியவில்லை.. ஆனால் மனதில் தோண்றிய எண்ணம் என்பது மட்டும் நிஜம். படித்துவிட்டு சொல்லுங்கள், கருத்துப்பெட்டியில் மறக்காமல்.

விலை மாதர்கள்

ஈன அரசியல்வாதியின் பதவி "சுகத்துக்காக" மட்டும்

தேவைப்பட்டால் தட்டி எழுப்பிட

எங்கள் காவிரியும், ஈழமும் விலைமாதர்கள் அல்ல!

உளியின் ஓசை

"உளியின் ஓசை" கேட்ட காதுகளுக்கு - என்

தமிழன் ஒப்பாரி கேட்காது போனதோ ?.

காரணம இல்லாமலா - உளியின் ஓசையால்

கால் காசு வரும். - ஒப்பாரியின் ஓசையால் ??

இறையாண்மை

ஈழம் என்றால் ஆறடிக்கு எட்டிப்பார்க்கும் இறையாண்மை

உங்கள் இறை "ஆண்மை"

காவிரியின் கரையில் மட்டும் தளுக்கென்று சுருங்கி நிற்கும்

கூட்டுக்குள் பொத்தி நிற்கும் நத்தை போல.

ஆண்மைக்கு அடிசறுக்கும் - எங்கள் இறையான்மைக்கு

அடிக்கடி சறுக்கும்

இடம் பொருள் ஏவல் பார்த்தா ? - இல்லை

இனம் , மொழி, பதவி பார்த்து.

உச்சகட்ட கெட்டவார்த்தை

போராளியை எதிர்த்திடவே துனிவின்றி - பக்சே

போர் என்ற போர்வையிலே - இன அழிப்பு நீ செய்தாய்.

காறி உமிழ்ந்து திட்டிடவே - வசவு வார்த்தை

எனக்கொன்று வேண்டுமென தேடித்தேடி - கிடைத்ததடா

உச்சகட்ட கெட்டவார்த்தை - கடைசியிலே

இந்தியாவின் தலைநகராம் தில்லியிலே- ஆம் பக்சே

காறி உமிழ்ந்து சொல்கிறேன்.. "காங்கிரஸ்காரா" - ஒழிந்துப்போ..

முத்துக்குமரா - ஏன் குழம்(ப்)பிப்போனாய்??

முத்துக்குமரா, உன் தமிழ் உணர்விற்கு தலைவணங்குகிறேன்.

மற்றவர் நலன் கருதி தன் உயிரை மாய்த்துக்கொள்ளவதற்கெல்லாம் தூய்மையான உள்ளமும், குறிப்பாக ஈழத்தின் அமைதிக்காக உயிர்த்தியாகம் செய்வதற்கு தூய மனம் என்பதையும் தாண்டி இன உணர்வும் வேண்டும்.

நீ எடுத்தது வேகமான முடிவு என்று சொல்ல முடிந்த எங்களுக்கு அதனை விவேகமான முடிவு என்ற சொல்லிட மனம வரவில்லையே முத்துக்குமரா.

இன உணர்வை நெஞ்சில் உரம் போட்டு போராளியாக இருந்திருக்க வேண்டிய நீ , தீக்கிரையாக போனதில் என்ன விவேகம் இருக்கிறது முத்துகுமார்?


உன் உயிர்த்தியாகம் , பட்டி தொட்டியெங்கும் பரவி , ஈழம் பற்றி என்ன என்று தெரியாதவர் கூட ஈழம் என்ன , நடப்பது என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர், இளைஞர் சமுதாயத்தில் உணர்ச்சி கலந்த ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் அம்மா கூட இதுவரை அங்கே ஏதோ போர் என்று நினைத்திருந்த நிலையில் மாறி, இரண்டு நாட்களாக , இலங்கை என்று ஆரம்பிக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் பத்திரிக்கையில் படித்துவிட்டு கேள்வி கேட்கிறார்.. உன் உயிர்த்தியாகம் தான் இதை சாதித்தது , சந்தேகமே இல்லை..

ஏழுச்சியும், விழிப்பும் ஏற்படுத்தியிருக்கிறது உன் மரணம்.. உண்மை தான் ,

ஆனால் என்ன பயன் விளையும் முத்துக்குமரா..???

ஏற்பட்டிருக்கும் எழுச்சியை சரியான பாதையில் எடுத்துச்செல்ல நல்ல தலைமை இல்லாதவரை அந்த எழுச்சியின் பயன் என்ன சொல்?

உன் மரணத்தை கூட, இது ஏன்ன தியாகமா, குடும்ப தகராறில் தற்கொலையா, கட்சியின் தூண்டுதலா, என்றெல்லாம் கேள்வி கேட்டு ஒரு கூட்டம் கிளம்பிவிட்டதை நீ அறிவாயா?

ஜெத்மலானியின் கேள்விகளை விட, ராஜீவின் மரணம் பற்றிய கேள்விகளை கேட்கதாவர்கள் கூட, உன் மரணத்துக்கு பக்கம் பக்கமாய் கேள்வி கேட்பதை நீ அறிவாயா முத்துகுமரா?

உன் மரணத்தால் எழ்ச்சிப்பெற்றவர்கள் எல்லாம், இந்த கூட்டத்துக்கு பதில் சொல்வதற்கே இனி தங்கள் எழுச்சியை பயன்படுத்தப்போகிறார்க்ள்..


ஈழத்துக்கு ஆதரவா, எதிர்ப்பா , புலிகளுக்கு ஆதரவா , எதிர்ப்பா என்ற நிலையில் இருந்து மாறி, இன்று முத்துக்குமாருக்கு ஆதரவா , எதிர்ப்பா என்ற பாதையில் பயணம் செல்வதாக உணர முடிகிறது.

நீண்ட கடிதத்தில் தமிழக கட்சிகள் பலவற்றையும் சாடி சென்றுவிட்டாய்..

ஈழத்துக்கு ஆதரவான தமிழன் என்று பொதுவில் உன்னை வைத்து பார்த்திருக்கவேண்டிய நிலைமாறி சில அரசியல் கட்ச்யிகளுக்கு எதிரி, சில கட்சிக்கு ஆதரவானவன் என்ற அரசியல் முத்திரை உன் உண்மையான தமிழன் முத்திரையை கொஞ்சம் கொஞ்சமாய் மறைத்து வருகிறதே உன் கடிதம்.. அதை உண்ணாலே உணர முடியாது முத்துக்குமரா..


