வாழ்த்துக்கள் + எதிர்பார்ப்பு + வேண்டுகோள்

என் அருமை வலைத்தள நன்பர்களே, அனைத்து தமிழ தள திரட்டி நிர்வாகிகளே,

உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்

என் உள்ளம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2009 ல் சன்டை , சச்சரவு, போலிகள் தொல்லை, தனிமனித தாக்குதல் இல்லாத பதிவுகள் வரும் என்ற நம்பிகையில் 2008 க்கு விடை கொடுத்து, 2009 ம் ஆண்டை நம்பிக்கையுடன் வரவேற்போம்..

ஒரே ஒரு வேண்டுகோள்.. புத்தாண்டை கொண்டாடி வரவேற்பதில் தவறில்லை.. ஆனால் தயவு செய்து கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதை மட்டும் தவிர்க்கவும்.. உங்களின் நன்பர்களுக்கும் இதை சொல்லுங்கள்

அன்புடன் வீ எம்.

தினவெடுத்த தினமலருக்கு முதல்வர் கொடுத்த செருப்படி

திமிர் பிடித்த தினமலர் அவ்வப்போது தமிழர் எதிர் கருத்தும், சின்டு முடியும் வேலையையும் செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.

நேற்று கூட ஒரு செய்தியில், கீ . வீரமனி அவர்கள் தன் தாயின் முதலெழுத்தை தன் இனிஷியலாக போட்டுக்கொண்டதை கொச்சைப்படுத்தும் வகையிலும் அதே போல சின்டுமுடியும் விதமாகவும் ஒரு செய்தியை வெளியிட்டு பல பதிவர்களிடம் செருப்படி பட்டது.. ஒரு சில பதிவர்கள் மட்டும் பரிந்துவந்தார்கள்..

இதோ பட்ட செருப்படி போதாது போலும்.. இந்த கேடு கெட்ட பத்திரிக்கை எப்போது திருந்துமோ தெரியவில்லை.

மீன்டும் இன்று தன் விஷமப்பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது.

தி மு க வின் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெறுகிற செய்தியை போட்டிருக்கும் இந்த கேடுகெட்ட பத்திரிக்கை நடுவில் வழக்கம்போல தன் விசமத்தனத்தை காட்டியுள்ளது..

எப்படி நேற்று, கீ வீரமனி அவர்களின் இனிஷியில் பற்றிய செய்தியை கலைஞரின் பேட்டி செய்தியோடு இனைத்து , அது ஏதோ கலைஞர் சொன்னது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி சின்டு முடியும் வேலையை செய்ததோ, அதே போல்

தி மு க பொதுகுழு பற்றிய செய்தியை வெளியிட்டு, அதே செய்தியின் தொடர்ச்சியாக , இன்று நல்ல நாள் என்ற பத்தி தலைப்பிட்டு கீழ்க்கண்ட செய்தியை தந்துள்ளது.. (சுருக்கம் இங்கே)

இன்று நல்ல நாள் - முழுதும் மூல நட்சத்திரம், அனுமன் ஜெயந்தி , 9.30 வரை மகர லக்னம், எந்த காரியம் தொடங்கினாலும் வெற்றி, இன்றைய நாளின் சிறப்பு படி குரு பார்வையினால் குடும்பத்தலைவர் எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் நல்ல முடிவு எடுப்பார், பொதுக்குழுவில் எதிர்ப்பு வராது, வந்தாலும் இடம் தெரியாது போய்விடும்

என்ற ரீதியில் இந்த கேடுகெட்ட பத்திரிக்கை, ஒரு விஷயத்தை இங்கே சேர்த்து விஷமத்தனம் செய்துள்ளது. தி மு க ஏதோ இந்த நாளை ஜோதிட நம்பிக்கையில் குறித்துள்ளதாக தோண்றும் விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளது இந்த தினமலர்.

தி மு க பொதுக்குழு செய்தியில் இந்த இனைப்பு செய்தி தேவையா?அதே போல மற்ற செய்திகளில் எல்லாம் பார்த்தேன். இப்படி இனைப்பு இருக்கிறதா என்று.. எங்கும் இல்லை

பொதுக்குழு கூடிய சில நிமடங்களில் ஸ்டாலின் கலைஞரிடம் தினமலர் பத்திரிகையை கொடுத்து ஏதோ சொல்வதை நேரலையில் காண முடிந்தது. என்ன இது பொதுக்குழு நடக்கும் வேளையில் கலைஞரின் கையில் தினமலர் என்ற யோசித்தேன்..

என்ன விஷயம் என்பது கலைஞர் ஏற்புரையின் போது தான் புரிந்தது..
கலைஞரின் ஏற்புரையிலிருந்து..

இன்றைய தினமலர் பத்திரிக்கை ஒரு செய்திவெளியிட்டுள்ளது, நம் கழக பொதுக்குழு கூட்டம நடக்கும் செய்தியை வெளியிட்டு, அதோடு ஒட்டி இந்த நாளின் சிறப்புகள் என்று சிலவற்றை குறிப்பிட்டுள்ளது. இன்று நிறைந்த அமாவாசையாம், நாள் முழுதும் சிறப்பான மூல நட்சத்திரமாம், அனுமார் ஜெயந்தி நாளான இன்று 9.45 வரை மகர ராசியாம், மிகச்சிறப்பான நாளாம், என்றும் அது தொடர்ந்து சில செய்திகளையும் அந்த ஏடு இன்று வெளியிட்டுள்ளது.
உள்ள படியே நானோ, பேராசிரியரோ இல்லை ஆற்க்காட்டாரோ பஞ்சாங்கம் பார்த்து. எது நல்ல நாள் என்று தேடி இந்த 27 ம் நாளை பொதுக்குழு கூடும் நாளாக அறிவிக்கவில்லை . எங்களுக்கு 27 ம் தேதி வசதியென்று பட்டதால் இந்த நாளில் இந்த பொதுக்குழு கூடியுள்ளது..
நாமே செய்யாத ஒரு விஷயத்தை தினமலர், ஜோதிடத்தை ஆராய்ந்து செய்தி வெளியிட்டுள்ளது.


9.45 வரை நல்ல நேரம், செய்யும் காரியம் நன்றாக முடியும் என்று செய்தியை பார்த்துவிட்டு.. நான் இங்கே 10.10 , 10.15 க்கு தான் வந்தேன்.. 9.45 வரை நல்ல நேரம் என்றும், அப்பொது எடுக்கப்படும் முடிவுகள், செய்யப்படும் செயல்கள் வெற்றிப்பெறும் என்ற அந்த செய்தி ஏதோ நல்ல நேரம் பார்த்து இந்த பொதுக்குழு நடத்தப்படுகிறதோ என்ற தோற்றம் வரலாம் என்பதால், நான் 9.45 க்கு இங்கே வராமல் , 10 மனிக்கு மேல் வந்தேன்..

நேரடியாக கலைஞர் அவர்களுக்கு செருப்படி கொடுத்திருக்கவேண்டும்
ஆனால் நாசூக்காக கொடுக்கப்பட்ட செருப்படி இது. இதெல்லாம அந்த கேடுகெட்ட பத்திரிக்கையின் தோலுக்கு உரைக்காது..

இந்த பத்திரிக்கை , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுக்கும்,குறைந்தது அரசியல் நிகழ்வுகளுக்கு இப்படி நாள் பார்த்து , ஜோசியம் பார்த்து , பலன்களை அந்த செய்தியினுடன் சேர்த்து போடுமா??

டேய் தினமலர் முன்டங்களா - உங்களின் இந்த பொதுநல சேவை தி மு க எனும் ஒரு கட்சிக்கு மட்டும்தானா?
தொடரட்டும் உங்கள் குல வழக்கமான சின்டு முடிதல் வேலை.. !!

இவர்களுக்கு நல்ல சாவு வருமா...?

இதைவிட கேவலமானவர்கள் இருப்பார்களா? அரசியலுக்கு வேண்டி வேறு என்ன விதமாக கேடுகெட்ட வேலைகள் எல்லாம் இவர்கள் செய்வார்களோ தெரியவில்லை...! இவர்களின் வீட்டில் இருக்கும் பெண்கள் சற்று கவனமாக இருப்பது நலம்..

போலியோ பாதிப்பினால் ஊனமுற்ற குழந்தைகள் அற்ற சமுதாயம் பெற்றிட வேன்டும் என்ற உயரிய நோக்குடன் வருடத்திற்கு 2 முறை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசு இலவச போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கிறது. பல ஆண்டுகளாக செவ்வனே சென்றுக்கொண்டிருக்கும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களை இந்த ஆண்டு அரசியல் தரித்திரம் பிடித்து தான் வேதனை..

13 ஆன்டுகளுக்கு மேலாக இந்த முகாம்கள் சலசலப்பின்றி நடந்துக்கொண்டிருக்க இந்த வருடம் மட்டும் ஏன் இந்த பீதி?

எல்லாம் பாழாய்ப்போன அரசியல் காழ்ப்பு..

ஆம் , போலியோ சொட்டு மருந்து போட்ட குழந்தை இறந்தது என்று ஜெயா டீவியின் இடைவிடாது போடப்பட்ட ப்ளாஷ் நியுஸ் இந்த வதந்திக்கு மூலக்காரணமாகி ஒரு களேபரத்தை நடத்திவிட்டது.

அரசியல் காழ்ப்பு காரணமாக செய்தியின் உண்மை அறியாது, ப்ளாஷ் நியுஸ் ஓட விட்ட இந்த தொலைக்காட்சியின் கேடுகெட்ட செயலை என்னவென்று சொல்வது?

சத்தியமங்கலத்தை சேர்ந்த அண்ணாதுரை, அ தி மு க காரரின் குழந்தை போலியோ மருந்து கொடுத்து சில மனி நேரங்களி இறந்து விடுகிறது... இது தான் ஜெயாவில் வந்த முதல் ப்ளாஷ்.. அ தி மு க காரரின் குழந்தை இறந்துவிட்டது என்று ச்க அ தி மு க வினர் அடிந்த பேக்ஸ் தான் இந்த பீதிக்கு முதல் காரணம்.

உடனே ஆங்காங்கே. அ தி மு க வினர் திரண்டு , 5 பேர் பலி, 10 பேர் , 30 பேர் பலி என்று திட்டமிட்டு கணக்கு சொல்லி பீதியை கிளப்பினர்..

ஆனால் உண்மையிலே அந்த குழந்தை இறந்ததக்கு காரணம் அந்த குழந்தைக்கு நிகழ்ந்த மூளைச்சாவு தான்.. பிறக்கும் போதே மூளையில் கட்டியுடன் பிறந்த அந்த குழந்தை இன்றோ , நாளையோ என்று தன் நாட்களை கடத்திக்கொண்டிருந்தது . தற்செயலாக போலியோ மருந்து போடப்பட்ட நாளில் இறந்தது என்பது தவிர இந்த குழந்தையின் இறப்புக்கும் , போலியோ மருந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அண்ணாதுரையும், அந்த குழந்ததையை பார்த்துவந்த டாக்டரும் தெரிவித்துள்ளனர்.

அண்ணாதுரை அ தி மு க காரர் என்ற ஒரே காரணத்தினால் , அ தி மு க காரர்கள் இதனை தங்கள் வசதிக்கு வளைத்துவிட்டனர்.

இது தொடர்ந்து நடந்த மறியல் போராட்டத்தில் அ தி மு க கரை வேட்டிகள் வதந்தியை கிளப்பியபடியே இருந்துள்ளது.. எங்கிருந்தோ வந்த உத்தரவுகளால்.. ஆங்காங்கே பீதி கிளப்பபட்டது..

சில இடங்களில் சில அ தி மு க வினர் கருனாநிதி ஆட்சியில் இப்படித்தான்.. அம்மா இருந்திருந்தால் இது நடக்குமா , ஆகவே ரெட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்று சில ஓட்டு பொறுக்கிகள் குரல் விட்டுக்கொண்டிருந்தது ஊடகத்தில் பதிவாகியுள்ளது..

தூ.. நாயே.. ஒரு குழந்தையின் மரணத்தில் இப்படி அரசியல் செய்கிறாயே உனக்கு நல்ல சாவு வருமா? உன் குடும்பத்தில் இருக்கும் பென்கள் உஷாராக இருக்கவேண்டும்.. இல்லையெனில் அ தி மு க ஆட்சி வரவேண்டும் என்று நீ எதுவும் செய்வாய்..

வேதனையான விஷயம் , இவர்கள் கிளப்பிவிட்ட இந்த பீதியால் சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் பயத்தில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளவில்லை.. 1.5 லட்சம் குழந்தையில் ஒரு குழந்தைக்கு போலியோ தாக்குதல் ஏற்பட்டாலும், அந்த பாவம் இந்த கேடு கெட்ட நாய்களை சும்மா விடாது..

எதில் எதிலோ விளையாடிய இந்த கேடு கெட்ட அரசியல் , குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் இந்த விஷயத்திலுமா தன் விளையாட்டை காண்பிக்கவேண்டும்??

இந்த சொறிநாய்கள் தான் நாளை ஆட்சிக்கு வந்து நம் எதிர்க்காலத்தை தீர்மாணிக்க திட்டம் போடுகிறது என்பது தான் வேதனை..

ஒரு சாதாரன செய்தியை கூட அது ஒரு குறீப்பிட்ட டீ வி யில் வந்தது என்பதால் தூக்கி வந்து ருத்ரம் ஆடும் பல பதிவர்கள்.. கேட்டால் அம்மாவையும்,அம்மா டீவியையும் மயிலறாகால் வருடி விட்டு நாங்க நடுநிலைவியாதிகள் என்று மார் தட்டுபவர்கள் இந்த விஷயத்தை அந்த ம்யிலிறகு தடவல் கூட செய்யாது எங்கே ஒளிந்துள்ளார்களே..

இது தான்டா சூடான பதிவு.. சூடான இடுகை .

சூடான பதிவு, சுடான இடுகை.. சூடு சூடு - 2 நாளா தமிழ்மணம் செம சூடா போயிட்டு இருக்கு.. அப்படி என்ன இருக்கு அந்த சூடான இடுகைல.. என் 100+ பதிவுல, ஒரு 3 - 4 தான் இதுவரைக்கும் சூடுல வந்திருக்கு. :)

சரி சரி, இந்த சூடு போதுமா?? இன்னும் கொஞ்சம் வேனுமா..







கூல்ல்ல்.. அனைவருக்கும் , அனைத்து பதிவுலக நன்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் 2009 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
இதற்கு முந்தைய பதிவு சூடான இடுகைல வந்திருக்குடோய்.. அத படிச்சீங்களா?? கமென்ட் போட்டீங்களா?

அவன் வருவானா? 18 வயது மேற்பட்டோர் மட்டும் படிக்கவும்

"கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன " டயலர் ட்யூன் பாடலை ரசித்துக்கொண்டே தன் உயிர் நன்பன் சுந்தர் கைப்பேசியில் பதில் சொல்லும் தருனத்திற்கு காத்திருந்தான் யுவராஜ்.

