சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி திடீர் கைது



4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இன்று கைது செய்யப்பட்டதாக குமுதம் வலைதளத்தின் லேட்டஸ்ட் நியூஸ் பகுதியில் செய்தி வந்துள்ளது..


ரிப்போர்ட்டர், ஜூவி, நக்கீரனுக்கு அடுத்த 2 பிரதிக்கான ஸ்பெஷல் கவர் ஸ்டோரிக்கான களம் கிடைத்துவிட்டது..


குமுதம்.காம் செய்தி கீழே.


மேட்டூர்: சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறையினர் கைது செய்து பெங்களூருக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக காவல்துறையினரால், சந்தன வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 4 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், வீரப்பன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மேட்டூரில் தங்கியிருந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். 5 போலீசார் மீது வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முத்துலட்சுமி கைது செய்யப்பட்டதாக கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - குமுதம்.

கண்டுப்பிடியுங்கள் பார்க்கலாம்..

கீழே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்.. ஏதாச்சும் தெரிகிறதா?? படத்தில் என்ன தெரிகிறது என்பதல்ல கேள்வி..



சீட்டுக்கட்டுகள், காகிதங்கள், அட்டை, கோலப்பொடி, கற்கள், மனல் போன்றவற்றை உபயோகித்து இது போன்ற உருவங்கள்/அமைப்புகள் செய்வதை பார்த்துள்ளோம்..



இங்கே உள்ளது மேலே கூறியவை அல்லாது வேறு ஒரு பொருளில் நிர்மானிக்கப்பட்டது , அது என்ன?


எந்த பொருள் கொண்டு இந்த படத்தை நிர்மானித்தார்கள் என்பது தான் கேள்வி.. கண்டுபிடிக்கமுடிந்தால் கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள்

புலியும் சிங்கமும்.. நடுவில் யாரோ?








தமிழ்மணக்காட்டுக்குள்ளே ஒரே புலி சத்தமும், சிங்கத்தின் கர்ஜனையுமா இருக்கு. ஒரு காட்டுக்குளே வர மாதிர் உணர்வு.. சரி சரி, அதுக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இல்லை.. இல்லை


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. ரொம்பத்தான் முறுக்கிகிட்டு நிக்கறீங்க.. உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து சமாதானம் பன்னி கூட்டிட்டு வரதுக்குள்ள என் தாவு தீர்ந்து .. டவுசர் கிழிஞ்சு போச்சு....





போங்க போங்க ஒன்னா ஒத்துமையா இருந்து ஆகற வேலைய பாருங்க இனிமேவாச்சும்.. நான் போய் என் கிழிஞ்ச டவுசர தேடறேன்...

ரஜினி விரலில் ருத்ராட்சம்..


ருத்ராட்சம்..


ரஜினி பற்றிய அடுத்த மேட்டருக்கு பிள்ளையார் சுழி போடும் வேலையை குமுதம் தொடங்கிவிட்டது.. அது டமார் என வெடித்து கிளம்புமா அல்லது புஸ் என்று போகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.


மக்கா, இந்த பதிவு ரஜினி பற்றியல்ல, ஏற்கனவே ரஜினி பற்றி 2 பதிவு போட்டாச்சு.. இது ருத்ராட்சம் பற்றியது.


அருனாசலம் படத்தில் ருத்ராட்சம் தான் கதையின் முக்கிய டர்னிங்க் பாயின்ட் ஏற்படுத்தும்..ரஜினி எனும் போதே,நெற்றியின் பட்டை, கழுத்துல ருத்ராட்சகொட்டை, பரட்டை தலை என்கிற டயலாக் பிரசித்தம்


ரஜினிக்கும் ருத்ராட்சத்துக்கும் ஏதோ தொர்டர்புள்ளது போலும்.


இதோ இந்த ருத்ராட்சத்தின் பயணமும் ரஜினியிடமிருந்தே ஆரம்பம் ஆகிறது.. எவ்வுளவு தூரப்பயணம் என்பது போக போகத்தான் தெரியும்..

இந்த வார குமுதம் ரிப்போர்டரில், ரஜினியின் கடந்த கால நிகழ்வுகள்(காவிரி, கர்நாடக எதிர்ப்பு, குசேலன் தோல்வி, இலங்கைப்பிரச்சனையில் திடீர் விசுவரூபம் , சத்யராஜ், ராமதாஸ் பாசம்) பற்றிய கட்டுரை.


