முயன்று பாருங்களேன் - வரலாற்று புகழ் ஓவியம் சார்ந்த போட்டி.

டியர் வலைப்பதிவு மக்கள்ஸ்,

இப்போது வலைப்பதிவர் வட்டத்தில் போட்டிகள் அதிகமாக நடத்தப்படுகிறது. நல்ல விஷயம் இது. புகைப்பட போட்டி, புதிர்கள், மகளீர் சார்ந்த கேள்வி பதில் போட்டிக்கு நடுவில் இதோ ஒரு வரலாற்று புகழ் பெற்ற ஓவியம் சார்ந்த போட்டி .

கீழே சில வரலாற்று புகழ் பெற்ற ஓவியங்கள் உள்ளது, ஓவியத்தின் தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் செய்யவேண்டியது, அந்த புகழ் பெற்ற ஓவியத்தை வரைந்த ஓவியர் யார் என சொல்லவேண்டும். உங்கள் வசதிக்காக 4 விடைகள் இருக்கும், அதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.

அப்புறம் என்ன உங்கள் மூளையை ஒரு சுன்டு சுன்டி விடையை சொல்லுங்கள்.. கூகுள் ஆண்டவர் துனையிருப்பார் :)


1. KISS (Jean-Honoré Fragonard / Andy Warhol / Georges Seurat / Gustav Klimt)

















2. 'The Entombment of Christ' (Vincent van Gogh / Henri de Toulouse / Caravaggio / Pierre-Auguste Renoir)






















3. MONALISA (Leonardo da Vinci / Piero della Francesca / Albrecht Dürer / Edgar Degas )





















4.LAMENTATION (Giotto di Bondone/ Caravaggio / Auguste Rodin / Pablo Picasso )

















5. "THE LAST SUPPER" (Henri Rousseau / Leonardo da Vinci / Édouard Manet / Peter Paul Rubens )










6. "THINKER" (Leonardo da Vinci / Mary Cassatt / Auguste Rodin / Diego Velazquez )



















7. "Still Life With Chair Caning" (Joan Miró / Michelangelo / Giorgio da Castelfranco / Pablo Picasso )

மாநிலங்களவை தேர்தல் - சபாஷ் வைகோ, சறுக்கல் ஜெ.

பல வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக நல்ல முடிவை எடுத்துள்ளார் வைகோ. முதுகெலும்பு வலையாமல் ஒரு சுயமான முடிவு.

தோல்விக்குத்தான் அதிக வாய்ப்புள்ள 7 வது மாநிலங்களவை சீட்டை தாராளமாக விட்டு தருவது போல் விட்டுத்தந்த அம்மாவின் முகத்திலடித்தார்போல் போட்டியிடப்போவது இல்லை என்ற அறிவிப்பு கொடுத்த வைகோ வை பாராட்டலாம்.

அதிமுக போட்டியிட்டிருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் மதிமுக போட்டி என்று வந்திருந்தால், ஆளும் தி மு க எந்த விலை கொடுத்தாவது மதிமுகவின் தோல்வியை உறுதி செய்ய முயன்று அதில் நிச்சயம் வெற்றியும் பெற்றிருக்கும்.

அது மட்டுமின்றி, போட்டி என்பதை ம தி மு கவினர் பலரே ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். அதிலும் போட்டியிட்டு தோல்வி என்பது மிக மோசமான நிலையாகவே இருந்திருக்கும். மதிமுகவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானம் மரியாதையும் காற்றில் பறந்திருக்கும்.

ஆக, இந்த ஒரு விஷயத்திலாவது, வைகோ கொஞ்சம் சுயமாக யோசித்து முடிவெடுத்துள்ளார்.

இந்த மாநிலங்களவை தேர்தல் மூலம் அம்மாவிற்கு 2 சறுக்கல்கள்.. ஒன்று மதிமுகவுடன் சலசலப்பு.. இரண்டாவது வக்கில் ஜோதி.