டயலர் ட்யூன் துண்டிக்கப்பட்டு மறுமுனையில் இருந்து சுந்தரின் குரல் - சொல்லு யுவா,

மாப்ள, எங்கேடா இருக்கே..

வீட்ல தான்டா இருக்கேன்.. என்ன மேட்டர்..சொல்லு

டேய்.. வீட்ல எல்லோரும் திருச்சிக்கு போறாங்க , வர ரெண்டு நாளாகும்.. நைட் இங்கே வந்துடு ஒரு சின்ன பார்ட்டி போட்டிரலாம்.. என்ன சொல்ற..

ஒக்கேடா....நம்மளும் பார்ட்டி போட்டு ஆறு மாசமாகுது.. கண்டிப்பா வரேன்டா.. 6 மனிக்கு என் சித்தி பையன் வருவான்டா.. அவன் வந்துட்டு கிளம்பின அப்புறம் நான் வரேன்டா, எப்படியும் அங்கே வர 8.30 ஆகும்..

சரிடா, வா.. நான் எல்லா ஏற்பாடும் பன்னிடறேன்.. சரியா.. மறக்காம வந்துடு..

ஷ்யூர் மச்சி.. வெச்சிடறேன்டா..

இனைப்பு துன்டிக்கப்பட்டது.

யுவராஜ் மற்ற வேலைகளில் மூழ்கினான்..

இரவு மணி 6.50..
"எப்போ கிளம்புறே?" - சுந்தருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினான்..இன்னும் 15 நிமசத்துல கிளம்பிடுவேன்டா.. பதில் வந்தது..

மணி 8.15
சுந்தருக்கு பிடிச்ச ஒரு புல் பாட்டில் மால்ட் விஸ்கி, 2 குளிர்ந்த பீர். 2 அரை லிட்டர் லெகர் சோடா, ஒரு அரை லிட்டர் செவென் அப், பகோடா, சிப்ஸ், சிக்கன் 65, 5 முட்டை.. ஒரு பாக்கட் பில்டர் கிங்க்ஸ்.

எல்லாம் சரியா இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டான் யுவராஜ்..

அச்சோ.. அவனுக்கு ஊறுகாய் இருந்தாதானே சரக்கு உள்ள போகும்.. சமையலறைக்கு சென்று ஊறுகாய் டப்பாவை தேடி எடுத்துவந்தான்..

மனி 9 .02. சற்று பொறுமை இழந்தான்.. என்னடா இவன் , சொன்ன நேரத்துக்கு வரவேண்டாமா.. 8.30க்கு சொன்னான் , மனி 9:00 தாண்டுது.. அலுத்துக்கொண்டான்..

மீண்டும் அவன் கைப்பேசிக்கு அழைத்தான்.. ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.... சரி வரட்டும் , இருக்கு அவனுக்கு..

தொலைக்காட்சியில் மூழ்க்கினான். மனி பத்தை நெருங்கியது..

நாய், இப்படி ஏமாத்திட்டானே... செல் ஆப் பன்னிவெச்சு ஆட்டம் காட்டறான்.. இருக்கு அவனுக்கு. முனகிக்கொண்டே, இதற்கு மேல் தாங்காது என்று வீட்டு கதவை மூடிவிட்டு.. ப்ரிட்ஜ் திறந்து ஒரு பீரை எடுத்து ருசிக்க ஆரம்பித்தான்..

மனி 11.10.. ஒரு பீரும் , 1 ரவுண்ட் விஸ்க்கியும் உள்ளே போயிருந்தது..
பலமாக கதவை தட்டும் சத்தம். கொஞ்சம் பயந்து போனான்..மெதுவாக சென்று கதவை திறந்தவனுக்கு அதிர்ச்சி.

அங்கே சுந்தர் நின்றிருந்த கோலம் அப்படி.. தலையெல்லாம் கலைந்து.. கண்கள் சிவந்து.. சட்டை கிழிந்து. ஆங்காங்கே சிராய்ப்பு..

என்னடா மாப்ளே , என்ன கோலம் இது.. என்னடா ஆச்சு , பதறினான்..உள்ளே சென்ற பீரும், விஸ்கியும் ஏற்படுத்தியிருந்த கிறுகிறுப்பும் சுத்தமாக இறங்கியிருந்தது..

ஒன்னுமில்லேடா பயப்படாதே.. என் சித்திப்பையன் லேட்டாதான் கிளம்பினான்டா.. அவனை அங்க வீட்ல ட்ராப் பன்னிட்டு வர லேட் ஆகிடுச்சு... வர வழில ஒரு வேன் காரன் வேகமா வந்து இடிச்சுட்டான்.. ஒரு மைனர் ஆக்சிடென்ட்..வேற ஒன்னும் இல்லை.

சரி சரி, முதல்ல உள்ள வா.. இப்படி உட்கார்..

கொஞ்சம் பஞ்சும் டிஞ்சரும் எடுத்து வந்து முதலுதவி செய்தான்.. இருவரும் இப்போது சற்று இறுக்கம் தளர்ந்து சகஜ நிலைக்கு வந்திருந்தார்கள்..

டேய் மாப்ள .. வீட்டுக்குள்ளே அடிக்கறத விட மொட்ட மாடில அடிச்சா அம்சமா இருக்கும்டா.. வா மாடிக்கு போகலாம்..

அனைத்தையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றார்கள்..

மாப்ள, இந்தா டவல்., அந்த குழாய்ல முகம் கழுவிக்கோ... இந்தா என் டீ சர்ட் , லுங்கி மாத்திக்கோ... அப்புறம் பார்ட்டிய ஆரம்பிக்கலாம்.. ராத்திரி முழுக்க டைம் இருக்கு.. சரியா..

சரிடா யுவா..

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே செல் போன் சினுங்கல் கேட்டது..

டேய் யுவா, உன் செல்போன் தான் அடிக்குதுடா..

ஆமாம்டா மாப்ள.. மறந்து போயி கிழே வெச்சுடேன்.. யார் இந்த நேரத்துல.. அம்மாவா இருக்கும்டா.. திருச்சி போய் சேர்ந்திருப்பாங்க.. சரி நீ முகம் கழுவி, டிரஸ் மாத்து. நான் போய் பேசிட்டு வரேன்.. சொல்லிக்கொண்டே கீழிறங்கி போனான் யுவா..

கீழே சென்று கைபேசி எடுத்தான்.. என்ன இது புது நம்பரா இருக்கே... சிந்தனையினூடே பொத்தானை அமுத்தி காதில் வைத்து அலோ என்றான்..
மறுமுனையில் பேச பேச , இவன் முகம் வெளிறியது...

மறுமுனையில் பதற்றத்துடன் சுந்தரின் அப்பாவின் குரல்.. யுவா தம்பி, உன்னை பார்க்கத்தான் சுந்தர் வண்டி எடுத்துகிட்டு கிளம்பினான்.. ராயபேட்டை மணிக்கூண்டு கிட்ட வேகமா திரும்பறப்போ எதிர்ல வந்த வேன் பலமா மோதி, அங்கேயே ஸ்பாட்ல உயிர் போயிடுச்சுப்பா.. தகவல் கிடைச்சு இப்போ தான் எல்லாரும் பதறியடிச்சு ராயப்பேட்டை ஜி எச் வந்தோம்.. வந்து முகத்த பார்த்தோம்பா.. எல்லாம் முடிஞ்சுப்போச்சு... நம்மள எல்லாம் விட்டுட்டு உன் பிரண்ட் போயி 2 மனி நேரம் ஆகுதுப்பா.. போஸ்ட்மார்ட்டம் நடந்துக்கிட்டு இருக்கு , பாடி தர இன்னும் 1 மனி நேரம் ஆகுமாம்.. ஒரே பதட்டமா இருக்கு.. கொஞ்சம் சிரமம் பார்க்காம சீக்கிரம் வாப்பா.. அழுதுக்கொண்டே பேசினார்.. பின்னால் பலரின் அழுகுரல் தெளிவாக கேட்டது..

கால்களுக்கு கீழே பூமி பிளப்பது போல உணர்ந்தான யுவா.. அப்போ மேல மாடில..... ??

மாப்ள, எனக்கு பிடிச்ச மால்ட் விஸ்கி , ஊருகாய்.. நாக்கு ஊறுது சீக்கிரம் மேல வாடா... சுந்தரின் குரல் காற்றில் மிதந்து வந்தது...
------------------------------------------------------------------------
இந்த கதைக்கான ஒரு வரிக்கரு சமீபத்தில் எப் எம் நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது..
----------------
சரி, இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி.. யுவாவாக உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.. இந்த நிலையில் நீங்கள் இருந்தால்.. உங்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்.. மறக்காமல் கருத்துப்பெட்டியில் சொல்லிட்டு போங்க..

உண்மை சம்பவம். என்ன தலைப்பு வைக்கட்டும்?

டேய் குமாரு...

வணக்கம்னே.. சொல்லுனே..

மறக்காம அப்படியே எல்லா வட்டதுக்கும் சொல்லிடு.

சரிண்ணே..ஒரு வண்டி எடுத்து ரவுண்ட் அடிச்சிடுறேன்னே.

இந்த நூறு ரூபா , வெச்சிக்கோ.

சந்தானம்...

சொல்லுங்க சேகர் அண்ணே..

கட்சி ஆபிஸ் ல நோட்டிஸ் போர்ட்ல எழுதிப்போட்டுடா...

இதோ அங்கே தான் போறேன்னே.. எழுதிடுறேன்னே..

பச்ச கலர் சாக்பீஸ்ல சேகர், 33 வட்ட செயலாளர்னு போட்டுடா..

சரிண்ணே, எக்ஸ் எம் சி கூட சேர்த்துப்போட்டுடறேன்ன்னா..
வரண்ணே..

அப்படியெ ஆபிஸ்ல இருந்து 10க்கு 10 ல ஆறு கட்சிக்கொடி எடுத்துகோ.
சரிண்ணே.. அப்படியே நம்ம ஊட்ல புதுக்கொடி 3 இருக்குன்னே, அத எடுத்துக்கறேன்னே..

சரி, இந்தா வழில டீ சாப்பிட்டு போ- 50 ரூ தாள்

டேய் கோவிந்து..

இந்தா மேட்டரு. 750 நோட்டீஸ் போட்டுடு. எல்லா ஏரியாலயும் இருக்கனும்.. தெரிதா.. கட்சி பேரு. சின்னம் கொஞ்சம் பெரிசா வரனும்டா.. பாத்துக்கோ,,

சரிண்ணே , ஒரு ஏரியா மிஸ் ஆகாம பாத்துக்கறேன்ன்னே.. பக்கத்துல இருந்து பிரின்டிங், ப்ரூப் பார்த்து நானே முடிக்கரேண்ணே..

சரிடா.. இந்தா 1500 வெச்சிக்கோ.. மீதி அப்புறம் பாத்துக்கலாம்..
சரின்னே. வரண்ணே..
டேய், டேய்.. கஷ்டம் பாக்காம அப்படியே திருக்கழுகுன்றம் கட்சி ஆபிஸ்ல ஒரு மெசேஜ் கொடுத்துட்டு வந்துடுடா..

உனக்கு செய்யாமயான்னே.. கன்டிப்பா செய்யறேன்னே.. வரேன்னே....

அண்ணே, மாவாட்டம் வராருன்னே...

வாங்கண்ணே, வாங்கண்ணே,

என்ன சேகரு என்ன ஆச்சு திடிர்னு..

ஆமான்னே......... .. 9:00 மனிக்கு ஆச்சுன்னே.. அண்ணே, தலைமை கழகத்துக்கு சொல்லிடுவீங்களா அண்ணே.. பேக்ஸ் அனுப்பிட்டு தான் வரேன் சேகரு.. கவலப்படாதே....மனச தேத்திக்கோப்பா.

வீட்டின் உள்ளே விட்டுட்டு போயிட்டியே என்ற அனைவரின் அழுகுரலின் சத்தத்தில், கணவன், மகள், தம்பி, அண்ணன், சித்தி, மருகள், பேரன், பேத்தி, சம்பந்தி, பெரியம்மா, அண்ணி, நன்பர்கள் என அனைவரையும் பார்த்தேன்...

ஏனோ, "மகனை" மட்டும் பார்க்கவே முடியவில்லை.. மகனுக்கு பதிலாய் "அரசியல்வாதி"யை மட்டுமே பார்க்கமுடிந்தது.. அரசியலின் தாக்கம் என்னவென்று அப்போதுதான் எனக்கு புரிந்தது..

இந்தியாவில் புகைப்பிடிக்க தடையா?

அக்டோபர் 2 முதல் இந்தியாவில் புகைப்பிடிக்க தடை என்ற சட்டம் கொண்டு வந்து தீவிரமாக அமல் படுத்தினார் நம் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்கள்.


பல தரப்பிலிருந்தும் இந்த சட்டத்திற்கு பலவாறான கருத்துக்கள் வந்தது. சிலர் இந்த சட்டத்தை அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கலை எடுத்துரைத்தார்கள். சிலர் இந்த சட்டம் PASSIVE SMOKING தடுப்பதற்கு கொண்டுவரப்பட்டுள்ளது, குறை கூறவேண்டாம் என்றார்கள்.

இந்த சட்டத்தை முழுமையாக அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல், மேலும் எத்துனை மாதங்கள் இது தாக்குப்பிடிக்கும், பான் பராக் தடையை போலத்தான் இந்த சிகரெட் தடையும் மாறும் வாய்ப்புள்ளது என்ற என் ஆதங்கத்தை நானும் சின்ன அய்யா - சிறு யோசனை என்ற தலைப்பில் பதிவாக இட்டேன்

அக்டோபர் 2 க்கு பிந்தைய நிகழ்வுகளான இலைங்கைப்போர், அமெரிக்க தேர்தல், இங்கிலாந்து கிரிக்கெட், மும்பை தீவிரவாத தாக்குதல், கலைஞர் - மாறன் இனைப்பு, 5 மாநில தேர்தல் இத்யாதி இத்யாதி எல்லாம் இந்த சிகரெட் பிடிக்க தடை பற்றிய செய்திகளை சட்டத்தை பின்னுக்கு தள்ளிவிட்டது. பின்னுக்கு என்பதை விட, மறக்கடிக்கவே செய்துவிட்டது

சட்டம் அமல்படுத்தப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அமலாக்கம் எந்த நிலையில் உள்ளது?

