---- சந்திரமுகி -----

சந்திரமுகி - இந்த வார்த்தை தான் தமிழ் மக்களின் மனதில் இன்று ரீங்காரமிடும் ஓசை.அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில்? பார்த்து விட முடிவு செய்து 112 ரூபாய் (டிக்கெட் 80 , பேருந்து - 10, கொறிக்க - 22) செலவு செய்து சென்னை தியேட்டர் ஒன்றில் போய் அமர்ந்த்தேன்.
உள்ளே சென்று சற்றே நோட்டம் விட்ட எனக்கு ஆச்சரியம்... 50 வயது நடிகரின் திரை படமா இது .. இல்ல ஏதாவது ஆங்கில கார்ட்டுன் படமா? 6 வயது சிறுவர் முதல் 60 வயது பெரியவர் வரை அப்படி ஒரு கூட்டம்.. ரஜினி யால் மட்டுமே 6 ல் இருந்து 60 வரை இழ்த்து வர முடியும் என்று புரிந்தது.
ஒரு புறத்தில், தலைவா தலைவா என்று அடி தொன்டை அலறல் - ரஜியின் பக்தர்கள் போலும்மறுபுறம் சூப்பர் ஸடார் சூப்பர் ஸடார் எண்று ஓசை , அடுத்த கட்ட ரசிகர் கூட்டமாய் இருக்கும்.கை தட்டி ஆரவாரம் - பொட்டு பொடிசுகள் துள்ளல்... அனைத்தயும் ரசித்து பார்க்கும் ஒரு கூட்டம் - பெரிசுகள்
இதில் வேடிக்கை என்ன வென்றால் , வெள்ளி திரை இன்னும் வெள்ளை திரை யாகவே இருந்தது .. படமே போடலங்ஙோ......
இதெல்லாம் கொஞ்ஜம் ஒவர் தான் என்று வித்தியாச பார்வை பார்க்கும் சிலரையும் பார்க்க தான் முடிந்தது - வேறு ஒரு நடிகரின் ரசிகர் கூட்டமாக இருக்கலாம். . சந்திரமுகி ல் என்ன குறை இருக்கும் என்று பூத கண்ணாடி கொண்டு வந்து இருக்க வேண்டும்.
படம் சரியாக இல்லை யென்றாலும், கொடுத்த 70 ருபாய்க்கு நஷ்டம் இல்லாமல் அரங்கினுல் காட்சிகள் கிடைக்கும் என்ற நிம்மதியுடன் அமர் ந்திரு ந்தேன்.. பாபா போல் இருக்க கூடாது என்று ஒரு வேண்டுதல் மனதிற்க்குள் ஒடாமல் இல்லை...
இதோ, விளக்குகள் அனைக்கபட, திரையில் வெளிச்சம்....சென்சார் சர்ட்டிபிகேட்.. திடுகிட்டு போனேன், அப்படி ஒரு அலறல் .. விசில் சத்தம் ... கை தட்டல்.. படத்தில் வெட்டு போடாத சென்சாருக்கு பாராட்டா அல்லது சில நிமிடங்களில் தங்களின் இதய தெய்வம் திரையில் வரப்போகிற சந்தோஷமா? நிச்சயமாக சென்சாருக்கு இல்லை யென்பது விரைவில் புரிந்து போனது
ப்ரபு வந்தார்... நிசப்தம் .. ஆச்சர்யம்.. என்னை தவிர அனைவரும் சென்று விட்டார்க்ளா?.. திரும்பி பார்த்தேன்..இல்லை.. இன்னும் கூட்டம் அதிகமாக தான் இருந்தது....
5 நிமிட காட்சிக்கு பிறகு ... ப்ரபுவின் கம்பெனி ஆட்களுக்கு பிரச்சனை... வில்லனின் அடி ஆட்கள் நிற்க ..பென்கள் அலறி ஒட ... மின்னல் வேகத்தில் ஒரு கார் ... அனைவருக்கும் புரிந்து போனது .. இது கூட புரியலனா...ரஜினி படம் பார்பதற்கு லாயக்குக் இல்லபா... !!