நல்ல தலைமையும் இல்லை, நல்ல அரசியல் வாதிகளும் இல்லை. உண் இனவுனர்வு மரணத்தை சந்தேக கண் கொண்டு பார்க்க ஒரு கூட்டம், உன் கடிதமே உன் மீது ஒரு அரசியல் போர்வையை போர்த்திவிட்டு கொண்டிருக்கும் நிலை..

இந்த சூராவளிக்கு நடுவில் நீ எழுப்பி சென்ற எழுச்சி எனும் தீ அனையாது எப்படி காத்திட போகிறோம் என புரியவில்லை.

எல்லாவறையும் காட்டிலும், இங்கே அரசியல்வாதிகள் புகுந்து உனக்கு கொடுக்கும் பட்டமும் , அவர்களக் நடத்தும் அரசியல் நாடங்களும், இன்னும் சில முத்துக்குமார்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் அதிகமாக உள்ளது முத்துகுமரா..

நம் ஊடகங்களை பற்றி சொல்லிடவே வேண்டாம். முதல் பக்கத்தில் ஆரம்பித்த நீ ஒரு வாரத்தில் கடைசி பக்கத்தின் ஒரு மூலையில் பெட்டி செய்தியாக முடங்கிவிடுவாய்... அடுத்த பரபரப்பு செய்தி வந்தால் ஒரு வாரமே அதிகமடா.. பத்திரிக்கைதுறையிலும் அரசியல் இருக்கிறது என்று உனக்கு தெரியாமலா இருந்திருக்கும்..

தெளிவான சிந்தனையில் இருந்த நீ, உணர்ச்சி தீ எழுப்பும் தந்திரம் தெரிந்துவைத்திருந்த நீ, இப்படியெல்லாம் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள ஒரு சமூகத்தில் வாழ்கிறோமே என்று மட்டும் நினைக்காமல் விட்டது ஏனடா?

சற்று குழப்ப நிலையில் இருந்துவிட்டாயா??

நினைத்திருந்தால் உன் உடலில் தீயிட்டு உணர்ச்சி தீயை பரவவிட்டதற்கு பதிலாய் உணர்ச்சித்தீயை உன் உள்ளத்தில் ஏற்றி, புரட்சிபடையின் முதல் ஆளாய் நின்றிருப்பாயே முத்துகுமரா.

உன் ஆன்மா சாந்தியைடட்டும்.. ஈழத்து தமிழரின் சிரிப்பொலி காற்றிலே கலந்து உன்னை விரைவில் எட்டும் என்ற நம்பிக்கையுடன்.. !

ஈழம் - இப்படித்தான் நடக்கவேண்டும் என்று ஆசை

30/01/2009 - தி மு க , பா ம க அமைச்சர்கள் ராஜினாமா, அனைவரும் மக்களவை சபாநாயகருக்கு தங்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்பினர்.

30/01/2009 - போர் நிறுத்ததை வலியுறுத்தி காங்கிரஸ் அரசு உறுதியான எச்சரிக்கையை இலங்கை அரசுக்கு நாளை மாலைக்குள் அனுப்பாவிட்டால், தி மு க , பா ம க, கம்யூனிஸ்ட எம் பி க்ககள் அனைவரும் கூண்டோடு எம் பி பதவியை ராஜினாமா செய்ய உறுதி - கருணாநிதி தலைமயில் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.

30/01/2009 தமிழக கட்சிகள் முடிவு - காங்கிரஸ் அரசு கவிழுமா?

சட்டசபையில் தி மு க விற்கு காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவு வாபஸ் ஆகுமா??? தி மு க அறுதி பெரும்பான்மை இழக்குமா?

1/2/2009 - தி மு க விற்கு துனை நிற்போம் - ஆட்சி கவிழ விடமாட்டோம் - பா ம க , வி சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உறுதி.

02/02/09 - அனைத்து எம் பி க்களும் ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் அரசு கவிழ்கிறது.

02/02/09 - தமிழர் நலன் கருதி - நடபுணர்வோடு காங்கிரஸை விட்டு பிரிகிறோம் - கருணாநிதி அறிவிப்பு.

03/02/2009 - மதிமுக வினரும் ராஜினாமா - வைகோ அறிவிப்பு

04/02/2009 - தி மு க விற்கு ஆதரவு வாபஸ் - காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அதிரடி.

தமிழ் உணர்வுடன் கலைஞரின் இந்த முயற்சிக்கு அனைத்து தமிழ் உணர்வாளர்களும் தோள் கொடுக்க வேண்டும் - ராமதாஸ், பழ நெடுமாறன் வேண்டுகோள்.

06/02/09 - திடீர் திருப்பம் - தமிழ் உணர்வுடன், தமிழர் நலன் கருதி தி மு க அரசுக்கு ஆதரவு - ஜி கே வாசன் தலைமையில் 12 எம் எல் ஏ க்கள் உறுதி.

06/02/09- தமிழக காங்கிரஸ் மீண்டும் பிளவு - காங்கிரஸ் அதிர்ச்சி

07/02/2009 - விடுதலைப்புலிகளின் அடிப்பொடியாக மாறிய கட்சிகள் - ஜெ காட்டமான அறிக்கை.

போர் நிறுத்த ஆபத்தும், தமிழக கட்சிகளின் அபத்தமும் - துக்ளக் கட்டுரை

08/02/2009 - ஜெ வின் தமிழீழ எதிர்ப்பு போக்கை கண்டித்து அந்த கூட்டணியில் இருந்து விலகல் - கம்யூனிஸ்டகள் அறிவிப்பு.

இராமேஸ்வரத்தில் மாபெரும் தமிழீழ ஆதரவு மாநாடு - கருணாநிதி, ராமதாஸ், திருமா, வைகோ, தா. பா, நல்லக்கன்னு, வாசன், பழ நெடுமாறன், சீமான், பாரதிராஜா, சத்ய ராஜ் வீரமனி , சு ப வீ பங்கேற்பு- 3 கோடிதமிழர்கள் கலந்துக்கொண்ட பேரணி .

தமிழகத்தின் போராட்டங்கள் - இந்தியா முழுவதிலும் உள்ள தமிழரிடத்தில் பரவியது.