முதல் 15 நாட்கள் மிக கடுமையான கன்கானிப்பு. ஆங்காங்கே அரசாங்க அறிவிப்பு, சுகதாரத்துறையின் சார்பாக விளம்பரங்கள், பா ம க வின் பசுமைதாயகத்தின் சார்பில் ஆங்காங்கே விளம்பர தட்டி, விழிப்புனர்வு பிரச்சாரம் (பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா ம க கரைவேட்டிகளே, இடையில் மேடையின் பின்னால் சென்று 2 வலி வலித்துவிட்டு வந்தது வேறு கதை),
மிகப்பெரும் அளவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டது. டீ கடை , பொட்டிக்கடையின் வாசலில் புகை மூட்டமாக இருக்கும் நிலை மாறியது. ஓரிருவர் கடை மறைவில் நின்று பயந்து பயந்து எட்டிப்பார்த்து தம் இழுத்ததை பார்க்க முடிந்தது.
டீக்கடையின் உள்ளே கூட புகைப்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. மிக தெரிந்த ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டுமே டீ கடைகள் அனுமதி தந்தது.

அடடா! இந்த சட்டத்தின் மூலம் பெருமளவில் புகைப்பது குறைந்து. கடைவாயில்கள், தெருவீதிகள், பொது இடங்களில் புகை மன்டலம் குறைந்து, (PASSIVE SMOKING ) பேசிவ் ஸ்மோகிங் குறைந்து விட்டதே என்று சந்தோஷப்பட்டது அடுத்த 10 நாட்களில் புஸ்ஸாகிப்போனது தான் வேதனை.

கிட்டதட்ட 15 - 20 வது நாட்கள் மட்டுமே இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டது.. 21 வது நாளில் இருந்து மெல்ல மாற்றம் தெரிந்தது.. கடை மறைவிலும் ,கதவு இடுக்கிலும் நின்று புகைத்தவர்கள் வெளி வந்து நின்று புகைக்க துவங்கினர்..
கடை வாசலில் 2, 3 பேர் மட்டுமே புகைத்தது 5, 6 , 7.. என்று மெதுவாக ஏறத்துவங்கியது. பொது இடங்களிலும் கண்கானிப்பு இல்லை என்ற நிலை வந்த பிறகு நம் புகையாளிகள் வழக்கம் போல ஒளித்துவைத்திருந்த சிகரெட்-தீப்பெட்டியை தைரியமாக வெளியில் எடுத்தனர்.. பேருந்து நிலையம் , ஓட்டல், டீக்கடை, சாலைகள் என்று அனைத்து இடங்களும் பழைய குருடி கதவை திறடி என்பதற்கு ஏற்ப மாறிவிட்டது..
இந்திய திருநாட்டில் ஒரு சட்டத்தின் நிலை இது தானா?? 15 நாட்களுக்கு மேல் ஒரு சட்டத்தை அமல் படுத்த முடியவில்லை..

இந்தியாவில் புகைக்க தடையிருக்கிறது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

ஒரே ஆறுதலான விஷயம்- பல அலுவலக வளாகங்களில் ஸ்மோக் ஜோன் (SMOKE ZONE) என்பதை எடுத்துவிட்டுருந்தனர். வெளியிலும் கட்டுப்பாடு இருந்தததால் அலுவலக நேரத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்போரின் புகைத்தல் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்து. ஆனால் இப்போது வெளியில் கட்டுப்பாடு தளர்ந்துவிட்டதால் அதிலும் ஓட்டை விழுந்துவிட்டது.
அலுவலக வளாகத்தில் இருந்து வெளியே நடந்து வந்து புகைக்க வேண்டும் என்ற நிலையில், சோம்பல் காரணமாக சிலரின் புகைப்பழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால் இதுவும் எத்தனை நாள் ??? மீண்டும் அலுவலக வளாகங்களில் புகைப்பிடிக்கும் பகுதி வராது என்று நிச்சயமாக சொல்ல இயலாது.. 2 மாதத்தில் வெளியிடங்களில் வந்த இந்த நிலை, மேலும் 5 மாதத்தில் அலுவலக வளாகங்களுக்கும் வரும் நிலை தான் தெரிகிறது.
ஆரம்பத்தில் இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி கேள்வி எழுப்பபட்ட போது ஆயிரம் விளக்கங்களை சுகாதாரத்துறை கொடுத்திருதாலும், இன்றைய நிலையில் சட்டத்தை அமல் படுத்துவதில், அரசும், சுகாதாரத்துறையும், காவல் துறையும் பசுமைத்தாயகமும் படுதோல்வி அடைந்து விட்டதாகவே உள்ளது..

இந்த தடையை ஊர்ஜிதப்படுத்திய உச்சநீதிமன்றம் என்ன செய்கிறது?? யாராவது பொது நல வழக்கு தொடரட்டும் என வாயிற்கதவை அகலத்திறந்து வைத்து காத்திருக்கிறதா..??
பான் பராக் தடை என்பது எப்படி ஆனதோ , அதே கதி தான் சிகரெட்டுக்கும் ஆனது.. போதை வஸ்துக்கள் பவர் தெரிகிறது..
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது,
திட்டம் போட்டு திருடுற (புகைக்குற) கூட்டம் திருடிக்கொண்டே (புகைத்துக்கொண்டே) இருக்குது .
திருடனாய் (புகைப்பவனாய்) பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை (புகையை) ஒழிக்க முடியாது..

அ தி மு க எம் எல் ஏ பதவி பறிப்பு? கோர்ட் தீர்ப்பு & ஒரு சுயேட்சையின் காமெடி


அ தி மு க வின் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் குளோரின் சந்திராவின் எம் எல் ஏ பதவி செல்லாது என்று உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
2006 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அ தி மு க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர் குளோரின் சந்திரா. இவரின் வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தங்கமுத்து வழக்கு தொடர்ந்தார்.
ராஜபாளையம் தனித்தொகுதி, அதன் அடிப்படையில் இங்கே தாழ்த்தப்பட்டோர் தான் போட்டியிடவேண்டும் ஆனால் கிறுத்துவரான அ தி மு க வேட்பாளர் குளோரின் தான் தாழ்த்தப்பட்டவர் என்று தவறான தகவல் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தவறான தகவல் கொடுத்து வெற்றிப்பெற்ற அவரின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று தங்கமுத்து தன் மனுவில் கூறியிருந்தார். ( இங்கே அ தி மு க வின் அம்மா 4 இடத்தில் வேட்புமனு தாக்கல் செய்து பதவியிழந்து ஞாபகம் வருகிறது :) )

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குளோரின் சந்திராவின் பள்ளி சான்றிதழை அடிப்படையாக வைத்து இவர் தாழ்த்தப்பட்டவரின் தொகுதியில் நின்று வெற்றிப்பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் குளோரின் சந்திரா தங்கமுத்துவிற்கு அவரின் தேர்தல் செலவான ரூ 5000 வழங்கிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. (வழக்கு செலவாக தங்கமுத்து 5000 த்துக்கும் அதிகமாக செலவு செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.. :) )

இதில் இந்த சுயேட்சையின் காமெடி எது என்று கேட்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும் :)
தங்கமுத்து தன் மனுவில், குளோரின் சந்திரா வெற்றி செல்லாது என்று அறிவித்து, தன்னை (தங்கமுத்துவை) வெற்றிப்பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அது தான் காமெடி.

தீர்ப்பளித்த நீதிபதி கூட சிரித்திருப்பார் என நினைக்கிறேன்.. புரியலயா?? கீழே பார்க்கவும்..
ராஜபாலையம் 2006 சட்டமன்ற தொகுதி வாக்குகள் விவரம்
குளொரின் சந்திரா - அ தி மு க - வெற்றி - 58320
வி பி ராஜன் - தி மு க - 57870
காளிமுத்து - பகுசன் சமாஜ் - 13218
ஐய்யனார் - தே மு தி க - 10250
விஜயகுமாரி - பார்வாட் ப்ளாக் - 4082
செல்லப்பாண்டி - பி ஜே பி - 1640
தங்கமுத்து (மனுதாரர்) - சுயேட்சை - 156

156 (மொத்த வாக்கில் 0.1%) வாக்குகள் வாங்கி 7 வது இடத்தில் இருக்கும் தங்கமுத்து தன்னை வெற்றிப்பெற்றதாகவும், எம் எல் ஏ வாகவும் அறிவிக்க சொன்னது செம காமெடி தானே.. :)
நீதிமன்றம் அவரின் இந்த கோரிக்கையை தள்ளுபடி செய்தது.. பாவம் என்று 5000 ரூ இழப்பீடு வழங்க மட்டும் தீர்ப்பளித்துள்ளது.
உடனடியாக பதவி போகுமா அல்லது குளோரின் மேல் முறையீடு செய்து அது 3 ஆண்டுகள் வழக்காடப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் இந்த சட்டமன்றத்தின் ஆயுள்காலமான 5 ஆன்டுகளே முடிந்துவிடுமா என்பது தெரியவில்லை..
சைக்கிள் கேப்பில் கார் ஓட்ட நினைத்து காமெடி செய்திருந்தாலும் நிச்சயம் தங்கமுத்துவை பாராட்ட வேண்டும்.
2 முதல் 6 வது வரையிலான இடத்தை பிரதான கட்சிகளே இதனை கண்டுக்கொள்ளாத போது இவர் துனிந்து வழக்குப்போட்டு , ஆதாரங்கள் சமர்ப்பித்து வழக்கில் வெற்றியும் கண்டுள்ளது பாராட்டப்படவேண்டியது தானே..

சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி திடீர் கைது



4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இன்று கைது செய்யப்பட்டதாக குமுதம் வலைதளத்தின் லேட்டஸ்ட் நியூஸ் பகுதியில் செய்தி வந்துள்ளது..


ரிப்போர்ட்டர், ஜூவி, நக்கீரனுக்கு அடுத்த 2 பிரதிக்கான ஸ்பெஷல் கவர் ஸ்டோரிக்கான களம் கிடைத்துவிட்டது..


குமுதம்.காம் செய்தி கீழே.


மேட்டூர்: சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறையினர் கைது செய்து பெங்களூருக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக காவல்துறையினரால், சந்தன வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு 4 ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், வீரப்பன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மேட்டூரில் தங்கியிருந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். 5 போலீசார் மீது வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முத்துலட்சுமி கைது செய்யப்பட்டதாக கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - குமுதம்.

கண்டுப்பிடியுங்கள் பார்க்கலாம்..

கீழே உள்ள படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்.. ஏதாச்சும் தெரிகிறதா?? படத்தில் என்ன தெரிகிறது என்பதல்ல கேள்வி..



சீட்டுக்கட்டுகள், காகிதங்கள், அட்டை, கோலப்பொடி, கற்கள், மனல் போன்றவற்றை உபயோகித்து இது போன்ற உருவங்கள்/அமைப்புகள் செய்வதை பார்த்துள்ளோம்..



இங்கே உள்ளது மேலே கூறியவை அல்லாது வேறு ஒரு பொருளில் நிர்மானிக்கப்பட்டது , அது என்ன?


எந்த பொருள் கொண்டு இந்த படத்தை நிர்மானித்தார்கள் என்பது தான் கேள்வி.. கண்டுபிடிக்கமுடிந்தால் கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள்

புலியும் சிங்கமும்.. நடுவில் யாரோ?








தமிழ்மணக்காட்டுக்குள்ளே ஒரே புலி சத்தமும், சிங்கத்தின் கர்ஜனையுமா இருக்கு. ஒரு காட்டுக்குளே வர மாதிர் உணர்வு.. சரி சரி, அதுக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இல்லை.. இல்லை


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. ரொம்பத்தான் முறுக்கிகிட்டு நிக்கறீங்க.. உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து சமாதானம் பன்னி கூட்டிட்டு வரதுக்குள்ள என் தாவு தீர்ந்து .. டவுசர் கிழிஞ்சு போச்சு....





போங்க போங்க ஒன்னா ஒத்துமையா இருந்து ஆகற வேலைய பாருங்க இனிமேவாச்சும்.. நான் போய் என் கிழிஞ்ச டவுசர தேடறேன்...

ரஜினி விரலில் ருத்ராட்சம்..


ருத்ராட்சம்..


ரஜினி பற்றிய அடுத்த மேட்டருக்கு பிள்ளையார் சுழி போடும் வேலையை குமுதம் தொடங்கிவிட்டது.. அது டமார் என வெடித்து கிளம்புமா அல்லது புஸ் என்று போகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.


மக்கா, இந்த பதிவு ரஜினி பற்றியல்ல, ஏற்கனவே ரஜினி பற்றி 2 பதிவு போட்டாச்சு.. இது ருத்ராட்சம் பற்றியது.


அருனாசலம் படத்தில் ருத்ராட்சம் தான் கதையின் முக்கிய டர்னிங்க் பாயின்ட் ஏற்படுத்தும்..ரஜினி எனும் போதே,நெற்றியின் பட்டை, கழுத்துல ருத்ராட்சகொட்டை, பரட்டை தலை என்கிற டயலாக் பிரசித்தம்


ரஜினிக்கும் ருத்ராட்சத்துக்கும் ஏதோ தொர்டர்புள்ளது போலும்.


இதோ இந்த ருத்ராட்சத்தின் பயணமும் ரஜினியிடமிருந்தே ஆரம்பம் ஆகிறது.. எவ்வுளவு தூரப்பயணம் என்பது போக போகத்தான் தெரியும்..

இந்த வார குமுதம் ரிப்போர்டரில், ரஜினியின் கடந்த கால நிகழ்வுகள்(காவிரி, கர்நாடக எதிர்ப்பு, குசேலன் தோல்வி, இலங்கைப்பிரச்சனையில் திடீர் விசுவரூபம் , சத்யராஜ், ராமதாஸ் பாசம்) பற்றிய கட்டுரை.


அதாவது, ஒரு கட்டத்தின் ரஜினியை எதிர்த்தவர்கள் கூட(ராமதாஸ், சீமான், சத்யராஜ்) இப்போது அவரை பாராட்டிபேசுவதன் காரணம், ரஜினியின் விரலில் (அதுவும் ஆட்காட்டிவிரலில்) இருக்கும் ருத்ராட்ச மோதிரமாக இருக்கலாம் என்று ரிப்போர்ட்டரின் ஆய்வறிக்கை சொல்கிறது.

இது பற்றி மேலும் விவரங்களுக்கு அவர்கள் சோதிடர் ஷெல்வியை தொடர்பு கொண்ட போது அவர் சில விஷயங்களை சொல்லியுள்ளார், அதில் தான் ஒரு சந்தேகம்..

நீங்கள் சொல்வது போல், ரஜினி ஆள்காட்டி விரலில் ருத்ராட்ச மோதிரம் அணிந்திருப்பது உண்மையிலேயே விசேஷமானதுதான்
குரு மேட்டில் ருத்ராட்ச மோதிரம் அணிவதன் மூலம் வலிமை, தன்னம்பிக்கை கிடைக்கும். அசைவம் மீது வெறுப்பும், சைவத்துக்குரிய நாட்டமும் ஏற்படும். தப்புத் தப்பாகப் பேசுவது குறைந்து, கட்டுப்பாடும் தீர்க்கமான முடிவெடுக்கும் மனநிலையும் கிடைக்கப் பெறுவார்கள்.


