டி ஆர் தலைமையில் மேலும் ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்..

ஏறகனவே கலைஞர் தலைமையில் ஒரு அமைப்பு, நெடுமாறன் தலைமையில் ஒரு அமைப்பு.. இந்த இரண்டு அமைப்புகளுமே தங்களுக்கும் அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் இப்போது புதிதாக இன்னும் ஒரு அமைப்பு, நம் விஜய டி ராஜேந்தர் தமிழ் இன பாதுகாப்பு முன்னனி என்ற அமைப்பை துவங்கியுள்ளார்..

டி ஆர் தலைமையில், புலமைபித்தன், மன்சூரலிகான் ஆகியோர் பொறுப்பாளர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுமாம்

என்னத்த சொல்றது... கட்சி / ஓட்டு அரசியலுக்காக, எரியற வீட்டில் புடுங்குற வரை லாபம்னு போட்டி போடுறாங்க நம்ம ஆளுங்க.. ஒற்றுமையே உன் விலை என்னனு கேட்பாங்க போல நம்ம தமிழ் தலைவர்கள் (அப்படி நினைக்கறவஙக்.. சொல்லிக்கறவங்க) .. !

சிரிப்பு வருது - நக்கீரன், விகடன், குமுதம் கவனிக்க..

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் 61வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுதும் அதிமுகவினரால் கோலாகலமாக மொண்டாடப்படுகிறது.

ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர் , போஸ்டர், அம்மா-எம் ஜி ஆர் பாடல்கள், அண்ணதானம் என்று தமிழகம் திருவிழா கோலத்தில் களைகட்டியுள்ளது. அம்மாவிற்கு நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

ஒரு கட்சி தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், இதுவெல்லாம் சகஜம்தானே?? அதிலும் அ தி மு க தலைவியின் பிறந்தநாள் விழாவில் இதெல்லாம் இல்லாது இருந்தால் தானே அதிசயம்.. இதில் என்ன சிரிப்பு என்ற உங்கள் கேள்வி புரிகிறது.

உண்மையில் கொண்டாடங்களை பார்த்து சிரிப்பு வரவில்லை. குறிப்பாக ஒரு ப்ளெக்ஸ் பேனரை பார்த்து தான் சிரிப்போ சிரிப்பு.

கின்டியில் ஜி எஸ் டி சாலையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை கழகத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரின் வாசகம் தான் சிரிப்புக்கு காரணம்.

ஒரு பக்கம் எம் ஜி யார், நடுவில் மிகப்பெரிதாக ஜெயலலிதாவின் ஐந்து முகங்கள் கொண்ட பிரம்மாண்ட பேனரின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இலங்கை தமிழர் நலனுக்காக பாடுபடும் ஒரே தலைவி எங்கள் புரட்சிதலைவி அம்மாவின் 61 வது பிறந்தநாள் ... என்று போகிறது அந்த வாழ்த்து வாசகம்..

இலங்கை தமிழருக்கு ஆதரவாக அம்மா எப்படியெல்லாம் போராடுகிறார் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நன்றாக தெரியும்.

"ஈழத்தமிழர் என்று யாரும் இல்லை", "போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தான் செய்யும்", "இலங்கை ராணுவம் அப்பாவித்தமிழர்களை கொல்வது இல்லை" என்பது போன்ற அம்மாவின் அறிக்கைகள் மிகப்பிரபலம்.

ஆனாலும் இப்படி ஒரு பேனரை வைத்த அந்த தொண்டருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். ஒரு வேளை அவர் அம்மாவை நக்கலடிக்கிறாரோ?

அ தி மு கவினரே இதை படித்தால் சிரிக்கத்தான் செய்வார்கள். ஏன், அம்மாவே இதை படித்தால் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்..

ஜூ வி, குமுதம், நக்கீரன் நிருபர்கள் யாராவது இந்த பேனரை கவர் செய்து தங்கள் அடுத்த இதழில் ஒரு ஸ்டோரி எழுதலாம், அது கவர் ஸ்டோரியாகவும் இருக்கலாம்.. காமெடி ஸ்டோரியாகவும் இருக்கலாம்..

காங்கிரஸ் கர்ஜனை - ஒரே காமெடி

நம் தேசபக்தர்கள் காங்கிரஸ்காரர்கள் மயிலையிலே ஈழத்தமிழர் - காங்கிரஸ் நிலை என்ன என்று விளக்குவதற்கு ஒரு பொதுக்கூட்டம் போட்டார்கள்..

இதையெல்லாம் விளக்க, கூட்டம் எதுக்குனு புரியல.. ஒரே வரிதானே உங்கள் நிலை.. ராஜிவை புலிகள் கொன்ற காரணத்தால் , அந்த புலிகள் தான் ஈழம் பெற்றிட முழு மூச்சாக போரிடுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அனைத்து ஈழத்தமிழனும் செத்து மடியட்டும் , அது தான் நிலை..
இதை சொல்ல ஒரு கூட்டம் வேண்டுமா என்ன?

சரி, அவர்களின் நிலையை எடுத்து சொல்லும் இடத்தில் எவ்வளவு அழகாக புரியும் படி சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்..

நன்றி ஜூனியர் விகடன்

கார்த்தி சிதம்பரம்: ''லெட்டர் பேடு கட்சி கள் காங்கிரஸை விமர்சிக்கின்றன. துப்பாக்கி தூக்குபவனைவிட, குண்டு வீசுபவனைவிட பேச்சுவார்த்தைக்கு வருபவன்தான் உண்மை யான மனிதன். இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதாகச் சொல்லி இங்கே இருக்கும் காங்கிரஸ்காரர்களைத் தாக்குகிறார்கள். இனி காங்கிரஸ்காரன் சைலன்ட்டா இருக்க முடியாது. அவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு பதிலடி தரவேண்டும்!''

வீ எம் - இதை விட தெளிவா யாராலும் ஈழம் பிரச்சனையில் காங்கிரஸ் நிலை பற்றி சொல்லிட முடியுதுங்கண்ணா...

போளூர் வரதன்: ''தீக்குளித்தவர்களின் பிணங்களைத் தூக்கிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர். முத்துக் குமார் எரிந்தபோது அவன் வைத்திருந்த பேப்பர் மட்டும் எப்படி எரியாமல் தப்பித் தது என்பதை இங்கே அமர்ந்திருக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சி.பி.ஐ. மூலமாக விசாரித்தால், உண்மையான குற்ற வாளி யாரென்று தெரிந்துவிடும். இங்கே இருப்பவர்கள் தினமும் தினக்கூலி வாங்கிக் கொண்டு கைக்கூலி வேலை பார்த்து வருகி றார்கள். தலித்களின் மகாத்மா என்று சொல்லிக்கொள்ளும் திருமாவளவனே! இங்கு இருக்கும் சேரி மக்களுக்காக நீ என்ன செய் தாய்? உண்மையானஆம்பளையா இருந்தா, புலிகளை எதிர்க்கும் ஜெயலலிதா வுக்கு எதிரா போராட்டம் பண்ணு பார்க்கலாம்...