14/02/2009 நல்ல முடிவு எடுப்பேன் - ஜனாதிபதி தமிழர்களுக்கு உறுதி

அப்பாவிகளை கொல்லுவதை நிறுத்துங்கள் - பல நாடுகளில் இருந்து

ராஜபக்ஷேவிற்கு நெருக்குதல்கள் வலுக்கிறது.

20-02-2009 பேச்சுவார்த்தைக்கு தயார் ராஜபக்ஷே அறிவிப்பு.

21-02-2009 - ராஜபக்ஷே முடிவு தவறு, தொடர்ந்து போரிட வேண்டும் - சோ, ஜெயலலிதா , சுப்பரமனிசாமி அறிக்கை

22/02/2009 - பெண் ராஜபஷே - ஜெ மீது வைகோ கடும் தாக்கு- கூட்டணி உடைந்தது..

23/02/2009 - வைகோ போனால் கவலையில்லை.. என்னை அன்டித்தான் அவர் இருந்தார்.. அவரை நம்பி நான் இல்லை

26/02/2009 - 2009 மார்ச் மாதம் பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் மும்முனை போட்டி
திமுக+கம்யூனிஸ்ட்+பா.ம.க+வி சிறுத்தைகள்+ மதிமுக+ மூப்பனார் காங்கிரஸ்

அ தி மு க + காங்கிரஸ்

பா ஜ க + தே மு தி க + ச மு க

27/2/09 - தாமதமான முடிவு என்றாலும், தமிழருக்காக கலைஞர் எடுத்த முடிவை வரவேற்று , பாராளுமன்ற தேர்தலில் தி மு க கூட்டணிக்கு ஆதரவு - தமிழ் அமைப்புகள் ஆதரவு.

தமிழருக்கு எதிரான போக்கால் ஜெ ஓரங்கட்டப்பட்டார் - நக்கீரன், ஜீவி

அய்யோ இங்ங்ங்ங்கே.. கெக்கக்கே... ங்ங்..ங்.... ந்ஞஞா.. பல்டி, கில்டி, பல்டி, கொல்டி, ஞஞ... ங்...ங்.. ங்க்... போச்சே.. போச்சே... அய்யோ. அய்யய்யோ.. === தினமலர் ஒரு வாரமாக தொடர்ந்து போட்டு வரும் தலைப்புச்செய்தி..

நாளை முதல் செய்தித்தாள்களில் இப்படியான தலைப்புச்செய்தி பார்க்க ஆசையாகத்தான் உள்ளது. நடந்தால் நன்றாக இருக்கும்.

முதலமைச்சர் கருணாநிதி பற்றிய வதந்தி...???

தமிழக முதல்வர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக் அவர் இன்றைய குடியரசு தின நிகழ்ச்சிகளில் கூட கலந்துக்கொள்ளவில்லை.
இதன் அடிப்படையில், வழக்கம் போல் கருணாநிதி பற்றிய வதந்தி சென்னை மற்றும் பல இடங்களில் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.

இது ஏற்கனவே பல முறை நடந்துள்ளது. ஆயிரம் காழ்ப்புகள் இருந்தாலும், எதிர் கருத்து இருந்தாலும், ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் மறைந்தார் என்று வதந்தி கிளப்புவது மிகவும் அருவருப்பான செயல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

இந்த வதந்தியை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் , "வதந்திகளை நம்பவேண்டாம், கருணாநிதி நலமாய் இருக்கிறார்" என ஸ்கராஸ் ஓடுகிறது..

இங்கே முதல்வர் , அங்கே பிரதமர் என இருவரும் மருத்துவமனையில், குடியரசு நிகழ்சிகளுக்குகூட இருவரும் வர இயலவில்லை.

இருவருக்கும் பிரார்த்திக்க பல கோடி பேர் இருக்கிறார்கள்.. உங்களை பொத்தி பொத்தி காத்து குணப்படுத்தி அனுப்ப 1000 டாக்டர்கள் உங்களை சுற்றி.. இருவரும் தயவு செய்து நினைத்து பாருங்களேன்.

அங்கே என் இனத்தை சார்ந்த சகோதரன் உயிர் போகும் நிலையில் கூட ஆறுதல் சொல்ல ஆளில்லை.. அவன் கூட இருப்பவர்கள் கூட தங்கள் உயிரை காத்துக்கொள்ள ஓடவேண்டியுள்ளது. குண்டடிப்பட்டு ரத்தத்துடன் அலறும் அவர்களுக்கு மருந்திட ஒரு நர்ஸ் கூட கிடையாது அய்யா.. தயவு செய்து சிந்தியுங்கள்.. உயிரும் , வலியும் அனைவருக்கும் ஒன்று தானே?
நம்பிக்கையுடன்.

சன் டீவியும், விஜயகாந்தும் - அய்யோ பாவமும், 25,000 மும்

குடியரசு தினத்தை முன்னிட்டு நமது சன் டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, சூப்பர்கிட் அதிரடி திரைப்படம் காதலில் விழுந்தேன் என்று 10 நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் வந்து கலக்குகிறது..


டப்பா படங்கள் மற்றும் சுமாராக ஓடிய படங்களை தான் இது வரை நமது சன் டீவி திரைக்கு வந்து 1 அல்லது 1.5 வருடங்களில் ஒளிபரப்பிவந்துள்ளது. இப்போது பாவம் தனது சொந்த தயாரிப்பை இவ்வளவு சீக்கிரம் தனது தொலைக்காட்சியிலே போடவேண்டிய நிலை.



அதிலும், 5 நிமிடத்துக்கு ஒரு முறை "ஆரவாரமான வெற்றி", "அபார வெற்றி" என்றெல்லாம் பில்டப் விளம்பரம் கொடுத்த படத்தை இப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் "சூப்பர் Hஇட் அதிரடி திரைப்படம் என்று ஒளிபரப்பும் நிலை..


சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 14 ல் காலை 11 மணிக்கு அதிரடி மெகாHஇட் திரைப்படம் தெனாவட்டு.. மதியம் 2 மணிக்கு உலக மகா வெற்றிப்படம் தின்டுக்கல் சாரதி, மாலை 6 மனி அதிரடி இமாலயா வெற்றிப்படம் படிக்காதவன் உங்கள் சன் டீவியில் என்ற விளம்பரத்தை எதிர்பார்க்கலாம்..


