வாழ்த்துக்கள் + எதிர்பார்ப்பு + வேண்டுகோள்

என் அருமை வலைத்தள நன்பர்களே, அனைத்து தமிழ தள திரட்டி நிர்வாகிகளே,

உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்

என் உள்ளம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2009 ல் சன்டை , சச்சரவு, போலிகள் தொல்லை, தனிமனித தாக்குதல் இல்லாத பதிவுகள் வரும் என்ற நம்பிகையில் 2008 க்கு விடை கொடுத்து, 2009 ம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்போம்..

ஒரே ஒரு வேண்டுகோள்.. புத்தாண்டை கொண்டாடி வரவேற்பதில் தவறில்லை.. ஆனால் தயவு செய்து கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதை மட்டும் தவிர்க்கவும்.. உங்களின் நன்பர்களுக்கும் இதை சொல்லுங்கள்

அன்புடன் வீ எம்.

தினவெடுத்த தினமலருக்கு முதல்வர் கொடுத்த செருப்படி

திமிர் பிடித்த தினமலர் அவ்வப்போது தமிழர் எதிர் கருத்தும், சின்டு முடியும் வேலையையும் செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.

நேற்று கூட ஒரு செய்தியில், கீ . வீரமனி அவர்கள் தன் தாயின் முதலெழுத்தை தன் இனிஷியலாக போட்டுக்கொண்டதை கொச்சைப்படுத்தும் வகையிலும் அதே போல சின்டுமுடியும் விதமாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு பல பதிவர்களிடம் செருப்படி பட்டது.. ஒரு சில பதிவர்கள் மட்டும் பரிந்துவந்தார்கள்..

இதோ பட்ட செருப்படி போதாது போலும்.. இந்த கேடு கெட்ட பத்திரிக்கை எப்போது திருந்துமோ தெரியவில்லை.

மீன்டும் இன்று தன் விஷமப்பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது.

தி மு க வின் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெறுகிற செய்தியை போட்டிருக்கும் இந்த கேடுகெட்ட பத்திரிக்கை நடுவில் வழக்கம்போல தன் விசமத்தனத்தை காட்டியுள்ளது..

எப்படி நேற்று, கீ வீரமனி அவர்களின் இனிஷியில் பற்றிய செய்தியை கலைஞரின் பேட்டி செய்தியோடு இனைத்து , அது ஏதோ கலைஞர் சொன்னது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி சின்டு முடியும் வேலையை செய்ததோ, அதே போல்

தி மு க பொதுகுழு பற்றிய செய்தியை வெளியிட்டு, அதே செய்தியின் தொடர்ச்சியாக , இன்று நல்ல நாள் என்ற பத்தி தலைப்பிட்டு கீழ்க்கண்ட செய்தியை தந்துள்ளது.. (சுருக்கம் இங்கே)

இன்று நல்ல நாள் - முழுதும் மூல நட்சத்திரம், அனுமன் ஜெயந்தி , 9.30 வரை மகர லக்னம், எந்த காரியம் தொடங்கினாலும் வெற்றி, இன்றைய நாளின் சிறப்பு படி குரு பார்வையினால் குடும்பத்தலைவர் எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் நல்ல முடிவு எடுப்பார், பொதுக்குழுவில் எதிர்ப்பு வராது, வந்தாலும் இடம் தெரியாது போய்விடும்

என்ற ரீதியில் இந்த கேடுகெட்ட பத்திரிக்கை, ஒரு விஷயத்தை இங்கே சேர்த்து விஷமத்தனம் செய்துள்ளது. தி மு க ஏதோ இந்த நாளை ஜோதிட நம்பிக்கையில் குறித்துள்ளதாக தோண்றும் விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளது இந்த தினமலர்.

தி மு க பொதுக்குழு செய்தியில் இந்த இனைப்பு செய்தி தேவையா?அதே போல மற்ற செய்திகளில் எல்லாம் பார்த்தேன். இப்படி இனைப்பு இருக்கிறதா என்று.. எங்கும் இல்லை

பொதுக்குழு கூடிய சில நிமடங்களில் ஸ்டாலின் கலைஞரிடம் தினமலர் பத்திரிகையை கொடுத்து ஏதோ சொல்வதை நேரலையில் காண முடிந்தது. என்ன இது பொதுக்குழு நடக்கும் வேளையில் கலைஞரின் கையில் தினமலர் என்ற யோசித்தேன்..

என்ன விஷயம் என்பது கலைஞர் ஏற்புரையின் போது தான் புரிந்தது..
கலைஞரின் ஏற்புரையிலிருந்து..