வீ எம் - நல்லா கேட்டீங்க போங்க.. உங்க மூளை மட்டும் ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து செஞ்சதா?? புல்லரிக்குது.. கையில் ஒரு பேப்பர் கத்தையை வெச்சுகிட்டு ஒரு வாட்டி தீக்குளிச்சு பாருங்களேன் தெரியும்..
ஆம்பளையா இருந்தா அம்மாவ எதிர்த்து போராட்டம் பன்ன சொல்றீங்க.. அப்போ தைரியமான ஆம்பிளைங்க காங்கிரஸை எதிர்த்து போராடக்கூடாதுன்றீங்க.. என்னனே கட்சிய இப்படி கேவலப்படுத்தறீங்க..


இரா.அன்பரசு: ''இலங்கைப் பிரச்னை தொடர்பாக இரண்டு நாளுக்கு முன்பு சிந்தாதிரிப்பேட்டையில் தி.மு.க. கூட்டம் போட்டது. அதிலும் நான் பேசினேன். அங்கு கூட்டமே இல்லை. இங்கே பாருங்கள்... ஆயிரக்கணக்கில் காங்கிரஸ்காரன் திரண்டு வந்திருக்கான். கள்ளத்தோணி ஸ்பெஷலிஸ்ட், ஆயுதம் தூக்கிக்கொண்டு இலங்கைக்குப் போய் இலங்கை ராணுவத்தினரோடு போராட வேண்டியதானே? போக முடியாது. பணம் வாங்கிக்கொண்டுதான் வரமுடியும். தமிழீழம் அமைந்துவிடுமாம். அதன்பிறகு, அகண்ட தமிழகமாகி விடுமாம்... வைகோ! நாங்க என்ன வாயில பிஸ்கோத்தா வச்சுக்கிட்டிருக்கோம்...''

வீ எம் - அதானே.. தி மு க விற்கு கூடறத விட காங்கிரஸ்க்கு 10 மடங்கு கூட்டம் வருவது இயற்கை தானே.. இது தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் நிலையா அன்பரசு?
அவர் என்ன உங்க வாயில என்ன இருக்குனா கேட்டாரு?? சாப்பாட்டு நேரத்துல மீட்டீங் வேணாம்னு சொன்னா எந்த காங்கிரஸ்காரனாச்சும் கேட்கறானா பாரு..


வாயில பிஸ்கோத்தா, வாழைபழமானு தெரியலா.. ஆனா காங்கிரஸ் காரனுக்கு நாக்குல சனி இருக்கறது மட்டும் நிச்சயம்..


யசோதா: ''நாங்க ஆங்கிலேயரை எதிர்த்தே போராடியவர்கள்... நீங்கள் எல்லாம் எங்களுக்கு பச்சா!''

வீ எம் - இதோ பாருடா.. அவரு பிஸ்கோத்துனா, இவங்க பச்சான்னு சொல்றாங்க.. யசோதாம்மா இங்கே "நாங்க"யாரு?? "நீங்க" யாரு?? எல்லாரைவிடவும் ஆங்கிலேயர்தான் சூப்பர்னு சொல்றீங்களா? ரொம்பத்தால் ஆங்கில மோகம் உங்களுக்கு..

தங்கபாலு: அரசிய லுக்கு வருவதற்கு முன்பே, புலிகளுக்கு ஆதர வாகக் குரல் கொடுத்தவர்கள் நாங்கள். இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும்தான் ஆயுதங்கள் கொடுக்கிறது. அவர்களைக் கேட்க வேண்டியதுதானே? தமிழ்நாடு காங்கிரஸ் இருக்கும் வரையில் இந்தியாவை துண்டுபோட அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ்காரன் இருந்தால் நாடு வாழும். இல்லை என்றால் வீழும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஆண்மை இருந்தால் நாளைக்கே வீதிக்கு வா. நானும் வருகிறேன். எங்களை சீண்டிப்பார்க்காதீர்கள்.''

வீ எம் - தலீவரு இது கூட பேசலனா என்ன இருக்கு.. சீனாவையும் பாகிஸ்தானையும் கேட்கனுமா? அப்புறம் என்ன ம.... 40 தொகுதிலயும் ஜெயிக்கவெச்சு மன்மோகன்சிங்கை பிரதமரா உட்கார வெச்சது?? இல்லை.. இந்திய காங்கிரஸ் அரசு ஒன்னுக்கும் உதவாது, சீனா, பாக் கிட்ட பேசி வேலைய முடிங்கனு சொல்றீங்களா?? சோனியா மேல அவ்ளோ கடுப்பா?? ஆண்மை இருந்தால் நாளைக்கே வீதிக்கு வா வா?? அண்ணே, எதிர்த்து வீதிக்கு வந்து 2 மாசம் ஆகுதுங்க தலிவா.. வீதியில்ல.. சத்யமூர்த்திபவனுக்கே வந்தாச்சு.. கமான் கெட் அப்.. யாராச்சும் மூஞ்சில தண்ணி தெளிங்கப்பா..

ப.சிதம்பரம்: ''ராஜீவ் காலத்தில் போடப் பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால், இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்து இருக்கும். முதல்வர்கள் அடுத்தடுத்து உருவாகியிருப்பார்கள். போர்நிறுத்தம் நிரந்தர மாகியிருக்கும். பேச்சுவார்த்தை என்றால் இரண்டு பக்கமும் ஆயுதங்களைக் கீழே போடுவதுதான். ஆனால், நான் ஆயுதத்தோடு வருவேன். நீ காகிதத்தோடு வா என்றால் என்ன அர்த்தம்?''

வீ எம் - என்ன தல, இப்படி இருக்கும் இருக்கும் நு இழுக்குறீங்க.. இன்னும் சொல்லுங்க.. சுதந்திரம் கொடுதப்பவே, ஈழத்தை பிரிச்சு கொடுத்திருந்தா , சன்டையே வராம இருந்திருக்கும், புலி அமைப்பே வராம இருந்திருக்கும், ராஜிவ் ஒப்பந்தத்துக்கே வேலை இல்லாம போயிருக்கும்... ஓ, ஆயுதத்தை போட்டுட்டு வா இல்லை ஒட்டு மொத்த இன அழிப்புனு சொல்றது ராஜபக்ஷேனு இவ்ளோ நாளா நான் தான் தப்பா நெனைச்சுகிட்டு இருந்ததேனா???
இதுக்கு நீங்க பேங்க் திறப்பு, பண வீக்கம், வெர வீக்கம் நு முன்ன மாதிரியே பேசிகிட்டு இருந்திருக்கலாம்... துறை மாத்தியிருக்கவே வேண்டாம்..

-----------

இப்பொ உங்க எல்லோருக்கும் ஈழம் பிரச்சனையில் காங்கிரஸ் நிலை என்னனு புரிஞ்சுதா?? தயவு செஞ்சு என்ன புரிஞ்சுதுனு கருத்துப்பெட்டில சொல்லுங்கள் ப்ளீஸ்..என்னை மாதிரி புரியாதவங்க தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்..

பன்றியை தொட்டு நக்குதல் தரும் பாடம்.