இதுவரை 'ஜெ'வின் பல வழக்குகளில் ஆஜராகி வந்த ஜோதி தனக்கு சீட் இல்லை என்றதும் அ தி மு க வில் இருந்து விலகியது மட்டுமின்றி, தான் ஆஜராகி வந்த ஜெ , மற்றும் அதிமுகவினரின் அனைத்து வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார். ஜெ க்கு மட்டும் தான் ஆப்படிக்க தெரியுமா என்ன? ஜோ விற்கும் தெரியும் போல. ஜெ வின் பிரதான வக்கீல் என்ற முறையில் அவருக்கு ஜெ பற்றிய பல திரைமறைவு விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.

ஜோதி எந்த மாதிரி முடிவெடுக்க போகிறார்? ஆளும் கட்சி ஜோதியை எப்படி பயன்படுத்திக்கொள்ளும் என்று பொருத்திருங்து பார்க்கவேண்டும்.. பல அதிசய காட்சிகள் அரங்கேறும் வாய்ப்புள்ளது

யார் யாரையோ எப்படி எப்படியோ சமாளித்த ஜெயாவிற்கு ஜோதி பெரிய விஷயமில்லை என்றாலும், நிச்சயமாக ஜெவிற்கு இது சறுக்கலே..

சத்தியமூர்த்தி பவனில் வெட்டுக்குத்து , வேட்டி சேலை கிழிப்பு எதுவுமில்லாமல் , ஜெயந்தியும் , வாசனும் தெரிவாகி இருப்பதும் ஒரு ஆறுதல்.. வாழ்க காங்கிரஸ் ஜனநாயகம் :)

அதல்லாம் விடுங்க.. இப்படி தெரிவாகி போகும் நம்ம மாநிலங்களவை எம் பிக்கள் , அங்கே போய் அப்படி என்னத்த கிழிக்கிறாங்கனுத்தான் ஒன்னும் புரியல.. யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க..

அ தி மு க இனி தேறவே தேறாது.

அதிமுக இனி தேறவே தேறாது என்று சேலம் மாவட்ட அ தி மு க முன்னாள் செயலாளர் / முன்னாள் எம் எல் ஏ வெங்கடாசலம் குமுதத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அ தி மு க வில் இருக்கும் போது இதை சொல்லவில்லை, நேற்று தே மு தி கவில் சேர்ந்த பிறகு இப்படி ஒரு பேட்டி.

அவர் அ தி மு கவை விட்டு போனது, தே மு தி கவில் சேர்ந்தது பற்றி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அரசியல்வாதி எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று பார்கின்ற போதுதான் அடப்பாவிங்களா என்ற சொல்லத்தோண்றுகிறது.

அவர் பேட்டியில் சொல்லியிருக்கும் சில விஷயங்கள்

இது உடனடி முடிவில்லையாம் , 6 மாத காலமாக யோசித்து எடுத்த முடிவாம்.

அதே பேட்டியில் அவர் சொல்லியிருப்பது - இரண்டு முறை ஆட்சியிலிருந்தும் ஜெயலலிதா நல்ல விஷயங்கள் எதுவும் செய்யவில்லையாம்.. (ஜெ உருப்படியாக ஒன்றும் அதிகமாக செய்யவில்லை என்பது உண்மை என்ற போதிலும்)

அதாவது , 1991 - 2006 வரையான காலகட்டம் பற்றி சொல்கிறார்... ஆக, 15 வருடங்கள் கழித்து, இப்போது தான் இவருக்கு தெரிந்திருக்கிறது.. அல்லது இந்த 6 மாதமாக மட்டுமே இவர் சுயமாக சிந்தித்துள்ளார். 14.5 வருடங்கள் சிந்திக்கும் திறனற்று வெறுமனே வாழ்ந்திருக்கிறார்.

ஒரு கட்சியை விட்டு போகும் எவருமே இதனை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பிரிகின்ற நேரத்தில் அப்போது நடந்த பிரச்சனை, தவறுகள் என எதையும் காரணம் சொல்லாமல், ஒட்டு மொத்தமாக 15 , 20 வருடங்களாக சேர்த்து குறை சொல்லுவது என்பது இவர்கள் இயல்பாகிவிட்டது

ஆக, ஊழல் , கொள்ளை போன்றவற்றிக்கு இவர்களுக்கு முடிவெடுத்து செயல்பட 2 நாள் போதும், மற்ற விசயங்களுக்கு (மக்களுக்கு நல்லது செய்வது உட்பட) எல்லாம் இவர்களுக்கு 10 - 15 வருடங்கள் ஆகும்.
நல்ல அரசியல்வாதிங்கடா நீங்க..