அவரது ரசிகர்கள் மத்தியில் அதற்கு பெரும் `கிராக்கி' ஏற்பட்டது. அதே போல் ருத்ராட்ச மோதிரத்தையும் அவரது ரசிகர்கள் அணிய முயன்றால், அதில் சிக்கல் இருக்கிறது'' என்று புதுகுண்டைத் தூக்கிப் போட்டவர்,


``ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிவதால் எப்படி பலன்கள் கிடைக்குமோ அதுபோல, சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாதவர்கள் ஒரிஜினல் ருத்ராட்சத்தை அணிந்தால், அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் இளைய வயதினர் ருத்ராட்சம் அணியக் கூடாது என்று அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்
மேற் சொன்ன வரிகள் தான் ஷெல்வி சொன்னதாக ரிப்போர்டரில் வந்தது..

முதலில் இந்த ருத்ராட்சம் அணிவதால், சுயகட்டுப்படு வரும்,தீர்க்கமான முடிவெடுப்பார்கள் என்று சொல்லி இருக்கிறார்...ஆக, இந்த ருத்ராட்சத்துக்கு மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளாக தான் அர்த்தம்?
பின்பு என்ன நினைத்தரோ,சுயகட்டுப்பாட் இல்லாதவர்கள் இதை அணிந்தால் விளைவுகளை அனுபவிக்க வேண்டும், அதானால் கட்டுப்பாடு இல்லாதவர்கள் இதை அனியகூடாது என்று கூறீயுள்ளார்,

ருத்ராட்ச மோதிரத்துக்கு அந்த சக்தி இருக்கிறதென்றால், யார் அணிந்தாலும் அவர்களை கட்டுப்பாடுடையவர்களாக அது மாற்றிவிடவேண்டுமே..

ரிப்போர்ட்டரும், ஜீ வீயும், நற்கீரனும் எழுதுவது போல், ரஜினி அரசியலுக்கு வர முடிவெடுத்துவிட்டார், கடைசி நேரத்தில் அவர் நலம் விரும்பிகளின் சொல்லால் மனம் மாறவும் வாய்ப்புள்ளது என்று முடிப்பார்கள் ஏனெனில் ரஜினி அரசியல் என்று சொன்னால், நாங்கள் துல்லியமாக செய்தி கொடுத்தோம் என்று செய்தி போடவும், அதே நேரம் ரஜினி வரவில்லை என்றாலும், அதான் அப்போவே சொன்னோம்ல மனசு மாற வாய்ப்புள்ளதுனு அப்படினு தங்கள் வசதிக்கு போட்டுகலாம்..

ருத்ராட்சம் விஷயத்திலும், பொதுவாகவே ஜோதிடத்திலும் கடைப்பிடிக்கபடும் உத்தியும் இதுவே தானோ??

எது எப்படியோ, ருத்ராட்ச வியாபாரிகள் இப்போதே நிமிர்ந்து விட்டார்கள் கல்லா கட்ட.. இந்த ருத்ராட்சத்திற்கு இந்த பலன், மதுரையில் 11 ம் தேதி, நெல்லையில் 14, சிதம்பரத்தில் 15, கடலூரின் 20 , பொள்ளாச்சியில் 22 என்று ராஜ் மற்றும் விஜய் தொலைகாட்சியில் வரிசை கட்டி வர ஆரம்ப்பித்துவிடுவார்கள் ருத்ராட்ச சோதிடர்கள்
நன்றி - குமுதம் ரிபோர்ட்டர்

ஜெயா, வைகோவுக்கு ஆப்படிக்கும் நாள் தூரத்தில் இல்லை

விடுதலையாகி இன்று வைகோ மதுரை வந்தபோது , சமீபத்தில் கைதான இயக்குனர்கள் அமீர், மற்றும் சீமான் வைகோவை சந்திதார்கள்.

பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ இது மரியாதை நிமித்த சந்திப்பு என்றும், இந்த இயக்குனர்கள் தமிழகத்தின் உரிமை போராளிகள் என்றும், இவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

இவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

வைகோ அண்ணாச்சி, ஜெயிலுக்கு போனா உடனே இழுத்து போர்த்தி தூங்கிடுவீங்களா? பேப்பர் எல்லாம் படிக்கவே மாட்டீங்களா?? அவங்கள கைது செய்ய சொல்லி யார் குரல் கொடுத்தாங்க தெரியுமா?

மதுரையில சொன்னத அப்படியே ரயிலேறி சென்னை வந்து போயஸ் தோட்டத்து பக்கமா பாத்து சொல்லுங்க அண்ணாச்சி.. அப்புறம் அன்பு சகோதரி உங்களுக்கு அடிக்குற ஆப்பு எவ்ளோ பெரிசுனு எல்லோரும் பார்க்கட்டும்..

அன்புச்சகோதரி பயங்கரவாதிகள், தீவரவாதிகள் நு சொல்லுவாங்கலாம்.. அருமை அண்ணன் வந்து தமிழர் நலன் காக்கும் போராளினு சொல்லுவாராம்.. போங்கடா டேய்... !

இவர்கள் சந்தித்துக்கொண்டால்

இன்று அலுவலகத்தில் சாப்பாடு நேரத்தில் டிபன் பாக்ஸ் தொறந்தவுடனே ஷாக்.. ஷாக் மட்டுமில்லே , கொஞ்சம் அதிர்ச்சி கலந்த அதிசயமும் கூட..

அட ஆமாங்க உண்மையாதான் சொல்றேன்.. என் டிபன் பாக்ஸ்ல மனக்க மனக்க தக்காளி சாதம்.. அவ்ளோ "காஸ்ட்லியான சாப்பாடு" பாத்தவுடனே யாருக்கு தான் அதிர்ச்சி, அதிசயம், சந்தோஷம் எல்லாம் வராது சொல்லுங்க...

பாருங்க , நம்ம நிலமை எப்படி ஆயிடுச்சுனு.. தக்காளி சாதத்துக்கு இவ்ளோ பில்டப் கொடுக்கற அளவுக்கு விலைவாசி எகிறிப்போச்சு...

கோயம்பேடை பார்க்குறதுக்கே குடுத்து வெச்சிருக்கனும்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியம் இல்லை..

சரி சரி. தக்காளி சாதம் சாப்பிடுகிட்டே, ரஜினி பத்தி 2 பதிவு போட்டு ஒப்பேத்தியாச்சு.. அடுத்த என்னத்த போடலாமுனு யோசிச்சப்ப வந்த யோசனை தான் இந்த பதிவு..





================================================================



டிஸ்கி - தலைவர்கள் படத்துக்கும், இந்த பதிவுக்கும் , காய்கறி கமெண்ட்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை இல்லை இல்லை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திப்பு - ரசிகர்கள் கேட்க மறந்த கேள்விகள்

8 மனிக்கு வரப்போகும் தலைவருக்காக கூட்டத்தை கட்டிப்போட, 6:00 மனியிலிருந்தே தலைவர் இதோ வருகிறார், வருகிறார், வந்து விட்டார் என்று மைக்கில் அலறுவதை கேட்டிருக்கிறோம்..அதே போல, சத்தியநாரயனா அவர்கள், இதோ ரஜினி அவர்கள் உங்களை சந்திக்கப்போகிறார் என்று இழுத்து , இழுத்து ஒரு வழியாக சந்திப்பு நேற்று முடிவடைந்தது..


ரஜினி , ரஜினி சந்திப்பு குறித்தும் தங்களின் ஊகங்கள், கற்பனை கலந்து உண்மை செய்திகளை போல லாவகமாக கொடுத்து கல்லா கட்டிய பத்திரிக்கைகள் இதோ இப்போது அடுத்த கட்டத்துக்கும் தயாரகிவிட்டது
வித்தியாசமான சந்திப்பு தான்.. ரசிகர்கள் கேள்விகளை ஒரு பேப்பரில் எழுதிக்கொடுக்க, அதை ஒருவர் படிக்க, ரஜினி தனக்கேயுரிய பானியில் பதில் அளிக்க, இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி வெகு சுவாரசியமாகவே இருந்த்து..

ரஜினியின் மேனரிசம், ஸ்டைல், ட்ரேட் மார்க் சிரிப்பு, முடி கோதுதல், சில கேள்விகளுக்கு பட்டென்று பதில், சிலவற்றிக்கு நீண்ட யோசனை.. ஒரு வரி பதில், ஒரு சொல் பதில், நீண்ட விளக்கம் என்று மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி ரஜினியும் , அவரின் ரசிகர்களும் எதிர்ப்பார்த்ததை விட சூப்பராகவே வந்திருந்தது..

30 வருடமாக நடிப்பு தொழிலில் இருக்கும் நடிகரிடம் நியாயமாக அவரின் சினிமா பற்றிய கேள்விகள் அதிகம் இருந்திருக்கவேண்டும்.. ஏன் ரசிகர்கள் அது பற்றி கேட்கவில்லை என்றே புரியவில்லை

எங்களுக்கு என்ன அங்கீகாரம் , மாற்றி மாற்றி கடவுள் .. கிருஷ்னகிரி நினைவில்லம் போன்ற உப்புசப்பில்லா கேள்விகள் சில இருந்தாலும், பல கேள்விகள் நல்ல கேள்விகளாகவே பட்டது, எனினும் கேட்கவேண்டிய முக்கியமான சில கேள்விகளை கேட்காமல் விட்டு விட்டார்களே எனத்தோண்றியது.. (ரசிகர்கள் இதை நிச்சயம் கேட்டிருக்கவே மாட்டர்கள் )
1. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களுடன் முத்து, சிவாஜி, சந்திரமுகி போன்ற படங்களை ஒப்பிட்டு பார்த்து , தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் உங்களை சரியாக பயன்படுத்தவில்லை என்று என்றைக்காவது நினைத்ததுன்டா தலைவா?

2. நீங்கள் எப்போதும் சொல்லுவது குடும்பத்தை பாருங்கள் என்று.ஆனால் உங்களின் பல வெறித்தனமான ரசிகர்கள் இன்றும் தங்கள் குடும்பத்தை விட உங்களுக்கே முன்னுரிமை கொடுத்து, தங்கள் பட ரிலிஸ் அன்று செய்கின்ற ஊதாரி (குடும்பம் மிக வறுமையான நிலையில் உள்ளபோதும்) நீங்கள் அறிவீர்களா?

3. ஏழை குழந்தைகள் ஒரு வேளை பாலுக்கு இல்லாமல் தவியாய் தவிக்கும் போது உங்களின் ரசிகர்களாகிய நாங்கள் உங்களின் கட் அவுட்டுக்கு லிட்டர் கணக்கில் பாலாபிஷேகம் ( இப்போது பீரும் சேர்ந்து) செய்து எங்களின் பக்தியை காண்பிப்பது பற்றிய உங்கள் கருத்து?

4. கருப்பு பணம் ஒழிப்பு பற்றி நீங்கள் நடித்த சிவாஜி அருமை. உங்களின் சம்பளம் என்ன என்பது உங்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அது அனைத்தும் வெள்ளையில் தான் வாங்குகிறீர்களா என்று உங்கள் பக்தர்களாகிய நாங்கள் தெரிந்துக்கொள்ளலாமா?

5. உங்களின் சொந்த பகையை தீர்த்துக்கொள்ள நீஙகள் எங்களை பயன்படுத்தியதாக செய்திகள் வந்ததே , அது உண்மையா? (ஜெயலலிதாவுடன் உரசலில் தி மு க - த மா க கூட்டணிக்கு அதரவு வாய்ஸ், பா ம க வுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகும் அதே போல் எதிரணிக்கு)

6. கடவுளாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்ற நிலையில் இருந்து தைரியலட்சுமியாக ட்ரிபிள் ப்ரோமஷன் கொடுத்தது பற்றி உங்கள் கருத்து

7. உங்களுகாக நாங்கள் அடிப்பட்டதை அடுத்து, சரியான நேரத்தில் பதிலடி தருவேன் என்று ஆவேச பேட்டி கொடுத்து எங்களை சந்தோஷப்படுத்தினீர்கள்.. இன்னும் அந்த சரியான நேரம் வந்ததா , இல்லையா??

8. ஐஸ்வர்யாவுடன் நீங்கள் நடித்தே விடவேன்டும் என துடித்ததாக செய்தி வந்தது, பின் ஒரு கட்டத்தில் இந்த பழம் புளிக்கும் என்று நினைத்து " ஐஸ்வர்யாவின் கனவுகள் விட்டாய் , சீ என்ற சொல்லில் சுட்டாய்." என்ற பாடலுக்கு வாயசைத்து, இப்போது இயந்திரனில் அவருடன் ஜோடி சேர்ந்தது வரை , எது உண்மை என தெரியாமல் குழம்பும் எங்களுக்கு வெளிப்படையான பதில்? (குசேலனின் சொன்னது போல இங்கேயும், அது கவிஞரின் வரிகள் நான் வெறும் வாய் அசைத்தேன் என்று சொல்வீர்களா தலைவா?)

9. இன்னும் எத்துனை வருடம் 20 வயது கதாநாயகியுடன் மரத்தை சுற்றி டூயட் பாடி , நகைச்சுவை நடிகருடன் இனைந்து இரட்டை அர்த்த வசனம் பேசி எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்த போகின்றீர்? திறமை இருந்தும் எந்த வித்தியாசமான வேடமேற்று நடிக்காததன் காரணம்?

10. சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் நீங்கள், இங்கேயே சம்பாதித்த நீங்கள், அனைத்து விஷயங்களுக்கும் வாய்ஸ் கொடுக்கும் நீங்கள்.. கருப்பு பணம் பற்றி பேசிய நீங்கள், உங்கள் படத்துக்கான முதல் 10 நாள் டிக்கெட் விலையென்ன , அது எந்த முறையில் விற்கப்படுகிறது என்று அறிவீர்களா? அதை வாங்குவதில் உங்களின் தினக்கூலி ஏழை ரசிகனும் ஒருவன் என தெரியுமா? இப்போதாவது நாங்கள உங்கள் கவனத்துக்கு அதை எடுத்துவந்தால், அதற்கு எதிராக வாய்ஸ் வருமா?

11. 1996 ல் "கோட்டை" விட்ட நாம், இப்போது முயன்றால் எத்துனை இடங்கள் பிடிக்கமுடியும், ஆட்சி அமைத்திட முடியுமா?
12. உங்களை வாழும் மகாத்மா என்று நாங்கள் பேனர் வைக்கிறோம்.. உங்கள் உண்ணாவிரதத்தின் போது உங்கள் மேடை எதிரே அப்படி ஒரு பேனர் பளிச்சென்று வைத்தோம்.. பார்த்திருப்பீர்கள்.. "வாழும் மகாத்மா" என்பதை "உளமாற" ஒப்புகொள்கின்றீர்களா?

