Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

சிரிப்பு வருது - நக்கீரன், விகடன், குமுதம் கவனிக்க..

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் 61வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுதும் அதிமுகவினரால் கோலாகலமாக மொண்டாடப்படுகிறது.

ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர் , போஸ்டர், அம்மா-எம் ஜி ஆர் பாடல்கள், அண்ணதானம் என்று தமிழகம் திருவிழா கோலத்தில் களைகட்டியுள்ளது. அம்மாவிற்கு நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

ஒரு கட்சி தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், இதுவெல்லாம் சகஜம்தானே?? அதிலும் அ தி மு க தலைவியின் பிறந்தநாள் விழாவில் இதெல்லாம் இல்லாது இருந்தால் தானே அதிசயம்.. இதில் என்ன சிரிப்பு என்ற உங்கள் கேள்வி புரிகிறது.

உண்மையில் கொண்டாடங்களை பார்த்து சிரிப்பு வரவில்லை. குறிப்பாக ஒரு ப்ளெக்ஸ் பேனரை பார்த்து தான் சிரிப்போ சிரிப்பு.

கின்டியில் ஜி எஸ் டி சாலையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை கழகத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரின் வாசகம் தான் சிரிப்புக்கு காரணம்.

ஒரு பக்கம் எம் ஜி யார், நடுவில் மிகப்பெரிதாக ஜெயலலிதாவின் ஐந்து முகங்கள் கொண்ட பிரம்மாண்ட பேனரின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இலங்கை தமிழர் நலனுக்காக பாடுபடும் ஒரே தலைவி எங்கள் புரட்சிதலைவி அம்மாவின் 61 வது பிறந்தநாள் ... என்று போகிறது அந்த வாழ்த்து வாசகம்..

இலங்கை தமிழருக்கு ஆதரவாக அம்மா எப்படியெல்லாம் போராடுகிறார் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நன்றாக தெரியும்.

"ஈழத்தமிழர் என்று யாரும் இல்லை", "போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தான் செய்யும்", "இலங்கை ராணுவம் அப்பாவித்தமிழர்களை கொல்வது இல்லை" என்பது போன்ற அம்மாவின் அறிக்கைகள் மிகப்பிரபலம்.

ஆனாலும் இப்படி ஒரு பேனரை வைத்த அந்த தொண்டருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். ஒரு வேளை அவர் அம்மாவை நக்கலடிக்கிறாரோ?

அ தி மு கவினரே இதை படித்தால் சிரிக்கத்தான் செய்வார்கள். ஏன், அம்மாவே இதை படித்தால் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்..

ஜூ வி, குமுதம், நக்கீரன் நிருபர்கள் யாராவது இந்த பேனரை கவர் செய்து தங்கள் அடுத்த இதழில் ஒரு ஸ்டோரி எழுதலாம், அது கவர் ஸ்டோரியாகவும் இருக்கலாம்.. காமெடி ஸ்டோரியாகவும் இருக்கலாம்..

ஜெயலலிதாவிற்கு அருகதை உண்டா?

இலங்கை பிரச்சனையில் சாகும் வரை உண்ணாவிரதம் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அமர்ந்து பின்னர் 4 வது நாளில் தன் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார்.

உடனடியாக ஜெயா அம்மையார் வழக்கம் போல தன் அறிக்கை பல்லவியை ஆரம்பித்துவிட்டார்...

இது கருணாநிதியும் , திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம், சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொன்ன திருமாவளவன் ஏன் 4 வது நாளோடு முடித்துவிட்டார்? இலங்கை பிரச்சனை முடிந்துவிட்டதா என்று வழக்கம் போல் காழ்ப்புணர்சி அறிக்கையை கொடுத்துள்ளார்.

ஜெயா டீ வி வழக்கம் போல இதை தினம் 10 முறை ஒளி/ஒலிபரப்பு செய்து சந்தோஷப்பட்டார்கள்.

அதே போல, திருமாவின் உண்ணாவிரதத்தின் தொடர்புடைய பேருந்து எரிப்புகள், கல்வீச்சு குறித்த தன் சந்தேகங்களை எழுப்பினார்.. இந்த செலவுகளை கருணாநிதி எற்றுக்கொள்ளப்போகிறாரா அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து வசூலிப்பாரா என்ற தன் பொது நல நோக்கு கருத்தை தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பா, கருணாநிதியுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப நடத்திய நாடகமா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். திருமாவையோ கருணாநிதியையோ நியாயப்படுத்தவில்லை

ஆனால், இந்த கேள்வி எல்லாம் கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா??

அவர் வரலாறு காணாத ஊழல் புரிந்துள்ளார், அவர் ஆட்சி சரியில்லை என்ற அளவுகோல் வைத்து இந்த கேள்வி எழப்பவில்லை..

ஆனால் ஜெயலலிதா கேள்வியெழுப்பிய இரண்டு விஷயங்களான உண்ணாவிரதம் கண்துடைப்பா?, நாடகமா?.. மற்றும் இந்த உண்ணாவிரதம் காரணமாக பொதுச்சொத்துக்கு நேர்ந்த பாதிப்புக்கு உண்டான இழப்பு எப்படி சரிகட்டப்படும்..

இந்த இரண்டு விஷயங்களிலும் ஜெயலலிதாவும் , அவரின் கட்சியும் எவ்வாறு நடந்துக்கொண்டது என்பதற்கு நேரடி எடுத்துக்காட்டுக்கள் உள்ளது.