எங்கிருந்துதான் வந்ததோ அப்படி ஒரு சக்தி ... பாபா படத்தின் இறுதி பாடல் . சக்தி கொடு சக்தி கொடு என்று ரஜினி முடித்தாரே .. அதன் அர்த்தம் இப்போது புரிந்தது..அந்த சக்தியை ஆண்டவன் இப்பொது அவரது ரசிகர்களுக்கு கொடுத்தது போல்.. ஒரு சத்தம்... மஹா சத்தம் ... அமெரிக்காவின் ட்வின் டவர் இடிந்த போது இப்படி தான் சத்தம் கேட்டிருக்குமோ? சுனாமி சீற்ற்த்தை விட அதிகமாக ...அப்படி ஒரு சத்தம்..கை தட்டல் ..விசில் ... வித்தியாச ஒலி .... வாய் மூலம் இப்படி எல்லாம் ஒலியெழ்ஹ¤ப்ப முடியும் என்று அப்பொது தான் கண்டு கொண்டேன் ... சாரி கேட்டு கொண்டேன்...
ரஜினி ஒரு கால் தரையில் ..ஒரு கால் வான் நோக்கி நிற்க ..அரங்கினுள் ரசிகர்கள் இரு கால்கலுமே வான் நோக்கி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்..சூடம் (கற்பூரம்) காட்டியது ஒரு கூட்டம் ... துண்டு காகிதம் வீசியது ஒரு கூட்டம்.... ஆனந்த கூத்தாடிய ஒரு கூட்டம் .... கூதுகலத்துடன் கை தட்டி மகிழ்ந்த சிறுவர் .. சிறுமியர் கூட்டம்.....
சற்றே பொசுங்கிய வாசம்... ஒரு வேளை சூடம் காட்டிய பக்தர்கள் மெய் மறந்து விட்டார்களோ என்று பார்தால் ...இல்லை... அப்புறம் என்ன..????
சொன்னேன் அல்லவா .. குறை கண்டுபிடிக்க வந்த பூதக்கன்னாடி குட்டம் .. அவர்களின் வயிற்றில் இருந்து வந்த வாசமாய் இருக்கும் !! :)
ஒவ்வொரு காட்சியிலும் திருவிழ்அ தான்... குறிப்பாக பாடல் காட்சிகளுக்கு ரசிகர்களின் ஆர்பரிப்பு அபாரம்...நாம் கொடுத்த 70 ரு க்கு இதுவே அதிகம் என்று நினைத்து எழ்ந்து போக நினைத்தேன் ... ஆனால் படத்தின் விருவிருப்பு போக் விடவில்லை....
மொத்ததில் .. அங்கொன்றும் இங்கொன்றும் சிறு திரைக்கதை தவறுகள் இருந்தாலும், .. அனைவரும் ரசிக்க்கும் படி இருந்தது படம்..
இறுதி 20 நிமிடங்கள் அட்டகாசம்... ஜோதிகா மற்றும் ரஜினி போட்டி போட்டு நடித்திருந்தார்கள்...
நல்ல திரைகதைக்கு வாழ்த்துக்கள்.... இசை நன்றாக உள்ளது ... சில இடங்களில் எங்கேயோ கேட்ட மெட்டு போல இருக்கிற்தென்றாலும் ... புதிய பாட்டிலில் பழைய மோர்.. இதமாகவே இருக்கிறது.
"கொக்கு பற பற" பாடல் காட்சி அருமை.. ஆட்டம் போட வைக்கும் "அன்னனோட பாட்டு"... "அத்திந்தோம்.." பாடல் வித்தியாசமான முயற்சி ..வெற்றியும் பெற்றுள்ளது.....
சில இடங்களில் வரும் இரட்டை வசனங்களை தவிர்த்திருகலாம்....ரஜினி படத்திற்க்கு இது தேவைஇல்லை..படத்தில் அந்த கிராபிக்ஸ் பாம்பு எதற்கு என்று தான் இன்னும் புரியவில்லை..
சொல்லும் படியாக நயனதாரா க்கு பங்கு இல்லை... இருந்தாலும் மனதில் நிற்க்கிறார், ரஜினி க்கு அருகில் பல இடங்களில் நின்ற ஒரே காரணத்தால்.
ப்ரபு , நாசர் , வடிவேல் , வினீத் தங்கள் பங்கை சரியாக செய்து இருக்கிறார்கள்...