இன்னும் கேள்விகள் உள்ளது தலைவா.. இப்போதைக்கு இதற்கு பதில் சொல்லுங்கள்.. மற்ற கேள்விகளை இன்னும் 3 வருடம் கழித்து (அடுத்த படம் ரிலீஸின் போது) நடக்கபோகும் உங்களின் ரசிகர் சந்திப்பில் கேட்கிறோம்..

ரஜினி - ரசிகர்கள் சந்திப்பு...

ராகவேந்திரா மன்டபத்தில் ரஜினி தன் ரசிகர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்..

ரசிகர்கள் - எதிர்கால திட்டம்?
ரஜினி - ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டும். என் எதிர்கால திட்டம் எந்திரன் படம்.

ரசிகன் - தொடர்ந்து சந்திப்பீர்களா?
ரஜினி - ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, ராகவேந்திரா மன்டபத்தில் புது தொலைப்பேசி எண்கள் வைக்கப்படும், நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.. முக்கிய விஷயங்களில் நானே பேசுவேன்.

ரசிகன் - எந்திரன்?
ரஜினி - இந்தியாவிலேயே சிறந்த படமாக வரும்.

ரசிகன் - ரசிகர்கள் அந்தஸ்து உயர்த்தப்படுமா??
ரஜினி - அந்தஸ்தை நாம் தேடி போக கூடாது, அதுவாக நம்மை தேடி வரவேண்டும்

ரசிகன் - மக்களுக்கு மன்றங்கள் மூலம் நலதிட்ட உதவிகள்?
ரஜினி - பணம், ஜனம் ஒன்று சேர்ந்தால் அரசியல் வந்துவிடும்.. எனக்கு தோண்றும் நல்ல காரியங்களை நான் தனிப்பட்ட முறையில் செய்வேன். உங்களுக்கு தோண்றும் நல்ல காரியத்தை நீங்கள் செய்யுங்கள்

ரசிகன் - நீங்கள் தொண்டு செய்வது நிறுத்தப்பட்டது??
ரஜினி - இலவச திருமணங்களை 30 மாவடத்திலும் நடத்தினேன். தொடர்ந்து தேவை இல்லை என்பதால் நிறுத்தினேன். தேவை என்றால் மீண்டும் செய்வேன்.

ரசிகன் - குசேலன்? 25 கோடி சம்பளம்?

ரஜினி - அதில் எனக்கு கவுரவ தோற்றம் என்று பூஜையிலேயே சொன்னேன். 25 கோடி வாங்கவில்லை

ரசிகன் - நடிப்பு தொடருமா?
ரஜினி - புகழுக்காக, பணத்துக்காக இல்லாது, நல்ல கேரக்டர் இருந்தால் நடிப்பேன்

ரசிகன் - சத்யநாரயனா செய்ல்பாடு தீவிரமாக இல்லை..
ரஜினி - அவருக்கு உடல் நலமில்லை.

ரசிகன் - ராகவேந்திரா, அருனாச்சலேச்வர், பாபாஜி என மாறுவது?
ரஜினி - மதம் மாறுதல் தான் தப்பு, அது கூட அவரவர் விருப்பம்... நான் செய்வது ஆண்மீக விருத்திக்கு..

ரசிகன் - உங்களை குழப்பவாதி என்று பத்திரிக்கைகள்..
ரஜினி - உண்மையாக இருக்கலாம், சில நேரங்களில் நான் செய்வது அப்படித்தான் உள்ள்து.. நான் நினைத்ததை பேசுகிறேன். அவரவர் அவர் கோணத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்.. எது சரி என படுகிறதோ அதை தான் பேசுவேன், அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

ரசிகன் - ஒக்கனேக்கல் பிரச்சனை?
ரஜினி - மன்னிப்பு கேட்கவில்லை.. திரைப்படத்துக்கு எதிராக இருப்பவரை உதைக்கவேண்டும் என்றேன்.. அது கர்நாடக மக்களுக்கு எதிராக என எடுத்துக்கொண்டார்கள்.. நான் தெளிவாக பேசாததால் இருக்கலாம். வருத்தம் மட்டும் தெரிவித்தேன்.. மன்னிப்பு இல்லை

ரசிகன் - 30 ஆண்டுகளாக ஆசியாவில் பெரிய சக்தியாக உள்ளீர்கள்
ரஜினி - என் ரசிகர்களாகிய உங்களால்

ரசிகன் - பிறந்தநாள் சந்திப்பு?
ரஜினி - சந்திக்க மாட்டேன். ஏன் பிறந்தேன் என்று யோசிக்கவே அந்த நாளை பயன்படுத்துகிறேன்.. தனிமையில் யோசிக்க விரும்புகிறேன்.. குடும்பதாரும் தொந்தரவு செய்வதில்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தை பாருங்கள்.. தாய் தந்தையை பாருங்கள்.. கடமையை செய்யுங்கள், பலனை எதிர்பாருங்கள்..

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே அரசியலில் வருவது நடக்கலாம்.தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் என்ன நினைக்கிறார் என்று

ரஜினி இந்த முடிவில் இருக்கிறார், அந்த முடிவில் இருக்கிறார் என்று ஏற்கனவே அனைத்து புலனாய்வு பத்திரிக்கைகளும் ஏதேதோ எழுதியது.. அப்படி எதுவும் நடக்கவில்லை..

இப்போது இந்த பதில்களுக்கு மூக்கு, கண் வைத்து, எப்படியெல்லாம் எழுத போகிறார்கள் தெரியல.. கொஞ்ச நாளைக்கு பத்திரிக்கைகள் காட்டில் மழை ec

நெகிழ வைத்த ஒரு பக்க சிறுகதை - நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்று

ராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார்.

... நான் தான் அப்பா பேசுறேன்..

ஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க.. அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம் பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்யமுடியல..

வார்த்தை தடுமாறி சோகம் இழையோட முதியவர் தழுதழுத்த குரலில் "நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்ப்பா. இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல, அதே நேரம் சொல்லாம இருக்க முடியல,

என்னப்பா ஆச்சு , என்னமோ மாதிரி பேசுறீங்க.. சீக்கிரம் சொல்லுங்கப்பா... அவசரப்படுத்தினான் மகன்.

முதியவர் தொடர்ந்தார், எனக்கும் உங்கம்மாவுக்கும் நாளை மறுநாள் விவாகரத்து.. இந்த வயதில் விவாகரத்து என்று நினைக்கும்போதே வேதனையாகவும், அசிங்கமாகவும் உள்ளது.. ஆனா வேற வழியில்லை பா..

அப்பாஆஆஆஆஅ... மகனிடம் இருந்து அதிர்வலைகள்.

இல்லப்பா, 28 வருட திருமண வாழ்க்கை.. வேதனைகள் அதிகம்.. சலிச்சு போச்சு.. போதும்பா.. இதுக்கு மேல வாழ ஒன்னும் இல்ல, வாழவும் பிடிக்கலடா... சரிப்பா இது பத்தி மேற்கொண்டு பேச எனக்கு மனசு ஒப்பல... அதனால, குவைத்ல இருக்க உன் தங்கச்சிக்கும் நீயே போன் போட்டு சொல்லிடு.. வைச்சுடறேன்..

அப்பா..அப்பா. அம்மா கிட்ட கொடுங்க.. அம்மா கிட்ட கொடுங்.... என்று மகன்
அலறியதை பொருட்படுத்தாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்..

உடனடியாக குவைத்துக்கு போன் பறந்தது , தன் தங்கையை தொடர்பு கொண்டான்..

அண்னா எப்படி இருக்கே.. குட் நியூஸ்.. எனக்கு 28% இன்கிரிமென்ட் வந்திருக்கு..

அவன் காதில தங்கை சொன்னது துளி கூட ஏறவில்லை.. அப்பா பேசினார் மா என்று ஆரம்பித்து, .. பதற்றத்துடன் அனைத்தும் சொல்லி முடித்தான்..

அடக்கடவுளே, என்ன ஆச்சு அவங்களுக்கு.. எதுக்கு இந்த முடிவு.. நம்ம இங்கே இருக்கறது மறந்து போச்சா.. ஆவேசப்பட்டாள் தங்கைக்காரி..
சரி சரி , நீ இரு.. நான் பார்த்துக்குறேன்.. கவலைப்படாதே, அப்பா கிட்ட
பேசிட்டு, இன்னும் 5 நிமிசத்துல உனக்கு பன்றேன்...

உடனே ராமநாதபுரத்துக்கு போன் பறந்தது..

அப்பா.. என்ன இது , ஏன் இப்படி ஒரு முடிவு.. நல்லா தானே இருந்தீங்க.. என்ன திடிர்னு.. இதோ பாருங்கப்பா... நான் உங்க செல்லப்பொண்ணு தானே.. நான் சொல்றத கேளுங்க.. நான் இப்போவே அண்ணா கூட பேசறேன்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா.. உடனே கிளம்பி , நானும் அண்ணாவும் நாளைக்கு காலையில ராம்நாட் ல இருப்போம்.. ப்ளீஸ் பா.. அது வரைக்கும் பொறுமையா இருங்கப்பா .. ப்ளீஸ்.. பட பட வென பொறிந்து தள்ளினான்..

தொலைப்பேசி துண்டிக்கப்படுகிறது.

போனை வைத்துவிட்டு, முதியவர் தன் மனைவியிடம் திரும்பினார்... கவலைப்படாதேம்மா.. எல்லாம் நினைத்தபடியே நடக்கும்..நம்ம பசங்க ரெண்டு பேரும் தீபாவளியை நம்ம கூட கொண்டாட கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க..

மூனு வருஷமாச்சு புள்ளைங்கள பார்த்து.. சோகம் அப்பிய வெற்று சிரிப்புடன் இருவரும் காத்திருக்க தொடங்கினர் தங்கள் பிள்ளைகளின் வரவுக்காக..
==============================================
வேலையிலிருந்து 2 நாள் விடுப்பெடுத்து உங்கள் உறவுகளை தேடி செல்வதால், உங்கள் தலையில் வானம் இடிந்து விழுந்து விடாது..

வேலை, பணம் தேவை.. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில்லை .. பணத்தையும் தான்டி உலகம் உள்ளது என்றூ உணருங்கள் நன்பர்களே..
=============================================================

இது எனக்கு மெயிலில் வந்த சிறுகதை.. நெகிழ்வாக இருந்ததால், ஆங்கிலத்தில் இருந்ததை என் நடையில் தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளேன்..
ஒரிஜினல் இது..


An elderly man in Mumbai calls his son in New York and says,'I hate to ruin your day son, but I have to tell you that your mother and I are getting a divorce; 35 years of marriage... and that muchmisery is enough!

''Dad, what are you talking about?' the son screams.'We can't stand the sight of each other any longer,' the old man says.'We're sick of each other, and I'm sick of talking about this, so you call your sister in Hong Kong and tell her!

'Frantic, the son calls his sister, who explodes on the phone.'Like heck they're getting divorced,' she shouts, 'I'll take care of this.

'She calls Mumbai immediately, and screams at the old man, 'You are not getting divorced. Don't do a single thing until I get there. I'm calling my brother back, and we'll both be there tomorrow. Until then , don't do a thing, DO YOU HEAR??' and she hangs up.

The old man hangs up his phone and turns to his wife. 'Okay', he says, 'It's all set. They're both
coming for Diwali and paying their own airfare!!
===========================================
The sky is not going to fall down if you take few days LEAVE and meet your dear ones.
OFFICE WORK IS NOT EVERYTHING IN LIFE and MONEY MAKING IS NOT EVERYTHING IN LIFE. AFTER ALL WE WORK FOR SOMEONE ELSE'S DREAM.
=====================

தங்கள் கருத்தை பதித்துவிட்டு செல்லவும், நன்றி
வீ எம்

பேச்சுவார்த்தைக்கு தயார் : ராஜேபக்ஷே அறிவிப்பு

பேச்சுவார்த்தைக்கு தயார் : ராஜேபக்ஷே அறிவிப்பு

கொழும்பு : இலங்கை பிரச்னையை முடிவிற்குக் கொண்டுவர சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த தயாராய இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் நேற்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இலங்கை தமிழர் பிரச்னைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்றுவரும் சண்டை விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானது என்றும், இலங்கை தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும் ராஜபக்ஷே கூறினார்.

ஆயுதங்களைக் களைவதற்கு புலிகள் சம்மதம் தெரிவித்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்களை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனி நாடு கோரிக்கையைத் தவிர்த்து, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவிக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் ராஜபக்ஷே கூறினார்.

நன்றி - குமுதம் (latest News)

அடாது பெய்த மழையே நன்றி, அழுது தீர்த்த வானமே நன்றி

சிங்கள இனவெறி ராசபக்சேவின் ரானுவ போர் விமானங்கள் வீசும் குண்டு மழையில் என் தொப்புள் கொடி உறவு நனைகிறது, என் சகோதர சகோதரிகள் மீது குண்டு மழை விழுகிறது., அதனோடு ஒப்பிடும் போது இந்த மழையில் நனைவது எங்களுக்கு துச்சம் என்று இன உனர்வோடு, மனிதாபிமானத்தோடு , இன்று பேரிடியுடன் பலத்த மழையிலும், கனுக்கால் வரை தண்ணீர் வெள்ளமெடுத்து ஓடிய போதும், சிறிதும் அஞ்சாது தமிழர் கூட்டம் கைக்கோர்த்து மனித சங்கிலியில் தன்னை இனைத்துக்கொண்டு உணர்வை, ஈழத்துக்காண ஆதரவை, சகோதரத்துவதுடன் வெளிபடுத்தியது பிரம்மிப்பே..


அத்துனை கூட்டம் அங்கே, குடையில்லாமலும், ஜோவென கொட்டிய மழையில் ஆர்ப்பரித்து நின்றிருந்த கூட்டம் அது.இனம்காக்க, தமிழ உறவுகளுக்கு கைகொடுத்திட நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லி, கைகள் இனைத்து நின்ற காட்சி.

அரசியல் தொன்டர்கள் என்று மட்டுமில்லாம், திரையுலகம், அரசு ஊழியர்கள், வனிகர்கள், பொது மக்கள்,இளைஞர்கள், கூறிப்பாக கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில், பள்ளி மாணவ, மாணவிகள் கை கோர்த்து, ஈழத்து சகோதர சகோதரிகளுக்காக, வானம் அழுத கண்ணீரில் தம்மையும் நனைத்து, தாங்கள் அழுத கண்ணீரில் சென்னையை நனைத்து நின்ற காட்சி தமிழனின் உணர்வுக்கு அத்தாட்சி.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என ஆர்ப்பரித்து வந்த இன உணர்வு கூட்டம்.. எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டம் சொன்ன சேதி - ஈழத்து தமிழனே, இதோ 17 ஆண்டு மவுனம் கலைத்து புறப்பட்டுவிட்டோம் என்று சொல்லியது.