கால்நடை மருத்துவ மாணவர்கள் தங்களின் முதல் உடற்கூறு வகுப்பிற்காக ஒன்றாக குழுமியிருந்தார்கள்.
அவர்கள் முன்னே வெள்ளை துணியில் சுற்றிய இறந்த கொழு கொழு பன்றி ஒன்று இருந்தது. வகுப்பை தொடங்கிய பேராசிரியர் மாணவர்களை பார்த்து
மாணவர்களே, கால்நடை மருத்துவத்தில் சிறந்த மருத்துவராக வளர மிக முக்கியமான இரண்டு விஷயங்களை உங்களுக்கு சொல்லப்போகிறேன், கூர்ந்து கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்..
ஒன்று, கால்நடைகளை கையாளும் போது நமக்கு எந்த வித அருவெறுப்பும் இருந்திட கூடாது. எடுத்துக்காட்டாக, இதோ கவனியுங்கள் என்று சொல்லி பன்றியின் மீது இருந்த வெள்ளை துனியை எடுத்துவிட்டு தன் விரலை பன்றியின் வாயினுல் விட்டு தடவி, பின்னர் விரலை தன் வாயில் வைத்து சுவைத்தார்..

பின்னர் மாணவர்களை பார்த்து, உங்களின் அருவருப்பு போகவேண்டும் என்றால், நீங்களும் இதே போல செய்யுங்கள் என்றார்.

மாணவர்கள், சற்று முகம் கோனி, சிறிது நேரம் தயங்கிய பின்னர், அவர் சொன்னதை போலவே செய்துவிட்டு பேராசியரை பார்த்தார்கள்..

பேராசிரியர் தொடர்ந்தார், நல்லது மாணவர்களே, இப்போது இரண்டாவது முக்கியமான விஷயம். மருத்துவர்களுக்கு கூர்ந்து கவனிக்கும் தன்மை மிக மிக முக்கியம் என்று சொல்லி சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தார்...

நான் என் நடுவிரலை பன்றியின் வாயில் விட்டுவிட்டு, மோதிர விரலை சப்பினேன்.. ஆனால் நீங்கள்???

சரி, இனிமேலாவது கூர்ந்து கவனித்தல் என்ற இரண்டாவது முக்கிய விஷயத்தை கடைபிடிக்க பழகுங்கள் என்றவாறு தன் வகுப்பை தொடர்ந்தார்..

பாடம் - வாழ்க்கை கடினமானது, அது மேலும் அதீத கடினமாவது நீங்கள் முட்டாளாக இருக்கும் போது..

சோ - ரஜினி / வைகோ - ஜெயலலிதா

யாழ்ப்பானம் போனாலும் ராஜபக்ஷேக்கு ஆதரவாக பேசுவேன் - சோ ராமசாமி

மோடியின் மேடைப்பேச்சு தொகுப்பை, "கல்வியே கற்பகதரு" என்ற தலைப்பில் புத்தகமாக அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை நாரதகான சபாவில் நேற்று நடைப்பெற்றது. அதில் நம் பழம் பெரும் நடிகர் , பத்திரிக்கையாளர் சோ ராமசாமி கலந்துகொண்டு முத்தாய்ப்பாய் உரையாற்றினார்.

புத்தக விழாவில் ராமசாமி இலங்கைப்போர் குறித்தும் பேசினார்.. (சம்பந்தம் இல்லாமல் ஏன் பேசினார் என்று கேட்டுவிட கூடாது, அப்படி கேட்கப்படவேண்டிய ஒரே ஆள் கருணாநிதி மட்டுமே என்பது எழுதப்படாத விதி) அதே போல பழம்பெறும் நடிகரும் பத்திரிக்கையாளுருமான சோ ராமசாமி ரஜினி பற்றியும் சிலேடையாக பேசி புல்லரிக்கவைத்தார்..

ராமசாமியின் பேச்சு - இங்கே ஒருவர் பேசும் போது மோடியை சூப்பர்ஸ்டார் என்றார்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை, நான் சூப்பர் ஸ்டாரை மோடியாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறேன்.. இது தான் பெட்டராக இருக்கும்..

அட ராமசாமி , என்ன ஆச்சு உங்களுக்கு? ஏதோ ஒரு விழாவுல ரஜினி ஜெ க்கு எதிரா பேசிட்டாரு, அப்புறம் ஒரு தேர்தல்ல அவங்களுக்கு எதிரா அறிக்கை கொடுத்து மக்களை ஜெ க்கு எதிரா வாக்களிக்க சொன்னாரு.. எல்லாம் சரிதான்.. ஆனா அதெல்லாம் த்ப்புனு உணர்ந்து, அம்மாக்கு பொக்கே கொடுத்தார், தைரியலக்ஷ்மி பட்டமெல்லாம் கொடுத்து அம்மாகிட்ட சமாதானமா போயிட்டாரு. ஆனா நீங்க என்ன இன்னும் அவர் அம்மாவை எதிர்த்தார் என்பதை மனசுல வெச்சுகிட்டு ரஜினி மேல இவ்ளோ வஞ்சத்தை வெச்சுகிட்டு இருக்கீங்க?? அவர ஒரு வழி பன்னாம விடமாட்டீங்க போல, பாவம் அவர், விட்டுவிடுங்க ராமசாமி சார்.

அவரே தனக்கு அரசியல் ஒத்துவராது, சரிப்படாதுனு ஒதுங்கியிருக்காரு.. பாவம் , அவரை அவர் வேலையை செய்ய விடுங்க. அவருக்கே விருப்பமில்லாதப்போ நீங்க ரஜினி கடவுள் பக்தி உள்ளவருன்ற ஒரே காரணத்துக்காக அவர் முதல்வரா வரனும், அரசியல்ல வரனும்னு இப்படி பெனாத்திகிட்டு இருக்கீங்களே ராமசாமி. ஒரு வேளை ஜெ டீவி ஸ்டாட்டுக்கு போட்ட பிட்டு மாதிரி ரஜினி தலைமை ரசிகர்மன்ற தலைவர் பதவிக்கு பிட்டு போடுறீங்களா ராமசாமி??

என்னமோ போங்க.. பலருக்கு ரஜினி குழப்பவாதியா இருக்காருனு தோணுது, அவருக்கே தான் என்ன செய்யமுடியும்னு தெரியல. ஆனா உங்க முட்டை ஞான கண்ணுக்கு மட்டும் அவரை வித்தியாசமா தெரியுது.. உம்ம கண்ணே கண்ணு ராமசாமி.

அப்புறம் ஒரு விஷயம் ராமசாமி சார். 30 வருஷமா சன்டை போடுற, உண்ணால ஜெயிக்கமுடியல , தூ.. நீ ஆம்பளையா அப்படினு ராஜபக்ஷே வை கேட்டது வேற யாருமில்லை, நம்ம ரஜினி தான்.. (ஞாபகமிருக்கா?? உமக்கு இருக்காது... ஜெ, ரஜினி , அத்வானி சொல்றது எல்லாம் ஞாபகம் இருக்காது, இதுவே கருணாநிதி, ராமதாஸ், வைகோ சொல்றதுனா மட்டும் கன்னாபின்னானு ஞாபகம் இருக்கும், துக்குளக்ல அட்டைப்படம் வரும்) உங்க செல்லப்பிள்ளை ராஜபக்ஷேக்கு ரஜினி இப்படி சவால் விட்டுட்டாரே, இன்னுமா ரஜினி அரசியல்ல வந்து முதல்வராகனும்னு ஆசைப்படுறீங்க ராமசாமி? உங்க செல்லப்பிள்ளைக்கும் உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனையா??

அப்புறம் இந்த மேடையிலும் ஜெ டீவி ஸ்லாட்டுக்கு உங்க நன்றிக்கடனை செலுத்திட்டீங்க போல.. சந்தோஷம் ராமசாமி,.

