முத்துக்குமரா - ஏன் குழம்(ப்)பிப்போனாய்??

முத்துக்குமரா, உன் தமிழ் உணர்விற்கு தலைவணங்குகிறேன்.

மற்றவர் நலன் கருதி தன் உயிரை மாய்த்துக்கொள்ளவதற்கெல்லாம் தூய்மையான உள்ளமும், குறிப்பாக ஈழத்தின் அமைதிக்காக உயிர்த்தியாகம் செய்வதற்கு தூய மனம் என்பதையும் தாண்டி இன உணர்வும் வேண்டும்.

நீ எடுத்தது வேகமான முடிவு என்று சொல்ல முடிந்த எங்களுக்கு அதனை விவேகமான முடிவு என்ற சொல்லிட மனம வரவில்லையே முத்துக்குமரா.

இன உணர்வை நெஞ்சில் உரம் போட்டு போராளியாக இருந்திருக்க வேண்டிய நீ , தீக்கிரையாக போனதில் என்ன விவேகம் இருக்கிறது முத்துகுமார்?


உன் உயிர்த்தியாகம் , பட்டி தொட்டியெங்கும் பரவி , ஈழம் பற்றி என்ன என்று தெரியாதவர் கூட ஈழம் என்ன , நடப்பது என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர், இளைஞர் சமுதாயத்தில் உணர்ச்சி கலந்த ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் அம்மா கூட இதுவரை அங்கே ஏதோ போர் என்று நினைத்திருந்த நிலையில் மாறி, இரண்டு நாட்களாக , இலங்கை என்று ஆரம்பிக்கும் எந்த செய்தியாக இருந்தாலும் பத்திரிக்கையில் படித்துவிட்டு கேள்வி கேட்கிறார்.. உன் உயிர்த்தியாகம் தான் இதை சாதித்தது , சந்தேகமே இல்லை..

ஏழுச்சியும், விழிப்பும் ஏற்படுத்தியிருக்கிறது உன் மரணம்.. உண்மை தான் ,

ஆனால் என்ன பயன் விளையும் முத்துக்குமரா..???

ஏற்பட்டிருக்கும் எழுச்சியை சரியான பாதையில் எடுத்துச்செல்ல நல்ல தலைமை இல்லாதவரை அந்த எழுச்சியின் பயன் என்ன சொல்?

உன் மரணத்தை கூட, இது ஏன்ன தியாகமா, குடும்ப தகராறில் தற்கொலையா, கட்சியின் தூண்டுதலா, என்றெல்லாம் கேள்வி கேட்டு ஒரு கூட்டம் கிளம்பிவிட்டதை நீ அறிவாயா?

ஜெத்மலானியின் கேள்விகளை விட, ராஜீவின் மரணம் பற்றிய கேள்விகளை கேட்கதாவர்கள் கூட, உன் மரணத்துக்கு பக்கம் பக்கமாய் கேள்வி கேட்பதை நீ அறிவாயா முத்துகுமரா?

உன் மரணத்தால் எழ்ச்சிப்பெற்றவர்கள் எல்லாம், இந்த கூட்டத்துக்கு பதில் சொல்வதற்கே இனி தங்கள் எழுச்சியை பயன்படுத்தப்போகிறார்க்ள்..


ஈழத்துக்கு ஆதரவா, எதிர்ப்பா , புலிகளுக்கு ஆதரவா , எதிர்ப்பா என்ற நிலையில் இருந்து மாறி, இன்று முத்துக்குமாருக்கு ஆதரவா , எதிர்ப்பா என்ற பாதையில் பயணம் செல்வதாக உணர முடிகிறது.

நீண்ட கடிதத்தில் தமிழக கட்சிகள் பலவற்றையும் சாடி சென்றுவிட்டாய்..

ஈழத்துக்கு ஆதரவான தமிழன் என்று பொதுவில் உன்னை வைத்து பார்த்திருக்கவேண்டிய நிலைமாறி சில அரசியல் கட்ச்யிகளுக்கு எதிரி, சில கட்சிக்கு ஆதரவானவன் என்ற அரசியல் முத்திரை உன் உண்மையான தமிழன் முத்திரையை கொஞ்சம் கொஞ்சமாய் மறைத்து வருகிறதே உன் கடிதம்.. அதை உண்ணாலே உணர முடியாது முத்துக்குமரா..


நல்ல தலைமையும் இல்லை, நல்ல அரசியல் வாதிகளும் இல்லை. உண் இனவுனர்வு மரணத்தை சந்தேக கண் கொண்டு பார்க்க ஒரு கூட்டம், உன் கடிதமே உன் மீது ஒரு அரசியல் போர்வையை போர்த்திவிட்டு கொண்டிருக்கும் நிலை..

இந்த சூராவளிக்கு நடுவில் நீ எழுப்பி சென்ற எழுச்சி எனும் தீ அனையாது எப்படி காத்திட போகிறோம் என புரியவில்லை.

எல்லாவறையும் காட்டிலும், இங்கே அரசியல்வாதிகள் புகுந்து உனக்கு கொடுக்கும் பட்டமும் , அவர்களக் நடத்தும் அரசியல் நாடங்களும், இன்னும் சில முத்துக்குமார்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் அதிகமாக உள்ளது முத்துகுமரா..

நம் ஊடகங்களை பற்றி சொல்லிடவே வேண்டாம். முதல் பக்கத்தில் ஆரம்பித்த நீ ஒரு வாரத்தில் கடைசி பக்கத்தின் ஒரு மூலையில் பெட்டி செய்தியாக முடங்கிவிடுவாய்... அடுத்த பரபரப்பு செய்தி வந்தால் ஒரு வாரமே அதிகமடா.. பத்திரிக்கைதுறையிலும் அரசியல் இருக்கிறது என்று உனக்கு தெரியாமலா இருந்திருக்கும்..

தெளிவான சிந்தனையில் இருந்த நீ, உணர்ச்சி தீ எழுப்பும் தந்திரம் தெரிந்துவைத்திருந்த நீ, இப்படியெல்லாம் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள ஒரு சமூகத்தில் வாழ்கிறோமே என்று மட்டும் நினைக்காமல் விட்டது ஏனடா?

