மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமா..கலைஞர்

ஈழ விவகாரத்தில் கலைஞர் மீது கடுமையான விமர்சனம் விழுந்துவருகிறது. ஜெயலலிதாவை கூட நியாயப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

இரு விதமான நபர்கள்.. ஒன்று கருணாநிதி என்றாலே வேப்பங்காய் என கசக்கும் பிரிவு, கலைஞரை ஆதரிக்கும் / கலைஞர் சார்ப்பு என்றிருக்கும் பிரிவு மற்றொன்று (நடுநிலையானவர்கள் என்று யாரும் இல்லை என்பதே உண்மை - சும்மானாச்சும் நான் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளலாம் அவ்வளவே).

இதில் முதல் பிரிவானவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் கருணாநிதியை வறுத்தெடுக்க என்று பார்த்திருந்தவர்கள், கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் வறுத்தெடுத்துவிடுவார்கள் (சில நேரங்களில் தங்களை நடுநிலைவாதி என்று சொல்ல்லிக்கொள்வார்கள் :) )

கலைஞர் ஈழ விசயத்தில் எந்த வித முடிவு எடுத்திருந்தாலும் அவர்களின் விமர்சன முறை மாறி இருக்குமே தவிர கருணாநிதி எதிர்ப்பு எதிர்ப்பாக தான் இருந்திருக்கும்.. ஆக கலைஞர் இவர்கள் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்துவிட்டார் என்று சொல்வது தவறு.

ஆனால் இரண்டாவதாக உள்ள பிரிவினரின் விமர்சனத்திற்கு நிச்சயம் கலைஞரே காரணம். முழுக்க முழுக்க.. !

ஏன் எப்படி எதற்கு என்பதை பற்றி விரிவாக (அள்ள அள்ள குறையாமல் வரும்) அடுத்த பதிவில் பார்க்கலாம்..

இங்கே நம் மற்ற தலைவர்கள் மருத்துவர் அய்யா, திருமா, வைகோ பற்றி பார்க்கவேண்டியுள்ளது.. இவர்கள் மூவருமே ஈழ விசயத்தில் தங்கள் மேல் எந்த விதமான எதிர்வினை விமர்சனங்கள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். நடந்துக்கொண்டார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது, சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அப்படி பெரிதாக விமர்சனம் விழாது பார்த்துக்கொண்டார்கள். மூவருமே எந்த பதவியிலும் இல்லை என்பதே பெரிய ப்ள்ஸாகி போனது..

மருத்துவர் ராமதாஸ் - காங்கிரஸ் முன்னாள் தலைவரின் சம்பந்தி, விடுதலைப்புலிகள் பற்றி வெளிப்படையாக பேசிவந்தார் சில மாதங்களுக்கு முன்.. சீமான் , அமீர் , திருமாவளவன் விஷயத்தில் சிலிர்த்தெழுந்த சிங்கக்குட்டி காங்கிரஸ் தலைகள் எல்லாம் ஏனோ இவர் விஷயத்தில் மட்டும் குட்டிப்போட்ட நாய்குட்டிகள் போல ஈனஸ்வரத்தில் முனக மட்டுமே செய்தார்கள். அங்கேயும் பெரிய எதிர்ப்பு விமர்சனம் இல்லை.

ஈழத்தமிழருக்கு துரோகம் செய்யும் இந்திய அரசே என்று இவர் குரல் கொடுத்தாலும் , தன் மகன் உட்பட இவரது கட்சியினர் அதே இந்திய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் என்பது மட்டும் நியாபகம் வரவே வராது. தப்பித்தவறிக்கூட எங்களின் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய சொல்வேன் என்று வாயிலிருந்து வந்துவிடாது. கலைஞரின் செயல்கள் திருப்தியில்லை திருப்தியில்லை என்று பல்லவி பாடுவார் ஆனால் தி மு க அமைச்சர்கள் பதவி விலகிடவேண்டும் என்று மட்டும் (மனதில் இருந்தாலும்) கேட்டிட மாட்டார் .. மூச்.. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொள்வதா???