மோடி பிஜேபி முதல்வருங்க.... பி ஜே பி நிலையை பத்தியும் விமர்சனம் பன்னீட்டீங்க போல.. மேடைல பி ஜே பி ஆளுங்களை வெச்சுக்கிட்டு, பார்வையாளர்கள் வரிசைல செம எதிர்ப்பாமே.. தமிழ்ல பேச சொன்னா , முடியாதுனு சொல்லிட்டு ஆங்கிலத்துல தான் பேசுனீங்கலாமே ராமசாமி.. பார்த்துக்கோங்க நம்மாளுங்க பல பேருக்கு ஆங்கிலம் தெரியல.. சும்மா ராமசாமி, மோடி, பி ஜே பினு காரணத்துக்காக உங்க கூட்டங்களுக்கு வந்துடுறாங்க.. ராமசாமி பேசினா கைத்தட்டனும் புரியுதோ புரியலயோ கை தட்டிட்டு போறாங்க.. இருந்தாலும் பத்த வெச்சுட்டீயே பரட்டை..(பரட்டையா?? !! ) .. சரி இந்த வாரம் பிஜேபி நிலைப்பற்றி நக்கல் கார்ட்டூன் துக்குளக்ல வருமா?? இல்லை கார்ட்டூன் எல்லாம் தி மு க , காங்கிரஸ், பா ம க , கம்யூனிஸ்டுக்கு மட்டும்தானா ராமசாமி?

தினமலத்துல , தினத்தந்தில கூட ஏதோ தமிழில் பேச சொல்லி மட்டும் கூட்டத்தில் சலசலப்புனு மாதிரி செய்தி போட்டு முடிச்சுட்டாங்க..

மற்றொரு செய்தி நம்ம வைகோ அண்ணாச்சி பற்றி -
விடுதலைப்புலிகளை மட்டும் ஆயுதங்களை கீழே போட சொல்லுவதா , ப சிதம்பரத்துக்கு வைகோ கடும் கண்டனம் என்ற தலைப்பில் நம்ம வைகோ வழக்கம்போல, நரம்பு புடைக்க , உணர்சிக்கொந்தளிக்க ஒரு அறிக்கை கொடுத்துள்ளார்..

அண்ணே, சிதம்பரமாவது பரவாயில்லை, புலிகளை ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர சொன்னார்.. நம்ம அம்மா , அட அதாங்க உங்க அன்பு சகோதரி புலிகளை நசுக்கி ஒழிக்க வேண்டும்னு சொல்லியிருக்காங்க. ஒரு வேளை, புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு பேச்சு வார்த்தைக்கு போயிட்டா. போர் நின்னுடும், புலிகளை நசுக்கி அழிக்கும் வாய்ப்பு போயிடும், உங்க அன்பு சகோதரி ஆசையில் மன்னு விழுந்துடும்ன்ற கோவத்துல, சிதம்பரத்த காய்ச்சி எடுத்துட்டீங்களா??..

அப்படின்னா உங்க அறிக்கை சரிங்க.. விட்டுடலாம்.. இல்லைனு சொல்ல வரீங்களா?? அப்போ ஒன்னு பன்னுங்க.. உங்க அறிக்கைல எங்கெல்லாம் சிதம்பரம்னு வருதோ அங்கே எல்லாஎம் ஜெயலலிதா நு மாத்தி (சரி, பெயர் வேண்டாம் என் அன்புச்சகோதரினு போட்டுக்கோங்க) நாளைக்கு எல்லா பத்திரிக்கைக்கும் உங்கள் அறிக்கையாக அனுப்புங்களேன், மிகச்சரியா பொருந்தும்.. முடியுமா??

முடியாது என்றால்.. ஈழத்துக்கான உங்கள் வெத்துவேட்டு முழக்கத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளுங்கள். மற்றவர்களை குறை சொல்லி நரம்பு புடைக்க கத்த வேண்டாம்..

FAIR and LOVELY

இன்றைய காலகட்டத்தில் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. அதிலும் வித்தியாசமான முறையில் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது.
அந்த வகையில், பேர் அன்ட் லவ்லி இன்றைய உலக நடப்புக்கு ஒத்தவாறு ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது... ரசிக்கும்படி உள்ளது. பாருங்களேன் !
வேறு ஏதேனும் கோணத்தில் சிந்தித்துவிடாமல், ஒரு விளம்பரம் என்ற வகையில் பார்த்தால் நிச்சயம் ரசிக்கலாம்..



"சோ"ழியன் குடுமி சும்மா ஆடுமா?


நம் நடுநிலை நாயகர் சோ தன் துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழாவின் போது பல விஷயங்களை பற்றி திருவாய் மலர்ந்தார். குறிப்பாக திருமங்கலம் இடைத்தேர்தல், ஈழ ஆதராவளர்கள் மீதான நடவடிக்கைகளில் கருணாநிதி , ஜெ செயல்படும் விதம் , உண்ணாவிரதம் பற்றிய தன் கருத்து என்று.

கடந்த ஆண்டில் அவர் அம்மாவின் புகழ் பாடியதை விட இந்த ஆண்டு அவர் அடித்த ஜால்ரா செவிப்பறையை கிழிக்கும் வகையில் இருந்தது. சோ ராமசாமி "நடுநிலை நக்கலாளன்" என்ற முறையில் இப்படி மாற்றி மாற்றி பேசுவது ஒன்றும் புதிதல்ல..

அ தி மு க வை எதிர்த்து த மா க + ரஜினி + தி மு க விற்கு ஜால்ரா தட்டியதும் இதே சோ ராமசாமி தான் என்பது அனைவருக்கும் தெரியும்..

திருமங்கலம பற்றி பேசியவர், கடைசி ஒரு மணி நேரத்தில் 30% வாக்குகள் என்றார்.. அதாவது 4 இருந்து 5 மணிக்குள் என்று ஒரு கதையளந்தார்.. அதாவது தி மு க கடைசி நேரத்தில் புகுந்து ஓட்டுக்களை குத்தியதா, அல்லது ஒரே மணி நேரத்தில் இத்துனை பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்ததா என்று விளக்காமல், கடைசி 1 மணி நேரத்தில் 30% என்றார்..

தேர்தல் ஆணையம் அனைத்து பூத்துகளிலும் கேமரா வைத்து தீவிரமாக கண்காணித்த போது தி மு க வினர் உள்ளே சென்று ஓட்டுக்குத்தியிருக்கமுடியாது. அப்படி நடந்திருந்தாலும் நிச்சயம் அது பத்திரிக்கைகளில் , குறிப்பாக ஜெ டிவியில் ப்ளாஷ் ஓடி இருக்கும். (இந்த பாயின்டை சோ ராமசாமி சொன்ன பிறகு தான் அம்மையாரும், ஜெயா டீவியும் பிடித்து தொங்கியது என்பது குறிப்பிடத்தக்கது) கடைசி ஒரு மணி நேரத்தில் (4 - 5) இத்துனை வாக்குகள் என்று சோ ராமசாமி அள்ளி விட்டதே ஒரு கதை.

பத்திரிக்கை, டீவி செய்திகளில் வந்த தகவல் படி 4 மணி அளவில் வரிசையில் கூட்டத்தை பார்த்து டோக்கன் கொடுக்கப்பட்டு , பல பூத்துகளில் 7.15 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது தெரிகிறது. ஆக, 1 மனி நேரம் இல்லை.. சுமார் 3 மணி நேரத்தில் 30% வாக்குகள் பதிவாகியுள்ளது.. 3 மணி நேரத்தில் 30% சாத்தியம் தான் என்பது ராமசாமிக்கு தெரியாதா? தெரியும் , ஆனாலும் ஏன் "சோ"ழியன் குடுமி ஆடியது?