சற்று குழப்ப நிலையில் இருந்துவிட்டாயா??

நினைத்திருந்தால் உன் உடலில் தீயிட்டு உணர்ச்சி தீயை பரவவிட்டதற்கு பதிலாய் உணர்ச்சித்தீயை உன் உள்ளத்தில் ஏற்றி, புரட்சிபடையின் முதல் ஆளாய் நின்றிருப்பாயே முத்துகுமரா.

உன் ஆன்மா சாந்தியைடட்டும்.. ஈழத்து தமிழரின் சிரிப்பொலி காற்றிலே கலந்து உன்னை விரைவில் எட்டும் என்ற நம்பிக்கையுடன்.. !

ஈழம் - இப்படித்தான் நடக்கவேண்டும் என்று ஆசை

30/01/2009 - தி மு க , பா ம க அமைச்சர்கள் ராஜினாமா, அனைவரும் மக்களவை சபாநாயகருக்கு தங்கள் ராஜினாமா கடிதத்தை அனுப்பினர்.

30/01/2009 - போர் நிறுத்ததை வலியுறுத்தி காங்கிரஸ் அரசு உறுதியான எச்சரிக்கையை இலங்கை அரசுக்கு நாளை மாலைக்குள் அனுப்பாவிட்டால், தி மு க , பா ம க, கம்யூனிஸ்ட எம் பி க்ககள் அனைவரும் கூண்டோடு எம் பி பதவியை ராஜினாமா செய்ய உறுதி - கருணாநிதி தலைமயில் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.

30/01/2009 தமிழக கட்சிகள் முடிவு - காங்கிரஸ் அரசு கவிழுமா?

சட்டசபையில் தி மு க விற்கு காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவு வாபஸ் ஆகுமா??? தி மு க அறுதி பெரும்பான்மை இழக்குமா?

1/2/2009 - தி மு க விற்கு துனை நிற்போம் - ஆட்சி கவிழ விடமாட்டோம் - பா ம க , வி சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உறுதி.

02/02/09 - அனைத்து எம் பி க்களும் ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் அரசு கவிழ்கிறது.

02/02/09 - தமிழர் நலன் கருதி - நடபுணர்வோடு காங்கிரஸை விட்டு பிரிகிறோம் - கருணாநிதி அறிவிப்பு.

03/02/2009 - மதிமுக வினரும் ராஜினாமா - வைகோ அறிவிப்பு

04/02/2009 - தி மு க விற்கு ஆதரவு வாபஸ் - காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அதிரடி.

தமிழ் உணர்வுடன் கலைஞரின் இந்த முயற்சிக்கு அனைத்து தமிழ் உணர்வாளர்களும் தோள் கொடுக்க வேண்டும் - ராமதாஸ், பழ நெடுமாறன் வேண்டுகோள்.

06/02/09 - திடீர் திருப்பம் - தமிழ் உணர்வுடன், தமிழர் நலன் கருதி தி மு க அரசுக்கு ஆதரவு - ஜி கே வாசன் தலைமையில் 12 எம் எல் ஏ க்கள் உறுதி.

06/02/09- தமிழக காங்கிரஸ் மீண்டும் பிளவு - காங்கிரஸ் அதிர்ச்சி

07/02/2009 - விடுதலைப்புலிகளின் அடிப்பொடியாக மாறிய கட்சிகள் - ஜெ காட்டமான அறிக்கை.

போர் நிறுத்த ஆபத்தும், தமிழக கட்சிகளின் அபத்தமும் - துக்ளக் கட்டுரை

08/02/2009 - ஜெ வின் தமிழீழ எதிர்ப்பு போக்கை கண்டித்து அந்த கூட்டணியில் இருந்து விலகல் - கம்யூனிஸ்டகள் அறிவிப்பு.

இராமேஸ்வரத்தில் மாபெரும் தமிழீழ ஆதரவு மாநாடு - கருணாநிதி, ராமதாஸ், திருமா, வைகோ, தா. பா, நல்லக்கன்னு, வாசன், பழ நெடுமாறன், சீமான், பாரதிராஜா, சத்ய ராஜ் வீரமனி , சு ப வீ பங்கேற்பு- 3 கோடிதமிழர்கள் கலந்துக்கொண்ட பேரணி .

தமிழகத்தின் போராட்டங்கள் - இந்தியா முழுவதிலும் உள்ள தமிழரிடத்தில் பரவியது.

14/02/2009 நல்ல முடிவு எடுப்பேன் - ஜனாதிபதி தமிழர்களுக்கு உறுதி

அப்பாவிகளை கொல்லுவதை நிறுத்துங்கள் - பல நாடுகளில் இருந்து

ராஜபக்ஷேவிற்கு நெருக்குதல்கள் வலுக்கிறது.

20-02-2009 பேச்சுவார்த்தைக்கு தயார் ராஜபக்ஷே அறிவிப்பு.

21-02-2009 - ராஜபக்ஷே முடிவு தவறு, தொடர்ந்து போரிட வேண்டும் - சோ, ஜெயலலிதா , சுப்பரமனிசாமி அறிக்கை

22/02/2009 - பெண் ராஜபஷே - ஜெ மீது வைகோ கடும் தாக்கு- கூட்டணி உடைந்தது..

23/02/2009 - வைகோ போனால் கவலையில்லை.. என்னை அன்டித்தான் அவர் இருந்தார்.. அவரை நம்பி நான் இல்லை

26/02/2009 - 2009 மார்ச் மாதம் பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் மும்முனை போட்டி
திமுக+கம்யூனிஸ்ட்+பா.ம.க+வி சிறுத்தைகள்+ மதிமுக+ மூப்பனார் காங்கிரஸ்

அ தி மு க + காங்கிரஸ்

பா ஜ க + தே மு தி க + ச மு க

27/2/09 - தாமதமான முடிவு என்றாலும், தமிழருக்காக கலைஞர் எடுத்த முடிவை வரவேற்று , பாராளுமன்ற தேர்தலில் தி மு க கூட்டணிக்கு ஆதரவு - தமிழ் அமைப்புகள் ஆதரவு.

