மாநிலங்களவை தேர்தல் - சபாஷ் வைகோ, சறுக்கல் ஜெ.

பல வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக நல்ல முடிவை எடுத்துள்ளார் வைகோ. முதுகெலும்பு வலையாமல் ஒரு சுயமான முடிவு.

தோல்விக்குத்தான் அதிக வாய்ப்புள்ள 7 வது மாநிலங்களவை சீட்டை தாராளமாக விட்டு தருவது போல் விட்டுத்தந்த அம்மாவின் முகத்திலடித்தார்போல் போட்டியிடப்போவது இல்லை என்ற அறிவிப்பு கொடுத்த வைகோ வை பாராட்டலாம்.

அதிமுக போட்டியிட்டிருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் மதிமுக போட்டி என்று வந்திருந்தால், ஆளும் தி மு க எந்த விலை கொடுத்தாவது மதிமுகவின் தோல்வியை உறுதி செய்ய முயன்று அதில் நிச்சயம் வெற்றியும் பெற்றிருக்கும்.

அது மட்டுமின்றி, போட்டி என்பதை ம தி மு கவினர் பலரே ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். அதிலும் போட்டியிட்டு தோல்வி என்பது மிக மோசமான நிலையாகவே இருந்திருக்கும். மதிமுகவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானம் மரியாதையும் காற்றில் பறந்திருக்கும்.

ஆக, இந்த ஒரு விஷயத்திலாவது, வைகோ கொஞ்சம் சுயமாக யோசித்து முடிவெடுத்துள்ளார்.

இந்த மாநிலங்களவை தேர்தல் மூலம் அம்மாவிற்கு 2 சறுக்கல்கள்.. ஒன்று மதிமுகவுடன் சலசலப்பு.. இரண்டாவது வக்கில் ஜோதி.

இதுவரை 'ஜெ'வின் பல வழக்குகளில் ஆஜராகி வந்த ஜோதி தனக்கு சீட் இல்லை என்றதும் அ தி மு க வில் இருந்து விலகியது மட்டுமின்றி, தான் ஆஜராகி வந்த ஜெ , மற்றும் அதிமுகவினரின் அனைத்து வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார். ஜெ க்கு மட்டும் தான் ஆப்படிக்க தெரியுமா என்ன? ஜோ விற்கும் தெரியும் போல. ஜெ வின் பிரதான வக்கீல் என்ற முறையில் அவருக்கு ஜெ பற்றிய பல திரைமறைவு விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.

ஜோதி எந்த மாதிரி முடிவெடுக்க போகிறார்? ஆளும் கட்சி ஜோதியை எப்படி பயன்படுத்திக்கொள்ளும் என்று பொருத்திருங்து பார்க்கவேண்டும்.. பல அதிசய காட்சிகள் அரங்கேறும் வாய்ப்புள்ளது

யார் யாரையோ எப்படி எப்படியோ சமாளித்த ஜெயாவிற்கு ஜோதி பெரிய விஷயமில்லை என்றாலும், நிச்சயமாக ஜெவிற்கு இது சறுக்கலே..

சத்தியமூர்த்தி பவனில் வெட்டுக்குத்து , வேட்டி சேலை கிழிப்பு எதுவுமில்லாமல் , ஜெயந்தியும் , வாசனும் தெரிவாகி இருப்பதும் ஒரு ஆறுதல்.. வாழ்க காங்கிரஸ் ஜனநாயகம் :)

அதல்லாம் விடுங்க.. இப்படி தெரிவாகி போகும் நம்ம மாநிலங்களவை எம் பிக்கள் , அங்கே போய் அப்படி என்னத்த கிழிக்கிறாங்கனுத்தான் ஒன்னும் புரியல.. யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க..

5 கருத்துக்கள்:

வாக்காளன் said...

// வாழ்க காங்கிரஸ் ஜனநாயகம்//

இது நச் :)

tommoy said...

நல்ல பதிவு. அம்மாவிற்கு ஜோதி எப்படி ஆப்படிக்க போகிறார் என பார்க்கலாம்

Anonymous said...

Good One VM

Unknown said...

I would say MDMK doesnt have any scope in tamilnadu politics for sure. They can dissolve the party or merge with some big party. The MDMK party people can join other parties as they wish

வீ. எம் said...

கருத்துக்கும் , வருகைக்கும் நன்றி வாக்காளன் , முத்து, முரளி, மதன்குமார்.