மதியம் வரை அடங்கி இருந்துவிட்டு, 2 மனிக்கு மேல் கொட்டித்தீர்த்த மழைக்கு நன்றி- அடாது மழை பெய்தாலும் , விடாது நிற்ப்போம் எம் தமிழினம் காக்க என்று கைக்கோர்த்து நின்றான் தமிழன், அந்த உணர்வை வெளிக்கொண்டுவரவே மழை பெய்ததாக இருந்ததது. மழைக்கு நன்றி. சங்கிலியோடு சேர்ந்து அழுது தீர்த்த வானமே, நன்றி
பலவாறு பேசி, உட்புகுந்து, திசை திருப்பிட நினைத்த கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடு என்று ஒன்றினைந்து நின்ற தமிழர் கூட்டமே, நன்றி நன்றி.


தமிழர் கூட்டமே நன்றி , அடாது பெய்த மழையே நன்றி, அழுது தீர்த்த வானமே நன்றி

கலைஞரே - திசைமாறிடுமா தமிழின உணர்வு?

நீண்ட நெடிய மவுனத்திற்கு பிறகு இப்போது தான் தமிழ உணர்வுடன் ஒட்டு மொத்த தமிழகமும் (ஒரு சில மைனாரிட்டி தமிழ் எதிர்ப்பாளர்கள் நீங்கலாக) ஈழத்து தமிழர்களுக்கு ஆதரவாக திரண்டு வந்துள்ளனர்.

ராஜீவ் காந்தியின் சம்பவத்துக்கு பிறகு அமைதி காத்தோம். 18 வருடங்கள் ஈழ ஆதரவு நிலையை வெளிக்காட்டாது, உள்ளேயே பொதித்து வைத்தோம்.. நேர்ந்துவிட்ட ஒரு துன்பியல் சம்பவத்துக்காக தன்டனைக்காலாமான 18 ஆண்டுகள் உருண்டோடி இதோ இப்பொழுது ஒருமித்த கருத்து வந்துள்ளது.

இந்த நேரத்தில் வந்துள்ள வைகோ கைது என்ற செய்தி, இந்த உணர்வை திசை திருப்புமா?

காலையில் ஜெயலலிதாவின் அறிக்கை "விடுதலை புலி ஆதரவு / பிரிவினைவாதம் பேசுவோரை நான் ஆட்சியில் இருந்திருந்தால் கைது செய்து இருப்பேன்" என்று , மாலையில் வைகோ கைது.

கலைஞரே, ஏன் இந்த முடிவு?

நாளை முதல் தலைப்பு செய்திகளில் 'வைகோ கைது' மற்றும் அது தொடர்பான அரசியல் செய்திகள் முன்னிலைப்பட்டு, ஈழம் பற்றிய செய்திகள் பின்னுக்குத்தள்ளப்படுமா?

பலவாறான கருத்துக்கள் வரலாம். வைகோ மட்டும் ஏன் கைது?
விடுதலை புலி ஆதரவு என்றால், ராமதாஸ், பழ நெடுமாறன், பாரதிராஜா, சீமான், அமீர், திருமா என்று பலரை நோக்கி கைகள் நீளலாம்..

இன்று ஈழ்விடுதலைக்காக உங்களுடன் நிற்கும் அனைவரையும் நோக்கி இரு விரல் நீளலாம்.. என்ன செய்வீர்கள்? அனைவரும் உள்ளே சென்று விட்டல் , பிறகு??

இல்லை பிரிவினைவாதம் என்று சொல்லப்பட்டாலும், கேற்றவாறு விரல்களும், கைகளுலும் நீளும்..

நிச்சயம் வைகோவிற்கு பரிந்து இல்லையென்றாலும், ஈழத்து பிரச்சனையில் ஒன்றுப்பட்டோரின் ஒற்றுமையை குலைக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.. என்ன செய்யப்போகின்றீர்கள்?

ஈழத்துப்பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் சில பத்திரிக்கை, தொலைகாட்சி ஊடகங்களும், வைகோ கைதினை வைத்து நடுவில் புகுந்து குட்டையை குழப்பிடுவார்களோ?

குறிப்பாக தங்களின் (உள்நாட்டு) !! பிரச்சனைக்காக, தங்களை தற்காத்துக்கொள்ள சன், தினகரன் எப்போது தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் கானலாம் என்று காத்திருக்கிறது.. அதே போல, இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் உங்களுக்கே தெரிந்த காரணங்களுக்காக ஈழம் குறித்து ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை எப்படி திசை திருப்பலாம் என்று காத்திருக்கிறது.. இந்த நிலையில் அவர்களுக்கு இந்த செய்தி அல்வா சாப்பிட்டது போல் ஆகாதா?

ஜெயலலிதா தந்திரமாக ஒரு சித்து விளையாட்டு விளையாடிவிட்டாரோ என தோண்றுகிறது

இலங்கை பிரச்சனை பேசியதற்கு வைகோ கைது என்று திரித்து பாமரனை நம்ப வைத்திடும் அளவுக்கு சாமர்த்தியம் நிறைந்தவர்கள் நம் பத்திரிக்கையாளர்கள்..

மேலும் மூக்கு , கண் , காது வைத்து சின்டு முடித்து, இந்த பிரச்சனையை முன்னுக்கு எடுத்து வந்து ஈழப்பிரச்சனையை பின்னுக்கு தள்ளிட சாமர்த்தியம் நிறைந்த கழுகார்களும், வம்பானந்தாக்களும், ராங் கால் ராஜாக்களும் இங்கே அதிகம்.

கலைஞரே, இந்த கைதின் காரணத்தை தெளிவாக மக்களிடம் எடுத்து செல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.. நிச்சயம் இப்போது உங்களோடு கைக்கோர்த்திருக்கும் தமிழீழ ஆதரவாளர்களிடம் இருந்தும் கேள்விக்கனைகள் வரலாம். அதனை எப்படி எதிர்கொன்டு, இந்த கைது ஏற்படுத்தப்போகும் அரசியலில் சுழலில் சிக்கிவிடாமல், சீரழிந்து விடாமல் இந்த ஈழ உணர்வை எடுத்து செல்ல வேண்டிய கடமையும் உங்களுக்குள்ளது.

வைகோ மேல் பல அதிருப்தி இருந்தாலும், இந்த நேரத்தில் ஒரு தமிழ் ஈழ உணர்வாளனை (அரசியல் காரணமாக எதிரனியில் இருந்தாலும்) சிறை கம்பிக்குள் அடைத்து வைப்பது சற்று கஷ்ட்டமாகவே உள்ளது.. நீண்ட நாட்கள் அவரை முடக்கி விட வேண்டாம்..

சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு

சில்லறை சமாச்சாரங்கள் இரண்டு

இன்று நான் பார்க்க நேர்ந்த இந்த இரண்டுமே சில்லறைத்தனமான விஷயங்கள். சற்று வித்தியாசமாக எனக்கு பட்டதால் , நம் பதிவர்களுடன் இதை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இந்த பதிவு. படித்துவிட்டு அட போயா சில்லறை பையா என்று சொல்லிவிடாதீர்கள்.. :)

வழக்கமாக என் பைக்கில் அலுவலகம் வரும் நான் இன்று மழை காரணமாக பேருந்தில் வர தீர்மானித்தேன்.. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை.. அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்தது போக , ஒரு 10 , 12 பேர் நின்று கொண்டிருந்த்தார்கள். நான் நடத்துனருக்கு அருகில் நின்றிருந்தேன். ஏறிய ஒரு நடுத்தர வயதுக்காரர் 10 ரூ கொடுத்து கின்டிக்கு பயனச்சீட்டு வாங்கினார். பயனச்சீட்டின் விலை 4.50 ரூ. 4.50 போக மீதமாக 5.50 கொடுக்கவேண்டிய நடத்துனர் மீதமாக 5 ரூ மட்டும் கொடுத்துவிட்டு, 50 காசு இருந்தால் கொடுத்துவிட்டு 1 ரூ வாங்கிக்கொள்ள சொன்னார்.. சென்னையில் இப்படியான காட்சிகள் பிரபலம்..

அந்த பயனியிடம் 50 காசு சில்லறை இல்லை.. சென்னையில் பேருந்து பயனம் செய்த அனைவருக்கும் அடுத்து என்னவிதமான உரையாடல் அங்கே நடந்திருக்கும் என்று நிச்சயம் தெரியும். பயனி நடத்துனரை திட்ட, நடத்துனர் பயனியின் மீது எரிந்து விழ, ஒரு கட்டத்தில் இருவரும் அரசாங்கத்தின் மீது கரித்துக்கொட்ட... அதே தான் இங்கும் நடந்தது..

கடைசி வரை விடாப்படியாக இருந்து அந்த பயனி 50 காசு வாங்க்கிகொண்டு தான் நடத்துனரின் இடத்தை விட்டு விலகி சென்றார்.

உண்மை என்னவென்றால், நடத்துனரின் பையில் 50 காசு இருந்துள்ளது.. அத்துனை காசுகளின் இடையே அதனை தேடியெடுக்க நடத்துனருக்கு சோம்பேறித்தனமோ அல்லது அவரின் அலட்சியமோ.. எதோ ஒன்று அந்த 50 காசை தந்துவிடாமல் அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்தது..

அடுத்து இரண்டாவது நிகழ்வு.

அதே நாள் மாலையில், அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஒரு கடையில் நன்பர்களுடன் டீ குடித்துக்கொண்டிருந்தேன்.


அப்போது அந்த கடைக்கு வந்த ஒருவர் (பெயர் தெரியாததால், தலைவர் என்று வைத்துக்கொள்வோம்) கடைக்காரரிடம் , அண்ணே ஒரு பூமர் ப்புள்கம் கொடுங்க என்றார்..

உங்களுக்கு தெரிந்திருக்கும், 1 பூமரின் விலை 1 ரூ. அந்த கடைக்காரர் பூமர் எடுத்து நீட்டிய போது , நம் தலைவர் கொடுத்த நோட்டை பார்த்து நாங்களே கொஞசம் ஆடிப்போய்விட்டோம்... 1 ரூபாய் பூமருக்கு அவர் கொடுத்தது ஒரு 100 ரூ நோட்டு.. 1 ரூபாய்க்கு 100 ரூ நீட்டுவதற்கெல்லாம் ஒரு தில் வேனும்பா..

நாங்களே ஆடிப்போய்விட்டோம் என்றால், அந்த கடைக்காரரை நினைத்துப்பாருங்கள். 100 ரூபாயை பார்த்த மாத்திரத்தில், வெடுக்கென கையை பின்னுக்கு இழுத்து பூமரை மீண்டும் டப்பாக்குள் அடைத்துவிட்டார்.. பூமர் கை மாறிவிடக்கூடாது என்ற அவரின் அவசரம் தெரிந்தது...

சில்லறை கொடுங்க - இது கடைகாரர்..

சற்று நேரம் அப்படியே நின்றுக்கொண்டிருந்த நம் தலைவர், சரிப்பா ஒரு பூமர், ஒரு ரூபா அஜெந்தா பாக்கு ஒன்னு கொடு என்று மீண்டும் அதே 100 ரூபாயை நீட்டினார்..

கடைக்காரர் கடுப்பாகிவிட்டார் போல, சிறிது நேரத்துக்கு நம் தலைவரை கண்டுக்கொள்ளவே இல்லை..

சில நிமிடங்கள் நின்று பார்த்த நம் தலைவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. சட்டென்று பாக்கெட்டில் கை விட்டு 2 ரூ நாணயம் ஒன்று எடுத்துக்கொடுத்துவிட்டு 1 பூமர், 1 அஜந்தா பாக்கு வாங்கிக்கொண்டு நடையை கட்டினார்...

சட்டென்று எனக்கு அந்த நடத்துனரின் ஞாபகம் வந்தது... நம்ம தலைவருக்கும் , அந்த நடத்துனருக்கும் ஏதோ ஒற்றுமை இருப்பதாகவே பட்டது..

நம் தலைவரின் செய்கையில் எங்களுக்கு ஒன்று புரியல.. 100 ரூபாய்க்கு சில்லறை கேட்டால் கிடைக்காது என்று 1 பூமர் கேட்டாரா அல்லது பூமர் சாப்பிட ஆசையில் கேட்டாரா?

சில்லறைக்காகத்தான் என்றால், ஏன் இருந்த 2 ரூபாயையும் கொடுத்து தேவையில்லாமல பூமரும் , பாக்கும் வாங்க வேண்டும்..

எது எப்படியோ.. ஒரே நாளில் நான் பார்த்த இந்த சாதாரன நிகழ்வுகள், சற்று வித்தியாசமாகவும், ஏதோ ஒரு விதத்தில் ஒற்றுமை இருப்பதாகவும் பட்டது.. அதை பகிர்ந்துக்கொள்ளவே இந்த சில்லறைத்தனமான பதிவு :)

இப்படியான சில்லறை அனுபவங்கள் உங்களுக்கு ஏதாவது உள்ளதா? இந்த பதிவை படித்ததை தவிர்த்து :)

தூயாவின் அழைப்பை ஏற்று..

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

அனுபவங்கள் என்று ஏதும் இல்லை. அன்டை நாட்டில் என் இனம் அழிக்கப்படுகிறது. அதனை இலங்கை அரசு நடத்தும் போர் என்று சொன்னாலோ அல்லது திட்டமிட்ட இனப்பட்கொலை என்று சொன்னாலே, எப்படி சொன்னாலும், அங்கே அழிக்கப்படுவது தமிழினம். தமிழன், அதையும் தாண்டி மனித உயிர்கள் எனும் போது வேதனையாக உள்ளது.

வேறு வழியின்றி போரின் மூலமே தீர்வு என்று ஏற்படுத்தப்பட்ட குழு, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அவர்கள் எடுத்த சில முடிவுகளாலும் போராளிகள் என்ற நிலையில் இருந்து "தீவிரவாதிகள்" என்று முத்திரைக்குத்தப்பட்டு, நம் இந்திய மன்னிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது வேதனையான விஷயமே.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனையில், இந்தியாவில் எந்த பத்திரிக்கையும் , உரிய மற்றும் தொடர் செய்திகள் தராததும், அரசியல் காரணங்களுக்கான சுழலில் இந்த பிரச்சனை சிக்கி சிதைந்ததும் வேதனையே..

