அழகிரி விடுதலை

அழகிரி விடுதலை


தா கிருட்டிணன் கொலை வழக்கிலிருத்து அழகிரி உள்ளிட்ட 13 பேரை சித்தூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலும் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பில் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் வழக்கு போடாமல் இந்த குறிப்பிட்ட வழக்கில் வழக்கு போட்டுவிட்டு சாட்சிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு 2003 ல் அதிமுக அரசால் போடப்பட்டு, பின்னர், தி மு க அரசு வந்தவுடன், அ தி மு க வால் மேல் முறையீடு செய்யப்பட்டு, ஆந்திர மாநில சித்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவகாரமான அறிக்கைகளை ஒரு குறிப்பிட்ட சாராரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்

எது எப்படியோ இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பாகியுள்ள நிலையில், உண்மை குற்றவாளிகலை பிடிப்பது காவல்துறையின் கடமை.
5 வருடங்கள் கவனம் எல்லாம் இவர்கள் பக்கம் இருந்திருந்ததால், உண்மை குற்றவாளிகளுக்கு நல்ல இடைவெளி கிடைத்துள்ளது. அவர்கள் பிடிபடுவார்களா என்பது சந்தேகமே. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று

தசாவதாரம் - ஜாக்கி வருகை - துக்ளக் விழா - மோடி வருகை - வலைப்பதிவர் பார்வைகள்

தசாவதாரம் - ஜாக்கி வருகை - துக்ளக் விழா - மோடி வருகை - வலைப்பதிவர் பார்வைகள் .

திரு டோண்டு அவர்களின் பதிவில் இருந்து ஒரு பகுதி கீழே:

நன்றி திரு டோண்டு ராகவன் சார்,

//ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜாக்கி சான் படங்களுக்கு இந்தியாவில் விநியோகஸ்தர். ஆகவே ஜாக்கி சானின் பார்வை கோணத்தில் ரவிச்சந்திரன் முக்கியமானவர். அவர் அழைக்கப்பட்டார், வந்தார், சென்றார். அவ்வளவே. இதில் சம்பந்தப்பட்ட எல்லொருக்குமே - ஜாக்கிசான் உட்பட - லாபம். இதில் என்ன பிரச்சினை? தசாவதாரம் படத்துக்கு நல்ல விளம்பரம்.//


இந்துத்வா அடிப்படையில், சோ வும் மோடியும் நெருங்கிய நன்பர்கள், ஆர் எஸ் எஸ் கூட்டாளிகள். ஆகவே சோவின் பார்வையில் மோடி முக்கியமானவர், மோடியின் பார்வையில் சோ முக்கியமானவர். இவர் பாசத்தோடு அழைத்தார், அவரும் நேசத்துடன் வந்து சேர்ந்தார். அவ்வளவே, இதில் என்ன பிரச்சனை. அவர்கள் வந்ததில், துக்ளக் பத்திரிக்கை, இந்துத்வா கோஷ்டிக்கு கூடுதல் விளம்பரம்.. இதற்கு ஏன் அனைவரும் அலட்டிக்கொள்ளவேண்டும்?


நாம் ஏன் மெனக்கெட்டு , 32 பக்க குறிப்பு எடுத்து , 3 பகுதிகளாக பதிவு போட்டு, அவர் மரண வியாபாரியா இல்லையா என்று சன்டை போட்டு அடித்துக்கொள்ளவேண்டும்.

அவர் வந்தார் போனார், அறுசுவை உணவு தேவைப்பட்டது, உடனே அம்மா வீட்டுக்கு போய் , அம்மா கையால் அறுசுவை உணவருந்தினார், வயிரு நிறைந்தது.. சந்தோஷமாக தன் மாநிலம் திரும்பி சென்றார். முடிந்துவிட்டது..

இங்கேயுள்ள பத்திரிக்கைகள் தான் அவர் வருகையை பயன்படுத்தி, இத்தனை அயிட்டம், கூட்டு பொரியல் முதல், வத்தல் ஊறுகாய் வரை பக்கம் பக்கமாக எழுதி கல்லா கட்டியது,

வலைப்பதிவர்கள் தங்கள் பங்குக்கு மெனகெட்டு செல் போன் கூட எடுத்து செல்லாமல், அந்த கூட்டத்துக்கு சென்று , கஷ்டப்பட்டு சப்பனமெல்லாம் போட்டு உட்கார்ந்து, அங்கே கூட்டம் அப்படி, இப்படி என்று புளங்காகிதம் அடைந்து, பதிவு போட்டு, கடன் வாங்கி படமெல்லாம் போட்டு HIT ரேட் எகிறவைத்துகொண்டனர்..