இன்றைய தினமலர் பத்திரிக்கை ஒரு செய்திவெளியிட்டுள்ளது, நம் கழக பொதுக்குழு கூட்டம நடக்கும் செய்தியை வெளியிட்டு, அதோடு ஒட்டி இந்த நாளின் சிறப்புகள் என்று சிலவற்றை குறிப்பிட்டுள்ளது. இன்று நிறைந்த அமாவாசையாம், நாள் முழுதும் சிறப்பான மூல நட்சத்திரமாம், அனுமார் ஜெயந்தி நாளான இன்று 9.45 வரை மகர ராசியாம், மிகச்சிறப்பான நாளாம், என்றும் அது தொடர்ந்து சில செய்திகளையும் அந்த ஏடு இன்று வெளியிட்டுள்ளது.
உள்ள படியே நானோ, பேராசிரியரோ இல்லை ஆற்க்காட்டாரோ பஞ்சாங்கம் பார்த்து. எது நல்ல நாள் என்று தேடி இந்த 27 ம் நாளை பொதுக்குழு கூடும் நாளாக அறிவிக்கவில்லை . எங்களுக்கு 27 ம் தேதி வசதியென்று பட்டதால் இந்த நாளில் இந்த பொதுக்குழு கூடியுள்ளது..
நாமே செய்யாத ஒரு விஷயத்தை தினமலர், ஜோதிடத்தை ஆராய்ந்து செய்தி வெளியிட்டுள்ளது.


9.45 வரை நல்ல நேரம், செய்யும் காரியம் நன்றாக முடியும் என்று செய்தியை பார்த்துவிட்டு.. நான் இங்கே 10.10 , 10.15 க்கு தான் வந்தேன்.. 9.45 வரை நல்ல நேரம் என்றும், அப்பொது எடுக்கப்படும் முடிவுகள், செய்யப்படும் செயல்கள் வெற்றிப்பெறும் என்ற அந்த செய்தி ஏதோ நல்ல நேரம் பார்த்து இந்த பொதுக்குழு நடத்தப்படுகிறதோ என்ற தோற்றம் வரலாம் என்பதால், நான் 9.45 க்கு இங்கே வராமல் , 10 மனிக்கு மேல் வந்தேன்..

நேரடியாக கலைஞர் அவர்களுக்கு செருப்படி கொடுத்திருக்கவேண்டும்
ஆனால் நாசூக்காக கொடுக்கப்பட்ட செருப்படி இது. இதெல்லாம அந்த கேடுகெட்ட பத்திரிக்கையின் தோலுக்கு உரைக்காது..

இந்த பத்திரிக்கை , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுக்கும்,குறைந்தது அரசியல் நிகழ்வுகளுக்கு இப்படி நாள் பார்த்து , ஜோசியம் பார்த்து , பலன்களை அந்த செய்தியினுடன் சேர்த்து போடுமா??

டேய் தினமலர் முன்டங்களா - உங்களின் இந்த பொதுநல சேவை தி மு க எனும் ஒரு கட்சிக்கு மட்டும்தானா?
தொடரட்டும் உங்கள் குல வழக்கமான சின்டு முடிதல் வேலை.. !!

இவர்களுக்கு நல்ல சாவு வருமா...?

இதைவிட கேவலமானவர்கள் இருப்பார்களா? அரசியலுக்கு வேண்டி வேறு என்ன விதமாக கேடுகெட்ட வேலைகள் எல்லாம் இவர்கள் செய்வார்களோ தெரியவில்லை...! இவர்களின் வீட்டில் இருக்கும் பெண்கள் சற்று கவனமாக இருப்பது நலம்..

போலியோ பாதிப்பினால் ஊனமுற்ற குழந்தைகள் அற்ற சமுதாயம் பெற்றிட வேன்டும் என்ற உயரிய நோக்குடன் வருடத்திற்கு 2 முறை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசு இலவச போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கிறது. பல ஆண்டுகளாக செவ்வனே சென்றுக்கொண்டிருக்கும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களை இந்த ஆண்டு அரசியல் தரித்திரம் பிடித்து தான் வேதனை..

13 ஆன்டுகளுக்கு மேலாக இந்த முகாம்கள் சலசலப்பின்றி நடந்துக்கொண்டிருக்க இந்த வருடம் மட்டும் ஏன் இந்த பீதி?

எல்லாம் பாழாய்ப்போன அரசியல் காழ்ப்பு..

ஆம் , போலியோ சொட்டு மருந்து போட்ட குழந்தை இறந்தது என்று ஜெயா டீவியின் இடைவிடாது போடப்பட்ட ப்ளாஷ் நியுஸ் இந்த வதந்திக்கு மூலக்காரணமாகி ஒரு களேபரத்தை நடத்திவிட்டது.

அரசியல் காழ்ப்பு காரணமாக செய்தியின் உண்மை அறியாது, ப்ளாஷ் நியுஸ் ஓட விட்ட இந்த தொலைக்காட்சியின் கேடுகெட்ட செயலை என்னவென்று சொல்வது?

சத்தியமங்கலத்தை சேர்ந்த அண்ணாதுரை, அ தி மு க காரரின் குழந்தை போலியோ மருந்து கொடுத்து சில மனி நேரங்களி இறந்து விடுகிறது... இது தான் ஜெயாவில் வந்த முதல் ப்ளாஷ்.. அ தி மு க காரரின் குழந்தை இறந்துவிட்டது என்று ச்க அ தி மு க வினர் அடிந்த பேக்ஸ் தான் இந்த பீதிக்கு முதல் காரணம்.