பிப்ரவரி 24 - சேலம் பக்கம் சென்றிருந்தால் இவர் எப்படியெல்லம் கட் அவுட் வைத்து ஜெ வை புகழ்ந்திருப்பார் என தெரிந்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இப்போது கேப்டனிடம் போய் சேர்ந்திருக்கிறார். "விஜயகாந்த் ஒன்றுமே செய்யவில்லை ஆகவே என் தாய்க்கட்சியான தி மு க வில் இனைந்து தலைவர் கலைஞர் வழி நடக்கப்போகிறேன்" என்று சொல்லும் நாள் வரும் என நம்புவோம்..

வந்தவரை அன்போடு அரவனைத்துக்கொண்டுள்ளார் கேப்டன், அவர் கட்சியில் இப்படி வந்தவர்கள் தான் 75%.. அன்போடு அரவனைத்துக்கொண்டுள்ள கேப்டன், விரைவில் பிரியா விடை கொடுக்கவேண்டி வரும் என்பதையும் அறிந்திருப்பாரா???

நல்ல அரசியல்வாதிங்கடா நீங்க... !

துளசி பற்றி சில விஷயங்கள்


பெரும்பாலான மக்களால், துளசி, வில்வம், அரச மரம், அருகம், வேப்பமரம் ஆகியவை தெய்வத்தன்மை வாய்ந்த தாவரங்களாக மதிக்கப்படுகிறது. இந்த தாவரங்கள் எல்லாம் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது, பாதுகாக்கப்படவேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

தெய்வீகத்தன்மை என்று வரும் போது, கடவுள் நம்பிக்கையுள்ளோர் இதனை முற்றிலும் ஏற்றுக்கொண்டும், கடவுள் நம்பிக்கை இல்லாதோர் தெய்வீகத்தன்மை என்பதனை மட்டும் விடுத்து, இந்த தாவரங்களின் மருத்துவ குணங்களுக்காக இவை பாதுகாக்கவேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனர்.

இரண்டாம் வகையை சார்ந்த எனக்கு துளசியுடன் ஏற்பட்ட ஒரு நிகழ்வை பகிர்ந்துக்கொள்ளவே இந்த பதிவு.

சமீபத்தில் (டோண்டு சார் சமீபத்தில் அல்ல) 2 மாதங்கள் முன்பு, ஒரு வீட்டை விலைக்கு வாங்கி , சில ஆல்டரேஷன் செய்ய ஆரம்பித்தோம். கார் பார்க்கிங் வரவேண்டிய இடத்தில் ஒரு துளசி மாடம் இருந்ததை அகற்ற வேண்டிய சூழல் வந்த போது, அம்மா சற்று வருத்தப்பட்டு இதை என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியபோது, எடுத்து பின்புறத்தில் வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்கலாம் என்று என் கருத்தை சொன்னேன்.

ஆனால் அம்மா, பெரியம்மா , சித்தி என அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் இல்ல இல்ல சாமி செடி அப்படியெல்லாம் செய்யக்கூடாது, தினமும் பூஜை பன்னனும், தீட்டு படாம பார்த்துக்கனும், பூஜை பண்ணலைனா , இல்ல குளிக்காம் கிட்ட போய் தீட்டு பட்டா ஆகாது , செடி வாடிப்போயிடும் அப்புறம் குடும்பத்துக்கு நல்லதல்ல என்று தங்கள் கருத்தை சொன்னபோது எனக்கு சற்று வியப்பு

துளசி செடியை பாதுகாக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லையெனினும், குளிக்காமல் அருகே சென்றாலோ , தீட்டு பட்டாலோ, பூஜை செய்யாவிட்டாலோ செடி பட்டுவிடும் என்ற அவர்கள் கருத்து வியப்பளித்தது..

எனது கருத்தினை சொன்ன போது, அவர்கள் அனைவரும் இது கடவுள் சம்பந்தப்பட்டது, அதிலும் குறிப்பாக பிராமணர்கள் தான் துளசி மாடத்தை பாதுகாக்க சரியானவர்கள் என சொன்னது மேலும் வியப்பளித்தது.