தமிழருக்கு எதிரான போக்கால் ஜெ ஓரங்கட்டப்பட்டார் - நக்கீரன், ஜீவி

அய்யோ இங்ங்ங்ங்கே.. கெக்கக்கே... ங்ங்..ங்.... ந்ஞஞா.. பல்டி, கில்டி, பல்டி, கொல்டி, ஞஞ... ங்...ங்.. ங்க்... போச்சே.. போச்சே... அய்யோ. அய்யய்யோ.. === தினமலர் ஒரு வாரமாக தொடர்ந்து போட்டு வரும் தலைப்புச்செய்தி..

நாளை முதல் செய்தித்தாள்களில் இப்படியான தலைப்புச்செய்தி பார்க்க ஆசையாகத்தான் உள்ளது. நடந்தால் நன்றாக இருக்கும்.

முதலமைச்சர் கருணாநிதி பற்றிய வதந்தி...???

தமிழக முதல்வர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக் அவர் இன்றைய குடியரசு தின நிகழ்ச்சிகளில் கூட கலந்துக்கொள்ளவில்லை.
இதன் அடிப்படையில், வழக்கம் போல் கருணாநிதி பற்றிய வதந்தி சென்னை மற்றும் பல இடங்களில் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.

இது ஏற்கனவே பல முறை நடந்துள்ளது. ஆயிரம் காழ்ப்புகள் இருந்தாலும், எதிர் கருத்து இருந்தாலும், ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவர் மறைந்தார் என்று வதந்தி கிளப்புவது மிகவும் அருவருப்பான செயல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என நினைக்கிறேன்.

இந்த வதந்தியை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் , "வதந்திகளை நம்பவேண்டாம், கருணாநிதி நலமாய் இருக்கிறார்" என ஸ்கராஸ் ஓடுகிறது..

இங்கே முதல்வர் , அங்கே பிரதமர் என இருவரும் மருத்துவமனையில், குடியரசு நிகழ்சிகளுக்குகூட இருவரும் வர இயலவில்லை.

இருவருக்கும் பிரார்த்திக்க பல கோடி பேர் இருக்கிறார்கள்.. உங்களை பொத்தி பொத்தி காத்து குணப்படுத்தி அனுப்ப 1000 டாக்டர்கள் உங்களை சுற்றி.. இருவரும் தயவு செய்து நினைத்து பாருங்களேன்.

அங்கே என் இனத்தை சார்ந்த சகோதரன் உயிர் போகும் நிலையில் கூட ஆறுதல் சொல்ல ஆளில்லை.. அவன் கூட இருப்பவர்கள் கூட தங்கள் உயிரை காத்துக்கொள்ள ஓடவேண்டியுள்ளது. குண்டடிப்பட்டு ரத்தத்துடன் அலறும் அவர்களுக்கு மருந்திட ஒரு நர்ஸ் கூட கிடையாது அய்யா.. தயவு செய்து சிந்தியுங்கள்.. உயிரும் , வலியும் அனைவருக்கும் ஒன்று தானே?
நம்பிக்கையுடன்.

சன் டீவியும், விஜயகாந்தும் - அய்யோ பாவமும், 25,000 மும்

குடியரசு தினத்தை முன்னிட்டு நமது சன் டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, சூப்பர்கிட் அதிரடி திரைப்படம் காதலில் விழுந்தேன் என்று 10 நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் வந்து கலக்குகிறது..


டப்பா படங்கள் மற்றும் சுமாராக ஓடிய படங்களை தான் இது வரை நமது சன் டீவி திரைக்கு வந்து 1 அல்லது 1.5 வருடங்களில் ஒளிபரப்பிவந்துள்ளது. இப்போது பாவம் தனது சொந்த தயாரிப்பை இவ்வளவு சீக்கிரம் தனது தொலைக்காட்சியிலே போடவேண்டிய நிலை.



அதிலும், 5 நிமிடத்துக்கு ஒரு முறை "ஆரவாரமான வெற்றி", "அபார வெற்றி" என்றெல்லாம் பில்டப் விளம்பரம் கொடுத்த படத்தை இப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் "சூப்பர் Hஇட் அதிரடி திரைப்படம் என்று ஒளிபரப்பும் நிலை..


சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 14 ல் காலை 11 மணிக்கு அதிரடி மெகாHஇட் திரைப்படம் தெனாவட்டு.. மதியம் 2 மணிக்கு உலக மகா வெற்றிப்படம் தின்டுக்கல் சாரதி, மாலை 6 மனி அதிரடி இமாலயா வெற்றிப்படம் படிக்காதவன் உங்கள் சன் டீவியில் என்ற விளம்பரத்தை எதிர்பார்க்கலாம்..


அடுத்து, நமது அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். ஆக்ஷன் நாயகனாக கட்சி ஆரம்பித்த கேப்டன் இன்று காமெடி நாயகனாக நிற்கிறார். இதோ இன்று அவர் வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் இரண்டு. இது வரையில் மக்களுடன் தான் கூட்டணி என்று சவடால் விட்டவர் , இறங்கி வர வேண்டிய துர்பாக்கியம். பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டு இல்லை, தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்று திருவாய் மலர்ந்துள்ளார். மக்களுடன் கூட்டு கசந்து விட்டதா இல்லை பாராளுமன்ற தேர்தல் மக்களுக்காக நடத்தப்படும் தேர்தல் அல்ல என கேப்டன் நினைக்கிறாரா?



மக்களுடன் கூட்டனி அமைத்து சென்னை செயின்ட்ஜார்ஜ் கோட்டையை பிடித்த இந்த காமெடி தலைவர் இப்போது டெல்லிக்கோட்டையை பிடிக்கும் நோக்கில் தேசிய கட்சிகளுடன் கூட்டனியாம்.



பாரளுமன்றத்தேர்தல் என்பதால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி என்று கூறும் இந்த கோமாளி 2011, சட்டமன்ற தேர்தல் எனவே மாநில கட்சிகளுடன் கூட்டு என்ற நிலையை எடுக்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்?



மக்களுடன் கூட்டணி என்று ரீல் சுற்றி வந்த இந்த தீடிர் தலைவருக்கு வந்த சோதனை பாவம்..


