Showing posts with label உண்ணாவிரதம். Show all posts
Showing posts with label உண்ணாவிரதம். Show all posts

ஜெயலலிதாவிற்கு அருகதை உண்டா?

இலங்கை பிரச்சனையில் சாகும் வரை உண்ணாவிரதம் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அமர்ந்து பின்னர் 4 வது நாளில் தன் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார்.

உடனடியாக ஜெயா அம்மையார் வழக்கம் போல தன் அறிக்கை பல்லவியை ஆரம்பித்துவிட்டார்...

இது கருணாநிதியும் , திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம், சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொன்ன திருமாவளவன் ஏன் 4 வது நாளோடு முடித்துவிட்டார்? இலங்கை பிரச்சனை முடிந்துவிட்டதா என்று வழக்கம் போல் காழ்ப்புணர்சி அறிக்கையை கொடுத்துள்ளார்.

ஜெயா டீ வி வழக்கம் போல இதை தினம் 10 முறை ஒளி/ஒலிபரப்பு செய்து சந்தோஷப்பட்டார்கள்.

அதே போல, திருமாவின் உண்ணாவிரதத்தின் தொடர்புடைய பேருந்து எரிப்புகள், கல்வீச்சு குறித்த தன் சந்தேகங்களை எழுப்பினார்.. இந்த செலவுகளை கருணாநிதி எற்றுக்கொள்ளப்போகிறாரா அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து வசூலிப்பாரா என்ற தன் பொது நல நோக்கு கருத்தை தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பா, கருணாநிதியுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப நடத்திய நாடகமா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். திருமாவையோ கருணாநிதியையோ நியாயப்படுத்தவில்லை

ஆனால், இந்த கேள்வி எல்லாம் கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா??

அவர் வரலாறு காணாத ஊழல் புரிந்துள்ளார், அவர் ஆட்சி சரியில்லை என்ற அளவுகோல் வைத்து இந்த கேள்வி எழப்பவில்லை..

ஆனால் ஜெயலலிதா கேள்வியெழுப்பிய இரண்டு விஷயங்களான உண்ணாவிரதம் கண்துடைப்பா?, நாடகமா?.. மற்றும் இந்த உண்ணாவிரதம் காரணமாக பொதுச்சொத்துக்கு நேர்ந்த பாதிப்புக்கு உண்டான இழப்பு எப்படி சரிகட்டப்படும்..

இந்த இரண்டு விஷயங்களிலும் ஜெயலலிதாவும் , அவரின் கட்சியும் எவ்வாறு நடந்துக்கொண்டது என்பதற்கு நேரடி எடுத்துக்காட்டுக்கள் உள்ளது.

1992 ல் ஜெயலலிதாவும் சாகும் வரை உண்ணாவிரதம் அமர்ந்தார். காவிரி தண்ணீருக்காக. தண்ணீர் வந்ததா? அவர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? வி சி சுக்லா வந்தார், தேவையானவற்றை செய்ய ஆவன செய்கிறோம் என்றவுடன் தன் "கேரவன்" புகழ் உண்ணாவிரத்தை 4 வது நாளில் முடித்துக்கொண்டார்.. அந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக இருந்து அவரின் ஆட்சி லட்சனம் சிரிப்பாய் சிரித்தது, எங்கும் ஊழல், லஞ்சம், ஆனவம், ஆடம்பரம் என்று கொடிகட்டி பறந்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்க துவங்கிய நேரம்.. இதனை திசைத்திருப்ப ஒரு 4 நாட்கள் " சாகும் வரை " கேரவன் உண்ணாவிரதத்தை நடத்தி முடித்தார். இப்படியான உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவிற்கு இப்போது திருமாவளவனை பார்த்து கேட்க அருகதை உள்ளதா??


இவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் நடந்து என்ன? தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அ தி மு க வினர் பேயாட்டம் ஆடித்தீர்த்தனர். பல இடங்களில் பேருந்துக்கள் கல்வீச்சுக்கு ஆளானது, தீ வைக்கப்பட்டது. ஒரு தனியார் பேருந்து அ தி மு க வினரால் கொளுத்தப்பட்டு பின் நிகழ்ந்த அனைத்தும் இன்னும் மறந்துவிடவில்லை.

இந்த போராட்டங்களினால் ஏற்பட்ட இழப்புக்கு ஜெயலலிதா தன் சொந்த காசு கொடுத்து (1 ரூ சம்பளத்தில் சேர்த்து வைத்த) சரிகட்டினாரா? இல்லை அ தி மு க விடமிருந்து வசூல் செய்தாரா?? இவருக்கு பதில் சசிகலா இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்று பணம் செலுத்தினாரா??

அப்போது எதுவும் செய்யாமல் இப்போது கேள்வி கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா?? யார் வேண்டுமானால் கேள்வி கேட்கலாம் , ஆனால் ஜெயலலிதாவிற்கு கேள்வி கேட்கும் அருகதை கொஞ்சம் கூட கிடையாது.

