திரு பாலா என்கிற profile only பதிவர்
வெறுமனே ஒரு profile மட்டும் வைத்துக்கொண்டு, பலரின் பதிவுகளில் வந்து தேவையற்ற பி(பு)ண்ணூட்டங்களை போட்டு எரிச்சல் ஏற்றுவதே கடமையாக செய்கிறார் திரு பாலா என்ற profile only பதிவர்.
அவர் வலைப்பக்கத்திற்கு சென்றால் அங்கே பதிவுகள் ஏதுமில்லை, வெறுமனே ஒரு சிவாஜிகணேசன் புகைப்படம் மட்டுமே உள்ளது.
ஒரு பதிவில் யாரும் அவர்கள் கருத்துக்களை போடலாம் , அது தவறில்லை. ஆனால் பாலா என்பவர் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்குகிறார். எப்போதும் அடுத்தவரை எரிச்சலடைய வைக்கும் சொற்களையே உபயோகப்படுத்துகிறார். பல நேரங்களில் பதிவிற்கோ, அங்கே நடக்கும் விவாதத்திற்கு சற்றும் சம்பந்தில்லாமல் பதில் போடுகிறார்.
இவரின் ஒரே குறிக்கோள் அனைவரையும் தாக்குவது. தாக்குதல் ஒன்றே என்ற முடிவோடு இருக்கிறார். உண்மையிலே அவர் அரோக்கியமான வாதம் செய்ய நினைத்தால், தனது கருத்துக்களை அவர் பதிவாக போடலாம், ஆனால் மாட்டார். ஏனெனில், அவர் நோக்கம் ஆரோக்கிய விவாதம் இல்லை.
நண்பர்களே, இவர் இப்படி செய்வதற்கு, பல காரணங்கள். அது அனைவருக்கும் தெரியும். அது பற்றி இங்கே சொல்லவேண்டியது இல்லை. ஆனால் ஒன்று, இவர் போன்றவரின் கருத்துக்களை ஊக்குவிப்பது, ஒரு ஆரேக்கிய சூழலை நிச்சயம் கெடுத்துவிடும்.
என்வே நன்பர்களே, பாலா என்பவரின் கருத்துக்களை மட்டும் அதிக கவனமெடுத்து மட்டுறுத்தவும் அல்லது அவர் கருத்துக்களை வெளியிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடவும்.
இது பாலா என்பவரின் மேல் உள்ள காழ்ப்பு அல்ல. அவர் சூழலை கெடுக்கிறார் என்பதால் மட்டுமே, மட்டுமே. மட்டுமே.