Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

ரஜினி விரலில் ருத்ராட்சம்..


ருத்ராட்சம்..


ரஜினி பற்றிய அடுத்த மேட்டருக்கு பிள்ளையார் சுழி போடும் வேலையை குமுதம் தொடங்கிவிட்டது.. அது டமார் என வெடித்து கிளம்புமா அல்லது புஸ் என்று போகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.


மக்கா, இந்த பதிவு ரஜினி பற்றியல்ல, ஏற்கனவே ரஜினி பற்றி 2 பதிவு போட்டாச்சு.. இது ருத்ராட்சம் பற்றியது.


அருனாசலம் படத்தில் ருத்ராட்சம் தான் கதையின் முக்கிய டர்னிங்க் பாயின்ட் ஏற்படுத்தும்..ரஜினி எனும் போதே,நெற்றியின் பட்டை, கழுத்துல ருத்ராட்சகொட்டை, பரட்டை தலை என்கிற டயலாக் பிரசித்தம்


ரஜினிக்கும் ருத்ராட்சத்துக்கும் ஏதோ தொர்டர்புள்ளது போலும்.


இதோ இந்த ருத்ராட்சத்தின் பயணமும் ரஜினியிடமிருந்தே ஆரம்பம் ஆகிறது.. எவ்வுளவு தூரப்பயணம் என்பது போக போகத்தான் தெரியும்..

இந்த வார குமுதம் ரிப்போர்டரில், ரஜினியின் கடந்த கால நிகழ்வுகள்(காவிரி, கர்நாடக எதிர்ப்பு, குசேலன் தோல்வி, இலங்கைப்பிரச்சனையில் திடீர் விசுவரூபம் , சத்யராஜ், ராமதாஸ் பாசம்) பற்றிய கட்டுரை.


அதாவது, ஒரு கட்டத்தின் ரஜினியை எதிர்த்தவர்கள் கூட(ராமதாஸ், சீமான், சத்யராஜ்) இப்போது அவரை பாராட்டிபேசுவதன் காரணம், ரஜினியின் விரலில் (அதுவும் ஆட்காட்டிவிரலில்) இருக்கும் ருத்ராட்ச மோதிரமாக இருக்கலாம் என்று ரிப்போர்ட்டரின் ஆய்வறிக்கை சொல்கிறது.

இது பற்றி மேலும் விவரங்களுக்கு அவர்கள் சோதிடர் ஷெல்வியை தொடர்பு கொண்ட போது அவர் சில விஷயங்களை சொல்லியுள்ளார், அதில் தான் ஒரு சந்தேகம்..

நீங்கள் சொல்வது போல், ரஜினி ஆள்காட்டி விரலில் ருத்ராட்ச மோதிரம் அணிந்திருப்பது உண்மையிலேயே விசேஷமானதுதான்
குரு மேட்டில் ருத்ராட்ச மோதிரம் அணிவதன் மூலம் வலிமை, தன்னம்பிக்கை கிடைக்கும். அசைவம் மீது வெறுப்பும், சைவத்துக்குரிய நாட்டமும் ஏற்படும். தப்புத் தப்பாகப் பேசுவது குறைந்து, கட்டுப்பாடும் தீர்க்கமான முடிவெடுக்கும் மனநிலையும் கிடைக்கப் பெறுவார்கள்.


அவரது ரசிகர்கள் மத்தியில் அதற்கு பெரும் `கிராக்கி' ஏற்பட்டது. அதே போல் ருத்ராட்ச மோதிரத்தையும் அவரது ரசிகர்கள் அணிய முயன்றால், அதில் சிக்கல் இருக்கிறது'' என்று புதுகுண்டைத் தூக்கிப் போட்டவர்,


``ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிவதால் எப்படி பலன்கள் கிடைக்குமோ அதுபோல, சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிந்தால், அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் இளைய வயதினர் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்
மேற் சொன்ன வரிகள் தான் ஷெல்வி சொன்னதாக ரிப்போர்டரில் வந்தது..