மொத்தத்தில் தசாவதாரம் பட கேசட் விழாவிற்கு ஜாக்கிசான் வந்தது எப்படி ஜஸ்ட் லைக் தட் ஒரு நிகழ்வோ அது போலவே துக்ளக் விழாவிற்கு திரு நரேந்திர மோடி வந்ததும். இரண்டுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை...


ஆனால் சில பதிவர்கள் தான் , அடா அடா என்ன ஒரு கூட்டம் , என்ன ஒரு ஒழுங்கு, அவரின் பேச்சு என்று மோடி வருகைக்கு பில்டப் கொடுப்பதும், என்ன பெரிய விஷயமிது , ஜாக்கி வந்தார் , போனார் .. அவர் விருப்பத்துக்கு தண்ணிர் குடித்தார், இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றும் எழுதி டென்ஷன் ஆகிறார்கள்.. கலைஞர், கமல்... என்று அதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம்.. :) யாமறியோம் பராபரமே

ஒக்கனேக்கல் சுழலில் சிக்காத ஜெ.

ஒக்கனேக்கல் களேபரங்களில் , கருநாடகத்தில் அனைத்து தமிழர்களும், தமிழக வாழ் வேற்று மாநில மக்களும் நன்றாக வறுத்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

கலைஞர், ராமதாஸ், திருமா போன்ற வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழர்களும், ரஜினி போன்ற தமிழகத்தில் வாழ்ந்து வரும் மற்ற மாநிலத்தோரும், திரை பிரபலங்களும், ஒரு படி மேலே போய் மறைந்த முதல்வர் எம் ஜி ஆரும் அவர்களின் குறியில் இருந்து தப்பவில்லை. கடவுளின் கோயில்களில் கூட தமிழ் எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்படுகிறது..

மேலே சொன்னவர்களின் உருவப்படத்தை எரிப்பது, காலால் மிதிப்பதும், கிழிப்பது போன்று காட்டுமிராண்டித்தனம் நடந்த வண்ணம் உள்ளது..

இத்துனை களேபரங்களில் நடக்கும் போதும், தமிழகத்தின் தலைவர்களில் முக்கியமான ஒருவரும், 2 முறை முதல்வராக இருந்தவரும், தமிழ்த்தாய் என போஸ்டர் அடித்துப்போற்றப்பட்டவரும், ஒகனேக்கல் திட்டம் நிறைவேற வேண்டும் என்று குரல் கொடுத்த, கொடுப்பவரும், போராட்டம் நடத்திய கட்சியின் தலைவியுமான அம்மா ஜெ எப்படி எந்த விதமான எதிர்ப்புகளுக்கும் ஆளாகவில்லை?

எம் ஜி ஆரின் படம் மிதித்து உதைத்து அடித்து கொளூத்தப்பட்ட போதிலும், அவரின் அரசியல் வாரிசும், அவர் ஆரம்பித்த கட்சியின் தலைவியுமான செல்வி மட்டும் ஏன் எந்த விதமாக எதிர்ப்பிற்கும் ஆளாகவில்லை?

சும்மா சொல்லக்கூடாது அம்மாவிற்கு சாமர்த்தியம் அதிகம் தான்..

அம்மா மட்டுமில்ல, போராட்டம் நடத்திய வேறு சில தலைகளும் எந்த எதிர்ப்பும் இன்றி இருக்கின்றார்களே. சாமர்த்தியமா?? இல்லை இவர்கள்
எல்லாம் தமிழர் என்றே அவர்கள் நினைக்கவில்லையா?

ஒன்னுமே புரியல , விளக்கவும்

சேப்பாக்கத்தில் கூடி கலைந்தது ஒரு கூட்டம்.

ஒரு நாள் சுற்றுலா மாதிரி , கலையாத மேக்கப் போட்டு, சென்னை சேப்பாக்கத்தில் வந்து சில மனி நேரம் இருந்துவிட்டு சென்றது ஒரு கூட்டம்.