1992 ல் ஜெயலலிதாவும் சாகும் வரை உண்ணாவிரதம் அமர்ந்தார். காவிரி தண்ணீருக்காக. தண்ணீர் வந்ததா? அவர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? வி சி சுக்லா வந்தார், தேவையானவற்றை செய்ய ஆவன செய்கிறோம் என்றவுடன் தன் "கேரவன்" புகழ் உண்ணாவிரத்தை 4 வது நாளில் முடித்துக்கொண்டார்.. அந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக இருந்து அவரின் ஆட்சி லட்சனம் சிரிப்பாய் சிரித்தது, எங்கும் ஊழல், லஞ்சம், ஆனவம், ஆடம்பரம் என்று கொடிகட்டி பறந்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்க துவங்கிய நேரம்.. இதனை திசைத்திருப்ப ஒரு 4 நாட்கள் " சாகும் வரை " கேரவன் உண்ணாவிரதத்தை நடத்தி முடித்தார். இப்படியான உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவிற்கு இப்போது திருமாவளவனை பார்த்து கேட்க அருகதை உள்ளதா??


இவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் நடந்து என்ன? தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அ தி மு க வினர் பேயாட்டம் ஆடித்தீர்த்தனர். பல இடங்களில் பேருந்துக்கள் கல்வீச்சுக்கு ஆளானது, தீ வைக்கப்பட்டது. ஒரு தனியார் பேருந்து அ தி மு க வினரால் கொளுத்தப்பட்டு பின் நிகழ்ந்த அனைத்தும் இன்னும் மறந்துவிடவில்லை.

இந்த போராட்டங்களினால் ஏற்பட்ட இழப்புக்கு ஜெயலலிதா தன் சொந்த காசு கொடுத்து (1 ரூ சம்பளத்தில் சேர்த்து வைத்த) சரிகட்டினாரா? இல்லை அ தி மு க விடமிருந்து வசூல் செய்தாரா?? இவருக்கு பதில் சசிகலா இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்று பணம் செலுத்தினாரா??

அப்போது எதுவும் செய்யாமல் இப்போது கேள்வி கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா?? யார் வேண்டுமானால் கேள்வி கேட்கலாம் , ஆனால் ஜெயலலிதாவிற்கு கேள்வி கேட்கும் அருகதை கொஞ்சம் கூட கிடையாது.

பொத்திக்கொண்டு அடுத்து வரும் தேர்தல்களில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை பற்றி சிந்தித்தால் நலம்.

ராஜபக்சேவின் ஊதுகுழல் ஜெயலலிதா - தனிமைப்படுத்தப்படுகிறாரா ஜெயலலிதா???

இலங்கை தமிழர் பிரச்சனையில் , அ தி மு க பொது செயலாளர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த பழ நெடுமாறன் , ஜெயலலிதாவை ராஜபக்ஷேவின் ஊதுகுழல் என்று சாடியுள்ளார்.

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராகவும், அங்கே அமைதி ஏற்பட வேண்டும் என்று தமிழக தலைவர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு முடிவுகள் எடுக்கும் போது, தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாகவும், அரசியல் லாபத்துக்காகவும் , முதல்வரை மட்டும் ஜெயா தாக்கி வருவது, அவர் திசை திருப்பும் நோக்கில் செய்யப்படுவதாகவே தெரிகிறது.

அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்ட கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகளை திசை திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்து குற்றம் சாட்டும் ஜெயலலிதாவின் செயல் கண்டனத்துக்குறியது.

இலங்கை உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டு, ஆயுதம் தந்தும், உளவுத்தகவல் தந்தும் உதவிடும் இந்தியாவிற்கு , இந்த (போர் நிறுத்தம் ) பிரச்சினையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று ஜெயா சொல்வது வேடிக்கையாக உள்ளது. அவரின் அறியாமையை காட்டுகிறது.

ஈழத்துக்காண தீர்வை புலிகளால் தரமுடியும், அவர்களின் பலத்தை ஜெயா அறியவேண்டும். உலக நாடுகள் பலவும், சிங்கள இனப்படுகொலையை கண்டிக்கும் வேளையில், ஜெயா மட்டும் திசை திருப்பும் நோக்கில் பேசுவதை பார்த்தால் அவர் ராஜபக்சேவின் ஊதுகுழல் என தோண்றுகிறது.

இரு முறை முதல்வராக இருந்தவருக்கு , தமிழர் பிரச்சனை குறித்து எதுவும் தெரியாமல் இருப்பது, தமிழர்களை கொல்வோரின் கைப்பாவையாக இருப்பது விசித்திரமாக உள்ளது. அவரை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.

இவ்வாறு பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனையில் முதல்வர் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு துனை நிற்போம் என்று ராமதாஸ், விஜய டி ராஜேந்தர், சரத்குமார். கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஏனைய அமைப்புகளளும் கூறி வரும் நிலையில், மூன்றே பேர் மட்டும் அரசியல் காழ்ப்பு காரணமாக தனித்து நிற்கின்றனர்..

ஜெயா, வைக்கோ மற்றும் விஜயகாந்த் - இவர்கள் மட்டும் தங்களின் அர்சியல் லாபத்துக்காக தவறான முடிவுகள் எடுப்பதால் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் ..
ww