ஜெயா, வைகோவுக்கு ஆப்படிக்கும் நாள் தூரத்தில் இல்லை

விடுதலையாகி இன்று வைகோ மதுரை வந்தபோது , சமீபத்தில் கைதான இயக்குனர்கள் அமீர், மற்றும் சீமான் வைகோவை சந்திதார்கள்.

பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ இது மரியாதை நிமித்த சந்திப்பு என்றும், இந்த இயக்குனர்கள் தமிழகத்தின் உரிமை போராளிகள் என்றும், இவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

இவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

வைகோ அண்ணாச்சி, ஜெயிலுக்கு போனா உடனே இழுத்து போர்த்தி தூங்கிடுவீங்களா? பேப்பர் எல்லாம் படிக்கவே மாட்டீங்களா?? அவங்கள கைது செய்ய சொல்லி யார் குரல் கொடுத்தாங்க தெரியுமா?

மதுரையில சொன்னத அப்படியே ரயிலேறி சென்னை வந்து போயஸ் தோட்டத்து பக்கமா பாத்து சொல்லுங்க அண்ணாச்சி.. அப்புறம் அன்பு சகோதரி உங்களுக்கு அடிக்குற ஆப்பு எவ்ளோ பெரிசுனு எல்லோரும் பார்க்கட்டும்..

அன்புச்சகோதரி பயங்கரவாதிகள், தீவரவாதிகள் நு சொல்லுவாங்கலாம்.. அருமை அண்ணன் வந்து தமிழர் நலன் காக்கும் போராளினு சொல்லுவாராம்.. போங்கடா டேய்... !

9 கருத்துக்கள்:

ஜோ/Joe said...

:)))

பழமைபேசி said...

ஆப்படிக்கும் நாள் தூரத்தில் இல்லை!

Unknown said...

மானம் ரோஷம் உள்ளவங்கன்னா எப்பவோ இது நடந்திருக்கும்.

Anonymous said...

Jayalalitha is an actress by birth.
Vaiko also a good actor by nature.

Unknown said...

நெத்தி அடி வீ எம்.. இதுங்க எப்ப திருந்த போகுதோ.

Unknown said...

ரென்டு பேரும் சேர்ந்து போடற நாடகம் மாதிரி தான் தெரியுது..

ஜோசப் பால்ராஜ் said...

அன்புச் சகோதரி மேடம் கூட இருக்கது அரசியல் கூட்டு, இயக்குநர்களோட இருக்கது தமிழ் உணர்வு கூட்டு , அதையும் இதையும் குழப்பிக்ககூடாது.

என்ன செய்யிறது, வைகோ நெம்ப குழப்பத்துல இருக்காரு.
ஒன்னு தொண்டை கிழிய உணர்சிவசப்படுறத நிப்பாட்டனும், இல்ல அந்தம்மாவோட இருக்க கூட்டணியில இருந்து வெளியேறனும். ரெண்டையும் செஞ்சுகிட்டு வரவர ஒரு அரசியல் காமெடியனாகிட்டு இருக்காரு.

Anonymous said...

Kolukaiya parakka vittuttu Daily aappadikkarathae vaelaiyaa vachikkittu irukkira manjal thundu pagutharivathi nallvaroda kaalathai ootturathaivida oru Bold lady ta Kolkaiya vidama koottaniyila irukkirathu far far better.

etho namakku therinjathu.. :)

Kalaingar said...

மஞ்சள் துன்டு என்று என்னை விளித்த தங்களை பெயிரிட்டு கூட அழைக்க முடியாது அனானியாக வந்து பேசியிருக்கும் நன்பரே..

என்ன ஆப்பு நான் அடித்தேன் என்று பதிவு போடுங்கள் பார்க்கலாம்..

அட, நீங்கள் தான் நாடோடி அனானியாச்சே. உங்களுக்கு வலைத்தளம் என்று தனியாக எதுவும் இருக்காதே..