பணம் கொடுக்கப்பட்டு வந்த வாக்குகள் என்பது உண்மை, இது முழுதுமாக தி மு க அரசின் சாதனைக்கு கிடைத்த ஓட்டு இல்லை என்பது உண்மை.. பணமும் தன் பங்காற்றியுள்ளது. இதற்காக அவர் அழகிரிக்கு சிறந்த மனிதர் பட்டமெல்லாம் தரட்டும்.. ஆனால் அழகிரிக்கு ஒட்டியபடியே அம்மா வருகிறாரே வரிசையில், அவருக்கு என்ன பட்டம் தருவார்? அதை பற்றிய மூச் விடவில்லையே இந்த அரசியல் க்ரிட்டிக்..?

தொகுதியில் இருந்து 1000 கொடுத்த அழகிரிக்கு அதிசய மனிதர் பட்டமென்றார்.. போயஸில் இருந்துக்கொண்டு மதுரைக்கு 700 கொடுத்த அம்மாவிற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் ராமசாமி?

ஒரு குடும்பத்துக்கு 5,000 , ஒரு ஓட்டுக்கும் 1000 என்று செய்தி வந்த பத்திரிக்கைகளில் கூட தெளிவாக வந்த செய்தி : தி மு க, அ தி மு க என இரு கட்சிகளுமே காந்தி நோட்டை வாரி இறைத்தது என்று. என்ன தி மு க 1000 கொடுத்தால் அ தி மு க 700, 800 மட்டுமே கொடுத்தது.. அனைவருமே கொடுத்தனர் என்பது ராமசாமிக்கு தெளிவாக தெரிந்தும், ஒருவரை விட்டு விட்டார் என்றால்.. சோழியன் குடுமி சும்மாவா ஆடியது??

இந்த தேர்தல் பற்றி கேள்வி கேட்கவைத்து பதல் அளித்த ராமசாமி, இதே போல கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் , சென்னை மாநகராட்சி தேர்தல் பற்றியெல்லாம் அப்போதைய தன் துக்குளக் பத்திரிக்கை ஆண்டு விழாவில் என்ன பேசினார் என்று டோண்டுவை தான் கேட்கவேண்டும்.
கருணாநிதி , ராமர் விசயத்தில் பல்டி என்றார்..அரசு ஊழியர் விஷயத்தில் ஜெ ரிவர்ஸ் கியர் பற்றி சொல்லும்போது அவருக்கு பல்டி என்ற வார்த்தை மறந்து போனது.. (அத்வானி போல் இவருக்கும் செலக்டீவ் அம்னீசியாவாக இருக்கலாம்.. ஜெயலலித்தாவிற்கு தான் தெரியும்). இங்கே அழகாக பல்டி என்று சொல்வது தவிர்த்து அது துரதிஷ்டவசமானது என்றார்.
பல்டி என சொல்ல ஏன் மனது வரவில்லை. அம்மாவிடம் மட்டும் இதயம் இனித்து, வாய் புளித்ததா?, இங்கேயும் ஏன் சோழியன் குடுமி ஆடியது?
உண்ணாவிரதம் பற்றியும் ராமசாமி கமென்ட் அடித்தார்.. காலையில் மூக்கு முட்ட சாப்பிட்டு , மாலைவரை ஜீரனம் ஆகாது என்று.. அம்மையார் இருந்த கேரவன் உண்ணாவிரதம் பற்றி தன் 10 வது துக்குளக் ஆண்டு விழாவில் என்ன திருவாய் மலர்ந்தார் என்று படிக்கவேண்டும்.. ரஜினியும் உண்ணாவிரதம் இருந்தார்.. நிச்சயம் அவரின் உண்ணாவிரதத்தை இதே போல கமென்ட் அடித்திருக்க மாட்டார்.. அந்தளவு ஏமாளியா என்ன சோ ராமசாமி??

மொத்தத்தில் இந்த ஆண்டு துக்குளக் பத்திரிக்கை ஆண்டு விழா என்பதை விட அம்மாவின் பிறந்த நாள் விழா துக்குளக் ஆண்டு விழாவில் நடந்தது என்று சொல்லலாம்..

அப்போது விடை தெரியவில்லை இப்போது தான் தெரிகிறது.. ஏன் என்று.. எல்லாம் "எங்கே பிராமணன்" தான் காரணம்..

சோழியன் குடுமி மட்டும் தான் சும்மா ஆடுமா என்ன?? எங்க சோ ராமசாமியின் இல்லாத குடுமி கூட நன்றாவே ஆடும், ஒரு தொலைக்காட்சி ஸ்லாட் கிடைக்குமென்றால்.. நன்றாக ஆடியுள்ளது.. சபாஷ் ராமசாமி. இன்னும் நன்றாக ஆட்டும் குடுமியை.. அடுத்த 2 ஸ்லாட் வேனுமே..

விசுவின் குடுமிக்கு அடுத்து கன ஜோராக ஆடியது ராமசாமியின் குடுமி தான்..
இதே நிலையில் சன் டீவி , தி மு க வினர் என்றிருந்தால், சில பதிவு போட்டிருப்பர், சொம்பாடித்து ஸ்லாட் வாங்கவா என்று.. ஆனால் இங்கே அம்மாவும், சோவும், ஜெயா டீவியும் ஆச்சே, அதான் தன் கேள்வி பதிலில் கூட ஒரு பதிவர் சொன்னார்.. எது எப்படியிருந்தா என்ன நமக்கு ஒரு நல்ல சீரியல் கிடைத்ததே என்று..

எங்கே பிராமணன்.. இதுக்கு மேலயுமா எங்கேனு தேடனும்??

"தல" குழலியும், கும்முதலும்..

தல குழலியும், கும்முதலும்..

என்ன தல இந்த கும்மு கும்மியிருக்கீங்க .. சரி விடுங்க.. கும்முவதுனு முடிவு பன்னியாச்சு, அப்புறம் என்ன நல்லா கும்முறது, கொறச்சி கும்முறதுனு பாகுபாடு.. குனிய வெச்சு நல்லா கும்மு கும்முனு கும்ம வேண்டியது தானே..

மொத்ததுல கொள்கையை பார்த்து அளவுகோல் வெச்சு கும்ம சொல்றீங்க.. அது சரி.. பா ஜ க கொள்கை என்னனு எல்லாருக்கும் தெரியும், அதுக்காக அவங்க ராமர தூக்கி பிடிச்சு பிரச்சனை பன்னா , அட அவங்க கொள்கை அது, தெரிஞ்சது தானேனு கொஞ்சமாவா கும்முறோம்.. நல்லா குனிய வெச்சு கும்முறோம்ல.. அப்புறம் என்ன?

மத்தவங்கள ஏன் கும்மலனு கேட்கறவங்க கூட கலைஞரை கும்மிட்டு வந்து தானே அதை கேட்குறாங்க..

யார் யாருக்கு எந்த அளவுக்கு செய்ய முடியுமோ அதை செஞ்சுட்டு வந்து பேசினா பரவாயில்ல.. அவங்களால எது முடியுமோ அத கூட செய்யாம இப்படி டபுள் ஆக்ட் கொடுக்கறாங்களேனு தானே கும்மறாங்க (கலைஞரையும் சேர்த்து).