அதாவது, ஒரு கட்டத்தின் ரஜினியை எதிர்த்தவர்கள் கூட(ராமதாஸ், சீமான், சத்யராஜ்) இப்போது அவரை பாராட்டிபேசுவதன் காரணம், ரஜினியின் விரலில் (அதுவும் ஆட்காட்டிவிரலில்) இருக்கும் ருத்ராட்ச மோதிரமாக இருக்கலாம் என்று ரிப்போர்ட்டரின் ஆய்வறிக்கை சொல்கிறது.

இது பற்றி மேலும் விவரங்களுக்கு அவர்கள் சோதிடர் ஷெல்வியை தொடர்பு கொண்ட போது அவர் சில விஷயங்களை சொல்லியுள்ளார், அதில் தான் ஒரு சந்தேகம்..

நீங்கள் சொல்வது போல், ரஜினி ஆள்காட்டி விரலில் ருத்ராட்ச மோதிரம் அணிந்திருப்பது உண்மையிலேயே விசேஷமானதுதான்
குரு மேட்டில் ருத்ராட்ச மோதிரம் அணிவதன் மூலம் வலிமை, தன்னம்பிக்கை கிடைக்கும். அசைவம் மீது வெறுப்பும், சைவத்துக்குரிய நாட்டமும் ஏற்படும். தப்புத் தப்பாகப் பேசுவது குறைந்து, கட்டுப்பாடும் தீர்க்கமான முடிவெடுக்கும் மனநிலையும் கிடைக்கப் பெறுவார்கள்.


அவரது ரசிகர்கள் மத்தியில் அதற்கு பெரும் `கிராக்கி' ஏற்பட்டது. அதே போல் ருத்ராட்ச மோதிரத்தையும் அவரது ரசிகர்கள் அணிய முயன்றால், அதில் சிக்கல் இருக்கிறது'' என்று புதுகுண்டைத் தூக்கிப் போட்டவர்,


``ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிவதால் எப்படி பலன்கள் கிடைக்குமோ அதுபோல, சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிந்தால், அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் இளைய வயதினர் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்
மேற் சொன்ன வரிகள் தான் ஷெல்வி சொன்னதாக ரிப்போர்டரில் வந்தது..

முதலில் இந்த ருத்ராட்சம் அணிவதால், சுயகட்டுப்படு வரும்,தீர்க்கமான முடிவெடுப்பார்கள் என்று சொல்லி இருக்கிறார்...ஆக, இந்த ருத்ராட்சத்துக்கு மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளாக தான் அர்த்தம்?
பின்பு என்ன நினைத்தரோ,சுயகட்டுப்பாட் இல்லாதவர்கள் இதை அணிந்தால் விளைவுகளை அனுபவிக்க வேண்டும், அதானால் கட்டுப்பாடு இல்லாதவர்கள் இதை அனியகூடாது என்று கூறீயுள்ளார்,

ருத்ராட்ச மோதிரத்துக்கு அந்த சக்தி இருக்கிறதென்றால், யார் அணிந்தாலும் அவர்களை கட்டுப்பாடுடையவர்களாக அது மாற்றிவிடவேண்டுமே..

ரிப்போர்ட்டரும், ஜீ வீயும், நற்கீரனும் எழுதுவது போல், ரஜினி அரசியலுக்கு வர முடிவெடுத்துவிட்டார், கடைசி நேரத்தில் அவர் நலம் விரும்பிகளின் சொல்லால் மனம் மாறவும் வாய்ப்புள்ளது என்று முடிப்பார்கள் ஏனெனில் ரஜினி அரசியல் என்று சொன்னால், நாங்கள் துல்லியமாக செய்தி கொடுத்தோம் என்று செய்தி போடவும், அதே நேரம் ரஜினி வரவில்லை என்றாலும், அதான் அப்போவே சொன்னோம்ல மனசு மாற வாய்ப்புள்ளதுனு அப்படினு தங்கள் வசதிக்கு போட்டுகலாம்..

ருத்ராட்சம் விஷயத்திலும், பொதுவாகவே ஜோதிடத்திலும் கடைப்பிடிக்கபடும் உத்தியும் இதுவே தானோ??