அடுத்து, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை இந்த ரீல் தலைவர் எடுத்துள்ளார். மின்சார பிரச்சனை போக்க திட்டம் என்னிடம் உள்ளது ஆனால் சொல்லமாட்டேன் என்று உளறிய இந்த தலைவர் இப்போது எந்த திட்டத்தையும் வெளிப்படையாக சொல்லமாட்டேன், 2011 ல் ஆட்சிக்கு வந்து நானே நிறைவேற்றுவேன் என்று அருள்வாக்கு அளித்துள்ளார். காரணம், அவரின் திட்டமான "மக்களுக்கு மருத்துவ காப்பீடு" திட்டத்தை தி மு க காப்பியடித்துவிட்டதாம்.. இனியும் தன்னிடம் உள்ள மற்ற திட்டங்களை வெளிப்படையாக சொன்னால் , அனைத்தையும் தி மு க காப்பியடித்துவிடுமாம்..


என்ன ஒரு பொறுப்பற்ற பேச்சு. மக்களுக்கு நன்மை நடக்கிறது என்பதில் இவருக்கு ஆர்வம் இல்லை. மாற்று கட்சி அதை செய்து பேர் எடுத்துவிடுமோ என்ற பொறாமை.. இவரெல்லாம் மக்களோடு கூட்டணி என்கிறார்.. விளங்கிடும் இவர் மக்கள் கூட்டணி. இதனால் தான் இவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் கூட்டணியில் இருந்து மாறி தேசிய கட்சி கூட்டணிக்கு அடி போடுகிறார் போலும்.


இந்த பதிவை படிக்கவரும் நண்பர்களின் மூலம் என் வருகைப்பதிவேட்டில் இது வரை வந்தவர் எண்ணிக்கை 25,000 தாண்டும் என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.. :)

வேதனையான உண்மை சம்பவம் - இப்படியும் மனிதர்கள்??

எனக்கு தெரிந்த நன்பர் ஒருவரின் சகோதரியின் வாழ்வில் நடந்த சோகம்.
இந்த சோக நிகழ்வு நடந்து முழுமையாக 2 வாரங்கள் கூட ஆகவில்லை.
இது போன்ற சம்பவங்கள் பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும் நேரில் , அதுவும் நன்பர் ஒருவர் வாழ்வில் நடந்ததை கேட்ட போது மனம் பதைபதைத்துவிட்டது.
நன்பரின் மூத்த சகோதரி திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. கனவருடன் நல்லபடியாக வாழ்க்கை சென்றுக்கொண்டிருக்கிறது. கனவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் நல்ல சம்பளத்தில் வேலை.

அன்பான கனவன், உறவுகள், பொருளாதார வசதி என்று எல்லாம் நன்றாக அமைந்த பெண்ணுக்கு ஒரே ஒரு குறை. திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை என்கிற மனக்குறை மட்டுமே. இருவருமே இது குறித்து மருத்துவ ஆய்வுக்கு சென்று வந்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த ஒரு குறையே அந்த சகோதரிக்கு எமனாக வரும் என்று இரண்டு வாரங்கள் முன்பு வரை கூட யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
ஆம், இந்த தம்பதிகள் இருவரும் குழந்தையின்மையின் காரணமாக ஒரு வித சோகத்தில் இருப்பதால், அதிலும் கனவர் வேலைக்கு சென்ற பின்னர் இந்த சகோதரி தனிமையில் தவிப்பதை தவிர்த்திடும் பொருட்டு பென் வீட்டார், இந்த தம்பதியினரை தங்கள் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி ஒரு தனி ப்ளாட்டில் ஒரு வருடத்திற்கு முன்னர் குடியமர்த்தினர்.. அவ்வப்போது போய் பார்த்து அறுதல் சொல்ல ஏதுவாக இருந்தது..


விரைவில் தங்கள் மகளுக்கு குழந்தை உண்டாகியிருக்கும் செய்தி வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அந்த பெற்றோருக்கு தலையில் இடி விழுந்ததது போல் வந்த செய்தி மகள் தன்னை உயிரோடு எரித்துக்கொண்டுவிட்டாள் என்பது தான்..
என்ன பாடுபட்டிருக்கும் அந்த பெற்றோரின் மனம்? அலறி அடித்து ஓடியவர்களுக்கு பாதி கருகிய நிலையில் மீட்கப்பட்ட மகளை தான் பார்க்க முடிந்தது.

விஷயம் இதுதான். அந்த பென்னுக்கும் அதே ப்ளாட்டில் இருக்கும் வேறு இரண்டு பென்களுக்கும் எதோ ஒரு விஷயத்தில் ஆரம்பித்த சிறிய மனக்கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு வருடத்தில் குரோதமாகிவிட்டது.


அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அந்த பென்கள் இவரின் குழந்தையின்மையை குறித்து ஏளனமாக பேச துவங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று , ஏதோ விஷயத்துக்காக ஆரம்பித்த வாய்ச்சன்டையில் அந்த பென்கள் இவரின் குழந்தையின்மை பற்றி மிக கடுமையாக விமர்சனம் செய்து சற்று ஆபாசமான வார்த்தைகளை வீசியதில் மனமுடைந்த அந்த சகோதரி தன்னைத்தானே அவர்கள் கண் எதிரிலேயே தீக்கிரையாக்கிக்கொண்டால்.
மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு , மருத்துவர்களின் போராட்டம் வெற்றிபெறாமல் அந்த சகோதரியின் உயிர் பிரிந்துவிட்டது.

எத்துனை பெரிய சோகம் அந்த குடும்பத்துக்கு.. ஈடு செய்ய முடியாத இழப்பு.. தீ நாக்குகள் மனதை சுட்டதால், தன் உடலையும் தீக்கிரையாக்கி ஒரு உயிர் அநியாயமாக பிரிந்துவிட்டது. தாங்கள் மேற்கொண்டுவரும் மருத்துவத்தின் பலனாக அந்த சகோகதரி கரு தரித்திருக்கவும் வாய்ப்புள்ளது.. அப்படி பார்க்கும்போதும் தன்னை மட்டுமின்றி இந்த உலகில் வந்திருக்க வேண்டிய ஒரு உயிரும் போய்விட்டது..