ஏன் நம்ம கேப்டனை எடுத்துக்கோங்க.. அவர் தான் கொள்கைனு எதுவும் இல்லைனு ஆரம்பத்துலயே சொல்லிட்டாரு.. அட அவர் என்ன செய்வாரு, அதான் கொள்கையே இல்லைனு சொல்லிடாரேனு விட்டுவிட்டோமா என்ன .. அவரோட எல்லா தவறான செய்கைக்கும் செம கும்மு கும்முனோமா இல்லையா??

சின்ன தவறு , பெரிய தவறுனு பார்த்தா கும்மினோம்? அவர் கொள்கை இல்லைனு சொன்னத வெச்சே கும்மி எடுத்தோமே.. அவர் கட்சி ஆரம்பிச்ச நேரத்துல தான் நாம எல்லாம் ஒன்னா வலைப்பதிவுல பிசியா எழுதிக்கிட்டு இருந்தோம் தல.. அப்போ இருந்த எல்லாருக்கும் தான் நல்லா தெரியுமே.. அளவுகோல் வெச்சு கும்மினோம்னு சொல்ல முடியுமா?

குறிப்பா ஓட்டு கேட்டு திருமா, வைகோ , ராம்தாஸ் பார்த்து மட்டும் தானே இந்த கேள்வி வருது.. ஒரு நெடுமாறனை, சுப வீ , சீமான், குப்பன் சுப்பனை பார்த்து இப்படி யாரும் கேட்கலயே தல..

ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் , எனக்கு கொள்கை கொஞ்சமா இருக்கு, ஒரு குறிபிட்ட வட்டத்துல நான் இருக்கேன் ஆகவே பொதுமக்களே, எனக்கு 2 நாடாளுமன்ற தொகுதியும், 15 சட்டமன்ற தொகுதிலயும் வெற்றிப்பெற அளவுக்கு மட்டும் ஓட்டு போடுங்கனு கேட்டா வராங்க.. அடுத்த முதல்வர் நான்.. நாளை நமதே 40 நமதே, 234 நமதே, முடிஞ்சா பக்கத்து மாநிலத்தையும் சேர்த்து 335 எனதேனு சொல்லிகிட்டு தானே வராங்க.. ஓட்டு மட்டும் அப்படி வேனும், கும்முறது மட்டும் அவங்க கொள்கைய பார்த்து கூட குறச்சு கும்மனும்னு சொல்றது என்ன நியாயம் தல..

சரி பட்டம் தான் இங்கே முக்கியத்தும் படுதானு பார்த்தா.. யார்கிட்ட இல்ல பட்டம்.. தமிழின தலைவர், தமிழன போராளி, தமிழர் தலைவர், தமிழன் முகவரி நு எல்லோருக்கும் பட்டம் இருக்கு.. இந்த பட்டத்துக்கு இந்த அளவு கும்மலாம்னு எழுதிவெச்சுட்டா பட்டத்தை போட்டுகிறாங்க..

தங்களால என்ன முடியுமோ அத கூட செய்யாம சால்ஜாப்பு சொல்றாங்களேனு தானே கும்முறாங்க.. இப்போவே செய்யமாட்டேங்கறாங்க .. நாளை நிறைய செய்யக்கூடிய பதவில வந்தா செய்வாங்களா? இதே சால்ஜாப்ப அப்போவும் தான் சொல்வாங்கனு தானே கும்முறாங்க..

என்ன தல எப்பவும் நல்ல எடுத்துக்காட்டு தருவீங்க இப்போ இவ்ளோ வீக்கா விட்டுடீங்க..

சரியா ஆடலயே, 100 எடுக்கலயேனு சச்சினை கும்முற அதே கும்பல் தான் ஹர்பஜனையும் செம கும்மு கும்முவாங்க.. நீங்க சொல்ற மாதிரி ஏன்டா ரன் எடுக்கலயேனு கேட்டு இல்லை..

அவன் தான் ரன் எடுக்காம விட்டுட்டான்.. நீதான் பக்கா பவுலர்னு டீம்ல வெச்சிருக்கோமே.. உன்னால முடிந்த அளவுக்கு போட்டு 4 விக்கெட் எடுத்திருந்தா ஜெயித்திருக்கலாம்லனு கும்மத்தானே செய்யுறாங்க.. செய்றாங்க இல்லையா??

ஏன், இன்னும் சொல்லப்போனா, கோச்சை கூட கும்மனும்.. அவர் என்ன பீல்ட்ல வந்தா விளையாடினாருனு கேட்டு கும்மாம விட முடியுமா?

சச்சின் பேட்ஸ்மேன், அவருக்கு ரன் எடுக்க வாய்ப்பு இருந்து அவர் விடுறாருனு அவரை மட்டும் கும்மிட்டு போயிட முடியுமா என்ன?? இல்ல அப்படித்தான் போயிடுறாங்களா??

கிரிக்கெட்ல கோச்சிங், பீல்டங் , பவுலிங் கூட அங்கம் தானே.. அது அதுல இருக்கவங்க, அவங்க அளவுக்கு செய்தா தான் ஜெயிக்க முடியும்.. அத விட்டுட்டு இரட்டை வேடம் போட்ட??? சச்சின் உட்பட எல்லோரையும் தான் கும்முவாங்க..

மியான்டாட்க்கு கடைசி பந்துல 6 ரன் கொடுத்த சேத்தன் சர்மாவை கும்மாத கும்மா?? ரன் எடுக்கலனா கும்மினாங்க? உன்னால முடிஞ்ச பவுலிங்ல நீ சரியா பன்னலயேனு தான் கும்மினாங்க தல..

உதாரணத்துக்கு தெரியாத்தனமா கிரிக்கெட் விளையாட்ட எடுத்து கும்மிட்டீங்களே தல..

கிரிக்கெட்ல சரியா, சமமா தான் கும்முறாங்க, சச்சின் ல இருந்து ஹர்பஜன் வரைக்கும்.. அரசியல்ல தான் இப்படி பார்த்து பார்த்து கும்முவாங்க.. சச்சின கும்முற அளவுக்கு ஹர்பஜன கும்மகூடாதுனு அவங்களே ஒரு வரைவு வெச்சிகிட்டு..

இந்த பாயின்ட் மனசுல வந்த உடனே உங்களுக்கு செம கரெக்ட்டுனு பட்டிருக்கும் தல.. எனக்கே தலைப்பை படிச்சு அப்படி தான் இருந்தது.. பலருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.. மெதுவா யோசித்து பார்த்தாதான் புரியுது.. நீங்களும் யோசிங்க தல புரியும்..

சரி பதிவர்களே வாங்க , உங்க பங்குக்கு என்னையோ இல்ல குழலியையோ கும்மிட்டு போங்க.. ஆனா ஒன்னு.. பதிவோட அளவு, எழுத்து நடை எல்லாத்தையும் பார்த்து கூட்டி குறைச்சு கும்மாதீங்க.. ஒரே அளவுல கும்மிட்டு போங்க.. !