எது எப்படியோ, ருத்ராட்ச வியாபாரிகள் இப்போதே நிமிர்ந்து விட்டார்கள் கல்லா கட்ட.. இந்த ருத்ராட்சத்திற்கு இந்த பலன், மதுரையில் 11 ம் தேதி, நெல்லையில் 14, சிதம்பரத்தில் 15, கடலூரின் 20 , பொள்ளாச்சியில் 22 என்று ராஜ் மற்றும் விஜய் தொலைகாட்சியில் வரிசை கட்டி வர ஆரம்ப்பித்துவிடுவார்கள் ருத்ராட்ச சோதிடர்கள்
நன்றி - குமுதம் ரிபோர்ட்டர்

ஜெயா, வைகோவுக்கு ஆப்படிக்கும் நாள் தூரத்தில் இல்லை

விடுதலையாகி இன்று வைகோ மதுரை வந்தபோது , சமீபத்தில் கைதான இயக்குனர்கள் அமீர், மற்றும் சீமான் வைகோவை சந்திதார்கள்.

பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ இது மரியாதை நிமித்த சந்திப்பு என்றும், இந்த இயக்குனர்கள் தமிழகத்தின் உரிமை போராளிகள் என்றும், இவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

இவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

வைகோ அண்ணாச்சி, ஜெயிலுக்கு போனா உடனே இழுத்து போர்த்தி தூங்கிடுவீங்களா? பேப்பர் எல்லாம் படிக்கவே மாட்டீங்களா?? அவங்கள கைது செய்ய சொல்லி யார் குரல் கொடுத்தாங்க தெரியுமா?

மதுரையில சொன்னத அப்படியே ரயிலேறி சென்னை வந்து போயஸ் தோட்டத்து பக்கமா பாத்து சொல்லுங்க அண்ணாச்சி.. அப்புறம் அன்பு சகோதரி உங்களுக்கு அடிக்குற ஆப்பு எவ்ளோ பெரிசுனு எல்லோரும் பார்க்கட்டும்..

அன்புச்சகோதரி பயங்கரவாதிகள், தீவரவாதிகள் நு சொல்லுவாங்கலாம்.. அருமை அண்ணன் வந்து தமிழர் நலன் காக்கும் போராளினு சொல்லுவாராம்.. போங்கடா டேய்... !

இவர்கள் சந்தித்துக்கொண்டால்

இன்று அலுவலகத்தில் சாப்பாடு நேரத்தில் டிபன் பாக்ஸ் தொறந்தவுடனே ஷாக்.. ஷாக் மட்டுமில்லே , கொஞ்சம் அதிர்ச்சி கலந்த அதிசயமும் கூட..

அட ஆமாங்க உண்மையாதான் சொல்றேன்.. என் டிபன் பாக்ஸ்ல மனக்க மனக்க தக்காளி சாதம்.. அவ்ளோ "காஸ்ட்லியான சாப்பாடு" பாத்தவுடனே யாருக்கு தான் அதிர்ச்சி, அதிசயம், சந்தோஷம் எல்லாம் வராது சொல்லுங்க...

பாருங்க , நம்ம நிலமை எப்படி ஆயிடுச்சுனு.. தக்காளி சாதத்துக்கு இவ்ளோ பில்டப் கொடுக்கற அளவுக்கு விலைவாசி எகிறிப்போச்சு...

கோயம்பேடை பார்க்குறதுக்கே குடுத்து வெச்சிருக்கனும்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியம் இல்லை..

சரி சரி. தக்காளி சாதம் சாப்பிடுகிட்டே, ரஜினி பத்தி 2 பதிவு போட்டு ஒப்பேத்தியாச்சு.. அடுத்த என்னத்த போடலாமுனு யோசிச்சப்ப வந்த யோசனை தான் இந்த பதிவு..





================================================================



டிஸ்கி - தலைவர்கள் படத்துக்கும், இந்த பதிவுக்கும் , காய்கறி கமெண்ட்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை இல்லை இல்லை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திப்பு - ரசிகர்கள் கேட்க மறந்த கேள்விகள்

8 மனிக்கு வரப்போகும் தலைவருக்காக கூட்டத்தை கட்டிப்போட, 6:00 மனியிலிருந்தே தலைவர் இதோ வருகிறார், வருகிறார், வந்து விட்டார் என்று மைக்கில் அலறுவதை கேட்டிருக்கிறோம்..அதே போல, சத்தியநாரயனா அவர்கள், இதோ ரஜினி அவர்கள் உங்களை சந்திக்கப்போகிறார் என்று இழுத்து , இழுத்து ஒரு வழியாக சந்திப்பு நேற்று முடிவடைந்தது..