அந்த இரண்டு பெண்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் இவரை காப்பாற்றிட முனைந்த்தால் ஏற்பட்ட தீக்காயங்களுடன் மருந்துவமனையில் உள்ளார்.

யாரை குறை சொல்வது?
இந்த விஷயத்தில் வேறு வித முடிவுகள் எடுக்க வாய்ப்பிருந்தும் உணர்ச்சிவயபட்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் துரதிருஷ்டவச முடிவெடுத்த அந்த சகோதரியையா??

நாக்கில் விஷம் வைத்து திரிந்த அந்த பென்களையா?

அவரின் குழுந்தைப்பிறப்பை தள்ளிப்போட்ட ஏதோ ஒரு சக்தியையா??
இல்லை, ஒரு பெண் என்றால் திருமணம் முடிந்த சில மாதங்களின் கருத்தரிக்க வேண்டும், பிள்ளை பெற்றிட வேண்டும், இல்லையெனில் அவள் ஒதுக்கப்படவேண்டியவள், பழிக்கப்படவேண்டியவள் , பெண்மைக்கு தகுதியற்றவள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த சமூக கட்டமைப்பையா??

யாரை சொல்லி என்ன செய்வது.. ஒரு உடல் உயிருடன் தீக்கிரையாக்கப்படுவிட்ட சோகம் தீருமா?? அந்த குடும்பத்துக்கு ஆறுதல் தான் சொல்ல முடியுமா?
கைதாகி இருக்கும் அந்த பென்களின் குடும்பத்தில் நிலை என்ன??
சம்பந்தப்பட்ட அந்த 3 பெண்களுமே உணர்ச்சியவப்பட்டதன் விளைவு எத்துனை பேரை நிரந்தர சோகத்தில் ஆழ்த்திவிட்டது..

ஜெயலலிதாவிற்கு அருகதை உண்டா?

இலங்கை பிரச்சனையில் சாகும் வரை உண்ணாவிரதம் என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அமர்ந்து பின்னர் 4 வது நாளில் தன் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றார்.

உடனடியாக ஜெயா அம்மையார் வழக்கம் போல தன் அறிக்கை பல்லவியை ஆரம்பித்துவிட்டார்...

இது கருணாநிதியும் , திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம், சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொன்ன திருமாவளவன் ஏன் 4 வது நாளோடு முடித்துவிட்டார்? இலங்கை பிரச்சனை முடிந்துவிட்டதா என்று வழக்கம் போல் காழ்ப்புணர்சி அறிக்கையை கொடுத்துள்ளார்.

ஜெயா டீ வி வழக்கம் போல இதை தினம் 10 முறை ஒளி/ஒலிபரப்பு செய்து சந்தோஷப்பட்டார்கள்.

அதே போல, திருமாவின் உண்ணாவிரதத்தின் தொடர்புடைய பேருந்து எரிப்புகள், கல்வீச்சு குறித்த தன் சந்தேகங்களை எழுப்பினார்.. இந்த செலவுகளை கருணாநிதி எற்றுக்கொள்ளப்போகிறாரா அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் இருந்து வசூலிப்பாரா என்ற தன் பொது நல நோக்கு கருத்தை தெரிவித்திருந்தார்.

திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பா, கருணாநிதியுடன் சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப நடத்திய நாடகமா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். திருமாவையோ கருணாநிதியையோ நியாயப்படுத்தவில்லை

ஆனால், இந்த கேள்வி எல்லாம் கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா??

அவர் வரலாறு காணாத ஊழல் புரிந்துள்ளார், அவர் ஆட்சி சரியில்லை என்ற அளவுகோல் வைத்து இந்த கேள்வி எழப்பவில்லை..

ஆனால் ஜெயலலிதா கேள்வியெழுப்பிய இரண்டு விஷயங்களான உண்ணாவிரதம் கண்துடைப்பா?, நாடகமா?.. மற்றும் இந்த உண்ணாவிரதம் காரணமாக பொதுச்சொத்துக்கு நேர்ந்த பாதிப்புக்கு உண்டான இழப்பு எப்படி சரிகட்டப்படும்..

இந்த இரண்டு விஷயங்களிலும் ஜெயலலிதாவும் , அவரின் கட்சியும் எவ்வாறு நடந்துக்கொண்டது என்பதற்கு நேரடி எடுத்துக்காட்டுக்கள் உள்ளது.

1992 ல் ஜெயலலிதாவும் சாகும் வரை உண்ணாவிரதம் அமர்ந்தார். காவிரி தண்ணீருக்காக. தண்ணீர் வந்ததா? அவர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? வி சி சுக்லா வந்தார், தேவையானவற்றை செய்ய ஆவன செய்கிறோம் என்றவுடன் தன் "கேரவன்" புகழ் உண்ணாவிரத்தை 4 வது நாளில் முடித்துக்கொண்டார்.. அந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக இருந்து அவரின் ஆட்சி லட்சனம் சிரிப்பாய் சிரித்தது, எங்கும் ஊழல், லஞ்சம், ஆனவம், ஆடம்பரம் என்று கொடிகட்டி பறந்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்க துவங்கிய நேரம்.. இதனை திசைத்திருப்ப ஒரு 4 நாட்கள் " சாகும் வரை " கேரவன் உண்ணாவிரதத்தை நடத்தி முடித்தார். இப்படியான உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவிற்கு இப்போது திருமாவளவனை பார்த்து கேட்க அருகதை உள்ளதா??


இவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் நடந்து என்ன? தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அ தி மு க வினர் பேயாட்டம் ஆடித்தீர்த்தனர். பல இடங்களில் பேருந்துக்கள் கல்வீச்சுக்கு ஆளானது, தீ வைக்கப்பட்டது. ஒரு தனியார் பேருந்து அ தி மு க வினரால் கொளுத்தப்பட்டு பின் நிகழ்ந்த அனைத்தும் இன்னும் மறந்துவிடவில்லை.