முதலில் இந்த ருத்ராட்சம் அணிவதால், சுயகட்டுப்படு வரும்,தீர்க்கமான முடிவெடுப்பார்கள் என்று சொல்லி இருக்கிறார்...ஆக, இந்த ருத்ராட்சத்துக்கு மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளாக தான் அர்த்தம்?
பின்பு என்ன நினைத்தரோ,சுயகட்டுப்பாட் இல்லாதவர்கள் இதை அணிந்தால் விளைவுகளை அனுபவிக்க வேண்டும், அதானால் கட்டுப்பாடு இல்லாதவர்கள் இதை அனியகூடாது என்று கூறீயுள்ளார்,

ருத்ராட்ச மோதிரத்துக்கு அந்த சக்தி இருக்கிறதென்றால், யார் அணிந்தாலும் அவர்களை கட்டுப்பாடுடையவர்களாக அது மாற்றிவிடவேண்டுமே..

ரிப்போர்ட்டரும், ஜீ வீயும், நற்கீரனும் எழுதுவது போல், ரஜினி அரசியலுக்கு வர முடிவெடுத்துவிட்டார், கடைசி நேரத்தில் அவர் நலம் விரும்பிகளின் சொல்லால் மனம் மாறவும் வாய்ப்புள்ளது என்று முடிப்பார்கள் ஏனெனில் ரஜினி அரசியல் என்று சொன்னால், நாங்கள் துல்லியமாக செய்தி கொடுத்தோம் என்று செய்தி போடவும், அதே நேரம் ரஜினி வரவில்லை என்றாலும், அதான் அப்போவே சொன்னோம்ல மனசு மாற வாய்ப்புள்ளதுனு அப்படினு தங்கள் வசதிக்கு போட்டுகலாம்..

ருத்ராட்சம் விஷயத்திலும், பொதுவாகவே ஜோதிடத்திலும் கடைப்பிடிக்கபடும் உத்தியும் இதுவே தானோ??

எது எப்படியோ, ருத்ராட்ச வியாபாரிகள் இப்போதே நிமிர்ந்து விட்டார்கள் கல்லா கட்ட.. இந்த ருத்ராட்சத்திற்கு இந்த பலன், மதுரையில் 11 ம் தேதி, நெல்லையில் 14, சிதம்பரத்தில் 15, கடலூரின் 20 , பொள்ளாச்சியில் 22 என்று ராஜ் மற்றும் விஜய் தொலைகாட்சியில் வரிசை கட்டி வர ஆரம்ப்பித்துவிடுவார்கள் ருத்ராட்ச சோதிடர்கள்
நன்றி - குமுதம் ரிபோர்ட்டர்

ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு...

ராகவேந்திரா மன்டபத்தில் ரஜினி தன் ரசிகர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்..

ரசிகர்கள் - எதிர்கால திட்டம்?
ரஜினி - ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டும். என் எதிர்கால திட்டம் எந்திரன் படம்.

ரசிகன் - தொடர்ந்து சந்திப்பீர்களா?
ரஜினி - ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, ராகவேந்திரா மன்டபத்தில் புது தொலைப்பேசி எண்கள் வைக்கப்படும், நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.. முக்கிய விஷயங்களில் நானே பேசுவேன்.

ரசிகன் - எந்திரன்?
ரஜினி - இந்தியாவிலேயே சிறந்த படமாக வரும்.