உடனே ஆங்காங்கே. அ தி மு க வினர் திரண்டு , 5 பேர் பலி, 10 பேர் , 30 பேர் பலி என்று திட்டமிட்டு கணக்கு சொல்லி பீதியை கிளப்பினர்..

ஆனால் உண்மையிலே அந்த குழந்தை இறந்ததக்கு காரணம் அந்த குழந்தைக்கு நிகழ்ந்த மூளைச்சாவு தான்.. பிறக்கும் போதே மூளையில் கட்டியுடன் பிறந்த அந்த குழந்தை இன்றோ , நாளையோ என்று தன் நாட்களை கடத்திக்கொண்டிருந்தது . தற்செயலாக போலியோ மருந்து போடப்பட்ட நாளில் இறந்தது என்பது தவிர இந்த குழந்தையின் இறப்புக்கும் , போலியோ மருந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அண்ணாதுரையும், அந்த குழந்ததையை பார்த்துவந்த டாக்டரும் தெரிவித்துள்ளனர்.

அண்ணாதுரை அ தி மு க காரர் என்ற ஒரே காரணத்தினால் , அ தி மு க காரர்கள் இதனை தங்கள் வசதிக்கு வளைத்துவிட்டனர்.

இது தொடர்ந்து நடந்த மறியல் போராட்டத்தில் அ தி மு க கரை வேட்டிகள் வதந்தியை கிளப்பியபடியே இருந்துள்ளது.. எங்கிருந்தோ வந்த உத்தரவுகளால்.. ஆங்காங்கே பீதி கிளப்பபட்டது..

சில இடங்களில் சில அ தி மு க வினர் கருனாநிதி ஆட்சியில் இப்படித்தான்.. அம்மா இருந்திருந்தால் இது நடக்குமா , ஆகவே ரெட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்று சில ஓட்டு பொறுக்கிகள் குரல் விட்டுக்கொண்டிருந்தது ஊடகத்தில் பதிவாகியுள்ளது..

தூ.. நாயே.. ஒரு குழந்தையின் மரணத்தில் இப்படி அரசியல் செய்கிறாயே உனக்கு நல்ல சாவு வருமா? உன் குடும்பத்தில் இருக்கும் பென்கள் உஷாராக இருக்கவேண்டும்.. இல்லையெனில் அ தி மு க ஆட்சி வரவேண்டும் என்று நீ எதுவும் செய்வாய்..

வேதனையான விஷயம் , இவர்கள் கிளப்பிவிட்ட இந்த பீதியால் சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் பயத்தில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளவில்லை.. 1.5 லட்சம் குழந்தையில் ஒரு குழந்தைக்கு போலியோ தாக்குதல் ஏற்பட்டாலும், அந்த பாவம் இந்த கேடு கெட்ட நாய்களை சும்மா விடாது..

எதில் எதிலோ விளையாடிய இந்த கேடு கெட்ட அரசியல் , குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் இந்த விஷயத்திலுமா தன் விளையாட்டை காண்பிக்கவேண்டும்??

இந்த சொறிநாய்கள் தான் நாளை ஆட்சிக்கு வந்து நம் எதிர்க்காலத்தை தீர்மாணிக்க திட்டம் போடுகிறது என்பது தான் வேதனை..

ஒரு சாதாரன செய்தியை கூட அது ஒரு குறீப்பிட்ட டீ வி யில் வந்தது என்பதால் தூக்கி வந்து ருத்ரம் ஆடும் பல பதிவர்கள்.. கேட்டால் அம்மாவையும்,அம்மா டீவியையும் மயிலறாகால் வருடி விட்டு நாங்க நடுநிலைவியாதிகள் என்று மார் தட்டுபவர்கள் இந்த விஷயத்தை அந்த ம்யிலிறகு தடவல் கூட செய்யாது எங்கே ஒளிந்துள்ளார்களே..

இது தான்டா சூடான பதிவு.. சூடான இடுகை .

சூடான பதிவு, சுடான இடுகை.. சூடு சூடு - 2 நாளா தமிழ்மணம் செம சூடா போயிட்டு இருக்கு.. அப்படி என்ன இருக்கு அந்த சூடான இடுகைல.. என் 100+ பதிவுல, ஒரு 3 - 4 தான் இதுவரைக்கும் சூடுல வந்திருக்கு. :)

சரி சரி, இந்த சூடு போதுமா?? இன்னும் கொஞ்சம் வேனுமா..







கூல்ல்ல்.. அனைவருக்கும் , அனைத்து பதிவுலக நன்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் 2009 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
இதற்கு முந்தைய பதிவு சூடான இடுகைல வந்திருக்குடோய்.. அத படிச்சீங்களா?? கமென்ட் போட்டீங்களா?