ஒகனேகல் பிரச்சனையில் தங்களின் திரைப்படங்கள் தடுக்கப்படுவதாலும், வியாபாரம் பாதிக்கபடுவதாலும் பொங்கியெழுந்து உண்ணாவிரத போராட்டம் அறிவித்தது தமிழ் திரையுலகம். அந்த உண்ணாவிரதம் பல கூத்துக்களுடன் இனிதே நடந்து முடிந்தது.

இந்த விவகாரத்தின் திவிரம் , இந்த திட்டத்தின் உண்மை நிலவரம் எல்லாம் தெரியாமலே, ஏதோ கூப்பிட்டார்கள் வந்தேன் என்ற ரீதியில் வந்தவர்களே அதிகம் என நினைக்கிறேன். அதிலும் உண்ணாவிரதம் என்பது என்ன என்று தெரியாமல் வந்த கூட்டம் மிக அதிகம்.

பிரச்சனை பற்றிய அக்கரை இல்லாமல் தங்களின் திரையுலக நட்சத்திரங்களை பார்க்க வந்து விசிலடித்து , ஆரவாரம் செய்த நம் பொது ஜனத்தை என்னவென்று சொல்லுவது? எப்போது தான் மாறப்போகிறார்கள் இந்த செல்லுலாய்ட் சாமிகளின் பக்தர்கள்?

உண்மையில் சொல்லப்ப்போனால் 15% திரையுலகினர் தவிர்த்து மற்ற அனைவரும், ஒன்று, இங்கே வராவிட்டால் தங்களுக்கு பட வாய்ப்பு குறைந்துவிடுமோ என்ற நிர்பந்தத்தில் வந்தவர்கள், மற்றும் ஏதோ கூப்பிடுறாங்க, கடமையே என்று வந்தவர்களும் தான் 85%.

10:00 மனிக்கு வந்து 11:00 மனிக்கு சென்றவர்களும், வேகவேகமாக வந்து கேமராவில் தலை காட்டிவிட்டு , அடுத்த 10 நிமிடத்தில் காணாமல் போனவர்களும் மிக அதிகம். நல்ல உண்ணாவிரதம் இது.

சிலரெல்லாம், வீட்டில் சமையல் செய்ய சொல்லிவிட்டு, சமையில் வேலை முடியும் முன்பு வந்துவிட்டு , வேகமாக திரும்பிப்போய் .. இப்படி தங்களை மிகவும் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தது செம காமெடி.

இவர்களை விட செம காமெடியான கூட்டம் ஒன்று இருந்தது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், இந்தியா வல்லரசாக வேண்டும், நம்மை பார்த்து மற்ற நாடுகள் நடுங்கவேண்டும் என்று பேசியோர் ஒரு ரகம், அதைவிட மோசமாக, விஜயகுமார் போன்ற சீனியர்கள் பேசிய பேச்சும்,. இந்த மேடையில் வந்து உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை வானுயர புகழ்ந்து பேசி, தங்கள் சுயலாபத்துக்கு அடிக்கல் போட்டது, தங்களின் சுயபுராணத்தை தம்பட்டம் அடித்தது, என்று பல ரமக். இவர்களெல்லாம் எந்த வகையென்று தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் வரவில்லை என்று யார் அழுதது? இப்படி வந்ததற்கு வராமல் வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்திருக்கலாம்.

விஷயத்தின் தீவிரம் புரிந்து, திட்டம் பற்றி தெரிந்து, ஏன் இந்த உண்ணாவிரதம் என தெரிந்து, உணர்வோடு வந்து கலந்துக்கொண்டு, தங்கள் உண்ர்வை வெளிப்படுத்தி பேசிய திரை துறை சார்ந்த அந்த வெகு சிலர் பாராட்டுக்குறியவர்கள். அவர்கள் மட்டுமே உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருக்கலாம், தேவையற்ற கூட்டத்தை தவிர்த்துவிட்டு.

மொத்தத்தில், வழக்கம் போல, கூடிக்கலைந்திருக்கிறது ஒரு கூட்டம்., சிலரைத்தவிர்த்து. நல்ல வேலை இங்கும் குத்தாட்டம் போட்டு கலெக்ஷன் பார்க்கவில்லை. அந்த விதத்தில் நல்லவங்கப்பா அவங்க எல்லாம்..