ரசிகன் - ரசிகர்கள் அந்தஸ்து உயர்த்தப்படுமா??
ரஜினி - அந்தஸ்தை நாம் தேடி போக கூடாது, அதுவாக நம்மை தேடி வரவேண்டும்

ரசிகன் - மக்களுக்கு மன்றங்கள் மூலம் நலதிட்ட உதவிகள்?
ரஜினி - பணம், ஜனம் ஒன்று சேர்ந்தால் அரசியல் வந்துவிடும்.. எனக்கு தோண்றும் நல்ல காரியங்களை நான் தனிப்பட்ட முறையில் செய்வேன். உங்களுக்கு தோண்றும் நல்ல காரியத்தை நீங்கள் செய்யுங்கள்

ரசிகன் - நீங்கள் தொண்டு செய்வது நிறுத்தப்பட்டது??
ரஜினி - இலவச திருமணங்களை 30 மாவடத்திலும் நடத்தினேன். தொடர்ந்து தேவை இல்லை என்பதால் நிறுத்தினேன். தேவை என்றால் மீண்டும் செய்வேன்.

ரசிகன் - குசேலன்? 25 கோடி சம்பளம்?

ரஜினி - அதில் எனக்கு கவுரவ தோற்றம் என்று பூஜையிலேயே சொன்னேன். 25 கோடி வாங்கவில்லை

ரசிகன் - நடிப்பு தொடருமா?
ரஜினி - புகழுக்காக, பணத்துக்காக இல்லாது, நல்ல கேரக்டர் இருந்தால் நடிப்பேன்

ரசிகன் - சத்யநாரயனா செய்ல்பாடு தீவிரமாக இல்லை..
ரஜினி - அவருக்கு உடல் நலமில்லை.

ரசிகன் - ராகவேந்திரா, அருனாச்சலேச்வர், பாபாஜி என மாறுவது?
ரஜினி - மதம் மாறுதல் தான் தப்பு, அது கூட அவரவர் விருப்பம்... நான் செய்வது ஆண்மீக விருத்திக்கு..

ரசிகன் - உங்களை குழப்பவாதி என்று பத்திரிக்கைகள்..
ரஜினி - உண்மையாக இருக்கலாம், சில நேரங்களில் நான் செய்வது அப்படித்தான் உள்ள்து.. நான் நினைத்ததை பேசுகிறேன். அவரவர் அவர் கோணத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்.. எது சரி என படுகிறதோ அதை தான் பேசுவேன், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

ரசிகன் - ஒக்கனேக்கல் பிரச்சனை?
ரஜினி - மன்னிப்பு கேட்கவில்லை.. திரைப்படத்துக்கு எதிராக இருப்பவரை உதைக்கவேண்டும் என்றேன்.. அது கர்நாடக மக்களுக்கு எதிராக என எடுத்துக்கொண்டார்கள்.. நான் தெளிவாக பேசாததால் இருக்கலாம். வருத்தம் மட்டும் தெரிவித்தேன்.. மன்னிப்பு இல்லை

ரசிகன் - 30 ஆண்டுகளாக ஆசியாவில் பெரிய சக்தியாக உள்ளீர்கள்
ரஜினி - என் ரசிகர்களாகிய உங்களால்

ரசிகன் - பிறந்தநாள் சந்திப்பு?
ரஜினி - சந்திக்க மாட்டேன். ஏன் பிறந்தேன் என்று யோசிக்கவே அந்த நாளை பயன்படுத்துகிறேன்.. தனிமையில் யோசிக்க விரும்புகிறேன்.. குடும்பதாரும் தொந்தரவு செய்வதில்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள்.. தாய் தந்தையை பாருங்கள்.. கடமையை செய்யுங்கள், பலனை எதிர்பாருங்கள்..

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே அரசியலில் வருவது நடக்கலாம்.தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் என்ன நினைக்கிறார் என்று

ரஜினி இந்த முடிவில் இருக்கிறார், அந்த முடிவில் இருக்கிறார் என்று ஏற்கனவே அனைத்து புலனாய்வு பத்திரிக்கைகளும் ஏதேதோ எழுதியது.. அப்படி எதுவும் நடக்கவில்லை..

இப்போது இந்த பதில்களுக்கு மூக்கு, கண் வைத்து, எப்படியெல்லாம் எழுத போகிறார்கள் தெரியல.. கொஞ்ச நாளைக்கு பத்திரிக்கைகள் காட்டில் மழை ec