அவன் வருவானா? 18 வயது மேற்பட்டோர் மட்டும் படிக்கவும்

"கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன " டயலர் ட்யூன் பாடலை ரசித்துக்கொண்டே தன் உயிர் நன்பன் சுந்தர் கைப்பேசியில் பதில் சொல்லும் தருனத்திற்கு காத்திருந்தான் யுவராஜ்.

டயலர் ட்யூன் துண்டிக்கப்பட்டு மறுமுனையில் இருந்து சுந்தரின் குரல் - சொல்லு யுவா,

மாப்ள, எங்கேடா இருக்கே..

வீட்ல தான்டா இருக்கேன்.. என்ன மேட்டர்..சொல்லு

டேய்.. வீட்ல எல்லோரும் திருச்சிக்கு போறாங்க , வர ரெண்டு நாளாகும்.. நைட் இங்கே வந்துடு ஒரு சின்ன பார்ட்டி போட்டிரலாம்.. என்ன சொல்ற..

ஒக்கேடா....நம்மளும் பார்ட்டி போட்டு ஆறு மாசமாகுது.. கண்டிப்பா வரேன்டா.. 6 மனிக்கு என் சித்தி பையன் வருவான்டா.. அவன் வந்துட்டு கிளம்பின அப்புறம் நான் வரேன்டா, எப்படியும் அங்கே வர 8.30 ஆகும்..

சரிடா, வா.. நான் எல்லா ஏற்பாடும் பன்னிடறேன்.. சரியா.. மறக்காம வந்துடு..

ஷ்யூர் மச்சி.. வெச்சிடறேன்டா..

இனைப்பு துன்டிக்கப்பட்டது.

யுவராஜ் மற்ற வேலைகளில் மூழ்கினான்..

இரவு மணி 6.50..
"எப்போ கிளம்புறே?" - சுந்தருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினான்..இன்னும் 15 நிமசத்துல கிளம்பிடுவேன்டா.. பதில் வந்தது..

மணி 8.15
சுந்தருக்கு பிடிச்ச ஒரு புல் பாட்டில் மால்ட் விஸ்கி, 2 குளிர்ந்த பீர். 2 அரை லிட்டர் லெகர் சோடா, ஒரு அரை லிட்டர் செவென் அப், பகோடா, சிப்ஸ், சிக்கன் 65, 5 முட்டை.. ஒரு பாக்கட் பில்டர் கிங்க்ஸ்.

எல்லாம் சரியா இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டான் யுவராஜ்..

அச்சோ.. அவனுக்கு ஊறுகாய் இருந்தாதானே சரக்கு உள்ள போகும்.. சமையலறைக்கு சென்று ஊறுகாய் டப்பாவை தேடி எடுத்துவந்தான்..

மனி 9 .02. சற்று பொறுமை இழந்தான்.. என்னடா இவன் , சொன்ன நேரத்துக்கு வரவேண்டாமா.. 8.30க்கு சொன்னான் , மனி 9:00 தாண்டுது.. அலுத்துக்கொண்டான்..

மீண்டும் அவன் கைப்பேசிக்கு அழைத்தான்.. ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.... சரி வரட்டும் , இருக்கு அவனுக்கு..

தொலைக்காட்சியில் மூழ்க்கினான். மனி பத்தை நெருங்கியது..

நாய், இப்படி ஏமாத்திட்டானே... செல் ஆப் பன்னிவெச்சு ஆட்டம் காட்டறான்.. இருக்கு அவனுக்கு. முனகிக்கொண்டே, இதற்கு மேல் தாங்காது என்று வீட்டு கதவை மூடிவிட்டு.. ப்ரிட்ஜ் திறந்து ஒரு பீரை எடுத்து ருசிக்க ஆரம்பித்தான்..

மனி 11.10.. ஒரு பீரும் , 1 ரவுண்ட் விஸ்க்கியும் உள்ளே போயிருந்தது..
பலமாக கதவை தட்டும் சத்தம். கொஞ்சம் பயந்து போனான்..மெதுவாக சென்று கதவை திறந்தவனுக்கு அதிர்ச்சி.

அங்கே சுந்தர் நின்றிருந்த கோலம் அப்படி.. தலையெல்லாம் கலைந்து.. கண்கள் சிவந்து.. சட்டை கிழிந்து. ஆங்காங்கே சிராய்ப்பு..

என்னடா மாப்ளே , என்ன கோலம் இது.. என்னடா ஆச்சு , பதறினான்..உள்ளே சென்ற பீரும், விஸ்கியும் ஏற்படுத்தியிருந்த கிறுகிறுப்பும் சுத்தமாக இறங்கியிருந்தது..

ஒன்னுமில்லேடா பயப்படாதே.. என் சித்திப்பையன் லேட்டாதான் கிளம்பினான்டா.. அவனை அங்க வீட்ல ட்ராப் பன்னிட்டு வர லேட் ஆகிடுச்சு... வர வழில ஒரு வேன் காரன் வேகமா வந்து இடிச்சுட்டான்.. ஒரு மைனர் ஆக்சிடென்ட்..வேற ஒன்னும் இல்லை.