இந்த போராட்டங்களினால் ஏற்பட்ட இழப்புக்கு ஜெயலலிதா தன் சொந்த காசு கொடுத்து (1 ரூ சம்பளத்தில் சேர்த்து வைத்த) சரிகட்டினாரா? இல்லை அ தி மு க விடமிருந்து வசூல் செய்தாரா?? இவருக்கு பதில் சசிகலா இந்த இழப்புகளுக்கு பொறுப்பேற்று பணம் செலுத்தினாரா??

அப்போது எதுவும் செய்யாமல் இப்போது கேள்வி கேட்க ஜெயலலிதாவிற்கு அருகதையுள்ளதா?? யார் வேண்டுமானால் கேள்வி கேட்கலாம் , ஆனால் ஜெயலலிதாவிற்கு கேள்வி கேட்கும் அருகதை கொஞ்சம் கூட கிடையாது.

பொத்திக்கொண்டு அடுத்து வரும் தேர்தல்களில் எப்படி வெற்றி பெறலாம் என்பதை பற்றி சிந்தித்தால் நலம்.

திருமங்கலத்தில் வைகோ வெற்றி

திருமங்கலம் வாக்கு என்னிக்கை முடிவடையும் தருவாயில் உள்ள இந்த நிலையில், 12 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 சுற்று மட்டுமே மீதமுள்ள நிலையில் தி மு க வெற்றி உறுதியாகியுள்ளது.

தே மு தி க - 11,000 & சரத்தின் ச மு க 700 வாக்குகளும் பெற்றுள்ளது.

தி மு க வின் லதா அதியமான் தனக்கு அடுத்தபடியாக உள்ள அ தி மு க வின் முத்துராமலிங்கத்தை விட சுமார் 36,150 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்( தி மு க - 70,000 , அ தி மு க - 34,000).

40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி மு க வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு உள்ளது

தலைப்பு பற்றிய விளக்கம். ம தி மு க வென்ற தொகுதியை ஜெ க்கு வைகோ தாரைவார்த்துவிட்டார், ஏமாளி, கோமாளி, அடிமை என்றெல்லாம் விமர்சனம் இருக்கிறது..

உண்மையில் வைகோ மிகத்தெளிவாக இருந்திருக்கிறார்.. எப்படியும் தோற்கப்போகும் இந்த தொகுதியில் நாம் ஏன் நின்று செலவு செய்யவேண்டும் என்றே இந்த தொகுதியை அ தி மு க தலையில் கட்டிய வைகோ விற்கு தான் உண்மையான வெற்றி.

குறிப்பாக திருமங்கலம் பேச்சை வைத்து தான் தன்னை ஜெ பொடாவில் கைது செய்தார் ஜெ, அதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தொகுதியை ஜெ க்கு தாரை வார்ப்பது போல வார்த்து தன் வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார் வைகோ.. அவரை பொறுத்தவரை இது அவரின் பெரு வெற்றி

திருமங்கலத்தில் தி மு க வெற்றி?

திருமங்கலம் இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. வாக்கு என்னிக்கை 12ம் தேதி நடைப்பெற்று அன்று 11 மனிக்கெல்லாம் முடிவுகள் தெரியும்..

இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று நக்கீரன் பத்திரிக்கை ஒரு கருத்து கனிப்பு நடத்தி முடிவுகளை இந்த வார இதழில் வெளியிட்ட்டுள்ளது. அதன் படி

தி மு க - 56 %

அ தி மு க - 36%

தே மு தி க 8.5%

ச ம க - 1.2%


தி மு க சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பு முடிவில் நக்கீரன் எழுதியுள்ளது

ஆண் வாக்காளர்கள் மனநிலை

தி மு க - 52%

அ தி மு க - 35%

தே மு தி க - 9%


பெண் வாக்காளர்கள் மனநிலை

தி மு க - 53%

அ தி மு க - 36%

தே மு தி க - 9%

வயதுவாரியாக
(18 - 25) தி மு க - 45, அ தி மு க - 30, தே மு தி க - 21, ச ம க - 2
(26 - 40) தி மு க - 54, அ தி மு க - 37, தே மு தி க 5, ச ம க - 2
(41 க்கு மேல்) தி மு க - 58, அ தி மு க - 39, தே மு தி க - 2

மக்கள் மநநிலை என்ற தலைப்பில் நக்கீரன் மக்களிடம் பேசியதிலிருந்து

பணம் கொடுத்தவர்களுக்கு வாக்கு

இரண்டு கட்சியினரும் கொடுத்திருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாக்குகள் இருவருக்கும் சரி சமமாக

பிள்ளைகள் கைவிட்ட எனக்கு அந்த மகராசன் 1 ரூ அரிசி கொடுத்து வாழவெச்சு இருக்காரு அவருக்கு தான் ஓட்டு - வயதான பெண்மனி

அ தி மு க எனக்கு பிடிக்கும்னாலும் அந்த அம்மா இலங்கை தமிழர் பிரச்சனையில தமிழருக்கு எதிரா இருக்க்கு அதனால இரட்டை இலைக்கு ஓட்டு போடமாட்டேன்.

ஒரு ரூ அரிசி கொடுத்திருக்காரு, ரேசன்ல பொருள் கிடைக்குது அதுனால சூரியனுக்கு ஓட்டு

சாத்தான்குளம் இடைத்தேர்தல்ல எங்க வேலைய காமிக்க முடிஞ்சது.. ஆனா இங்கே அழகிரி ஏரியா ல முடியல.. இலைய ஓரம்கட்டி சூரியன் முன்னாடி போகுது - ஒரு அதிமுககாரர்

ஆளுங்கட்சி எம் எல் ஏ வரனும், சூரியனுக்கு ஓட்டு

பென் வேட்பாளர், தொகுதியில் இருக்கும் ஒருவர போட்டிருக்கார் கலைஞர் - தி மு க காரர்

மின்வெட்டு, விலைவாசி ஏற்றம் அதி மு க விற்கு ஓட்டு

தி மு க , அதிமுக பணம் தந்து கலக்குறாங்க.. கேப்டன் வெறும் வாயில முழம் போடறார்... தேறாது.. தே மு தி க தொன்டர்


பன்னி மேய்க்க சொன்ன விஜயகாந்த் - கடுப்பான விவசாயிகள்

செங்காப்படையில் பிராச்சாரம் செய்த விஜயகாந்திற்கு அங்கு கூடிய விவசாயிகளை பார்த்தவுடன் உற்ச்சாகம் ஏற்பட்டது. உற்சாகத்தில் அவர், இலவசங்களை கொடுக்கறாங்கனு வாங்காதீங்க..இலவசங்களுக்கு அடிமையாகாதீங்க.. இன்னைகு காசு பணம் தருவாங்க.. நீங்களும் வெட்க்கமில்லாம சந்தோஷமா வாங்குறீங்க.. நாளைக்கு 2 பன்னிய கொடுத்து மேய்க்க சொல்லுவாங்க. .நீங்க பன்னி மேய்ப்பீங்களா? என்று கேட்க..