அடுத்து, நமது அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். ஆக்ஷன் நாயகனாக கட்சி ஆரம்பித்த கேப்டன் இன்று காமெடி நாயகனாக நிற்கிறார். இதோ இன்று அவர் வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் இரண்டு. இது வரையில் மக்களுடன் தான் கூட்டணி என்று சவடால் விட்டவர் , இறங்கி வர வேண்டிய துர்பாக்கியம். பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டு இல்லை, தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்று திருவாய் மலர்ந்துள்ளார். மக்களுடன் கூட்டு கசந்து விட்டதா இல்லை பாராளுமன்ற தேர்தல் மக்களுக்காக நடத்தப்படும் தேர்தல் அல்ல என கேப்டன் நினைக்கிறாரா?



மக்களுடன் கூட்டனி அமைத்து சென்னை செயின்ட்ஜார்ஜ் கோட்டையை பிடித்த இந்த காமெடி தலைவர் இப்போது டெல்லிக்கோட்டையை பிடிக்கும் நோக்கில் தேசிய கட்சிகளுடன் கூட்டனியாம்.



பாரளுமன்றத்தேர்தல் என்பதால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்று கூறும் இந்த கோமாளி 2011, சட்டமன்ற தேர்தல் எனவே மாநில கட்சிகளுடன் கூட்டு என்ற நிலையை எடுக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்?



மக்களுடன் கூட்டணி என்று ரீல் சுற்றி வந்த இந்த தீடிர் தலைவருக்கு வந்த சோதனை பாவம்..


அடுத்து, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை இந்த ரீல் தலைவர் எடுத்துள்ளார். மின்சார பிரச்சனை போக்க திட்டம் என்னிடம் உள்ளது ஆனால் சொல்லமாட்டேன் என்று உளறிய இந்த தலைவர் இப்போது எந்த திட்டத்தையும் வெளிப்படையாக சொல்லமாட்டேன், 2011 ல் ஆட்சிக்கு வந்து நானே நிறைவேற்றுவேன் என்று அருள்வாக்கு அளித்துள்ளார். காரணம், அவரின் திட்டமான "மக்களுக்கு மருத்துவ காப்பீடு" திட்டத்தை தி மு க காப்பியடித்துவிட்டதாம்.. இனியும் தன்னிடம் உள்ள மற்ற திட்டங்களை வெளிப்படையாக சொன்னால் , அனைத்தையும் தி மு க காப்பியடித்துவிடுமாம்..


என்ன ஒரு பொறுப்பற்ற பேச்சு. மக்களுக்கு நன்மை நடக்கிறது என்பதில் இவருக்கு ஆர்வம் இல்லை. மாற்று கட்சி அதை செய்து பேர் எடுத்துவிடுமோ என்ற பொறாமை.. இவரெல்லாம் மக்களோடு கூட்டணி என்கிறார்.. விளங்கிடும் இவர் மக்கள் கூட்டணி. இதனால் தான் இவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் கூட்டணியில் இருந்து மாறி தேசிய கட்சி கூட்டணிக்கு அடி போடுகிறார் போலும்.


இந்த பதிவை படிக்கவரும் நண்பர்களின் மூலம் என் வருகைப்பதிவேட்டில் இது வரை வந்தவர் எண்ணிக்கை 25,000 தாண்டும் என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.. :)

வேதனையான உண்மை சம்பவம் - இப்படியும் மனிதர்கள்??

எனக்கு தெரிந்த நன்பர் ஒருவரின் சகோதரியின் வாழ்வில் நடந்த சோகம்.
இந்த சோக நிகழ்வு நடந்து முழுமையாக 2 வாரங்கள் கூட ஆகவில்லை.
இது போன்ற சம்பவங்கள் பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும் நேரில் , அதுவும் நன்பர் ஒருவர் வாழ்வில் நடந்ததை கேட்ட போது மனம் பதைபதைத்துவிட்டது.
நன்பரின் மூத்த சகோதரி திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. கனவருடன் நல்லபடியாக வாழ்க்கை சென்றுக்கொண்டிருக்கிறது. கனவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் நல்ல சம்பளத்தில் வேலை.

அன்பான கனவன், உறவுகள், பொருளாதார வசதி என்று எல்லாம் நன்றாக அமைந்த பெண்ணுக்கு ஒரே ஒரு குறை. திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை என்கிற மனக்குறை மட்டுமே. இருவருமே இது குறித்து மருத்துவ ஆய்வுக்கு சென்று வந்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த ஒரு குறையே அந்த சகோதரிக்கு எமனாக வரும் என்று இரண்டு வாரங்கள் முன்பு வரை கூட யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
ஆம், இந்த தம்பதிகள் இருவரும் குழந்தையின்மையின் காரணமாக ஒரு வித சோகத்தில் இருப்பதால், அதிலும் கனவர் வேலைக்கு சென்ற பின்னர் இந்த சகோதரி தனிமையில் தவிப்பதை தவிர்த்திடும் பொருட்டு பென் வீட்டார், இந்த தம்பதியினரை தங்கள் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி ஒரு தனி ப்ளாட்டில் ஒரு வருடத்திற்கு முன்னர் குடியமர்த்தினர்.. அவ்வப்போது போய் பார்த்து அறுதல் சொல்ல ஏதுவாக இருந்தது..


விரைவில் தங்கள் மகளுக்கு குழந்தை உண்டாகியிருக்கும் செய்தி வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அந்த பெற்றோருக்கு தலையில் இடி விழுந்ததது போல் வந்த செய்தி மகள் தன்னை உயிரோடு எரித்துக்கொண்டுவிட்டாள் என்பது தான்..
என்ன பாடுபட்டிருக்கும் அந்த பெற்றோரின் மனம்? அலறி அடித்து ஓடியவர்களுக்கு பாதி கருகிய நிலையில் மீட்கப்பட்ட மகளை தான் பார்க்க முடிந்தது.

விஷயம் இதுதான். அந்த பென்னுக்கும் அதே ப்ளாட்டில் இருக்கும் வேறு இரண்டு பென்களுக்கும் எதோ ஒரு விஷயத்தில் ஆரம்பித்த சிறிய மனக்கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு வருடத்தில் குரோதமாகிவிட்டது.


அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அந்த பென்கள் இவரின் குழந்தையின்மையை குறித்து ஏளனமாக பேச துவங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று , ஏதோ விஷயத்துக்காக ஆரம்பித்த வாய்ச்சன்டையில் அந்த பென்கள் இவரின் குழந்தையின்மை பற்றி மிக கடுமையாக விமர்சனம் செய்து சற்று ஆபாசமான வார்த்தைகளை வீசியதில் மனமுடைந்த அந்த சகோதரி தன்னைத்தானே அவர்கள் கண் எதிரிலேயே தீக்கிரையாக்கிக்கொண்டால்.
மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு , மருத்துவர்களின் போராட்டம் வெற்றிபெறாமல் அந்த சகோதரியின் உயிர் பிரிந்துவிட்டது.

எத்துனை பெரிய சோகம் அந்த குடும்பத்துக்கு.. ஈடு செய்ய முடியாத இழப்பு.. தீ நாக்குகள் மனதை சுட்டதால், தன் உடலையும் தீக்கிரையாக்கி ஒரு உயிர் அநியாயமாக பிரிந்துவிட்டது. தாங்கள் மேற்கொண்டுவரும் மருத்துவத்தின் பலனாக அந்த சகோகதரி கரு தரித்திருக்கவும் வாய்ப்புள்ளது.. அப்படி பார்க்கும்போதும் தன்னை மட்டுமின்றி இந்த உலகில் வந்திருக்க வேண்டிய ஒரு உயிரும் போய்விட்டது..

அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் இவரை காப்பாற்றிட முனைந்த்தால் ஏற்பட்ட தீக்காயங்களுடன் மருந்துவமனையில் உள்ளார்.

யாரை குறை சொல்வது?
இந்த விஷயத்தில் வேறு வித முடிவுகள் எடுக்க வாய்ப்பிருந்தும் உணர்ச்சிவயபட்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் துரதிருஷ்டவச முடிவெடுத்த அந்த சகோதரியையா??

நாக்கில் விஷம் வைத்து திரிந்த அந்த பென்களையா?

அவரின் குழுந்தைப்பிறப்பை தள்ளிப்போட்ட ஏதோ ஒரு சக்தியையா??
இல்லை, ஒரு பெண் என்றால் திருமணம் முடிந்த சில மாதங்களின் கருத்தரிக்க வேண்டும், பிள்ளை பெற்றிட வேண்டும், இல்லையெனில் அவள் ஒதுக்கப்படவேண்டியவள், பழிக்கப்படவேண்டியவள் , பெண்மைக்கு தகுதியற்றவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த சமூக கட்டமைப்பையா??

யாரை சொல்லி என்ன செய்வது.. ஒரு உடல் உயிருடன் தீக்கிரையாக்கப்படுவிட்ட சோகம் தீருமா?? அந்த குடும்பத்துக்கு ஆறுதல் தான் சொல்ல முடியுமா?
கைதாகி இருக்கும் அந்த பென்களின் குடும்பத்தில் நிலை என்ன??
சம்பந்தப்பட்ட அந்த 3 பெண்களுமே உணர்ச்சியவப்பட்டதன் விளைவு எத்துனை பேரை நிரந்தர சோகத்தில் ஆழ்த்திவிட்டது..

ஜெயலலிதாவிற்கு அருகதை உண்டா?

இலங்கை பிரச்சனையில் சாகும் வரை உண்ணாவிரதம் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அமர்ந்து பின்னர் 4 வது நாளில் தன் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார்.

உடனடியாக ஜெயா அம்மையார் வழக்கம் போல தன் அறிக்கை பல்லவியை ஆரம்பித்துவிட்டார்...

இது கருணாநிதியும் , திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம், சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொன்ன திருமாவளவன் ஏன் 4 வது நாளோடு முடித்துவிட்டார்? இலங்கை பிரச்சனை முடிந்துவிட்டதா என்று வழக்கம் போல் காழ்ப்புணர்சி அறிக்கையை கொடுத்துள்ளார்.

ஜெயா டீ வி வழக்கம் போல இதை தினம் 10 முறை ஒளி/ஒலிபரப்பு செய்து சந்தோஷப்பட்டார்கள்.

அதே போல, திருமாவின் உண்ணாவிரதத்தின் தொடர்புடைய பேருந்து எரிப்புகள், கல்வீச்சு குறித்த தன் சந்தேகங்களை எழுப்பினார்.. இந்த செலவுகளை கருணாநிதி எற்றுக்கொள்ளப்போகிறாரா அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து வசூலிப்பாரா என்ற தன் பொது நல நோக்கு கருத்தை தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பா, கருணாநிதியுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப நடத்திய நாடகமா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். திருமாவையோ கருணாநிதியையோ நியாயப்படுத்தவில்லை

ஆனால், இந்த கேள்வி எல்லாம் கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா??

அவர் வரலாறு காணாத ஊழல் புரிந்துள்ளார், அவர் ஆட்சி சரியில்லை என்ற அளவுகோல் வைத்து இந்த கேள்வி எழப்பவில்லை..

ஆனால் ஜெயலலிதா கேள்வியெழுப்பிய இரண்டு விஷயங்களான உண்ணாவிரதம் கண்துடைப்பா?, நாடகமா?.. மற்றும் இந்த உண்ணாவிரதம் காரணமாக பொதுச்சொத்துக்கு நேர்ந்த பாதிப்புக்கு உண்டான இழப்பு எப்படி சரிகட்டப்படும்..

இந்த இரண்டு விஷயங்களிலும் ஜெயலலிதாவும் , அவரின் கட்சியும் எவ்வாறு நடந்துக்கொண்டது என்பதற்கு நேரடி எடுத்துக்காட்டுக்கள் உள்ளது.

1992 ல் ஜெயலலிதாவும் சாகும் வரை உண்ணாவிரதம் அமர்ந்தார். காவிரி தண்ணீருக்காக. தண்ணீர் வந்ததா? அவர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? வி சி சுக்லா வந்தார், தேவையானவற்றை செய்ய ஆவன செய்கிறோம் என்றவுடன் தன் "கேரவன்" புகழ் உண்ணாவிரத்தை 4 வது நாளில் முடித்துக்கொண்டார்.. அந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக இருந்து அவரின் ஆட்சி லட்சனம் சிரிப்பாய் சிரித்தது, எங்கும் ஊழல், லஞ்சம், ஆனவம், ஆடம்பரம் என்று கொடிகட்டி பறந்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்க துவங்கிய நேரம்.. இதனை திசைத்திருப்ப ஒரு 4 நாட்கள் " சாகும் வரை " கேரவன் உண்ணாவிரதத்தை நடத்தி முடித்தார். இப்படியான உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவிற்கு இப்போது திருமாவளவனை பார்த்து கேட்க அருகதை உள்ளதா??


இவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் நடந்து என்ன? தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அ தி மு க வினர் பேயாட்டம் ஆடித்தீர்த்தனர். பல இடங்களில் பேருந்துக்கள் கல்வீச்சுக்கு ஆளானது, தீ வைக்கப்பட்டது. ஒரு தனியார் பேருந்து அ தி மு க வினரால் கொளுத்தப்பட்டு பின் நிகழ்ந்த அனைத்தும் இன்னும் மறந்துவிடவில்லை.

இந்த போராட்டங்களினால் ஏற்பட்ட இழப்புக்கு ஜெயலலிதா தன் சொந்த காசு கொடுத்து (1 ரூ சம்பளத்தில் சேர்த்து வைத்த) சரிகட்டினாரா? இல்லை அ தி மு க விடமிருந்து வசூல் செய்தாரா?? இவருக்கு பதில் சசிகலா இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்று பணம் செலுத்தினாரா??

அப்போது எதுவும் செய்யாமல் இப்போது கேள்வி கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா?? யார் வேண்டுமானால் கேள்வி கேட்கலாம் , ஆனால் ஜெயலலிதாவிற்கு கேள்வி கேட்கும் அருகதை கொஞ்சம் கூட கிடையாது.

பொத்திக்கொண்டு அடுத்து வரும் தேர்தல்களில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை பற்றி சிந்தித்தால் நலம்.

திருமங்கலத்தில் வைகோ வெற்றி

திருமங்கலம் வாக்கு என்னிக்கை முடிவடையும் தருவாயில் உள்ள இந்த நிலையில், 12 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 சுற்று மட்டுமே மீதமுள்ள நிலையில் தி மு க வெற்றி உறுதியாகியுள்ளது.

தே மு தி க - 11,000 & சரத்தின் ச மு க 700 வாக்குகளும் பெற்றுள்ளது.

தி மு க வின் லதா அதியமான் தனக்கு அடுத்தபடியாக உள்ள அ தி மு க வின் முத்துராமலிங்கத்தை விட சுமார் 36,150 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்( தி மு க - 70,000 , அ தி மு க - 34,000).

40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி மு க வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு உள்ளது

தலைப்பு பற்றிய விளக்கம். ம தி மு க வென்ற தொகுதியை ஜெ க்கு வைகோ தாரைவார்த்துவிட்டார், ஏமாளி, கோமாளி, அடிமை என்றெல்லாம் விமர்சனம் இருக்கிறது..

உண்மையில் வைகோ மிகத்தெளிவாக இருந்திருக்கிறார்.. எப்படியும் தோற்கப்போகும் இந்த தொகுதியில் நாம் ஏன் நின்று செலவு செய்யவேண்டும் என்றே இந்த தொகுதியை அ தி மு க தலையில் கட்டிய வைகோ விற்கு தான் உண்மையான வெற்றி.

குறிப்பாக திருமங்கலம் பேச்சை வைத்து தான் தன்னை ஜெ பொடாவில் கைது செய்தார் ஜெ, அதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தொகுதியை ஜெ க்கு தாரை வார்ப்பது போல வார்த்து தன் வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார் வைகோ.. அவரை பொறுத்தவரை இது அவரின் பெரு வெற்றி

திருமங்கலத்தில் தி மு க வெற்றி?

திருமங்கலம் இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. வாக்கு என்னிக்கை 12ம் தேதி நடைப்பெற்று அன்று 11 மனிக்கெல்லாம் முடிவுகள் தெரியும்..

இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று நக்கீரன் பத்திரிக்கை ஒரு கருத்து கனிப்பு நடத்தி முடிவுகளை இந்த வார இதழில் வெளியிட்ட்டுள்ளது. அதன் படி

தி மு க - 56 %

அ தி மு க - 36%

தே மு தி க 8.5%

ச ம க - 1.2%


தி மு க சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் நக்கீரன் எழுதியுள்ளது

ஆண் வாக்காளர்கள் மனநிலை

தி மு க - 52%

அ தி மு க - 35%

தே மு தி க - 9%


பெண் வாக்காளர்கள் மனநிலை

தி மு க - 53%

அ தி மு க - 36%

தே மு தி க - 9%

வயதுவாரியாக
(18 - 25) தி மு க - 45, அ தி மு க - 30, தே மு தி க - 21, ச ம க - 2
(26 - 40) தி மு க - 54, அ தி மு க - 37, தே மு தி க 5, ச ம க - 2
(41 க்கு மேல்) தி மு க - 58, அ தி மு க - 39, தே மு தி க - 2

மக்கள் மநநிலை என்ற தலைப்பில் நக்கீரன் மக்களிடம் பேசியதிலிருந்து

பணம் கொடுத்தவர்களுக்கு வாக்கு

இரண்டு கட்சியினரும் கொடுத்திருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாக்குகள் இருவருக்கும் சரி சமமாக

பிள்ளைகள் கைவிட்ட எனக்கு அந்த மகராசன் 1 ரூ அரிசி கொடுத்து வாழவெச்சு இருக்காரு அவருக்கு தான் ஓட்டு - வயதான பெண்மனி

அ தி மு க எனக்கு பிடிக்கும்னாலும் அந்த அம்மா இலங்கை தமிழர் பிரச்சனையில தமிழருக்கு எதிரா இருக்க்கு அதனால இரட்டை இலைக்கு ஓட்டு போடமாட்டேன்.