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

ஈழத்துக்காண அங்கீகாரம் கிடைத்திட வேண்டும். நிச்சயம் கிடைக்கும். வெடிச்சத்தம் கேட்டும், உயிருக்கு அஞ்சியோடியும் தமிழ் இனம் அங்கே பட்ட இன்னல் போதும்.. விரைவில் தீர்வு வரவேண்டும் எனபதே அனைவரின் விருப்பமும்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?
அதீத ஆர்வம் என்று கொள்ளமுடியாவிட்டாலும், அங்கே என்ன நடக்கிறது.. இந்த முறையாவது அமைதி திரும்பிடாதா? , 30 வருட போராட்டம் முடிந்துவிடாதா என்ற ஏக்கத்தில் ஈழத்து செய்திகளை படிப்பதுன்டு.
அதிகமாக, வலைதளங்களிலும், பத்திரிக்கை வாயிலாகவுமே படிக்க வாய்ப்புள்ளது.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?
வரவேற்கபடவேண்டிய ஒன்று. இது தொடர்ந்திட வேண்டுமே என்ற அச்சம் அதிகமாக உள்ளது. இந்த குரல்கள் இன்னும் தீர்கமாக ஒலிக்கவேண்டும், முந்தய காலங்களில் நடந்தது போல தற்காலிக குரலாக ஒலித்து, பின்பு ஓய்ந்தது போல் அல்லாமல், ஒரு நல்ல முடிவு வரும் வரை ஓங்கி ஒலிக்கவேண்டும். ஈழத்து தமிழர்களுக்கு பாதுக்காப்பு அரணாக இந்த ஒலி இருக்கவேண்டும்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

தமிழினமே, இது பல ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் தமிழகத்தில் ஆதரவு குரல் கேட்க்கிறது. முன்பை விடவும் தீரமாக ஒலிக்கிறது. நிச்சயம் உங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும். ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைத்திடும்.கடல் கடந்து இங்கே வரும் செய்திகளின் நம்பகத்தன்மை புரியவில்லை.பலவித கருத்துக்குள் பரப்பபடுகிறது. அங்கே இருப்பவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் ஈழ நிலவரம் குறித்த நடுநிலை, உண்மையான செய்திகளை ஊடகங்களின் வாயிலாக பரப்பிடவேண்டும்.

நிச்சயமாக ஈழத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும், அந்த நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன்.
வீ எம்

அனைவரையும் அசரடிக்கும் அண்ணி பிரேமலதா விஜயகாந்த்..



சென்னையில் நடைப்பெற்ற தே மு தி க வின் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்தின் பேச்சு அனல் தெரித்தது. உணர்சிக்கொந்தளிப்பான அந்த பேச்சு , தமிழகக்தில் அடுத்து தே மு தி க வின் ஆட்சி என்று பறைசாற்றியது.

அவரின் பேச்சின் சில பகுதிகள் இங்கே..
'வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளும் ஜெயிப்போம், சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.."

அதென்னங்க லோக்சபா தேர்த்தல்ல 40 ம் வெற்றினு அடிச்சு சொல்றீங்க.. சட்டமன்ற தேர்தலில் 234 ல் போட்டினு மட்டும் சொல்றீங்க..?? என்ன கணக்கு இது அம்மனி?

காசா பனமா.. சும்மா அடிச்சு விட்டிருக்கவேண்டியது தானே 234 தொகுதியிலும் அமோக வெற்றினு...

"இலங்கையில் அன்று ராவணனால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது இன்று ராசபக்சேவால் இன்னல் நடக்கிறது.. "
அட! அட! என்னே உங்கள் அறிவு.. மெய் சிலிர்க்குது அம்மனி.. அதெப்படிங்க.. கொஞ்சம் கூட யோசிக்காம அடிச்சு விடுவீங்களா??

கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஆத்தா.. என்ன சொல்ல ??

நிச்சயமா நீங்க ராவணன் ஆட்சியில போர்படை தளபதியாகவோ , இல்லை ராமர் படையின் போர்ப்படை தளபதியாகவோ, அட, குறைந்தபட்சம் சீதையின் ஒன்னுவிட்ட சித்தப்பா பொன்னோட முப்பத்து முனாவது தலைமுறை பேத்தியாகவோ இருந்து இந்த கருத்தை சொல்லியிருக்க மாட்டீங்க.. சரியா..?

நிச்சயமா.. 10 வருஷத்துக்கு முன்னால தூர்தர்ஷன்ல போட்ட ராமாயன தொடரை சமையற்கட்டு வேலைக்கு நடுவுல எட்டி பார்த்துட்டு, அதிலிருந்து வந்த அபார அறீவை வைத்து நீங்க இங்கே அடிச்சுவிட்டுருக்கீங்க.. சரிதானே அண்ணி??

ராவணன் யாராக சித்தரிக்கப்பட்டான் , அவனுக்கு எதிரா போரிட்டது யார்.. அதிலே யார் திராவிட இனத்தின் தலைவனாக , யார் ஆரிய இனத்தின் காவலராக சித்தரிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் தெரியாமல். ஏதோ புலம்பிவிட்டு போய் இருக்ககூடாதுங்க..

இலங்கைனா உடனே ராவணன், சீதை , ராமர், அனில், அனுமான் தான் உங்களுக்கு தோனுமா?? . அட கண்றாவியே... குறைந்த பட்சம் ராவணண் எந்த இனம். அவன் எந்த தமிழருக்கு இன்னல் கொடுத்தான் என்று ஒரு 2 நிமிடம் பேசியிருக்கலாம் நீங்க..

சரி, விடுங்க.. ராமாயானம் சி டி வாங்கி போட்டு பார்த்துட்டு அடுத்த மநாட்டுல ஒழுங்கா பேசனும் சரியா?? இப்படி அச்சுபிச்சுத்தனமா பேசக்கூடாது.. சொல்லிட்டேன்..

என்றும் இலங்கை தமிழருக்கு அதரவு தருவது விஜயகாந்த். இன்றைக்கு யார் யாரோ பேசுறாங்க..
அட்றா , அட்றா.. அசத்திட்டீங்க அம்மனி.. இது தான் சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறதா??

அண்ணன் என்னவெல்லாம் பன்னாரு சொல்லுங்க.. ஓ, பிறந்தநாள் கொண்டாடறத விட்டுவிட்டாறா?? அடேங்கப்பா என்ன பெரிய நஷ்டம் இலைங்கைக்கு.. வி கா பிறந்தநாள் கொண்டாட்டம் பிறந்த நாள் மீண்டும் கொண்டாடப்படனும்னே,உடனே ஈழம் கிடைச்சுடும் அம்மனி.. கவலை வேண்டாம்..

அப்புறம், விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் படத்துல நடிச்சாரு... அவரோட 3 படம் இலங்கைல படமாக்கப்பட்டது.. அப்படி இப்படினு நீட்டி முழக்கி இருக்க வேண்டியது தானே... ஏன் விட்டுடீங்க??

யார் யாரோ பேசுறாங்கனு யாரை சொல்றீங்க?? நம்ம வைகப்புயல் வடிவேலுவையா??? :)

தமிழகத்தில் தே மு தி க ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்து சொந்தகாலில் நிற்க வைப்போம்..
அட, 40 ம் உங்களுக்குனு சொல்லீட்டீங்க.. அப்புறமென்ன தமிழகம், அது இதுனு அசிங்கமா பேசிகிட்டு.. கேப்டன் தான் அடுத்த பிரதமர்.. இன்றைய தேதிக்கு ஒரே கட்சில 40 பாராளுமன்ற உறுப்பினர்கள்னா சும்மாவா.. விடுங்கம்மா , இந்திய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்திடலாம்...

பயங்கரவாதத்தை ஒடுக்க மக்கள் பங்கேற்ப்புடன், என் சி சி போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்..

அம்மனி சூப்பரு.. நான் கூட சமுக சேவை செய்ய என் சி சி அமைப்பு ஏற்பட்டுத்த சொல்றீங்கனு நெனைச்சேன்.. பயங்கரவாதத்தை தடுக்கவா... சரி சரி. நிச்சயமா செய்யலாம்.. காவல்துறை, ரானுவம் எல்லத்துக்கும் 5 வருஷம் லீவு விட்டுடலாம்.. சரியா அண்ணி?

அம்மா தாயே. அப்படியே, ஸ்கவுட், கைட், என் எஸ் எஸ், பீ டீ பிரியட் எல்லாம் ஆரம்பிச்சுடலாம்.. எல்லோருக்கும் மஞ்ச சட்டை தான் யூனிபார்ம் , இப்பவே சொல்லிட்டேன் சரியா...
தே மு தி க வளர்ச்சியை பார்த்து மற்ற கட்சிகள் கதிகலங்குது..
சொன்னாங்க.. ஜார்ஜ் புஷ் உங்க கட்சிய பார்த்துட்டு கதிகலங்கிபோய், அமெரிக்க தேர்தலை தள்ளி வெக்கலாமானு பாக்குறாங்கனு சொல்லுங்களேன்..

கட்சிகள் கதிகலங்குதோ இல்லயா.. உங்க மாநாட்டுக்கு வந்த உங்க மஞ்ச சட்டை மாக்கானுங்க பன்ன அலம்பல பார்த்து சென்னை மக்கள் அடிவயரு கலங்கி போய் இருக்காங்க ஆத்தா.. கொஞ்சம் அடக்கி வைங்கோ..

நீங்க பேசின பேச்ச பார்த்தா, சீக்கிரமே கேப்டன பின்னாடி தள்ளிட்டு நீங்க முதலமைச்சர் வேட்பாளர் ஆகிடுவீங்க போல இருக்கோ..

கேப்டன் சார், இனிமே அம்மனிய மாநாட்டுக்கு கூட்டிட்டு போறதா இருந்தா.. என்ன பேசப்போறாங்கனு வீட்லயே கேட்டு கரெக்ஷன் பன்னிக்கொடுங்க.. அட, உங்க பேச்சயே யாரோ கரெஷன்பன்னி கொடுக்கறாங்க.. உங்க கிட்ட போய் சொல்றேன் பாருங்க....
சரி என்னமோ பண்ணித்தொலைங்கோ..
தமிழ் மக்கள் எதை எதையோ பார்த்துட்டோம்.. இத பார்க்க மாட்டோமா... ??

ராஜபக்சேவின் ஊதுகுழல் ஜெயலலிதா - தனிமைப்படுத்தப்படுகிறாரா ஜெயலலிதா???

இலங்கை தமிழர் பிரச்சனையில் , அ தி மு க பொது செயலாளர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த பழ நெடுமாறன் , ஜெயலலிதாவை ராஜபக்ஷேவின் ஊதுகுழல் என்று சாடியுள்ளார்.

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராகவும், அங்கே அமைதி ஏற்பட வேண்டும் என்று தமிழக தலைவர்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு முடிவுகள் எடுக்கும் போது, தன் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாகவும், அரசியல் லாபத்துக்காகவும் , முதல்வரை மட்டும் ஜெயா தாக்கி வருவது, அவர் திசை திருப்பும் நோக்கில் செய்யப்படுவதாகவே தெரிகிறது.

அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்ட கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகளை திசை திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்து குற்றம் சாட்டும் ஜெயலலிதாவின் செயல் கண்டனத்துக்குறியது.

இலங்கை உள்நாட்டு பிரச்சனையில் தலையிட்டு, ஆயுதம் தந்தும், உளவுத்தகவல் தந்தும் உதவிடும் இந்தியாவிற்கு , இந்த (போர் நிறுத்தம் ) பிரச்சினையில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று ஜெயா சொல்வது வேடிக்கையாக உள்ளது. அவரின் அறியாமையை காட்டுகிறது.

ஈழத்துக்காண தீர்வை புலிகளால் தரமுடியும், அவர்களின் பலத்தை ஜெயா அறியவேண்டும். உலக நாடுகள் பலவும், சிங்கள இனப்படுகொலையை கண்டிக்கும் வேளையில், ஜெயா மட்டும் திசை திருப்பும் நோக்கில் பேசுவதை பார்த்தால் அவர் ராஜபக்சேவின் ஊதுகுழல் என தோண்றுகிறது.

இரு முறை முதல்வராக இருந்தவருக்கு , தமிழர் பிரச்சனை குறித்து எதுவும் தெரியாமல் இருப்பது, தமிழர்களை கொல்வோரின் கைப்பாவையாக இருப்பது விசித்திரமாக உள்ளது. அவரை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்.

இவ்வாறு பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனையில் முதல்வர் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு துனை நிற்போம் என்று ராமதாஸ், விஜய டி ராஜேந்தர், சரத்குமார். கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஏனைய அமைப்புகளளும் கூறி வரும் நிலையில், மூன்றே பேர் மட்டும் அரசியல் காழ்ப்பு காரணமாக தனித்து நிற்கின்றனர்..

ஜெயா, வைக்கோ மற்றும் விஜயகாந்த் - இவர்கள் மட்டும் தங்களின் அர்சியல் லாபத்துக்காக தவறான முடிவுகள் எடுப்பதால் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் ..
ww

அரசியல் காழ்ப்புடன் கூக்குரலிட்டவர்களே.. !!

அரசியல் காழ்ப்புடன் கூக்குரலிட்டவர்களே.. !!

தமிழக முதல்வர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில், இன்னும் 2 வாரத்தில் இலங்கை இனப்படுகொலையை தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காவிட்டால், தமிழக 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கலைஞர் தந்தி அடிக்கச்சொன்னவுடன், அரசியல் காழ்ப்புடன் வாய்க்கு வந்தபடி கின்டல் செய்தவர்கள், இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்?? நிச்சயம் இப்போதும் ஏதோ காரணம் தேடி குறை சொல்லத்தான் போகிறார்கள்.. ஏனெனில் தமிழர்கள், இனப்படுகொலை, ஈழத்தீர்வு என்பதெல்லாம் தாண்டி அவர்களுக்கு கலைஞர் எதிர்ப்பே பிரதானம்..

ஏன் பதவி விலகுவோம் என்று சொல்லாமல், தந்தி அடிக்க சொல்கிறார் என்று ஏளனமாக கேள்வி கேட்ட ஜெ, சொரனையற்ற வைகோ,. ஓ காமெடியன் ஞாநி முதல் சில வலைப்பதிவர்கள் வரை அனைவர் முகத்தில் கரி பூசிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது..

கலைஞருக்கு தெரியும், எப்போது எப்படிப்பட்ட, என்ன முடிவுகள் எடுக்கவேண்டும் என்று..கொஞ்சம் கூட அவகாசம் தராமல், வெறும் அரசியல் காழ்ப்புடன் அவரை தாக்கிய அனைவரும் இனியாவது மூடிக்கொள்ளுங்கள்..

தமிழக முதல்வருக்கும், இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் நன்றி.

மஞ்சள் மகிமை.

மஞ்சள் மகிமை.

ஒரு கட்சிக்கு சொந்தமா என்னவெல்லாம் இருக்கும்? ஒரு கட்சிக்கு சொந்தம் கொண்டாட ஒரு குடும்பம் இருக்கும்... ஒரு மைத்துனன் இருப்பான், ஒரு உ பிறவா சகோதரி அப்படினு எல்லாம் சொன்னீங்கன்னா பிச்சுபுடுவேன் பிச்சு.. சரியா சொல்லுங்க..