இத்தனைக்கும் எப்போது போயஸ் தோட்டத்து கதவுகள் அகல திறக்கும் , அன்னையிடம் விடை பெற்று அம்மாவிடம் அடைக்கலம ஆகலாம் என்று காலம் பார்த்திருக்கிறார்.. போராட்டம் , போராட்டம், அறிக்கை, தமிழிழ ஆதரவு கூட்டம் அனைத்திலும் பங்கேற்றுக்கொள்வது என்ற செய்கைகளை வகுத்துக்கொண்டதன் மூலம் தன் கட்சியினர் மத்திய அமைச்சர் பதவி பற்றி பெரிய எந்த பெரிய விமர்சனமும் வராது பார்த்துக்கொள்கிறார்.. அப்படியே தப்பித்தவறி நிருபர் கேட்டுவிட்டால்.. மத்திய அமைச்சரவையே முடியப்போகிறது இப்பப்போய் என்று இழுத்தடித்து மழுப்பத்தெரியாதா என்ன.. )கலைஞரிடன் கூட்டணியில் இரு முறை இருந்தவர் ஆயிற்றே..!) ஒரு வேளை மன்மோகன் பா ம க விற்கு இன்னுமொரு அமைச்சர் பதவி என்று சொன்னால், இல்லைங்க இருக்கட்டும் ஆட்சி முடியப்போகுதே இப்போ போய் எதுக்கு என்று சொல்வாரென நீங்கள் நினைத்தால்.. அய்யோ பாவம் அப்பாவி சார் நீங்க.. ஒரு பக்கம் அமைச்சர் பதவி , ஒரு பக்கம் அம்மாவின் பார்வைக்கு வெயிட்டிங்.. அம்மா கை விட்டுவிட்டால், உதவும் என்று காங்கிரஸின் கையையும் விடாமல்.. அதே நேரத்தில் ஈழ ஆதரவும் பேசி, மத்திய அரசை எதிர்க்கும் போராட்டங்களில் தலைகாட்டியும், குறிப்பாக காங்கிரஸின் பரம திடீர் எதிரிகள் திருமா, சீமானுடன் கைக்கோர்த்து சாமர்த்தியாக மிகக் குறைந்த அளவு விமர்சனத்துடன் பாலன்ஸ் செய்து ஆட்டம் ஆடி வரும் மருத்துவரை பார்த்தால்... "ஆடாத ஆட்டம் இல்லை, போடாத வேஷம் இல்லை..."

வைகோ - இவருக்கு பதவி தோளில் போடும் துண்டும் அல்ல, இடுப்பில் இருக்கும் வேட்டியும் அல்ல.. அவரின் வீட்டு மொட்டை மாடியில் வத்தல் காயப்போட பயன்படும் ஒரு துணி அவ்வளவே.. எந்த பதவிக்கும் தானோ தன் கட்சிகாரங்களோ வந்தே பல மாமாங்கம் ஆச்சே , வேற வழியில்லை.. வாடாம் காயப்போடற துனி அது இதுனு சொல்லி சமாளிக்கனும்.. ஒரு பக்கம் ஈழத்துக்கு வீர வசனமெல்லாம் பேசி, இந்தியா , இலங்கை , பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ்னு கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி பேசி உணர்ச்சிமயமா தாக்கினாலும் வீட்டுக்கு போனா முதல் வேலையா போன் போடற நம்பர் போயஸ் தோட்டது நம்பரா தான் இருக்கும்..

மக்களை கொல்வது புலிகள்னு போயஸ் தோட்டத்துல இருந்து குரல் வந்தா மட்டும் இவருக்கு காது டமார செவிடாகிடும் பாவம்.. இவர் என்ன பன்னுவார்.. ஜெயிக்கறமோ தோக்கறமோ 2009 தேர்தல்ல நிக்கறதுக்கு 2, 3 சீட்டும், கொஞ்சம் லஷ்மி கடாட்சமும் வேணுமே... வெட்டிகிட்டு வந்து 3 வருஷம் கூட ஆகலயே அதுக்குள்ள போய் அண்ணேனு ஒட்டிக்க தன்மானன் இடம் தராது..

இன்னும் 2 வருஷம் போனா 2011 ல , பாசிச வெறிபிடித்த ஜெயலலிதாவை இந்த நாட்டை விட்டு விரட்டாது ஓயமாட்டேனு , என்னை எட்டி உதைத்தாலும் , ஏறி மிதித்தாலும் என் அண்ணன் அண்ணன் தான், அவர் தம்பி வைகோ தான்.. மதியிழந்தேன் மானம் இழக்கவில்லைனு கண்ணியாகுமரில இருந்து கத்திகிட்டே வந்து கோபாலபுரத்துல தொபுக்கட்டீர்னு விழலாம்.. ஆனா இப்ப 2009 க்கு அம்மா தானே ஆதரவு.. அம்மா என்னா சொன்னாலும் 2 காதுலயும் பஞ்சு அடைச்சுகிட்டு எல்லா ஈழத்தமிழர் கூட்டத்துக்கு (தி மு க தவிர) போயிட்டு நரம்பு புடைக்க, நெஞ்சு துடிக்க நாலு பக்க வசனத்தை வெசனமா பேசிட்டு வந்து தன்மானத்தை காப்பத்திக்கிட்டதால, பெருசா விமர்சனம் வராம பார்த்துகிட்டு வண்டி ஓடுது.. அப்படியே கேட்டாலும், கூட்டணி அமைத்தோம், கொள்கை விடவில்லை.. ஒரு கூட்டில் கழுகும் காகமும் தத்தம் கொள்கை விடாது இருத்தல் தவறானு வீர வசனம் பேசவா சொலித்தரணும்.. 1 வருஷமா , 2 வருஷமா... ஓட்டுமொத்தமா கல்லூரி வாழ்க்கை கணக்கா கலைஞர் கிட்ட பாடம் படிச்ச மாணவர் ஆச்சே , சோரம் போவாரா (பேசுறதுல மட்டும்) வைகோவை பார்த்தால் ஆட்றா ராமா, ஆட்றா ராமா..ஆட்றா ராமா.. என் தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆட்றா ராமா