ரொம்ப கும்மிட்டேனா தல?? :)

மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமா..கலைஞர்

ஈழ விவகாரத்தில் கலைஞர் மீது கடுமையான விமர்சனம் விழுந்துவருகிறது. ஜெயலலிதாவை கூட நியாயப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

இரு விதமான நபர்கள்.. ஒன்று கருணாநிதி என்றாலே வேப்பங்காய் என கசக்கும் பிரிவு, கலைஞரை ஆதரிக்கும் / கலைஞர் சார்ப்பு என்றிருக்கும் பிரிவு மற்றொன்று (நடுநிலையானவர்கள் என்று யாரும் இல்லை என்பதே உண்மை - சும்மானாச்சும் நான் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளலாம் அவ்வளவே).

இதில் முதல் பிரிவானவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் கருணாநிதியை வறுத்தெடுக்க என்று பார்த்திருந்தவர்கள், கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் வறுத்தெடுத்துவிடுவார்கள் (சில நேரங்களில் தங்களை நடுநிலைவாதி என்று சொல்ல்லிக்கொள்வார்கள் :) )

கலைஞர் ஈழ விசயத்தில் எந்த வித முடிவு எடுத்திருந்தாலும் அவர்களின் விமர்சன முறை மாறி இருக்குமே தவிர கருணாநிதி எதிர்ப்பு எதிர்ப்பாக தான் இருந்திருக்கும்.. ஆக கலைஞர் இவர்கள் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்துவிட்டார் என்று சொல்வது தவறு.

ஆனால் இரண்டாவதாக உள்ள பிரிவினரின் விமர்சனத்திற்கு நிச்சயம் கலைஞரே காரணம். முழுக்க முழுக்க.. !

ஏன் எப்படி எதற்கு என்பதை பற்றி விரிவாக (அள்ள அள்ள குறையாமல் வரும்) அடுத்த பதிவில் பார்க்கலாம்..

இங்கே நம் மற்ற தலைவர்கள் மருத்துவர் அய்யா, திருமா, வைகோ பற்றி பார்க்கவேண்டியுள்ளது.. இவர்கள் மூவருமே ஈழ விசயத்தில் தங்கள் மேல் எந்த விதமான எதிர்வினை விமர்சனங்கள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். நடந்துக்கொண்டார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது, சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அப்படி பெரிதாக விமர்சனம் விழாது பார்த்துக்கொண்டார்கள். மூவருமே எந்த பதவியிலும் இல்லை என்பதே பெரிய ப்ள்ஸாகி போனது..

மருத்துவர் ராமதாஸ் - காங்கிரஸ் முன்னாள் தலைவரின் சம்பந்தி, விடுதலைப்புலிகள் பற்றி வெளிப்படையாக பேசிவந்தார் சில மாதங்களுக்கு முன்.. சீமான் , அமீர் , திருமாவளவன் விஷயத்தில் சிலிர்த்தெழுந்த சிங்கக்குட்டி காங்கிரஸ் தலைகள் எல்லாம் ஏனோ இவர் விஷயத்தில் மட்டும் குட்டிப்போட்ட நாய்குட்டிகள் போல ஈனஸ்வரத்தில் முனக மட்டுமே செய்தார்கள். அங்கேயும் பெரிய எதிர்ப்பு விமர்சனம் இல்லை.

ஈழத்தமிழருக்கு துரோகம் செய்யும் இந்திய அரசே என்று இவர் குரல் கொடுத்தாலும் , தன் மகன் உட்பட இவரது கட்சியினர் அதே இந்திய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் என்பது மட்டும் நியாபகம் வரவே வராது. தப்பித்தவறிக்கூட எங்களின் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய சொல்வேன் என்று வாயிலிருந்து வந்துவிடாது. கலைஞரின் செயல்கள் திருப்தியில்லை திருப்தியில்லை என்று பல்லவி பாடுவார் ஆனால் தி மு க அமைச்சர்கள் பதவி விலகிடவேண்டும் என்று மட்டும் (மனதில் இருந்தாலும்) கேட்டிட மாட்டார் .. மூச்.. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொள்வதா???

இத்தனைக்கும் எப்போது போயஸ் தோட்டத்து கதவுகள் அகல திறக்கும் , அன்னையிடம் விடை பெற்று அம்மாவிடம் அடைக்கலம ஆகலாம் என்று காலம் பார்த்திருக்கிறார்.. போராட்டம் , போராட்டம், அறிக்கை, தமிழிழ ஆதரவு கூட்டம் அனைத்திலும் பங்கேற்றுக்கொள்வது என்ற செய்கைகளை வகுத்துக்கொண்டதன் மூலம் தன் கட்சியினர் மத்திய அமைச்சர் பதவி பற்றி பெரிய எந்த பெரிய விமர்சனமும் வராது பார்த்துக்கொள்கிறார்.. அப்படியே தப்பித்தவறி நிருபர் கேட்டுவிட்டால்.. மத்திய அமைச்சரவையே முடியப்போகிறது இப்பப்போய் என்று இழுத்தடித்து மழுப்பத்தெரியாதா என்ன.. )கலைஞரிடன் கூட்டணியில் இரு முறை இருந்தவர் ஆயிற்றே..!) ஒரு வேளை மன்மோகன் பா ம க விற்கு இன்னுமொரு அமைச்சர் பதவி என்று சொன்னால், இல்லைங்க இருக்கட்டும் ஆட்சி முடியப்போகுதே இப்போ போய் எதுக்கு என்று சொல்வாரென நீங்கள் நினைத்தால்.. அய்யோ பாவம் அப்பாவி சார் நீங்க.. ஒரு பக்கம் அமைச்சர் பதவி , ஒரு பக்கம் அம்மாவின் பார்வைக்கு வெயிட்டிங்.. அம்மா கை விட்டுவிட்டால், உதவும் என்று காங்கிரஸின் கையையும் விடாமல்.. அதே நேரத்தில் ஈழ ஆதரவும் பேசி, மத்திய அரசை எதிர்க்கும் போராட்டங்களில் தலைகாட்டியும், குறிப்பாக காங்கிரஸின் பரம திடீர் எதிரிகள் திருமா, சீமானுடன் கைக்கோர்த்து சாமர்த்தியாக மிகக் குறைந்த அளவு விமர்சனத்துடன் பாலன்ஸ் செய்து ஆட்டம் ஆடி வரும் மருத்துவரை பார்த்தால்... "ஆடாத ஆட்டம் இல்லை, போடாத வேஷம் இல்லை..."

வைகோ - இவருக்கு பதவி தோளில் போடும் துண்டும் அல்ல, இடுப்பில் இருக்கும் வேட்டியும் அல்ல.. அவரின் வீட்டு மொட்டை மாடியில் வத்தல் காயப்போட பயன்படும் ஒரு துணி அவ்வளவே.. எந்த பதவிக்கும் தானோ தன் கட்சிகாரங்களோ வந்தே பல மாமாங்கம் ஆச்சே , வேற வழியில்லை.. வாடாம் காயப்போடற துனி அது இதுனு சொல்லி சமாளிக்கனும்.. ஒரு பக்கம் ஈழத்துக்கு வீர வசனமெல்லாம் பேசி, இந்தியா , இலங்கை , பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ்னு கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி பேசி உணர்ச்சிமயமா தாக்கினாலும் வீட்டுக்கு போனா முதல் வேலையா போன் போடற நம்பர் போயஸ் தோட்டது நம்பரா தான் இருக்கும்..