ரஜினி , ரஜினி சந்திப்பு குறித்தும் தங்களின் ஊகங்கள், கற்பனை கலந்து உண்மை செய்திகளை போல லாவகமாக கொடுத்து கல்லா கட்டிய பத்திரிக்கைகள் இதோ இப்போது அடுத்த கட்டத்துக்கும் தயாரகிவிட்டது
வித்தியாசமான சந்திப்பு தான்.. ரசிகர்கள் கேள்விகளை ஒரு பேப்பரில் எழுதிக்கொடுக்க, அதை ஒருவர் படிக்க, ரஜினி தனக்கேயுரிய பானியில் பதில் அளிக்க, இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி வெகு சுவாரசியமாகவே இருந்த்து..

ரஜினியின் மேனரிசம், ஸ்டைல், ட்ரேட் மார்க் சிரிப்பு, முடி கோதுதல், சில கேள்விகளுக்கு பட்டென்று பதில், சிலவற்றிக்கு நீண்ட யோசனை.. ஒரு வரி பதில், ஒரு சொல் பதில், நீண்ட விளக்கம் என்று மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி ரஜினியும் , அவரின் ரசிகர்களும் எதிர்ப்பார்த்ததை விட சூப்பராகவே வந்திருந்தது..

30 வருடமாக நடிப்பு தொழிலில் இருக்கும் நடிகரிடம் நியாயமாக அவரின் சினிமா பற்றிய கேள்விகள் அதிகம் இருந்திருக்கவேண்டும்.. ஏன் ரசிகர்கள் அது பற்றி கேட்கவில்லை என்றே புரியவில்லை

எங்களுக்கு என்ன அங்கீகாரம் , மாற்றி மாற்றி கடவுள் .. கிருஷ்னகிரி நினைவில்லம் போன்ற உப்புசப்பில்லா கேள்விகள் சில இருந்தாலும், பல கேள்விகள் நல்ல கேள்விகளாகவே பட்டது, எனினும் கேட்கவேண்டிய முக்கியமான சில கேள்விகளை கேட்காமல் விட்டு விட்டார்களே எனத்தோண்றியது.. (ரசிகர்கள் இதை நிச்சயம் கேட்டிருக்கவே மாட்டர்கள் )
1. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களுடன் முத்து, சிவாஜி, சந்திரமுகி போன்ற படங்களை ஒப்பிட்டு பார்த்து , தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் உங்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று என்றைக்காவது நினைத்ததுன்டா தலைவா?

2. நீங்கள் எப்போதும் சொல்லுவது குடும்பத்தை பாருங்கள் என்று.ஆனால் உங்களின் பல வெறித்தனமான ரசிகர்கள் இன்றும் தங்கள் குடும்பத்தை விட உங்களுக்கே முன்னுரிமை கொடுத்து, தங்கள் பட ரிலிஸ் அன்று செய்கின்ற ஊதாரி (குடும்பம் மிக வறுமையான நிலையில் உள்ளபோதும்) நீங்கள் அறிவீர்களா?

3. ஏழை குழந்தைகள் ஒரு வேளை பாலுக்கு இல்லாமல் தவியாய் தவிக்கும் போது உங்களின் ரசிகர்களாகிய நாங்கள் உங்களின் கட் அவுட்டுக்கு லிட்டர் கணக்கில் பாலாபிஷேகம் ( இப்போது பீரும் சேர்ந்து) செய்து எங்களின் பக்தியை காண்பிப்பது பற்றிய உங்கள் கருத்து?

4. கருப்பு பணம் ஒழிப்பு பற்றி நீங்கள் நடித்த சிவாஜி அருமை. உங்களின் சம்பளம் என்ன என்பது உங்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அது அனைத்தும் வெள்ளையில் தான் வாங்குகிறீர்களா என்று உங்கள் பக்தர்களாகிய நாங்கள் தெரிந்துக்கொள்ளலாமா?