வழக்கமான சண்டை.. பைக் , கார் துரத்தல் ஏதும் இல்லாத வித்தியாசமான க்ளைமாக்ஸ்.. அருமை !
வாசு க்கு ஹாட்ஸ் ஆF ...
படம் முடித்து வெளி வரும் போது அனைவரின் முகத்திலும் திருப்தி தெரிந்தது ... சிருவர் சிறுமியர் முகத்தில் சந்ட்தோஷம் இருந்தது. கூடவே , லக்கா .. லக்கா .லகா லகா ..ஓசை ..
... ரஜினி பக்தர் , ரசிகர் முகத்தில் வெற்றி களிப்பு....இருக்காதா பின்னே ..பாபா ... பாராளுமன்ற தேர்தல் முடிவு ...பா மா க பிரச்சனை ...... (அனைத்தும் "பா") !!! அனைத்தயும் கடந்து வந்து பறித்த வெற்றி கனி யாச்சே இது.... வாழ்துக்கள் ரஜினி ரசிகர்களே... கொண்டாடுஙகள் .. உங்கள் தலைவர் போல் அமைதியாக... ஆர்பாட்டம் இல்லாமல்..
வீழ்ந்தது யானை இல்லை குதிரை .... இல்லை இல்லை .. "மான் குட்டி" ... (துள்ளி யெழ்ந்து விட்ட) என்பது .. தெளிவாக புரிந்தது... !
பாபா ஏற்படுத்திய புன்னுக்கு முதலுதவி மருந்து இந்த சந்திரமுகி.... "முதலுதவி மருந்து" ?? ஆம்.. முற்ற்லும் குணமாக்கும் மருந்து முற்றிலும் "ரஜினி Fஒர்முலா" நிறைந்த ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு.. நிச்சயம் நடக்கும் என்று நம்புவோம்.. நூலோடு போட்ட இந்த மாஞ்ஞா .. யாரோடும் டீலு போடுமே......
விரைவில் அடுத்த அரட்டையில் சந்திப்போம்...அது வரை நன்றி .... !


நட்புடன்,
வீ.எம்

8 கருத்துக்கள்:

Anonymous said...

thalaivar padamna thalaivar padam dhan .. !
good writing!

Anonymous said...

Hello V.M

I don't know what to say. I have felt the same when i saw the film chandramukhi in Bahrain. But my feeling got a complete picture when i read your review. Beautiful...
It will remind in my heart and mind for ever likehow thalaivar has been in me
Thalaivar is pasted
painted &
nailed in my heart

Aanmeega Vazhiyil Thalaivar
Avar Vazhiyil Naan

Ram

வீ. எம் said...

Thanks for the nice comments Mr. Ram. Though i am not an hard core - adrant fan of mr.rajini fan, i always like him for his simplicity and humane!
one of the great personality i admired.

Thanks once again Mr Ram

V.M

Anonymous said...

Hello VM
Fantastic, keep it up.Both your review of the movie in theatre and about Rajni entering politics is fantastic.I feel you have a good future as a writer.

Thanks and regards
Dharma
Singapore

Anonymous said...

well done, well said, well written, EXPECTING YOUR COMMENTS OF THE SILVER JUBILLE FUNCTION, after it is over.

Nellaibaba said...

VM Sir,

CM(CHANDRA MUKHI) VIMARSANAM GREAT !!!.

UMATHU SEVAIKKU VAZHTHUKKAL...

WORLD SUPER STAR RAJINI IN PAKTHARGAL...

NESATHUDEN
NELLAIBABA.

JAI HIND !!! CHANDRA HIND !!!

Anonymous said...

I thougt You said
Kalakittenga

Enrum Rajiniyudhan,
Raja

Anonymous said...

எங்கள் தலைவரின் படத்தை பற்றி நீங்கள் எழுதியுள்ளது ..மிக அருமை !! நன்றி VM.
நந்த குமார்
rajinifans.com