பொத்திக்கொண்டு அடுத்து வரும் தேர்தல்களில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை பற்றி சிந்தித்தால் நலம்.

சேப்பாக்கத்தில் கூடி கலைந்தது ஒரு கூட்டம்.

ஒரு நாள் சுற்றுலா மாதிரி , கலையாத மேக்கப் போட்டு, சென்னை சேப்பாக்கத்தில் வந்து சில மனி நேரம் இருந்துவிட்டு சென்றது ஒரு கூட்டம்.

ஒகனேகல் பிரச்சனையில் தங்களின் திரைப்படங்கள் தடுக்கப்படுவதாலும், வியாபாரம் பாதிக்கபடுவதாலும் பொங்கியெழுந்து உண்ணாவிரத போராட்டம் அறிவித்தது தமிழ் திரையுலகம். அந்த உண்ணாவிரதம் பல கூத்துக்களுடன் இனிதே நடந்து முடிந்தது.

இந்த விவகாரத்தின் திவிரம் , இந்த திட்டத்தின் உண்மை நிலவரம் எல்லாம் தெரியாமலே, ஏதோ கூப்பிட்டார்கள் வந்தேன் என்ற ரீதியில் வந்தவர்களே அதிகம் என நினைக்கிறேன். அதிலும் உண்ணாவிரதம் என்பது என்ன என்று தெரியாமல் வந்த கூட்டம் மிக அதிகம்.

பிரச்சனை பற்றிய அக்கரை இல்லாமல் தங்களின் திரையுலக நட்சத்திரங்களை பார்க்க வந்து விசிலடித்து , ஆரவாரம் செய்த நம் பொது ஜனத்தை என்னவென்று சொல்லுவது? எப்போது தான் மாறப்போகிறார்கள் இந்த செல்லுலாய்ட் சாமிகளின் பக்தர்கள்?

உண்மையில் சொல்லப்ப்போனால் 15% திரையுலகினர் தவிர்த்து மற்ற அனைவரும், ஒன்று, இங்கே வராவிட்டால் தங்களுக்கு பட வாய்ப்பு குறைந்துவிடுமோ என்ற நிர்பந்தத்தில் வந்தவர்கள், மற்றும் ஏதோ கூப்பிடுறாங்க, கடமையே என்று வந்தவர்களும் தான் 85%.

10:00 மனிக்கு வந்து 11:00 மனிக்கு சென்றவர்களும், வேகவேகமாக வந்து கேமராவில் தலை காட்டிவிட்டு , அடுத்த 10 நிமிடத்தில் காணாமல் போனவர்களும் மிக அதிகம். நல்ல உண்ணாவிரதம் இது.

சிலரெல்லாம், வீட்டில் சமையல் செய்ய சொல்லிவிட்டு, சமையில் வேலை முடியும் முன்பு வந்துவிட்டு , வேகமாக திரும்பிப்போய் .. இப்படி தங்களை மிகவும் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தது செம காமெடி.

இவர்களை விட செம காமெடியான கூட்டம் ஒன்று இருந்தது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், இந்தியா வல்லரசாக வேண்டும், நம்மை பார்த்து மற்ற நாடுகள் நடுங்கவேண்டும் என்று பேசியோர் ஒரு ரகம், அதைவிட மோசமாக, விஜயகுமார் போன்ற சீனியர்கள் பேசிய பேச்சும்,. இந்த மேடையில் வந்து உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை வானுயர புகழ்ந்து பேசி, தங்கள் சுயலாபத்துக்கு அடிக்கல் போட்டது, தங்களின் சுயபுராணத்தை தம்பட்டம் அடித்தது, என்று பல ரமக். இவர்களெல்லாம் எந்த வகையென்று தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் வரவில்லை என்று யார் அழுதது? இப்படி வந்ததற்கு வராமல் வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்திருக்கலாம்.

விஷயத்தின் தீவிரம் புரிந்து, திட்டம் பற்றி தெரிந்து, ஏன் இந்த உண்ணாவிரதம் என தெரிந்து, உணர்வோடு வந்து கலந்துக்கொண்டு, தங்கள் உண்ர்வை வெளிப்படுத்தி பேசிய திரை துறை சார்ந்த அந்த வெகு சிலர் பாராட்டுக்குறியவர்கள். அவர்கள் மட்டுமே உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருக்கலாம், தேவையற்ற கூட்டத்தை தவிர்த்துவிட்டு.

மொத்தத்தில், வழக்கம் போல, கூடிக்கலைந்திருக்கிறது ஒரு கூட்டம்., சிலரைத்தவிர்த்து. நல்ல வேலை இங்கும் குத்தாட்டம் போட்டு கலெக்ஷன் பார்க்கவில்லை. அந்த விதத்தில் நல்லவங்கப்பா அவங்க எல்லாம்..