சரி சரி, முதல்ல உள்ள வா.. இப்படி உட்கார்..

கொஞ்சம் பஞ்சும் டிஞ்சரும் எடுத்து வந்து முதலுதவி செய்தான்.. இருவரும் இப்போது சற்று இறுக்கம் தளர்ந்து சகஜ நிலைக்கு வந்திருந்தார்கள்..

டேய் மாப்ள .. வீட்டுக்குள்ளே அடிக்கறத விட மொட்ட மாடில அடிச்சா அம்சமா இருக்கும்டா.. வா மாடிக்கு போகலாம்..

அனைத்தையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றார்கள்..

மாப்ள, இந்தா டவல்., அந்த குழாய்ல முகம் கழுவிக்கோ... இந்தா என் டீ சர்ட் , லுங்கி மாத்திக்கோ... அப்புறம் பார்ட்டிய ஆரம்பிக்கலாம்.. ராத்திரி முழுக்க டைம் இருக்கு.. சரியா..

சரிடா யுவா..

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே செல் போன் சினுங்கல் கேட்டது..

டேய் யுவா, உன் செல்போன் தான் அடிக்குதுடா..

ஆமாம்டா மாப்ள.. மறந்து போயி கிழே வெச்சுடேன்.. யார் இந்த நேரத்துல.. அம்மாவா இருக்கும்டா.. திருச்சி போய் சேர்ந்திருப்பாங்க.. சரி நீ முகம் கழுவி, டிரஸ் மாத்து. நான் போய் பேசிட்டு வரேன்.. சொல்லிக்கொண்டே கீழிறங்கி போனான் யுவா..

கீழே சென்று கைபேசி எடுத்தான்.. என்ன இது புது நம்பரா இருக்கே... சிந்தனையினூடே பொத்தானை அமுத்தி காதில் வைத்து அலோ என்றான்..
மறுமுனையில் பேச பேச , இவன் முகம் வெளிறியது...

மறுமுனையில் பதற்றத்துடன் சுந்தரின் அப்பாவின் குரல்.. யுவா தம்பி, உன்னை பார்க்கத்தான் சுந்தர் வண்டி எடுத்துகிட்டு கிளம்பினான்.. ராயபேட்டை மணிக்கூண்டு கிட்ட வேகமா திரும்பறப்போ எதிர்ல வந்த வேன் பலமா மோதி, அங்கேயே ஸ்பாட்ல உயிர் போயிடுச்சுப்பா.. தகவல் கிடைச்சு இப்போ தான் எல்லாரும் பதறியடிச்சு ராயப்பேட்டை ஜி எச் வந்தோம்.. வந்து முகத்த பார்த்தோம்பா.. எல்லாம் முடிஞ்சுப்போச்சு... நம்மள எல்லாம் விட்டுட்டு உன் பிரண்ட் போயி 2 மனி நேரம் ஆகுதுப்பா.. போஸ்ட்மார்ட்டம் நடந்துக்கிட்டு இருக்கு , பாடி தர இன்னும் 1 மனி நேரம் ஆகுமாம்.. ஒரே பதட்டமா இருக்கு.. கொஞ்சம் சிரமம் பார்க்காம சீக்கிரம் வாப்பா.. அழுதுக்கொண்டே பேசினார்.. பின்னால் பலரின் அழுகுரல் தெளிவாக கேட்டது..

கால்களுக்கு கீழே பூமி பிளப்பது போல உணர்ந்தான யுவா.. அப்போ மேல மாடில..... ??

மாப்ள, எனக்கு பிடிச்ச மால்ட் விஸ்கி , ஊருகாய்.. நாக்கு ஊறுது சீக்கிரம் மேல வாடா... சுந்தரின் குரல் காற்றில் மிதந்து வந்தது...
------------------------------------------------------------------------
இந்த கதைக்கான ஒரு வரிக்கரு சமீபத்தில் எப் எம் நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது..
----------------
சரி, இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி.. யுவாவாக உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.. இந்த நிலையில் நீங்கள் இருந்தால்.. உங்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்.. மறக்காமல் கருத்துப்பெட்டியில் சொல்லிட்டு போங்க..

உண்மை சம்பவம். என்ன தலைப்பு வைக்கட்டும்?

டேய் குமாரு...

வணக்கம்னே.. சொல்லுனே..

மறக்காம அப்படியே எல்லா வட்டதுக்கும் சொல்லிடு.

சரிண்ணே..ஒரு வண்டி எடுத்து ரவுண்ட் அடிச்சிடுறேன்னே.

இந்த நூறு ரூபா , வெச்சிக்கோ.

சந்தானம்...

சொல்லுங்க சேகர் அண்ணே..