மக்களை கொல்வது புலிகள்னு போயஸ் தோட்டத்துல இருந்து குரல் வந்தா மட்டும் இவருக்கு காது டமார செவிடாகிடும் பாவம்.. இவர் என்ன பன்னுவார்.. ஜெயிக்கறமோ தோக்கறமோ 2009 தேர்தல்ல நிக்கறதுக்கு 2, 3 சீட்டும், கொஞ்சம் லஷ்மி கடாட்சமும் வேணுமே... வெட்டிகிட்டு வந்து 3 வருஷம் கூட ஆகலயே அதுக்குள்ள போய் அண்ணேனு ஒட்டிக்க தன்மானன் இடம் தராது..

இன்னும் 2 வருஷம் போனா 2011 ல , பாசிச வெறிபிடித்த ஜெயலலிதாவை இந்த நாட்டை விட்டு விரட்டாது ஓயமாட்டேனு , என்னை எட்டி உதைத்தாலும் , ஏறி மிதித்தாலும் என் அண்ணன் அண்ணன் தான், அவர் தம்பி வைகோ தான்.. மதியிழந்தேன் மானம் இழக்கவில்லைனு கண்ணியாகுமரில இருந்து கத்திகிட்டே வந்து கோபாலபுரத்துல தொபுக்கட்டீர்னு விழலாம்.. ஆனா இப்ப 2009 க்கு அம்மா தானே ஆதரவு.. அம்மா என்னா சொன்னாலும் 2 காதுலயும் பஞ்சு அடைச்சுகிட்டு எல்லா ஈழத்தமிழர் கூட்டத்துக்கு (தி மு க தவிர) போயிட்டு நரம்பு புடைக்க, நெஞ்சு துடிக்க நாலு பக்க வசனத்தை வெசனமா பேசிட்டு வந்து தன்மானத்தை காப்பத்திக்கிட்டதால, பெருசா விமர்சனம் வராம பார்த்துகிட்டு வண்டி ஓடுது.. அப்படியே கேட்டாலும், கூட்டணி அமைத்தோம், கொள்கை விடவில்லை.. ஒரு கூட்டில் கழுகும் காகமும் தத்தம் கொள்கை விடாது இருத்தல் தவறானு வீர வசனம் பேசவா சொலித்தரணும்.. 1 வருஷமா , 2 வருஷமா... ஓட்டுமொத்தமா கல்லூரி வாழ்க்கை கணக்கா கலைஞர் கிட்ட பாடம் படிச்ச மாணவர் ஆச்சே , சோரம் போவாரா (பேசுறதுல மட்டும்) வைகோவை பார்த்தால் ஆட்றா ராமா, ஆட்றா ராமா..ஆட்றா ராமா.. என் தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆட்றா ராமா

திருமா - .. பாவம் இவர் பத்தி என்ன சொல்றதுனு தெரியல.. பரிதாபமா இருக்கு. தமிழக காங்கிரஸ் காரனுக்கு வீரம் வந்தது (தன் கட்சியோட கோஷ்டிக்காரன் வேட்டி கிழிப்பை தவிர்த்து) வேற ஒருத்தர் கிட்ட வம்புக்கு போனான்னு சொன்னா அது நம்ம திருமா கிட்ட தான்.. திருமாவும்.. போன் போட்டு போன் போட்டு நாங்க பன்னல, நாங்க பன்னல , எங்க தப்பு இல்லனு சொல்லி சொல்லி அவர் செல்போன் காசும் , பேட்டரி சார்ஜும் போனது தான் மிச்சம்.. அவர் என்ன பன்னுவார் வேற வழி??? காங்கிரஸை ஏதாச்சும் சொல்லப்போய் பெரியவருக்கு கோவம் வந்து போ வெளியே நு அனுப்பிட்டா?? மருத்துவர் தான் இருக்காரேனு நம்பி போயிடமுடியுமா?? .அவருக்கே இன்னும் கதவு திறக்கல.. இவருக்கு போயஸ் தோட்டத்த்கு சந்து கூட திறந்து இருக்குமானு சந்தேகம் தான்..

ஆயிரந்தான் ஈழத்தமிழர் போராட்டம் , உண்ணா விரதம் இருந்தாலும், 2009 இல்லனா கூட 2011 ல நாலு எம் எல் ஏ வாச்சும் வேனுமே... உணர்வுக்கு ஈழத்தமிழர்களா இருந்தாலும் , நாலு எம் எல் ஏ க்கு தமிழனத்தலைவர் தானே.. அவரை திருப்தி படுத்தவாச்சும் அப்படி இப்படி பேசிகிட்டு, கலைஞர் செய்வார், நாளைக்கு செய்வார், நாளை மறுநாள் நிச்சயம் ஏதாச்சும் செய்வார்னு அறிக்கை விட்டு அப்படியே காங்கிரஸ் கிட்ட பவ்யமா போயி காலத்தை ஓட்டனும்.. கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை.. ! திருமாவை நினைத்தால் ... சிரிக்கறேன், சிரிக்கறேன் சிரிப்பு வரல, அழுகுறேன், அழுகுறேன் அழுகை வரல

ஈழமும், காவிரியும் விலைமாதகர்களா?

ஈழத்தை பற்றி யோசித்த போது வந்த வார்த்தைகளி கோர்வை இது.. கவிதையா , வாக்கியமா என்று தெரியவில்லை.. ஆனால் மனதில் தோண்றிய எண்ணம் என்பது மட்டும் நிஜம். படித்துவிட்டு சொல்லுங்கள், கருத்துப்பெட்டியில் மறக்காமல்.

விலை மாதர்கள்

ஈன அரசியல்வாதியின் பதவி "சுகத்துக்காக" மட்டும்

தேவைப்பட்டால் தட்டி எழுப்பிட

எங்கள் காவிரியும், ஈழமும் விலைமாதர்கள் அல்ல!

உளியின் ஓசை

"உளியின் ஓசை" கேட்ட காதுகளுக்கு - என்

தமிழன் ஒப்பாரி கேட்காது போனதோ ?.

காரணம இல்லாமலா - உளியின் ஓசையால்

கால் காசு வரும். - ஒப்பாரியின் ஓசையால் ??

இறையாண்மை

ஈழம் என்றால் ஆறடிக்கு எட்டிப்பார்க்கும் இறையாண்மை

உங்கள் இறை "ஆண்மை"

காவிரியின் கரையில் மட்டும் தளுக்கென்று சுருங்கி நிற்கும்

கூட்டுக்குள் பொத்தி நிற்கும் நத்தை போல.

ஆண்மைக்கு அடிசறுக்கும் - எங்கள் இறையான்மைக்கு

அடிக்கடி சறுக்கும்

இடம் பொருள் ஏவல் பார்த்தா ? - இல்லை

இனம் , மொழி, பதவி பார்த்து.

உச்சகட்ட கெட்டவார்த்தை

போராளியை எதிர்த்திடவே துனிவின்றி - பக்சே

போர் என்ற போர்வையிலே - இன அழிப்பு நீ செய்தாய்.

காறி உமிழ்ந்து திட்டிடவே - வசவு வார்த்தை

எனக்கொன்று வேண்டுமென தேடித்தேடி - கிடைத்ததடா

உச்சகட்ட கெட்டவார்த்தை - கடைசியிலே

இந்தியாவின் தலைநகராம் தில்லியிலே- ஆம் பக்சே

காறி உமிழ்ந்து சொல்கிறேன்.. "காங்கிரஸ்காரா" - ஒழிந்துப்போ..