எனக்கொரு சந்தேகம் , தீர்த்து வைய்யுங்களேன்..


நம்ம ஆற்காட்டு அண்ணன் தலை தமிழ்நாட்டுல இப்படி உருளுது.. அவரே நொந்து நூலா போயி , அடுத்து தேர்தலில் தி மு க தோற்க மின்வெட்டு காரணமா இருக்கும்னு சுய புலம்பல் செய்யறாரு.. தும்ப விட்டு வால் பிடிச்ச கதையா, மின்வெட்டு அபாயம்னு செய்தி வந்த காலத்துல தேவையான நடவடிக்கை எடுக்காம, அவர் இஷ்டத்துக்கு அறிக்கைவிட்டுட்டு இப்போ குய்யோ முய்யோ நு கத்துறாரு..

அண்ணாச்சி - அடுத்த எலக்ஷன்ல நீங்க எங்க நின்னாலும் உங்களுக்கு ஷாக் அடிக்கத்தான் போகிறதுங்கோ.. வடிவேலு கூட வேண்டாம், அவர் கூட வர போண்டா மனி போது உங்கள வீட்டுக்கு அனுப்பறதுக்கு.. .. ஜெனரேட்டர் வீட்டுல இருக்குதுல்லா?? ஏன்னா, 2011 க்கு அப்புறம் உங்க எந்த வீட்டுக்கும் 24 மனி நேர மின்(க)வெட்டு இருக்கும் வாய்ப்பு இருக்குங்க..

சரி அதவிடுங்ககோ, விஷயத்துக்கு வருவோம்.. என்ன மின்வெட்டுனு கேட்டா உடனே கலைஞர், ஆற்க்காட்டர் எல்லோரும் பீகார பாருங்கோ.. ஒரிசாவ பாருங்கோ, ஆந்திராவ பாருங்கோ அங்கேயெல்லாம் கூட கடும் மின்வெட்டு, அதை விட இங்கே பரவாயில்லைனு சொல்றாங்க...ஆக, இரு ஒரு தேசிய பிரச்சனை.. இது இந்தியா முழுக்கு இருக்கு அதானே??

அப்போ மின்சாரவண்டி , அதாங்க ரயில். அது எப்படிங்க பிரச்சனை இல்லாம ஓடுது.. வீட்டுக்கே இவ்ளோ மின்சாரம் தேவைபடுதுன்னா, பல ஆயிரம் மைல் ஓடுற ரயிலுக்கு எவ்ளோ தேவை?? அதை எப்படி சமாளிக்கறாங்க..? எங்கேயிருத்து அவ்ளோ மின்சாரம் வருது??? கூடிய சீக்கிரம் ரயில் வன்டிக்கு கூட 1 , 2 மனிநேர மின்வெட்டு வருமா???

ஆற்க்காட்டாரே, லாலு கிட்ட பேசிப்பாருங்களேன்.. கொஞ்சம் மின்சாரம் கடன் தரமுடியுமானு.. உங்க கூட்டணில தானே இருக்காங்க.. தந்தாலும் தருவாரு.. என்ன நான் சொல்றது.. ???

வீ எம்

2 கருத்துக்கள்:

tommoy said...

//வடிவேலு கூட வேண்டாம், அவர் கூட வர போண்டா மனி போது உங்கள வீட்டுக்கு அனுப்பறதுக்கு.. .. //

இது தாங்க வீ எம் பன்ச். :)

madhu said...

haha. good one! :)