கட்சி ஆபிஸ் ல நோட்டிஸ் போர்ட்ல எழுதிப்போட்டுடா...

இதோ அங்கே தான் போறேன்னே.. எழுதிடுறேன்னே..

பச்ச கலர் சாக்பீஸ்ல சேகர், 33 வட்ட செயலாளர்னு போட்டுடா..

சரிண்ணே, எக்ஸ் எம் சி கூட சேர்த்துப்போட்டுடறேன்ன்னா..
வரண்ணே..

அப்படியெ ஆபிஸ்ல இருந்து 10க்கு 10 ல ஆறு கட்சிக்கொடி எடுத்துகோ.
சரிண்ணே.. அப்படியே நம்ம ஊட்ல புதுக்கொடி 3 இருக்குன்னே, அத எடுத்துக்கறேன்னே..

சரி, இந்தா வழில டீ சாப்பிட்டு போ- 50 ரூ தாள்

டேய் கோவிந்து..

இந்தா மேட்டரு. 750 நோட்டீஸ் போட்டுடு. எல்லா ஏரியாலயும் இருக்கனும்.. தெரிதா.. கட்சி பேரு. சின்னம் கொஞ்சம் பெரிசா வரனும்டா.. பாத்துக்கோ,,

சரிண்ணே , ஒரு ஏரியா மிஸ் ஆகாம பாத்துக்கறேன்ன்னே.. பக்கத்துல இருந்து பிரின்டிங், ப்ரூப் பார்த்து நானே முடிக்கரேண்ணே..

சரிடா.. இந்தா 1500 வெச்சிக்கோ.. மீதி அப்புறம் பாத்துக்கலாம்..
சரின்னே. வரண்ணே..
டேய், டேய்.. கஷ்டம் பாக்காம அப்படியே திருக்கழுகுன்றம் கட்சி ஆபிஸ்ல ஒரு மெசேஜ் கொடுத்துட்டு வந்துடுடா..

உனக்கு செய்யாமயான்னே.. கன்டிப்பா செய்யறேன்னே.. வரேன்னே....

அண்ணே, மாவாட்டம் வராருன்னே...

வாங்கண்ணே, வாங்கண்ணே,

என்ன சேகரு என்ன ஆச்சு திடிர்னு..

ஆமான்னே......... .. 9:00 மனிக்கு ஆச்சுன்னே.. அண்ணே, தலைமை கழகத்துக்கு சொல்லிடுவீங்களா அண்ணே.. பேக்ஸ் அனுப்பிட்டு தான் வரேன் சேகரு.. கவலப்படாதே....மனச தேத்திக்கோப்பா.

வீட்டின் உள்ளே விட்டுட்டு போயிட்டியே என்ற அனைவரின் அழுகுரலின் சத்தத்தில், கணவன், மகள், தம்பி, அண்ணன், சித்தி, மருகள், பேரன், பேத்தி, சம்பந்தி, பெரியம்மா, அண்ணி, நன்பர்கள் என அனைவரையும் பார்த்தேன்...

ஏனோ, "மகனை" மட்டும் பார்க்கவே முடியவில்லை.. மகனுக்கு பதிலாய் "அரசியல்வாதி"யை மட்டுமே பார்க்கமுடிந்தது.. அரசியலின் தாக்கம் என்னவென்று அப்போதுதான் எனக்கு புரிந்தது..

இந்தியாவில் புகைப்பிடிக்க தடையா?

அக்டோபர் 2 முதல் இந்தியாவில் புகைப்பிடிக்க தடை என்ற சட்டம் கொண்டு வந்து தீவிரமாக அமல் படுத்தினார் நம் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்கள்.


பல தரப்பிலிருந்தும் இந்த சட்டத்திற்கு பலவாறான கருத்துக்கள் வந்தது. சிலர் இந்த சட்டத்தை அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கலை எடுத்துரைத்தார்கள். சிலர் இந்த சட்டம் PASSIVE SMOKING தடுப்பதற்கு கொண்டுவரப்பட்டுள்ளது, குறை கூறவேண்டாம் என்றார்கள்.

இந்த சட்டத்தை முழுமையாக அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல், மேலும் எத்துனை மாதங்கள் இது தாக்குப்பிடிக்கும், பான் பராக் தடையை போலத்தான் இந்த சிகரெட் தடையும் மாறும் வாய்ப்புள்ளது என்ற என் ஆதங்கத்தை நானும் சின்ன அய்யா - சிறு யோசனை என்ற தலைப்பில் பதிவாக இட்டேன்

அக்டோபர் 2 க்கு பிந்தைய நிகழ்வுகளான இலைங்கைப்போர், அமெரிக்க தேர்தல், இங்கிலாந்து கிரிக்கெட், மும்பை தீவிரவாத தாக்குதல், கலைஞர் - மாறன் இனைப்பு, 5 மாநில தேர்தல் இத்யாதி இத்யாதி எல்லாம் இந்த சிகரெட் பிடிக்க தடை பற்றிய செய்திகளை சட்டத்தை பின்னுக்கு தள்ளிவிட்டது. பின்னுக்கு என்பதை விட, மறக்கடிக்கவே செய்துவிட்டது

சட்டம் அமல்படுத்தப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அமலாக்கம் எந்த நிலையில் உள்ளது?