ஒரு ரூ அரிசி கொடுத்திருக்காரு, ரேசன்ல பொருள் கிடைக்குது அதுனால சூரியனுக்கு ஓட்டு

சாத்தான்குளம் இடைத்தேர்தல்ல எங்க வேலைய காமிக்க முடிஞ்சது.. ஆனா இங்கே அழகிரி ஏரியா ல முடியல.. இலைய ஓரம்கட்டி சூரியன் முன்னாடி போகுது - ஒரு அதிமுககாரர்

ஆளுங்கட்சி எம் எல் ஏ வரனும், சூரியனுக்கு ஓட்டு

பென் வேட்பாளர், தொகுதியில் இருக்கும் ஒருவர போட்டிருக்கார் கலைஞர் - தி மு க காரர்

மின்வெட்டு, விலைவாசி ஏற்றம் அதி மு க விற்கு ஓட்டு

தி மு க , அதிமுக பணம் தந்து கலக்குறாங்க.. கேப்டன் வெறும் வாயில முழம் போடறார்... தேறாது.. தே மு தி க தொன்டர்


பன்னி மேய்க்க சொன்ன விஜயகாந்த் - கடுப்பான விவசாயிகள்

செங்காப்படையில் பிராச்சாரம் செய்த விஜயகாந்திற்கு அங்கு கூடிய விவசாயிகளை பார்த்தவுடன் உற்ச்சாகம் ஏற்பட்டது. உற்சாகத்தில் அவர், இலவசங்களை கொடுக்கறாங்கனு வாங்காதீங்க..இலவசங்களுக்கு அடிமையாகாதீங்க.. இன்னைகு காசு பணம் தருவாங்க.. நீங்களும் வெட்க்கமில்லாம சந்தோஷமா வாங்குறீங்க.. நாளைக்கு 2 பன்னிய கொடுத்து மேய்க்க சொல்லுவாங்க. .நீங்க பன்னி மேய்ப்பீங்களா? என்று கேட்க..

கடுப்பான விவசாயிகள், யோவ். என்ன பேசுற, லிமிட்டா பேசு.. மெட்ராஸ்ல இருந்து வந்து எங்களயா பன்னி மேய்ப்பீங்களானு கேட்குற?? உனக்கு இஷ்டமிருந்தா நீ பன்னி மேயி.. வந்தமா ஓட்டு கேட்டமானு போ.. தேவையில்லாம பேசாதே என்று கோபமாக குரல் விட.. இதில் சங்கடமான விஜயகாந்த் கிளம்பிச்சென்றார்..

நன்றி - நக்கீரன்

பல முறை நக்கீரன் சர்வே முடிவுகள் துல்லியமாக இருந்திருக்கிறது.. பார்க்கலாம் இம்முறை எப்படி இருக்கிறது என்று.. !

திகு திகு திருமங்கலம் யாருக்கு?

இடைத்தேர்தல் காரணமாக கரன்சி மழை, புகார் மழை, புகழ்ச்சி மழை, வசை மழை என்று திருமங்கலம் எங்கும் மழை பொழிகிறது..

தலைவர்களின் உச்சகட்ட பிரச்சாரம், அதிரடி புகார்கள், அடிதடி, வசை பாடுதல், மக்களுக்கும் இலவசங்கள், வாக்குறுதி, கோஷம் என இடைத்தேர்தலுக்கே உரிய அம்சங்களுடன் திருமங்கலம் தன் வாக்குப்பதிவை எதிர்நோக்கியுள்ளது..

பா ஜ க வும் , பா ம க வும் இந்த இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தன் நிலையை அறிவித்துவிட்ட நிலையில், களத்தில் தி மு க , அ தி மு க, தே மு தி க , ச ம க கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் கச்சை கட்டியுள்ளனர்..
இருப்பினும் நேரடி போட்டி என்னவோ தி மு க மற்றும் அ தி மு க விற்கு தான்.. ஒரளவு தே மு தி க வும் இவர்களுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது.. சரத்தின் ச ம க விற்கு இது முதல் தேர்தல்..

அனல் கக்கிய பிரச்சாரம் ஒருவழியாக இன்றோடு ஓய்ந்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைப்பெற இருக்கிறது


இரண்டு முக்கிய கட்சிகளும் வெற்றிக்கனியை பறித்தே ஆகவேண்டும் என்று முட்டி மோதுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே இந்த வெற்றியை கவுரவ பிரச்சனையாக பார்க்கிறது.

பா ஜ க போட்டியில்லை. இந்த தொகுதியில் பா ஜ க விற்கு ஓட்டு வங்கியும் இல்லை.. அ தி மு க வுடன் கம்யுனிஸ்ட்கள் இருப்பதாலும், பா ஜ க விஜயகாந்துக்கு கொக்கி போட்டு வருவதாலும் , பா ஜ கவினரை தே மு தி க விற்கு ஓட்டு போட சொல்லி வாய்மொழி உத்தரவு போகலாம்.. ஆனால் தே மு தி க வை விட பா ஜ க தொண்டர்கள் அ தி மு க விற்கே வாக்களிக்க விரும்புவர்.

பா ம க வின் நிலை தான் புரியவில்லை.. அவர்களுக்கும் இங்கே பெரிய வாக்கு வங்கி இல்லை. வாய் மொழி உத்தரவு அ தி மு க ஆதரவாக போகலாம், பணபலம், ஜாதி, தனி நபர் செல்வாக்கு என்ற வகையில் ஒரு சாராரின் வாக்கும் தி மு க விற்கும், ஒரு சாரார் வாக்கு அ தி மு க விற்கும் போகவே வாய்ப்பு அதிகம்.

பா ஜ க போட்டியிடாதது, போன முறை தி மு க கூட்டனியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் இப்போது தங்களுடன் இருப்பது, மேலும் பா ம க வின் நடுநிலை, மின்சார வெட்டு, விலைவாசி போன்றை அ தி மு க வின் ப்ளஸ்.
கடந்த தேர்தலில் ம தி மு க நின்று வென்ற தொகுதி இது. நியாயமாக ம தி மு க வே இப்போது போட்டியிட்டிருக்கவேண்டும், ஆனால் அ தி மு க விற்கு தொகுதியை வைகோ தாரை வார்த்துவிட்டார் என்ற குறை ம தி மு க வின் ஒரு சிறு பகுதியினரிடம் இருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அ தி மு க விற்கு ஒரு சிறிய , மிகச் சிறிய மைனஸ்.

தி மு க விற்கு என்று பார்த்தால், கம்யுனிஸ்ட் , பா ம க கூட்டனியை விட்டு சென்றது மிகப்பெரிய மைனஸ், கட்சியின் ஒரு பிரிவு தி மு க விற்கு எதிரான மனநிலையில் இருப்பது, விலைவாசி, மின்வெட்டு, சன் டீ வி யின் நடுநிலை , எப்போதும் இருக்கும் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை போன்றவை மிகப்பெரிய மைனஸ்.