கடுப்பான விவசாயிகள், யோவ். என்ன பேசுற, லிமிட்டா பேசு.. மெட்ராஸ்ல இருந்து வந்து எங்களயா பன்னி மேய்ப்பீங்களானு கேட்குற?? உனக்கு இஷ்டமிருந்தா நீ பன்னி மேயி.. வந்தமா ஓட்டு கேட்டமானு போ.. தேவையில்லாம பேசாதே என்று கோபமாக குரல் விட.. இதில் சங்கடமான விஜயகாந்த் கிளம்பிச்சென்றார்..

நன்றி - நக்கீரன்

பல முறை நக்கீரன் சர்வே முடிவுகள் துல்லியமாக இருந்திருக்கிறது.. பார்க்கலாம் இம்முறை எப்படி இருக்கிறது என்று.. !

திகு திகு திருமங்கலம் யாருக்கு?

இடைத்தேர்தல் காரணமாக கரன்சி மழை, புகார் மழை, புகழ்ச்சி மழை, வசை மழை என்று திருமங்கலம் எங்கும் மழை பொழிகிறது..

தலைவர்களின் உச்சகட்ட பிரச்சாரம், அதிரடி புகார்கள், அடிதடி, வசை பாடுதல், மக்களுக்கும் இலவசங்கள், வாக்குறுதி, கோஷம் என இடைத்தேர்தலுக்கே உரிய அம்சங்களுடன் திருமங்கலம் தன் வாக்குப்பதிவை எதிர்நோக்கியுள்ளது..

பா ஜ க வும் , பா ம க வும் இந்த இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தன் நிலையை அறிவித்துவிட்ட நிலையில், களத்தில் தி மு க , அ தி மு க, தே மு தி க , ச ம க கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் கச்சை கட்டியுள்ளனர்..
இருப்பினும் நேரடி போட்டி என்னவோ தி மு க மற்றும் அ தி மு க விற்கு தான்.. ஒரளவு தே மு தி க வும் இவர்களுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது.. சரத்தின் ச ம க விற்கு இது முதல் தேர்தல்..

அனல் கக்கிய பிரச்சாரம் ஒருவழியாக இன்றோடு ஓய்ந்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைப்பெற இருக்கிறது


இரண்டு முக்கிய கட்சிகளும் வெற்றிக்கனியை பறித்தே ஆகவேண்டும் என்று முட்டி மோதுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே இந்த வெற்றியை கவுரவ பிரச்சனையாக பார்க்கிறது.

பா ஜ க போட்டியில்லை. இந்த தொகுதியில் பா ஜ க விற்கு ஓட்டு வங்கியும் இல்லை.. அ தி மு க வுடன் கம்யுனிஸ்ட்கள் இருப்பதாலும், பா ஜ க விஜயகாந்துக்கு கொக்கி போட்டு வருவதாலும் , பா ஜ கவினரை தே மு தி க விற்கு ஓட்டு போட சொல்லி வாய்மொழி உத்தரவு போகலாம்.. ஆனால் தே மு தி க வை விட பா ஜ க தொண்டர்கள் அ தி மு க விற்கே வாக்களிக்க விரும்புவர்.

பா ம க வின் நிலை தான் புரியவில்லை.. அவர்களுக்கும் இங்கே பெரிய வாக்கு வங்கி இல்லை. வாய் மொழி உத்தரவு அ தி மு க ஆதரவாக போகலாம், பணபலம், ஜாதி, தனி நபர் செல்வாக்கு என்ற வகையில் ஒரு சாராரின் வாக்கும் தி மு க விற்கும், ஒரு சாரார் வாக்கு அ தி மு க விற்கும் போகவே வாய்ப்பு அதிகம்.

பா ஜ க போட்டியிடாதது, போன முறை தி மு க கூட்டனியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் இப்போது தங்களுடன் இருப்பது, மேலும் பா ம க வின் நடுநிலை, மின்சார வெட்டு, விலைவாசி போன்றை அ தி மு க வின் ப்ளஸ்.
கடந்த தேர்தலில் ம தி மு க நின்று வென்ற தொகுதி இது. நியாயமாக ம தி மு க வே இப்போது போட்டியிட்டிருக்கவேண்டும், ஆனால் அ தி மு க விற்கு தொகுதியை வைகோ தாரை வார்த்துவிட்டார் என்ற குறை ம தி மு க வின் ஒரு சிறு பகுதியினரிடம் இருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அ தி மு க விற்கு ஒரு சிறிய , மிகச் சிறிய மைனஸ்.

தி மு க விற்கு என்று பார்த்தால், கம்யுனிஸ்ட் , பா ம க கூட்டனியை விட்டு சென்றது மிகப்பெரிய மைனஸ், கட்சியின் ஒரு பிரிவு தி மு க விற்கு எதிரான மனநிலையில் இருப்பது, விலைவாசி, மின்வெட்டு, சன் டீ வி யின் நடுநிலை , எப்போதும் இருக்கும் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை போன்றவை மிகப்பெரிய மைனஸ்.

மதுரை தினகரன் எரிப்பு சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பது மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பளிச்சென தெரிந்தது.