முதல் 15 நாட்கள் மிக கடுமையான கன்கானிப்பு. ஆங்காங்கே அரசாங்க அறிவிப்பு, சுகதாரத்துறையின் சார்பாக விளம்பரங்கள், பா ம க வின் பசுமைதாயகத்தின் சார்பில் ஆங்காங்கே விளம்பர தட்டி, விழிப்புனர்வு பிரச்சாரம் (பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா ம க கரைவேட்டிகளே, இடையில் மேடையின் பின்னால் சென்று 2 வலி வலித்துவிட்டு வந்தது வேறு கதை),
மிகப்பெரும் அளவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டது. டீ கடை , பொட்டிக்கடையின் வாசலில் புகை மூட்டமாக இருக்கும் நிலை மாறியது. ஓரிருவர் கடை மறைவில் நின்று பயந்து பயந்து எட்டிப்பார்த்து தம் இழுத்ததை பார்க்க முடிந்தது.
டீக்கடையின் உள்ளே கூட புகைப்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. மிக தெரிந்த ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டுமே டீ கடைகள் அனுமதி தந்தது.

அடடா! இந்த சட்டத்தின் மூலம் பெருமளவில் புகைப்பது குறைந்து. கடைவாயில்கள், தெருவீதிகள், பொது இடங்களில் புகை மன்டலம் குறைந்து, (PASSIVE SMOKING ) பேசிவ் ஸ்மோகிங் குறைந்து விட்டதே என்று சந்தோஷப்பட்டது அடுத்த 10 நாட்களில் புஸ்ஸாகிப்போனது தான் வேதனை.

கிட்டதட்ட 15 - 20 வது நாட்கள் மட்டுமே இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டது.. 21 வது நாளில் இருந்து மெல்ல மாற்றம் தெரிந்தது.. கடை மறைவிலும் ,கதவு இடுக்கிலும் நின்று புகைத்தவர்கள் வெளி வந்து நின்று புகைக்க துவங்கினர்..
கடை வாசலில் 2, 3 பேர் மட்டுமே புகைத்தது 5, 6 , 7.. என்று மெதுவாக ஏறத்துவங்கியது. பொது இடங்களிலும் கண்கானிப்பு இல்லை என்ற நிலை வந்த பிறகு நம் புகையாளிகள் வழக்கம் போல ஒளித்துவைத்திருந்த சிகரெட்-தீப்பெட்டியை தைரியமாக வெளியில் எடுத்தனர்.. பேருந்து நிலையம் , ஓட்டல், டீக்கடை, சாலைகள் என்று அனைத்து இடங்களும் பழைய குருடி கதவை திறடி என்பதற்கு ஏற்ப மாறிவிட்டது..
இந்திய திருநாட்டில் ஒரு சட்டத்தின் நிலை இது தானா?? 15 நாட்களுக்கு மேல் ஒரு சட்டத்தை அமல் படுத்த முடியவில்லை..

இந்தியாவில் புகைக்க தடையிருக்கிறது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

ஒரே ஆறுதலான விஷயம்- பல அலுவலக வளாகங்களில் ஸ்மோக் ஜோன் (SMOKE ZONE) என்பதை எடுத்துவிட்டுருந்தனர். வெளியிலும் கட்டுப்பாடு இருந்தததால் அலுவலக நேரத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்போரின் புகைத்தல் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்து. ஆனால் இப்போது வெளியில் கட்டுப்பாடு தளர்ந்துவிட்டதால் அதிலும் ஓட்டை விழுந்துவிட்டது.
அலுவலக வளாகத்தில் இருந்து வெளியே நடந்து வந்து புகைக்க வேண்டும் என்ற நிலையில், சோம்பல் காரணமாக சிலரின் புகைப்பழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால் இதுவும் எத்தனை நாள் ??? மீண்டும் அலுவலக வளாகங்களில் புகைப்பிடிக்கும் பகுதி வராது என்று நிச்சயமாக சொல்ல இயலாது.. 2 மாதத்தில் வெளியிடங்களில் வந்த இந்த நிலை, மேலும் 5 மாதத்தில் அலுவலக வளாகங்களுக்கும் வரும் நிலை தான் தெரிகிறது.
ஆரம்பத்தில் இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி கேள்வி எழுப்பபட்ட போது ஆயிரம் விளக்கங்களை சுகாதாரத்துறை கொடுத்திருதாலும், இன்றைய நிலையில் சட்டத்தை அமல் படுத்துவதில், அரசும், சுகாதாரத்துறையும், காவல் துறையும் பசுமைத்தாயகமும் படுதோல்வி அடைந்து விட்டதாகவே உள்ளது..

