திகு திகு திருமங்கலம் யாருக்கு?

இடைத்தேர்தல் காரணமாக கரன்சி மழை, புகார் மழை, புகழ்ச்சி மழை, வசை மழை என்று திருமங்கலம் எங்கும் மழை பொழிகிறது..

தலைவர்களின் உச்சகட்ட பிரச்சாரம், அதிரடி புகார்கள், அடிதடி, வசை பாடுதல், மக்களுக்கும் இலவசங்கள், வாக்குறுதி, கோஷம் என இடைத்தேர்தலுக்கே உரிய அம்சங்களுடன் திருமங்கலம் தன் வாக்குப்பதிவை எதிர்நோக்கியுள்ளது..

பா ஜ க வும் , பா ம க வும் இந்த இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தன் நிலையை அறிவித்துவிட்ட நிலையில், களத்தில் தி மு க , அ தி மு க, தே மு தி க , ச ம க கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் கச்சை கட்டியுள்ளனர்..
இருப்பினும் நேரடி போட்டி என்னவோ தி மு க மற்றும் அ தி மு க விற்கு தான்.. ஒரளவு தே மு தி க வும் இவர்களுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது.. சரத்தின் ச ம க விற்கு இது முதல் தேர்தல்..

அனல் கக்கிய பிரச்சாரம் ஒருவழியாக இன்றோடு ஓய்ந்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைப்பெற இருக்கிறது


இரண்டு முக்கிய கட்சிகளும் வெற்றிக்கனியை பறித்தே ஆகவேண்டும் என்று முட்டி மோதுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே இந்த வெற்றியை கவுரவ பிரச்சனையாக பார்க்கிறது.

பா ஜ க போட்டியில்லை. இந்த தொகுதியில் பா ஜ க விற்கு ஓட்டு வங்கியும் இல்லை.. அ தி மு க வுடன் கம்யுனிஸ்ட்கள் இருப்பதாலும், பா ஜ க விஜயகாந்துக்கு கொக்கி போட்டு வருவதாலும் , பா ஜ கவினரை தே மு தி க விற்கு ஓட்டு போட சொல்லி வாய்மொழி உத்தரவு போகலாம்.. ஆனால் தே மு தி க வை விட பா ஜ க தொண்டர்கள் அ தி மு க விற்கே வாக்களிக்க விரும்புவர்.

பா ம க வின் நிலை தான் புரியவில்லை.. அவர்களுக்கும் இங்கே பெரிய வாக்கு வங்கி இல்லை. வாய் மொழி உத்தரவு அ தி மு க ஆதரவாக போகலாம், பணபலம், ஜாதி, தனி நபர் செல்வாக்கு என்ற வகையில் ஒரு சாராரின் வாக்கும் தி மு க விற்கும், ஒரு சாரார் வாக்கு அ தி மு க விற்கும் போகவே வாய்ப்பு அதிகம்.

பா ஜ க போட்டியிடாதது, போன முறை தி மு க கூட்டனியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் இப்போது தங்களுடன் இருப்பது, மேலும் பா ம க வின் நடுநிலை, மின்சார வெட்டு, விலைவாசி போன்றை அ தி மு க வின் ப்ளஸ்.
கடந்த தேர்தலில் ம தி மு க நின்று வென்ற தொகுதி இது. நியாயமாக ம தி மு க வே இப்போது போட்டியிட்டிருக்கவேண்டும், ஆனால் அ தி மு க விற்கு தொகுதியை வைகோ தாரை வார்த்துவிட்டார் என்ற குறை ம தி மு க வின் ஒரு சிறு பகுதியினரிடம் இருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அ தி மு க விற்கு ஒரு சிறிய , மிகச் சிறிய மைனஸ்.

தி மு க விற்கு என்று பார்த்தால், கம்யுனிஸ்ட் , பா ம க கூட்டனியை விட்டு சென்றது மிகப்பெரிய மைனஸ், கட்சியின் ஒரு பிரிவு தி மு க விற்கு எதிரான மனநிலையில் இருப்பது, விலைவாசி, மின்வெட்டு, சன் டீ வி யின் நடுநிலை , எப்போதும் இருக்கும் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை போன்றவை மிகப்பெரிய மைனஸ்.

மதுரை தினகரன் எரிப்பு சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பது மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பளிச்சென தெரிந்தது.

ப்ளஸ் என்று பார்த்தால், அதிகமாக எதுவுமில்லை.. , ஆட்சி அதிகாரம்,பென் வேட்பாளர், இலவசங்கள், கிலோ அரிசி 1 ரூபாய், அழகிரி.. இவை மட்டுமே.. வேண்டுமானால், தே மு தி க பிரிக்கப்போகும் அ தி மு க வாக்குகளை சொல்லலாம்.

இந்த இரண்டு கட்சிகளின் ப்ளஸ் மற்றும் மைனஸ் வைத்து பார்க்கும் போது, தி மு க விற்கு போன்ற இடைத்தேர்தலில் கிடைத்தது போல வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைத்திட வாய்ப்பில்லை என்றே தோண்றுகிறது.,

தி மு க வின் வெற்றி என்பது நூலிழையில் மட்டுமே இருக்கும் என்றே நினைக்கிறேன்..போன முறை மதுரை மேற்கு இடைத்தேர்தலில் தி மு க வின் கவுஸ்பாட்சா 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.. ஆனால் இந்த முறை 30,000 வித்தியாசம் இருக்குமா என்பது சந்தேகமே..

3 கருத்துக்கள்:

ராஜேஷ், திருச்சி said...

ADMK Should and Will Win for Sure.. ! with a good margin

வாக்காளன் said...

தி மு க விற்கு வெற்றி வாயுப்பு அதிகம் உள்ளடு.. குறிப்பாக 1 ரூ அரிசிக்காக கிராமப்புற வாக்குகளும்.. ஆளுங்கட்சி எம் எல் ஏ வரட்டுமே என்ற மனபான்மையாலும்.. மேலும் பென் வேட்பாளர்

tommoy said...

தி மு க வெற்றிபெரும் என்றே தோண்றுகிறது..