ப்ளஸ் என்று பார்த்தால், அதிகமாக எதுவுமில்லை.. , ஆட்சி அதிகாரம்,பென் வேட்பாளர், இலவசங்கள், கிலோ அரிசி 1 ரூபாய், அழகிரி.. இவை மட்டுமே.. வேண்டுமானால், தே மு தி க பிரிக்கப்போகும் அ தி மு க வாக்குகளை சொல்லலாம்.

இந்த இரண்டு கட்சிகளின் ப்ளஸ் மற்றும் மைனஸ் வைத்து பார்க்கும் போது, தி மு க விற்கு போன்ற இடைத்தேர்தலில் கிடைத்தது போல வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைத்திட வாய்ப்பில்லை என்றே தோண்றுகிறது.,

தி மு க வின் வெற்றி என்பது நூலிழையில் மட்டுமே இருக்கும் என்றே நினைக்கிறேன்..போன முறை மதுரை மேற்கு இடைத்தேர்தலில் தி மு க வின் கவுஸ்பாட்சா 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.. ஆனால் இந்த முறை 30,000 வித்தியாசம் இருக்குமா என்பது சந்தேகமே..

தி மு க, அ, ம, தே (தி மு க) - - இப்போ புதுசா செ மு க..??

அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்த வருடத்தின் முதல் பதிவு இடுகிறேன்!

ஏற்கனவே பல முன்னேற்ற கழகங்கள் தமிழகத்தில் இருப்பது போதாதென்று இப்போது புதுசாக இன்னும் ஒரு முன்னேற்ற கழகம் முளைத்திருகிறது , இந்த முன்னேற்ற கழகம் ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பவர்களை முன்னேற்றும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆம்! தன் ஊரை முன்னேற்ற ஒருவர் பல வழிகளில் முயற்சி செய்தார்.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார், தோல்வியே கிடைத்தது, நாடளுமன்ற தேர்தல்.. அங்கும் தோல்வியே, நகராட்சி தலைவர் பதவிக்கு முயன்றார் , அங்கேயும் தோல்வி முகம்.. வார்டு உறுப்பினர் பதவியும் கானல் நீர் ஆனது..
இந்த தோல்விகளை எல்லாம் கண்டு துவண்டுவிடவில்லை.. தன் நகராட்சியை முன்னேற்றியே தீரவேண்டும் என்ற வெறி அவருக்கு இன்னும் கூடிக்கொண்டேதான் போனது.

தான் வாழும் நகராட்சியை எப்பாடுபட்டாவது உயர்த்திட வேண்டும் என்ற அவரது தீவிர சிந்தனையின் வடிவம் தான் இந்த செ மு க.

திரு எ.சுப்பிரமனியன் தான் அந்த விடா முயற்சியாளரும், செ மு க வின் நிறுவனரும் ஆவார்.

அதென்ன செ மு க??? அது தான் செங்கல்பட்டு முன்னேற்ற கழகம்.

சுப்பிரமனியன் செங்கல்பட்டு வர்த்தக சங்கத்தை நடத்தி வருபவர்.

செங்கல்பட்டு - சென்னையிலிருந்து தாம்பரம் மார்கமாக 40 கி மீட்டர் தூரத்தில் இருக்கும் நகராட்சி.. செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஆறுமுகம் (பா ம க).

செங்கல்பட்டு பாராளுமன்ற தொகுதியின் எம் பி (பா ம க) திரு ஏ கே மூர்த்தி - முன்னாள் ரயில்வேத்துறை அமைச்சர்.

தான் ஒரு அ தி மு க அனுதாபியும், தீவிர எம் ஜி ஆர் ரசிகன் என்றும் கூறும் எ. சுப்பிரமனியன். இன்று எம் ஜி ஆரை அ தி மு க புறக்கணித்ததை ஜீரனிக்கமுடியாமல், தனி கட்சி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் (கட்சி பெயர்ல எம் ஜி ஆரே இல்லயே???#$#).

ஊழலற்ற , தூய்மையான, ரவுடியிசமற்ற நகரமாக செங்கல்பட்டை மாற்றிடும் லட்சியுத்துடன் இந்த புது கட்சியை தொடங்கி , கொடி அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்..

எம் எல் ஏ, எம் பி போன்ற பதவிகள் வேண்டாமென்றும், நகராட்சி தலைவர் என்ற சிறிய பதவிக்கு வந்து , அதன் மூலம் செங்கையின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று சபதமிடுகிறார். விரைவில் செங்கல்பட்டு முழுதும் தன் கட்சி கொடியேற்றி கட்சியை வளர்க்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

நல்லவேளையாக இவர் 2011 ல் நான் தான் முதல்வர் என்று சொல்லவில்லை.. அந்த வகையில் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.. இல்லையெனில் ஏற்கனவே இருக்கும் 2011ன் 13 முதலவர்களுடன் இவரும் 14 வது முதல்வர் வேட்பாளராக வந்திருப்பார்..

இவரது செ மு க செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இப்படியே போனால், விரைவில் தா. மு க (தாம்பரம் முன்னேற்ற கழகம்) , வி மு க (விழுப்புரம் முன்னேற்ற கழகம்) அ மு க (அம்பத்தூர் முன்னேற்ற...) தின்டிவனம் மு க, கும்பகோனம் மு கழகம்.. தஞ்சாவூர் முன்னேற்ற கழகம் என்று சுமார் 300 கழகங்கள் வரலாம்..

இன்னும் ஒரு படி மேலே போய், "குரேம்பேட்டை முன்னேற்ற கழகம்", "சைதை முன்னேற்ற கழகம்", "போரூர் முன்னேற்ற கழகம்", "வத்தலகுண்டு முன்னேற்ற கழகம்", "பள்ளிக்கரனை 3 வது சந்து முன்னேற்ற கழகம்",, "காசிமேடு கோவிந்தப்பன் தெரு முன்னேற்ற கழகம்" . "மாட்டுத்தாவனி முன்னேற்ற கழகம்", "களக்காடு முட்டு சந்து முன்னேற்ற கழகம்" என்றெல்லாம் வரும் போலிருக்கிறது.. "ஆனைவயல் ஆறாம் நம்பர் வீடு" முன்னேற்ற கழகம்

இதுவும் நல்லாத்தான் இருக்கு..