பேச்சுவார்த்தைக்கு தயார் : ராஜேபக்ஷே அறிவிப்பு

பேச்சுவார்த்தைக்கு தயார் : ராஜேபக்ஷே அறிவிப்பு

கொழும்பு : இலங்கை பிரச்னையை முடிவிற்குக் கொண்டுவர சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயாராய இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் நேற்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டை விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானது என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் ராஜபக்ஷே கூறினார்.

ஆயுதங்களைக் களைவதற்கு புலிகள் சம்மதம் தெரிவித்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனி நாடு கோரிக்கையைத் தவிர்த்து, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவிக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் ராஜபக்ஷே கூறினார்.

நன்றி - குமுதம் (latest News)

1 கருத்துக்கள்:

வீ. எம் said...

test..test..test