சரியென்று, எங்களுக்கு அந்த வீட்டை விற்ற பிராமனரை தொடர்புக்கொண்டு அவரை வந்து அந்த மாடத்தை எடுத்து செல்ல சொல்லிவிட்டோம்.

ஆனால் மற்ற வேலை காரணமாக 2 மாதமாகியும் அவர் இன்னும் வரவில்லை அந்த துளசி மாடமும் ஒர் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கட்டுமான வேலை நடப்பதால், அந்த மாடத்தை சுற்றி சுற்றித்தான் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள், கட்டுமான வேலை நடைப்பெறும் இடத்தில் அந்த மாடத்தையோ செடியையோ தொடாமல் இருப்பது சாத்தியமில்லை. ஆக சில நேரங்களில் மாடத்தை தொடுவதும் இருக்கும்.

கட்டுமான வேலைக்கு வருபவர்கள் குளித்துவிட்டு தான் வருவார்களா தெரியவில்லை. பாவம், கச கச வெய்யிலில் வேலை செய்பவர்கள், மாலையில் ஒரு வழியாக குளிக்கலாம் என்று வரலாம். அதில் தவறில்லை

மருத்துவ குணம் கொண்ட செடி பட்டு விட கூடதென்று நானும் தினமும் காலையில் தண்ணிர் ஊற்றுகிறேன். சனி, ஞாயிறுகளில் லேட்டாக குளிப்பதால், அந்த இரண்டு நாட்களில் குளிக்காமல் தான் தண்ணீர் விடுகிறேன்.

வெள்ளிக்கிழமைகளில் அம்மா அந்த மாடத்திற்கு விளக்கேற்றுகிறார் என்பதையும் இங்கே சொல்லவேன்டும்.

இன்று வரையிலும், சுமார் 2 மாதம் ஆகிறது, அந்த செடி நன்றாகத்தான் உள்ளது.

அனைவரும் சொன்னபடி, தினமும் பூஜை செய்யாவிட்டால் பட்டுவிடும், தீட்டு பட்டால் செடி பட்டுவிடும், குளிக்காமல் தொட்டால் செடி பட்டுவிடும் என்பதெல்லாம் என்னவாயிற்று என தெரியவில்லை.

குறிப்பாக, பிராமணர் வீட்டில் தான் நன்றாக வரும் என்று சொன்னது??

பிராமணர் அல்லாத எங்கள் வீட்டிலும் செடி நன்றாகத்தான் வளருகிறது

இப்படிப்பட்ட கருத்துக்கள் எப்படி விதைக்கப்பட்டிருக்கும் என புரியவில்லை. அரிய மருத்துவ வகை செடிகளை பாதுகாக்கும் நல்ல நோக்கத்தில் கடவுள்நம்பிக்கையோடு தொடர்பு படுத்திவிட்டிருக்கலாம் . பின்னாளில் மற்ற நம்பிக்கைகளும் சேர்ந்து மருவியிருக்கலாம்..

எது எப்படியோ, என் வீட்டிலிருப்போர் கருத்துக்கு பிறகு என் மனதில் ஏற்பட்ட ஒரு சலசலப்புக்கு இந்த 2 மாதத்தில் கண்கூடாக விடை கிடைத்தது.

இங்கே ஒன்று - எதை எதையோ காரனம் சொல்லி செடி பட்டுவிடும் என்று சொன்னவர்கள் ஒரு முறை கூட நிதர்சனமான உண்மையான தண்ணிர் ஊற்றாவிடில் செடி பட்டுவிடும் என சொல்லவேயில்லை.. சில நேரங்களில், நம்மில் ஊறிப்போன சில நம்பிக்கைகள் நிதர்சனமான உண்மைகளை கூட மறைத்துவிடுமோ? .. யோசிக்கவேண்டிய விஷயம்..

டிஸ்கி: இந்த பதிவில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை குறை சொல்லியோ, பிராமண சமுகத்தை குறை சொல்லியோ எதுவும் இல்லை , எதையும் திசை திருப்பி கும்மியடித்து குளிர்காய்பவர்கள் தயவு செய்து ஒதுங்கியிருக்கவும். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களை மட்டும் பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி


வீ எம்