5. உங்களின் சொந்த பகையை தீர்த்துக்கொள்ள நீஙகள் எங்களை பயன்படுத்தியதாக செய்திகள் வந்ததே , அது உண்மையா? (ஜெயலலிதாவுடன் உரசலில் தி மு க - த மா க கூட்டணிக்கு அதரவு வாய்ஸ், பா ம க வுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகும் அதே போல் எதிரணிக்கு)

6. கடவுளாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்ற நிலையில் இருந்து தைரியலட்சுமியாக ட்ரிபிள் ப்ரோமஷன் கொடுத்தது பற்றி உங்கள் கருத்து

7. உங்களுகாக நாங்கள் அடிப்பட்டதை அடுத்து, சரியான நேரத்தில் பதிலடி தருவேன் என்று ஆவேச பேட்டி கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்தினீர்கள்.. இன்னும் அந்த சரியான நேரம் வந்ததா , இல்லையா??

8. ஐஸ்வர்யாவுடன் நீங்கள் நடித்தே விடவேன்டும் என துடித்ததாக செய்தி வந்தது, பின் ஒரு கட்டத்தில் இந்த பழம் புளிக்கும் என்று நினைத்து " ஐஸ்வர்யாவின் கனவுகள் விட்டாய் , சீ என்ற சொல்லில் சுட்டாய்." என்ற பாடலுக்கு வாயசைத்து, இப்போது இயந்திரனில் அவருடன் ஜோடி சேர்ந்தது வரை , எது உண்மை என தெரியாமல் குழம்பும் எங்களுக்கு வெளிப்படையான பதில்? (குசேலனின் சொன்னது போல இங்கேயும், அது கவிஞரின் வரிகள் நான் வெறும் வாய் அசைத்தேன் என்று சொல்வீர்களா தலைவா?)

9. இன்னும் எத்துனை வருடம் 20 வயது கதாநாயகியுடன் மரத்தை சுற்றி டூயட் பாடி , நகைச்சுவை நடிகருடன் இனைந்து இரட்டை அர்த்த வசனம் பேசி எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்த போகின்றீர்? திறமை இருந்தும் எந்த வித்தியாசமான வேடமேற்று நடிக்காததன் காரணம்?

10. சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் நீங்கள், இங்கேயே சம்பாதித்த நீங்கள், அனைத்து விஷயங்களுக்கும் வாய்ஸ் கொடுக்கும் நீங்கள்.. கருப்பு பணம் பற்றி பேசிய நீங்கள், உங்கள் படத்துக்கான முதல் 10 நாள் டிக்கெட் விலையென்ன , அது எந்த முறையில் விற்கப்படுகிறது என்று அறிவீர்களா? அதை வாங்குவதில் உங்களின் தினக்கூலி ஏழை ரசிகனும் ஒருவன் என தெரியுமா? இப்போதாவது நாங்கள உங்கள் கவனத்துக்கு அதை எடுத்துவந்தால், அதற்கு எதிராக வாய்ஸ் வருமா?

11. 1996 ல் "கோட்டை" விட்ட நாம், இப்போது முயன்றால் எத்துனை இடங்கள் பிடிக்கமுடியும், ஆட்சி அமைத்திட முடியுமா?
12. உங்களை வாழும் மகாத்மா என்று நாங்கள் பேனர் வைக்கிறோம்.. உங்கள் உண்ணாவிரதத்தின் போது உங்கள் மேடை எதிரே அப்படி ஒரு பேனர் பளிச்சென்று வைத்தோம்.. பார்த்திருப்பீர்கள்.. "வாழும் மகாத்மா" என்பதை "உளமாற" ஒப்புகொள்கின்றீர்களா?

இன்னும் கேள்விகள் உள்ளது தலைவா.. இப்போதைக்கு இதற்கு பதில் சொல்லுங்கள்.. மற்ற கேள்விகளை இன்னும் 3 வருடம் கழித்து (அடுத்த படம் ரிலீஸின் போது) நடக்கபோகும் உங்களின் ரசிகர் சந்திப்பில் கேட்கிறோம்..

ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு...

ராகவேந்திரா மன்டபத்தில் ரஜினி தன் ரசிகர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்..

ரசிகர்கள் - எதிர்கால திட்டம்?
ரஜினி - ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டும். என் எதிர்கால திட்டம் எந்திரன் படம்.

ரசிகன் - தொடர்ந்து சந்திப்பீர்களா?
ரஜினி - ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, ராகவேந்திரா மன்டபத்தில் புது தொலைப்பேசி எண்கள் வைக்கப்படும், நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.. முக்கிய விஷயங்களில் நானே பேசுவேன்.

ரசிகன் - எந்திரன்?
ரஜினி - இந்தியாவிலேயே சிறந்த படமாக வரும்.