இந்த தடையை ஊர்ஜிதப்படுத்திய உச்சநீதிமன்றம் என்ன செய்கிறது?? யாராவது பொது நல வழக்கு தொடரட்டும் என வாயிற்கதவை அகலத்திறந்து வைத்து காத்திருக்கிறதா..??
பான் பராக் தடை என்பது எப்படி ஆனதோ , அதே கதி தான் சிகரெட்டுக்கும் ஆனது.. போதை வஸ்துக்கள் பவர் தெரிகிறது..
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது,
திட்டம் போட்டு திருடுற (புகைக்குற) கூட்டம் திருடிக்கொண்டே (புகைத்துக்கொண்டே) இருக்குது .
திருடனாய் (புகைப்பவனாய்) பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை (புகையை) ஒழிக்க முடியாது..

அ தி மு க எம் எல் ஏ பதவி பறிப்பு? கோர்ட் தீர்ப்பு & ஒரு சுயேட்சையின் காமெடி


அ தி மு க வின் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் குளோரின் சந்திராவின் எம் எல் ஏ பதவி செல்லாது என்று உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
2006 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அ தி மு க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர் குளோரின் சந்திரா. இவரின் வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தங்கமுத்து வழக்கு தொடர்ந்தார்.
ராஜபாளையம் தனித்தொகுதி, அதன் அடிப்படையில் இங்கே தாழ்த்தப்பட்டோர் தான் போட்டியிடவேண்டும் ஆனால் கிறுத்துவரான அ தி மு க வேட்பாளர் குளோரின் தான் தாழ்த்தப்பட்டவர் என்று தவறான தகவல் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தவறான தகவல் கொடுத்து வெற்றிப்பெற்ற அவரின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று தங்கமுத்து தன் மனுவில் கூறியிருந்தார். ( இங்கே அ தி மு க வின் அம்மா 4 இடத்தில் வேட்புமனு தாக்கல் செய்து பதவியிழந்து ஞாபகம் வருகிறது :) )

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குளோரின் சந்திராவின் பள்ளி சான்றிதழை அடிப்படையாக வைத்து இவர் தாழ்த்தப்பட்டவரின் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் குளோரின் சந்திரா தங்கமுத்துவிற்கு அவரின் தேர்தல் செலவான ரூ 5000 வழங்கிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. (வழக்கு செலவாக தங்கமுத்து 5000 த்துக்கும் அதிகமாக செலவு செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.. :) )

இதில் இந்த சுயேட்சையின் காமெடி எது என்று கேட்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும் :)
தங்கமுத்து தன் மனுவில், குளோரின் சந்திரா வெற்றி செல்லாது என்று அறிவித்து, தன்னை (தங்கமுத்துவை) வெற்றிப்பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அது தான் காமெடி.

தீர்ப்பளித்த நீதிபதி கூட சிரித்திருப்பார் என நினைக்கிறேன்.. புரியலயா?? கீழே பார்க்கவும்..
ராஜபாலையம் 2006 சட்டமன்ற தொகுதி வாக்குகள் விவரம்
குளொரின் சந்திரா - அ தி மு க - வெற்றி - 58320
வி பி ராஜன் - தி மு க - 57870
காளிமுத்து - பகுசன் சமாஜ் - 13218
ஐய்யனார் - தே மு தி க - 10250
விஜயகுமாரி - பார்வாட் ப்ளாக் - 4082
செல்லப்பாண்டி - பி ஜே பி - 1640
தங்கமுத்து (மனுதாரர்) - சுயேட்சை - 156

156 (மொத்த வாக்கில் 0.1%) வாக்குகள் வாங்கி 7 வது இடத்தில் இருக்கும் தங்கமுத்து தன்னை வெற்றிப்பெற்றதாகவும், எம் எல் ஏ வாகவும் அறிவிக்க சொன்னது செம காமெடி தானே.. :)
நீதிமன்றம் அவரின் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்தது.. பாவம் என்று 5000 ரூ இழப்பீடு வழங்க மட்டும் தீர்ப்பளித்துள்ளது.
உடனடியாக பதவி போகுமா அல்லது குளோரின் மேல் முறையீடு செய்து அது 3 ஆண்டுகள் வழக்காடப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் இந்த சட்டமன்றத்தின் ஆயுள்காலமான 5 ஆன்டுகளே முடிந்துவிடுமா என்பது தெரியவில்லை..
சைக்கிள் கேப்பில் கார் ஓட்ட நினைத்து காமெடி செய்திருந்தாலும் நிச்சயம் தங்கமுத்துவை பாராட்ட வேண்டும்.
2 முதல் 6 வது வரையிலான இடத்தை பிரதான கட்சிகளே இதனை கண்டுக்கொள்ளாத போது இவர் துனிந்து வழக்குப்போட்டு , ஆதாரங்கள் சமர்ப்பித்து வழக்கில் வெற்றியும் கண்டுள்ளது பாராட்டப்படவேண்டியது தானே..