திருமா - .. பாவம் இவர் பத்தி என்ன சொல்றதுனு தெரியல.. பரிதாபமா இருக்கு. தமிழக காங்கிரஸ் காரனுக்கு வீரம் வந்தது (தன் கட்சியோட கோஷ்டிக்காரன் வேட்டி கிழிப்பை தவிர்த்து) வேற ஒருத்தர் கிட்ட வம்புக்கு போனான்னு சொன்னா அது நம்ம திருமா கிட்ட தான்.. திருமாவும்.. போன் போட்டு போன் போட்டு நாங்க பன்னல, நாங்க பன்னல , எங்க தப்பு இல்லனு சொல்லி சொல்லி அவர் செல்போன் காசும் , பேட்டரி சார்ஜும் போனது தான் மிச்சம்.. அவர் என்ன பன்னுவார் வேற வழி??? காங்கிரஸை ஏதாச்சும் சொல்லப்போய் பெரியவருக்கு கோவம் வந்து போ வெளியே நு அனுப்பிட்டா?? மருத்துவர் தான் இருக்காரேனு நம்பி போயிடமுடியுமா?? .அவருக்கே இன்னும் கதவு திறக்கல.. இவருக்கு போயஸ் தோட்டத்த்கு சந்து கூட திறந்து இருக்குமானு சந்தேகம் தான்..

ஆயிரந்தான் ஈழத்தமிழர் போராட்டம் , உண்ணா விரதம் இருந்தாலும், 2009 இல்லனா கூட 2011 ல நாலு எம் எல் ஏ வாச்சும் வேனுமே... உணர்வுக்கு ஈழத்தமிழர்களா இருந்தாலும் , நாலு எம் எல் ஏ க்கு தமிழனத்தலைவர் தானே.. அவரை திருப்தி படுத்தவாச்சும் அப்படி இப்படி பேசிகிட்டு, கலைஞர் செய்வார், நாளைக்கு செய்வார், நாளை மறுநாள் நிச்சயம் ஏதாச்சும் செய்வார்னு அறிக்கை விட்டு அப்படியே காங்கிரஸ் கிட்ட பவ்யமா போயி காலத்தை ஓட்டனும்.. கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை.. ! திருமாவை நினைத்தால் ... சிரிக்கறேன், சிரிக்கறேன் சிரிப்பு வரல, அழுகுறேன், அழுகுறேன் அழுகை வரல

5 கருத்துக்கள்:

வாக்காளன் said...

நிதர்சனம்.. பளிச்சென்று சொல்லியிருகீங்க.. அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் ஆசைகள்.. :) என்ன பன்றது :)

Anonymous said...

அப்படியே தப்பித்தவறி நிருபர் கேட்டுவிட்டால்.. மத்திய அமைச்சரவையே முடியப்போகிறது இப்பப்போய் என்று இழுத்தடித்து மழுப்பத்தெரியாதா என்ன.. )கலைஞரிடன் கூட்டணியில் இரு முறை இருந்தவர் ஆயிற்றே..!)


REEEPEEETUUUUUUUUUUU :)

SUPER

வீ. எம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாக்காளன் , கதிரேசன்

ராஜேஷ், திருச்சி said...

அனைவருமே , கலைஞரில் இருந்து திருமா வரை, ஈழம் ஈழம் என்று குரல் கொடுத்தாலும்.. தங்களின் அரசியல் தன்மையை காப்பாற்றிக்கொள்ள தங்கள் அளவில் சில பல சமாதானஙக்ள் செய்துக்கொண்டனர் எனப்து தெளிவு. நல்ல பதிவு..

Anonymous said...

i dont think vaiko is acting in eelam issue , since his stand in any time supporting tigers for freedom to eelam, i dont think he is looking political mileage in Eelam issue like karunanithi and ramdoss.