Showing posts with label ஆப்பு. Show all posts
Showing posts with label ஆப்பு. Show all posts

ஜெயா, வைகோவுக்கு ஆப்படிக்கும் நாள் தூரத்தில் இல்லை

விடுதலையாகி இன்று வைகோ மதுரை வந்தபோது , சமீபத்தில் கைதான இயக்குனர்கள் அமீர், மற்றும் சீமான் வைகோவை சந்திதார்கள்.

பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ இது மரியாதை நிமித்த சந்திப்பு என்றும், இந்த இயக்குனர்கள் தமிழகத்தின் உரிமை போராளிகள் என்றும், இவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

இவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

வைகோ அண்ணாச்சி, ஜெயிலுக்கு போனா உடனே இழுத்து போர்த்தி தூங்கிடுவீங்களா? பேப்பர் எல்லாம் படிக்கவே மாட்டீங்களா?? அவங்கள கைது செய்ய சொல்லி யார் குரல் கொடுத்தாங்க தெரியுமா?

மதுரையில சொன்னத அப்படியே ரயிலேறி சென்னை வந்து போயஸ் தோட்டத்து பக்கமா பாத்து சொல்லுங்க அண்ணாச்சி.. அப்புறம் அன்பு சகோதரி உங்களுக்கு அடிக்குற ஆப்பு எவ்ளோ பெரிசுனு எல்லோரும் பார்க்கட்டும்..

அன்புச்சகோதரி பயங்கரவாதிகள், தீவரவாதிகள் நு சொல்லுவாங்கலாம்.. அருமை அண்ணன் வந்து தமிழர் நலன் காக்கும் போராளினு சொல்லுவாராம்.. போங்கடா டேய்... !