ரசிகன் - ரசிகர்கள் அந்தஸ்து உயர்த்தப்படுமா??
ரஜினி - அந்தஸ்தை நாம் தேடி போக கூடாது, அதுவாக நம்மை தேடி வரவேண்டும்

ரசிகன் - மக்களுக்கு மன்றங்கள் மூலம் நலதிட்ட உதவிகள்?
ரஜினி - பணம், ஜனம் ஒன்று சேர்ந்தால் அரசியல் வந்துவிடும்.. எனக்கு தோண்றும் நல்ல காரியங்களை நான் தனிப்பட்ட முறையில் செய்வேன். உங்களுக்கு தோண்றும் நல்ல காரியத்தை நீங்கள் செய்யுங்கள்

ரசிகன் - நீங்கள் தொண்டு செய்வது நிறுத்தப்பட்டது??
ரஜினி - இலவச திருமணங்களை 30 மாவடத்திலும் நடத்தினேன். தொடர்ந்து தேவை இல்லை என்பதால் நிறுத்தினேன். தேவை என்றால் மீண்டும் செய்வேன்.

ரசிகன் - குசேலன்? 25 கோடி சம்பளம்?

ரஜினி - அதில் எனக்கு கவுரவ தோற்றம் என்று பூஜையிலேயே சொன்னேன். 25 கோடி வாங்கவில்லை

ரசிகன் - நடிப்பு தொடருமா?
ரஜினி - புகழுக்காக, பணத்துக்காக இல்லாது, நல்ல கேரக்டர் இருந்தால் நடிப்பேன்

ரசிகன் - சத்யநாரயனா செய்ல்பாடு தீவிரமாக இல்லை..
ரஜினி - அவருக்கு உடல் நலமில்லை.

ரசிகன் - ராகவேந்திரா, அருனாச்சலேச்வர், பாபாஜி என மாறுவது?
ரஜினி - மதம் மாறுதல் தான் தப்பு, அது கூட அவரவர் விருப்பம்... நான் செய்வது ஆண்மீக விருத்திக்கு..

ரசிகன் - உங்களை குழப்பவாதி என்று பத்திரிக்கைகள்..
ரஜினி - உண்மையாக இருக்கலாம், சில நேரங்களில் நான் செய்வது அப்படித்தான் உள்ள்து.. நான் நினைத்ததை பேசுகிறேன். அவரவர் அவர் கோணத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்.. எது சரி என படுகிறதோ அதை தான் பேசுவேன், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

ரசிகன் - ஒக்கனேக்கல் பிரச்சனை?
ரஜினி - மன்னிப்பு கேட்கவில்லை.. திரைப்படத்துக்கு எதிராக இருப்பவரை உதைக்கவேண்டும் என்றேன்.. அது கர்நாடக மக்களுக்கு எதிராக என எடுத்துக்கொண்டார்கள்.. நான் தெளிவாக பேசாததால் இருக்கலாம். வருத்தம் மட்டும் தெரிவித்தேன்.. மன்னிப்பு இல்லை

ரசிகன் - 30 ஆண்டுகளாக ஆசியாவில் பெரிய சக்தியாக உள்ளீர்கள்
ரஜினி - என் ரசிகர்களாகிய உங்களால்

ரசிகன் - பிறந்தநாள் சந்திப்பு?
ரஜினி - சந்திக்க மாட்டேன். ஏன் பிறந்தேன் என்று யோசிக்கவே அந்த நாளை பயன்படுத்துகிறேன்.. தனிமையில் யோசிக்க விரும்புகிறேன்.. குடும்பதாரும் தொந்தரவு செய்வதில்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள்.. தாய் தந்தையை பாருங்கள்.. கடமையை செய்யுங்கள், பலனை எதிர்பாருங்கள்..

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே அரசியலில் வருவது நடக்கலாம்.தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் என்ன நினைக்கிறார் என்று

ரஜினி இந்த முடிவில் இருக்கிறார், அந்த முடிவில் இருக்கிறார் என்று ஏற்கனவே அனைத்து புலனாய்வு பத்திரிக்கைகளும் ஏதேதோ எழுதியது.. அப்படி எதுவும் நடக்கவில்லை..

இப்போது இந்த பதில்களுக்கு மூக்கு, கண் வைத்து, எப்படியெல்லாம் எழுத போகிறார்கள் தெரியல.. கொஞ்ச நாளைக்கு பத்திரிக்கைகள் காட்டில் மழை ec