ஒரு கட்சி என்றால் அதற்கு ஒரு கொடி, சின்னம் இருக்கும்.. சில விதிகளுக்குட்பட்டு அவை தேர்தல் ஆனையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். இந்த சின்னத்தையோ, கொடியையோ வேறு யாரும் உபயோகிக்கமாட்டார்கள்.. ஆனால் இப்போது தே மு தி க , பா ம க இடையே நடைபெறும் இந்த மஞ்சள் சட்டை போராட்டம் மிக விசித்திரமாக உள்ளது..
கட்சிக்கொடி, சின்னம் போல, பா ம க மஞ்சள் நிற சட்டைக்கு உரிமைக்கொண்டாடி உரிமைக்குரல் எழுப்பியுள்ளது...

குறிப்பாக தங்கள் பரம வைரியான விஜயகாந்தின் தே மு தி க வினர் நடத்தவிருக்கும் இளைஞர் மாநாட்டிற்கு அனைவருக்கும் மஞ்சள் நிற சட்டையை சீருடையாக தருவது சர்ச்சையை கிளப்பி, பா ம க விற்கும் , தே மு தி க விற்கும் அறிக்கைப்போரை உச்சத்தில் வைத்துள்ளது..

சட்டையின் நிறத்தில் கூட அரசியலா?? எங்கே போகிறது தமிழக அரசியல்??

ரயில்வே போர்ட்டர்கள் கம்யூனிஸ்டுகளுடன் சன்டைக்கு வருவார்கள் போல்லுள்ளது..

அப்படிப்பார்த்தால் கலைஞர் பல ஆண்டுகளாகவே மஞ்சள் துண்டு தானே போடுகிறார்ர்??

பா ம க விடம் மஞ்சள் சட்டைக்கு மட்டுமே காப்புரிமை இருக்கிறதா , துண்டுக்கு இல்லையா??

எல்லாம் மஞ்சள் மகிமை :)

எனக்கொரு சந்தேகம் , தீர்த்து வைய்யுங்களேன்..


நம்ம ஆற்காட்டு அண்ணன் தலை தமிழ்நாட்டுல இப்படி உருளுது.. அவரே நொந்து நூலா போயி , அடுத்து தேர்தலில் தி மு க தோற்க மின்வெட்டு காரணமா இருக்கும்னு சுய புலம்பல் செய்யறாரு.. தும்ப விட்டு வால் பிடிச்ச கதையா, மின்வெட்டு அபாயம்னு செய்தி வந்த காலத்துல தேவையான நடவடிக்கை எடுக்காம, அவர் இஷ்டத்துக்கு அறிக்கைவிட்டுட்டு இப்போ குய்யோ முய்யோ நு கத்துறாரு..

அண்ணாச்சி - அடுத்த எலக்ஷன்ல நீங்க எங்க நின்னாலும் உங்களுக்கு ஷாக் அடிக்கத்தான் போகிறதுங்கோ.. வடிவேலு கூட வேண்டாம், அவர் கூட வர போண்டா மனி போது உங்கள வீட்டுக்கு அனுப்பறதுக்கு.. .. ஜெனரேட்டர் வீட்டுல இருக்குதுல்லா?? ஏன்னா, 2011 க்கு அப்புறம் உங்க எந்த வீட்டுக்கும் 24 மனி நேர மின்(க)வெட்டு இருக்கும் வாய்ப்பு இருக்குங்க..

சரி அதவிடுங்ககோ, விஷயத்துக்கு வருவோம்.. என்ன மின்வெட்டுனு கேட்டா உடனே கலைஞர், ஆற்க்காட்டர் எல்லோரும் பீகார பாருங்கோ.. ஒரிசாவ பாருங்கோ, ஆந்திராவ பாருங்கோ அங்கேயெல்லாம் கூட கடும் மின்வெட்டு, அதை விட இங்கே பரவாயில்லைனு சொல்றாங்க...ஆக, இரு ஒரு தேசிய பிரச்சனை.. இது இந்தியா முழுக்கு இருக்கு அதானே??

அப்போ மின்சாரவண்டி , அதாங்க ரயில். அது எப்படிங்க பிரச்சனை இல்லாம ஓடுது.. வீட்டுக்கே இவ்ளோ மின்சாரம் தேவைபடுதுன்னா, பல ஆயிரம் மைல் ஓடுற ரயிலுக்கு எவ்ளோ தேவை?? அதை எப்படி சமாளிக்கறாங்க..? எங்கேயிருத்து அவ்ளோ மின்சாரம் வருது??? கூடிய சீக்கிரம் ரயில் வன்டிக்கு கூட 1 , 2 மனிநேர மின்வெட்டு வருமா???

ஆற்க்காட்டாரே, லாலு கிட்ட பேசிப்பாருங்களேன்.. கொஞ்சம் மின்சாரம் கடன் தரமுடியுமானு.. உங்க கூட்டணில தானே இருக்காங்க.. தந்தாலும் தருவாரு.. என்ன நான் சொல்றது.. ???

வீ எம்

கலைஞர் டீவியில் - கூடல் நகர்

இதை போன வாரமே பதிவிட வேண்டும் என நினைத்தேன்.. சில காரணங்களால் பதிவிட முடியாமல் போனது..
பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலில், சற்று தாமதமானாலும் இதோ..

பலரும் இதனை கவனித்திருக்கலாம்..

சன் டீவி ஆரம்பித்து வைத்த கலாசாரம்.. ஏதேனும் விஷேச நாட்களுக்கான நிகழ்ச்சியெனில், குறிப்பாக அந்த நாட்களில் ஒளிப்பரப்பாகும் திரைபடத்தை பற்றிய விளம்பரத்தை 5 நாட்களுக்கு முன்னரே "உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக .. வெளி வந்து சில மாதங்களே ஆன சூப்பர் திரைப்படம்" என்று நீட்டி முழக்கி 10 நிமிடத்திற்கு ஒரு முறை காட்டிக்கொண்டே இருப்பார்கள்..

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று , கலைஞர் டீவியில் ஒளிப்பரப்பாகிய , பரத், பாவனா, சந்தியா நடித்த கூடல் நகர் திரைப்படத்துக்கும் இப்படித்தான் விளம்பரம் செய்யப்பட்டது..

உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்.. என்று ஒரு வாரமாக விளம்பரம் செய்யப்பட்டது..

இதில் என்ன இருக்கிறது?? நிச்சயமாக இதில் எதுவும் இல்லை.. வழக்கமாக விடுமுறை நாட்களில் போடப்படும் சிறப்பு திரைப்படம், விளம்பரம்.. காந்தி ஜெயந்தி நாளில் காந்தியவாதிகள், விடுதலை போராட்டத்தியாகிகள் பேட்டி போன்ற நிகழ்ச்சிகள் தான் போடவேண்டும் என்று பதிவெழுத நான் என்ன மொக்கை பதிவரா? :) :)

வழக்கமாக இந்த விளம்பரங்கள் போடும்போது, அந்த படத்தின் க்ளிப்பிங் காட்டப்படும்.. சில முக்கிய காட்சிகள் , வசனங்கள் வரும்.. முடிக்கும் போது அந்த படத்தில் மிகவும் பேசப்பட்ட (மக்களால் பேசப்பட்ட) பாடல் ஒன்றுடன் முடிப்பார்கள்..

அப்படி இந்த கூடல் நகரின் விளம்பரத்தில் க்ளிப்பிங் காட்சியில் வந்த முதல் வசனம் "அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா.." தன் மகள் பாவனாவை கதலிக்கிறார் என்றதும் , பரத்தை கொன்றுவிடுமாறு தன் அடியாட்களுக்கு நெடுமுடி வேணு கட்டளையிடுவதாக ஒரு காட்சி..

இப்போது இனைத்துப்பாருங்கள்.. விளம்பரம் + முதல் க்ளிப்பிங் வசனம்.

உத்தமர் காந்தியடிகள் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று திரைக்கு வந்து சில மாதங்களே ஆன " <க்ளிப்ப்பிங்> " அவனை கண்டந்துண்டமா வெட்டிப்போடுங்கடா. <க்ளிப்ப்பிங்> , <க்ளிப்ப்பிங்> , பரத் , பாவனா, சந்தியா நடித்த "கூடல் நகர்" சூப்பர் Hஇட் திரைப்படம் , நமது கலைஞர் தொலைக்காட்சியில்,
:) :)

டிஸ்கி - பதிவு சன் , கலைஞர் தொலைக்காட்சி , காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிகள், விளம்பர முறை, கூடல் நகர் திரைப்படம் என்று எதை பற்றியும் குறை சொல்வதற்கு இல்லை.. , அக்டோபர் 2, விளம்பரமும் , அது தொடர்ந்து வந்த க்ளிப்பிங்ல் வசனமும் ஒரு சேர கேட்டது (CO-INCIDENCE) சற்று வித்தியாசமாக இருந்தது .. அதை பகிர்ந்துக்கொள்ளவே.. :)

தந்தி அடிக்கலாம் வாங்க..

"தந்தி போராட்டம்" இப்போது தமிழகத்தில் பிரபலம் அடைந்துள்ளது. கலைஞரின் தந்தி போராட்ட அறிவிப்பு தொடர்ந்து மத்திய அரசு கூட இலங்கை தூதரகத்துக்கு தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது..

இதன் தொடர்ச்சியாக வேறு யாருக்கெல்லாம் தந்தி அடிக்கலாம்..??

தந்தி # 1 - மின்சார தேவையை அதிகரிக்கும் முயற்சியை மேற்க்கொண்டு தமிழக மக்களை இருளில் இருந்து காப்பாற்றக்கோரி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணண் ஆற்க்காட்டருக்கு ஒரு ஷாக் தந்தி.

தந்தி #2 - பணவீக்கத்தை கட்டுபடுத்தி , விலைவாசி அரக்கனிடமிருந்து மக்களை காத்திடும் முயற்சி மேற்க்கொண்டிடுக என்று கேட்டு பொருளாதார மேதை மதிப்பிற்குறிய சிவகங்கை சிங்கம் சிதம்பரத்துக்கு ஒரு சிறப்பு தந்தி.

தந்தி # 3 எப்போது உங்கள் பின்னாலேயே வால் பிடித்து வரவேண்டும் என்று விரும்பும் உங்கள் உடன்பிறப்பு ஆற்க்காட்டாருக்கு அமைச்சர் பதவியில் இருந்து விடை கொடுத்து, அவரை திரு சன்முகநாதன் அவர்கள் இடத்தில் அமர வைத்து , சன்முகநாதன் அவர்களை மின்சாரத்துறை அமைச்சராக்கிட. ஆவன செய்திட வேண்டும் என கேட்டு முதலவர் கலைஞருக்கு ஒரு விண்ணப்ப தந்தி.

தந்தி # 4 முதல்வரின் மகன் என்ற காரணத்துக்காக மட்டுமே, மதுரையில் தனி ராஜாங்கம் நடத்தி, ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் சேர்த்திடும் அஞ்சாநெஞ்சன் அவர்களின் போக்கை கொஞ்சமேனும் அடக்கி வைக்க கோரி தந்தை என்ற முறையில் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள் தந்தி.

தந்தி # 5 காதலில் விழுந்தேன் பிரச்சனையை சமூக பிரச்சனையாக சித்தரித்து ஒப்பாரி வைக்கும் சன் டீவி சகோதரர்களுக்கு, கடந்த காலங்களில் , அரசின் ஆதரவு மற்றூம் அமைச்சர் வீட்டு தொலைகாட்சி என்ற ஓரே காரணத்துக்காக என்னவெல்லாம் ஆட்டம் போட்டார்கள், எத்துனை இருட்டடிப்பு, ஊடகத்துறையில் உள்ள சக மனிதர்களை அழித்திட என்னவெல்லாம் செய்தனர் என்பதை பட்டியலிட்டு ஒரு மெகா சைஸ் சுயசரிதை தந்தி.

தந்தி # 6 தனக்கென ஒரு கட்சி இருக்கிறது , அது தனிக்கட்சி.
அ தி மு க வின் கிளைக்கட்சியல்ல என்பதை நினைவூட்டி அண்ணன் வைகோவிற்கு ஒரு நினைவூட்டல் தந்தி.

தந்தி # 7 "உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப புண்ணாக்கிட்டாங்கப்பா" என்று ஒற்றை வரியில் வைகைபுயல் வடிவேல் அண்ணாச்சிக்கு ஒரு அவசர தந்தி.

தந்தி # 8 பத்திரிக்கை செய்திகளையும், கருத்துக்கணிப்புகளையும் பார்த்து , 2011 ல் நான் தான் முதல்வர் என்ற கற்பனையில் , மிதமிஞ்சிய மிதப்பில் செயல்பட்டு உள்ளதையும் கோட்டை விடவேண்டாம் என்று , கடந்த கால அரசியல் நிகழ்வுகளை பட்டியல் இட்டு , கருப்பு தங்கம் கேப்டனுக்கு ஒரு புள்ளியல் தந்தி.

தந்தி # 9 தமிழக காங்கிரஸ் தலைவர் என்னும் பதவியை உன்மையாகவே தலைவர் பதவி என்று நினைத்து, வாய் கொடுத்து புண்ணாகிக்க்கொள்ளாமல், இருக்கும் வரை அனுபவித்துவிட்டு போகவும் என்று திரு "கோல்ட் மில்க்" தங்கபாலு அண்ணனுக்கு ஒரு அறிவுரை தந்தி.

தந்தி # 10 உங்களால் தான் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச போகிறது என்று இன்னமும் நம்பி, போயஸ் வீட்டிற்கும், ராகவேந்திரா மண்டபத்துக்கும் நடையாய் நடந்து சீரழிகிர ரசிகன் பட்டாளம் இன்னும் இருக்க்கிற வரை உங்கள் எந்திரனும் சரி,ஒரு வேளை 2015 வரும் உங்கள் சுந்தரனும் நிச்சயமாக உங்கள் கையை கடிக்கவே கடிக்காது என்று ஒரு சந்தோஷ தந்தி நம் சூப்பர் ஸ்டாருக்கு.

கோடிக்கணக்கில் குவியப்போகும் தந்திகளை பட்டுவாடா செய்ய வேண்டிய வசதிகள் செய்திட (அதை மட்டுமாவது) வேண்டும் என திரு ராசாவுக்கு ஒரு கடைசி தந்தி.

மக்கள்ஸ் - இன்னும் பலருக்கு தந்தி அனுப்பவேண்டும் என்று ஆசை, முதல் பத்தோடு நிறுத்திக்கொண்டு அடுத்த பதிவில் மற்றதை போடுகிறேன்.. நானே போடுகிறேன்.. அதற்குள் யாரும் எனக்கு நினைவூட்டல் தந்தி அனுப்பிவிடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..

உங்கள் மனதிலும் உதிக்கும் தந்திகளையும், பெருநர்களையும் கருத்துப்பெட்டியில் சொல்லிவிட்டு போங்கள் நன்பர்களே.. பார்க்கலாம் யாருடையது சிறந்த தந்தி என்று.

நன்றி
வீ எம்