Showing posts with label ஒக்கனேக்கல். Show all posts
Showing posts with label ஒக்கனேக்கல். Show all posts

ஒக்கனேக்கல் சுழலில் சிக்காத ஜெ.

ஒக்கனேக்கல் களேபரங்களில் , கருநாடகத்தில் அனைத்து தமிழர்களும், தமிழக வாழ் வேற்று மாநில மக்களும் நன்றாக வறுத்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

கலைஞர், ராமதாஸ், திருமா போன்ற வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழர்களும், ரஜினி போன்ற தமிழகத்தில் வாழ்ந்து வரும் மற்ற மாநிலத்தோரும், திரை பிரபலங்களும், ஒரு படி மேலே போய் மறைந்த முதல்வர் எம் ஜி ஆரும் அவர்களின் குறியில் இருந்து தப்பவில்லை. கடவுளின் கோயில்களில் கூட தமிழ் எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்படுகிறது..

மேலே சொன்னவர்களின் உருவப்படத்தை எரிப்பது, காலால் மிதிப்பதும், கிழிப்பது போன்று காட்டுமிராண்டித்தனம் நடந்த வண்ணம் உள்ளது..

இத்துனை களேபரங்களில் நடக்கும் போதும், தமிழகத்தின் தலைவர்களில் முக்கியமான ஒருவரும், 2 முறை முதல்வராக இருந்தவரும், தமிழ்த்தாய் என போஸ்டர் அடித்துப்போற்றப்பட்டவரும், ஒகனேக்கல் திட்டம் நிறைவேற வேண்டும் என்று குரல் கொடுத்த, கொடுப்பவரும், போராட்டம் நடத்திய கட்சியின் தலைவியுமான அம்மா ஜெ எப்படி எந்த விதமான எதிர்ப்புகளுக்கும் ஆளாகவில்லை?

எம் ஜி ஆரின் படம் மிதித்து உதைத்து அடித்து கொளூத்தப்பட்ட போதிலும், அவரின் அரசியல் வாரிசும், அவர் ஆரம்பித்த கட்சியின் தலைவியுமான செல்வி மட்டும் ஏன் எந்த விதமாக எதிர்ப்பிற்கும் ஆளாகவில்லை?

சும்மா சொல்லக்கூடாது அம்மாவிற்கு சாமர்த்தியம் அதிகம் தான்..

அம்மா மட்டுமில்ல, போராட்டம் நடத்திய வேறு சில தலைகளும் எந்த எதிர்ப்பும் இன்றி இருக்கின்றார்களே. சாமர்த்தியமா?? இல்லை இவர்கள்
எல்லாம் தமிழர் என்றே அவர்கள் நினைக்கவில்லையா?

ஒன்னுமே புரியல , விளக்கவும்

என்ன செய்ய போறீங்க சூப்பர் ஸ்டார் அவர்களே?

ஒகனேகலுக்கு சொந்தம் கொண்டாடிக்கொண்டு கர்நாடக கும்பல் ஒன்று தமிழர்களை அடித்தும், தமிழ் திரைப்படம் ஓடும் திரையரங்குகளை சூறையாடியும் வெறியாட்டம் போடுகிறது.

இதனை கண்டித்து தென்னிந்திய திரைப்பட சங்கம் வரும் வெள்ளியன்று கண்டன உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது.

நமது சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன செய்ய போகிறார்?

தமிழ் மன்னில் சோறு சாப்பிட்டவர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற நடிகர்களை விட ரஜினி என்ன செய்யபோகிறார் என்று எதிர்பார்ப்பதற்கு அவரின் ஸ்டார் வேல்யூ மட்டுமே காரணமில்லை. அதையும் தான்டி இருக்கும் காரணம் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

பார்க்கலாம் என்ன செய்கிறார் என்று. அவரும் கலந்துக்கொண்டு தன் எதிர்ப்பை தெரிவிக்க போகிறாரா? அல்லது காவிரி விசயத்தில் நடந்தது போன்று தனியாக போராட்டம் செய்ய போகிறாரா ?

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்த தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயல்பட போகிறாரா அல்லது பிறந்த மண்ணுக்கு ஆதரவாக வேறு ஏதாவதா? .. அல்லது இரண்டும் இல்லாமல் இரண்டு பேருக்கும் சமாதானம் போல ஒரு வழ வழா கொழ கொழா முடிவு எடுத்துவிடுவாரா??

உப்பிட்ட தமிழ் மன்னை நான் மறக்க மாட்டேன்.. வாழ்ந்தாலும் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்.... என்று வாயசைத்ததை இவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார் என்று நம்புவோம்..

எந்த பிரச்சனையென்றாலும், அங்கே ஒரு திரையரங்கம் தாக்கப்பட்டாலோ, அல்லது திரைப்படம் திரையிட தடையாகிறது என்றால் மட்டுமே பெரும்பான்மையான "தமிழகத்தில் பிறந்த" தமிழ் நடிகர்களுக்கு தமிழர் நலனில் அக்கரை வருகிறது.. இதுல ரஜினியை மட்டும் சொல்லி என்ன பன்றது :)