மதுரை தினகரன் எரிப்பு சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பது மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பளிச்சென தெரிந்தது.

ப்ளஸ் என்று பார்த்தால், அதிகமாக எதுவுமில்லை.. , ஆட்சி அதிகாரம்,பென் வேட்பாளர், இலவசங்கள், கிலோ அரிசி 1 ரூபாய், அழகிரி.. இவை மட்டுமே.. வேண்டுமானால், தே மு தி க பிரிக்கப்போகும் அ தி மு க வாக்குகளை சொல்லலாம்.

இந்த இரண்டு கட்சிகளின் ப்ளஸ் மற்றும் மைனஸ் வைத்து பார்க்கும் போது, தி மு க விற்கு போன்ற இடைத்தேர்தலில் கிடைத்தது போல வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைத்திட வாய்ப்பில்லை என்றே தோண்றுகிறது.,

தி மு க வின் வெற்றி என்பது நூலிழையில் மட்டுமே இருக்கும் என்றே நினைக்கிறேன்..போன முறை மதுரை மேற்கு இடைத்தேர்தலில் தி மு க வின் கவுஸ்பாட்சா 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.. ஆனால் இந்த முறை 30,000 வித்தியாசம் இருக்குமா என்பது சந்தேகமே..

தி மு க, அ, ம, தே (தி மு க) - - இப்போ புதுசா செ மு க..??

அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்த வருடத்தின் முதல் பதிவு இடுகிறேன்!

ஏற்கனவே பல முன்னேற்ற கழகங்கள் தமிழகத்தில் இருப்பது போதாதென்று இப்போது புதுசாக இன்னும் ஒரு முன்னேற்ற கழகம் முளைத்திருகிறது , இந்த முன்னேற்ற கழகம் ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பவர்களை முன்னேற்றும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆம்! தன் ஊரை முன்னேற்ற ஒருவர் பல வழிகளில் முயற்சி செய்தார்.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார், தோல்வியே கிடைத்தது, நாடளுமன்ற தேர்தல்.. அங்கும் தோல்வியே, நகராட்சி தலைவர் பதவிக்கு முயன்றார் , அங்கேயும் தோல்வி முகம்.. வார்டு உறுப்பினர் பதவியும் கானல் நீர் ஆனது..
இந்த தோல்விகளை எல்லாம் கண்டு துவண்டுவிடவில்லை.. தன் நகராட்சியை முன்னேற்றியே தீரவேண்டும் என்ற வெறி அவருக்கு இன்னும் கூடிக்கொண்டேதான் போனது.

தான் வாழும் நகராட்சியை எப்பாடுபட்டாவது உயர்த்திட வேண்டும் என்ற அவரது தீவிர சிந்தனையின் வடிவம் தான் இந்த செ மு க.

திரு எ.சுப்பிரமனியன் தான் அந்த விடா முயற்சியாளரும், செ மு க வின் நிறுவனரும் ஆவார்.

அதென்ன செ மு க??? அது தான் செங்கல்பட்டு முன்னேற்ற கழகம்.

சுப்பிரமனியன் செங்கல்பட்டு வர்த்தக சங்கத்தை நடத்தி வருபவர்.

செங்கல்பட்டு - சென்னையிலிருந்து தாம்பரம் மார்கமாக 40 கி மீட்டர் தூரத்தில் இருக்கும் நகராட்சி.. செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஆறுமுகம் (பா ம க).

செங்கல்பட்டு பாராளுமன்ற தொகுதியின் எம் பி (பா ம க) திரு ஏ கே மூர்த்தி - முன்னாள் ரயில்வேத்துறை அமைச்சர்.

தான் ஒரு அ தி மு க அனுதாபியும், தீவிர எம் ஜி ஆர் ரசிகன் என்றும் கூறும் எ. சுப்பிரமனியன். இன்று எம் ஜி ஆரை அ தி மு க புறக்கணித்ததை ஜீரனிக்கமுடியாமல், தனி கட்சி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் (கட்சி பெயர்ல எம் ஜி ஆரே இல்லயே???#$#).

ஊழலற்ற , தூய்மையான, ரவுடியிசமற்ற நகரமாக செங்கல்பட்டை மாற்றிடும் லட்சியுத்துடன் இந்த புது கட்சியை தொடங்கி , கொடி அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்..

எம் எல் ஏ, எம் பி போன்ற பதவிகள் வேண்டாமென்றும், நகராட்சி தலைவர் என்ற சிறிய பதவிக்கு வந்து , அதன் மூலம் செங்கையின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று சபதமிடுகிறார். விரைவில் செங்கல்பட்டு முழுதும் தன் கட்சி கொடியேற்றி கட்சியை வளர்க்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

நல்லவேளையாக இவர் 2011 ல் நான் தான் முதல்வர் என்று சொல்லவில்லை.. அந்த வகையில் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.. இல்லையெனில் ஏற்கனவே இருக்கும் 2011ன் 13 முதலவர்களுடன் இவரும் 14 வது முதல்வர் வேட்பாளராக வந்திருப்பார்..

இவரது செ மு க செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இப்படியே போனால், விரைவில் தா. மு க (தாம்பரம் முன்னேற்ற கழகம்) , வி மு க (விழுப்புரம் முன்னேற்ற கழகம்) அ மு க (அம்பத்தூர் முன்னேற்ற...) தின்டிவனம் மு க, கும்பகோனம் மு கழகம்.. தஞ்சாவூர் முன்னேற்ற கழகம் என்று சுமார் 300 கழகங்கள் வரலாம்..

இன்னும் ஒரு படி மேலே போய், "குரேம்பேட்டை முன்னேற்ற கழகம்", "சைதை முன்னேற்ற கழகம்", "போரூர் முன்னேற்ற கழகம்", "வத்தலகுண்டு முன்னேற்ற கழகம்", "பள்ளிக்கரனை 3 வது சந்து முன்னேற்ற கழகம்",, "காசிமேடு கோவிந்தப்பன் தெரு முன்னேற்ற கழகம்" . "மாட்டுத்தாவனி முன்னேற்ற கழகம்", "களக்காடு முட்டு சந்து முன்னேற்ற கழகம்" என்றெல்லாம் வரும் போலிருக்கிறது.. "ஆனைவயல் ஆறாம் நம்பர் வீடு" முன்னேற்ற கழகம்

இதுவும் நல்லாத்தான் இருக்கு..